22/04/2018

வேற்று கிரகவாசிகள் - 3...


பயணம் ஆரம்பம்..

ஆரம்பிக்கப்படும் இந்த பயணம் சமயங்களில் ஷைத்தானின் சாம்ராஜ்யத்தினூடு பயணிப்பதாகவும், மற்றும், பல அமானுஷ்ய உண்மைகளைத் தர்க்கரீதியாக அலசுவதாகவும் இருக்கும். ஷைத்தானின் சாம்ராஜ்ஜியத்தினூடு பயணிக்கப் போவதாக சொன்னவுடன் சிலரது உள்ளத்தில் ஒரு தயக்கம் ஏற்படலாம். ஏகனின் இறை வேதத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் வரை எந்தக் குழப்பத்துக்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயெ இன்றைய உலகைச் சூழ்ந்துள்ள ஒருசில குழப்பங்களை இங்கு அலசப் போகிறோம். இன்றைய உலகம் அறிவீனத்திலும், முட்டாள் தனத்திலுமே மூழ்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே பின்வரும் ஹதீஸ் அமைந்திருக்கிறது:

மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலக்கட்டம் வரும். அப்போது கல்வி மறைந்துபோய் அறியாமை வெளிப்படும். (புகாரி 7066)

இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் தற்கால உலகில் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒருசில அறிவீனங்களை இங்கு

முதலாவது அறிவீனம்: “நமக்கு முன் இந்த உலகில் வாழ்ந்து மறைந்த எல்லா சமுதாயங்களையும் விட அறிவிலும், நாகரீகத்திலும் நாம் தான் பலமடங்கு முன்னேறி இருக்கிறோம்” என்ற ஒரு நினைப்பில் இன்று நம்மில் அனேகமானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருக்கும் அறிவீனங்களிலேயே இந்த ஒரு நினைப்பை விட மாபெரும் அறிவீனம் வேறெதுவும் இருக்க முடியாது. உண்மை இதற்கு மாற்றமானது. நமக்கு முன்சென்ற பல சமுதாயங்களை விட உண்மையில் நாம் இன்று அறிவில் பிந்தங்கிய நிலையில் தான் இருக்கிறோம். தொழிநுட்பம் எனும் ஒரேயொரு முன்னேற்றத்தைத் தவிர சிந்தனை சார்ந்த அறிவின் பல அம்சங்களில் நம்மில் அனேகமானோர் இன்று சராசரி மனிதனுக்கு இருக்க வேண்டிய அறிவை விடக் குறைவான அறிவோடு தான் இருக்கிறோம்.

இரண்டாவது அறிவீனம்: ஒருசில அசாதாரண நிமிடங்களைத் தவிர ஏனைய பொழுதுகளிலெல்லாம் நமது உள்ளம் நமது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று நம்மில் அனேகமானோர் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதாவது நாம் எதை நினைக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மாணிக்கிறோம் என்ற ஒரு நினைப்பிலேயே நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பகுத்தறிவின் மீது கொண்ட அதீத நம்பிக்கையின் விளைவு தான் இந்த அறிவீனம். “என் பகுத்தறிவை மீறி என் மூளை என்ன தான் செய்து விடப் போகிறது?” என்ற இந்த அசட்டு தைரியம் தான் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் நம்மை மீறிய பல நிகழ்வுகள் மீது கவனம் செலுத்த விடாமல் நம் அறிவுக் கண்ணை மறைக்கிறது.

உண்மை என்னவென்றால், நம் அன்றாட வாழ்வின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம் உள்ளமும், சிந்தனையும், தீர்மானங்களும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. இந்த உண்மையை அலசும் விதமாகத் தான் இந்த ஆய்வின் முதல் கட்டம் ஆரம்பிக்கிறது. அனேகமான மனிதர்களிடம் சுவாரசியமான ஒரு சுபாவத்தை நீங்கள் அவதானிக்கலாம்., என்ன தான் முயற்சி செய்தாலும், சிலரிடம் உண்மை / சத்தியம் எடுபடுவதில்லை. என்ன தான் காரண காரியங்களுடன் தர்க்க ரீதியாக விளக்கினாலும், கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் உண்மையை உணர்த்திக் காட்டினாலும், அதை அவர்களது உள்ளம் சரிகாண்பதில்லை. ஆரம்பத்தில் வைத்த அதே வாதங்களையே திரும்பத் திரும்ப முன்வைத்துக் கொண்டிருப்பார்கள்.

