02/09/2018

விஏஓக்கு லஞ்சம் தர பிச்சை எடுத்த மாணவன்.. கிராம அதிகாரியை காரிதுப்பும் பொதுமக்கள்...


விழுப்புரம் மாவட்டம் மா.குன்னத்தூரை சேர்ந்த ஏழை மாணவனின் தந்தை இறந்து விட்டார். அரசின் ஈமச்சடங்கிற்கு அரசு சார்பில் தரப்படும் 12,500 ரூபாயை பெற அந்த மாணவன் விஏஓ கொளஞ்சியிடம் சென்று விண்ணப்பம் அளித்தார்.

ஆனால் அந்த பணத்தை தர அதிகாரி 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் என்னிடம் லஞ்சம் கொடுக்க பணம் இல்லை என்ற கூறி உள்ளார். ஆனால் அதிகாரி லஞ்சம் கொடுத்தால்தான் பணம் கிடைக்கும் என்று கூறி உள்ளார்.

இதனால் அந்த மாணவன் விஏஓக்கு லஞ்சம் தர பிச்சை போடுங்க என்று பேனர் அச்சடித்து பிச்சை எடுத்தார். இதனால் பதறி போன விஏஓ அந்த மாணவனை கூப்பிட்டு பணத்தை கொடுத்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.