இவ்வாறானவர்களைப் பார்த்து நாம் என்ன சொல்வோம்? “இவரது மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறது” என்போம். ஆனால், இதை விட எளிய நடையில் இதை இப்படி சொல்லலாம்: “இவரது சிந்தனை இவர் கட்டுப்பாட்டில் இல்லை. யாரோ ஒருவர் இவரது சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். இவரது பகுத்தறிவைக் கட்டிப் போட்டு, இவரை ஒரு கருவியாக உபயோகித்து, யாரோ ஒருவர் தனது நோக்கத்தை இவர் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.” மூளைச்சலவை என்பதன் அர்த்தமே இது தான். இந்தக் கோணத்தில் இந்த உண்மையை விளங்கும் போது, இதுவரை நம் கண்ணுக்குப் புலப்படாமலிருந்த ஒரு பேருண்மை பளிச்சென்று புலப்படும். ஒருவர் மூளையை / சிந்தனையை இன்னொருவர் ஆக்கிரமிப்பது என்பது ஒன்றும் கடினமான காரியமல்ல என்பதை ஒத்துக் கொள்வதற்கு இது ஒன்றே போதும். இதே அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டு இனி விசயத்துக்கு வருவோம்.

சத்தியப் பிரச்சாரங்களை நம்மில் பலர் எடுத்த எடுப்பில் மறுப்பதற்கும், தர்க்க ரீதியான வாதங்கள் மூலம் ஒரு விடயம் நிரூபிக்கப்பட்டாலும், அதைக் கண்டுகொள்ளாமல் மறுபக்கம் திரும்பிக் கொள்வதற்கும் காரணம்... நம்மில் பலரது சிந்தனை நம் கட்டுப்பாட்டில் இருப்பதற்குப் பதிலாக, ஷைத்தானின் கட்டுப்பாட்டில் இருப்பது தான். பல நூறு திட்டங்கள் மூலம் மனித உள்ளத்தை ஷைத்தான் ஆக்கிரமிப்பதன் நோக்கம் ஒன்றேயொன்று தான்; மனிதன் சிந்திக்கக் கூடாது. மனிதனை சுதந்திரமாகச் சிந்திக்க விட்டால், மனித இனத்தை அடியோடு வேரறுக்கும் தனது திட்டம் தவிடுபொடியாகி விடும். எனவே, தனது சக்திக்கு உட்பட்ட எல்லா விதங்களிலும் மனிதனை சுயமாகச் சிந்திக்காதவனாக வைத்துக் கொள்ளவே ஷைத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். இதை உறுதிப்படுத்தும் விதமாகத் தான் பின்வரும் ஆதாரங்கள் அமைந்துள்ளன:

ஆதாரம் 1: மனிதர்களின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தை விதைத்து விடுவான் . (புகாரி 2035)

ஆதாரம் 2: "என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான். "நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி'' என்று (இறைவன்) கூறினான்.

உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! அவர்களது பொருட்செல்வங்களிலும், குழந்தைச் செல்வங்களிலும் அவர்களுடன் நீ பங்காளி ஆகிக்கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. - (அல் குர்ஆன் – 17:62-64) இந்த ஆதாரங்கள் மூலம் ஒரு விடயம் தெளிவாகப் புலப்படுகிறது.

ஷைத்தானுக்கு ஏகன் வழங்கியிருக்கும் ஆற்றல், மற்றும் அதிகாரம் என்பது உள்ளத்தில் ஏற்படுத்தும் ஊசலாட்டத்தோடு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அதையும் தாண்டிய அதிகாரைம் சைத்தானுக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்பது இந்த வசனங்களின் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது. இங்கு ஷைத்தான் ஏகனைப் பார்த்து “மனிதனை வழிகெடுப்பேன்” என்று மட்டும் சொல்லவில்லை. “சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” என்று சவால் விடுகிறான்.

உள்ளத்தில் ஊசலாட்டத்தை உண்டுபன்னி ஒரு மனிதனை வழிகெடுப்பதற்கும், அவனை வேரறுப்பதற்கும் இடயில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒருவனை நேர்வழியிலிருந்து திசைதிருப்பி விட்டாலே போதும்; வழிகெடுத்தல் எனும் காரியம் அத்தோடு நிறைவடைந்து விடும். ஆனால், அத்தோடு மட்டும் நின்று விடாமல், கிடைக்கப் பெறும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஒருவனது வாழ்க்கையை எல்லாத் துறைகளிலும் சின்னாபின்னமாக்குவதையே வேரறுத்தல் என்ற சொல் குறிக்கும்.

ஒருவன் மீது ஜன்மப் பகையும், வைராக்கியமும் எவனது உள்ளத்தில் குடிகொண்டிருக்குமோ, அவனுக்குத் தான் வேரறுக்க வேண்டும் என்ற தேவை இருக்கும். மனித இனத்தின் மீது தீராத பகையும், மாறாத வைராக்கியமும் பூண்ட ஒரே எதிரி ஷைத்தான் தான். இதைத் தான் பின்வரும் குர்ஆன் வசனம் சொல்லிக் காட்டுகிறது:

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! (35:6) தீராத பகை உணர்வோடு மனிதனை ஈருலகிலும் அழிக்கத் துடிக்கும் ஒரே எதிரி ஷைத்தான் என்பதால் தான், எம்மை வேரறுக்கும் தேவை அவனுக்கு இருக்கிறது. எனவே தான், “இவரது சந்ததிகளை வேரறுப்பேன்” என்று ஏகனிடமே சவால் விட்டான்.

அவனது திட்டம், உள்ளத்தில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் மனிதனை வழிகெடுப்பது மட்டுமல்ல; ஈருலகிலும் மனிதனை நிம்மதியாக வாழ விடவே கூடாது; சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்திலெல்லாம் மனிதனை எல்லா விதங்களிலும் சின்னாபின்னமாக்க வேண்டும் என்பதும் தான் அவனது திட்டம். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அவனது சவாலுக்கு ஏகன் கூறிய பதிலும் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

வழிகெடுப்பது மட்டும் தான் ஷைத்தானின் நோக்கமாக இருந்திருந்தால், “உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்!” என்று ஷைத்தானுக்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே போதுமானது; அந்த அனுமதியோடு ஏகன் நிறுத்தியிருப்பான். ஆனால், அத்தோடு நிறுத்தவில்லை; அதைத் தொடர்ந்து மேலதிகமாக, “உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கெதிராக ஏவிக்கொள்; அவர்களது பொருட்செல்வங்களிலும், குழந்தைச் செல்வங்களிலும் அவர்களோடு நீ பங்காளி ஆகிக்கொள்...”

என்றெல்லாம் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை ஏகன் இங்கு பட்டியலிட்டுக் காட்டுகிறான். உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் வழிகெடுக்கும் ஒருவனுக்குக் காலாட்படையும், குதிரைப் படையும், செல்வத்தின் பலமும் வழங்கப்படுவதில் அர்த்தமிருக்காது. இங்கு ஏகன் குறிப்பிடுவது, ஆள் பலம், பொருளாதார வளம், இராணுவ பலம் என்று ஓர் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டிய அத்தனை அதிகாரங்களையும் தான்.

ஆகவே இதன் மூலம், ஷைத்தானின் திட்டம் வழிகெடுப்பது மட்டுமல்ல; அடியோடு மனிதனை வேரறுப்பது என்பதுவும், ஷைத்தானுக்கு ஏகன் வழங்கியிருக்கும் ஆற்றல், அதிகாரங்கள் என்பது உள்ளத்தில் உணர்வுகளைத் தூண்டுவதோடு மட்டுப்படுத்தப் பட்டதல்ல; அதையும் தாண்டியது என்பதுவும் மறுக்க முடியாதவாறு நிரூபணமாகிறது. நேர்வழி என்பது வேறொன்றுமல்ல; ஷைத்தானின் இந்த ஆதிக்கச் சிறையிலிருந்து ஏகன் நமது உள்ளத்துக்கு வழங்கும் விடுதலை தான்.

நேர்வழி என்னும் இந்த விடுதலை கிடைத்தால் மட்டுமே நமது சிந்தனை சுதந்திரமாக வேலை செய்யும். இந்தச் சுதந்திரம் நமது மூளைக்குக் கிடைத்தால் மட்டுமே, சரியான அடிப்படையில் நம்மால் சிந்தித்து செயலாற்ற முடியும். எந்தவொரு மனிதனுக்கும் ஏகன்  அநீதி இழைப்பவன் அல்ல. அதனால், மனித வாழ்வின் முதல் அத்தியாயத்தையே ஏகன் நேர்வழியோடு தான் ஆரம்பித்து வைக்கிறான்.

ஆதாரம்: ஏகனின் தூதர் (ஸல்,நபிகள் நாயகம் அவர்களைக் கடவுளாக ஆக்காமலிருந்த அடைமொழி ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி,அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது பொருள் தான் ரலி.) நூல்: புகாரி 1385

ஒவ்வொரு குழந்தையும் நேர்வழியோடு முஸ்லிமாகவே பிறக்கிறது என்பதை மேலுள்ள ஹதீஸ் அழகாக உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு சுதந்திரமாகப் பிறக்கும் மனிதனை, அவன் பிறந்த அடுத்த கணமே அவனது பரம எதிரியான ஷைத்தான் வந்து கவ்விப் பிடித்துக்கொள்கிறான்; அந்த நிமிடத்திலிருந்து தனது இருள் சிறையில் அந்த மனிதனை அடைத்து வைக்கத் தேவையான தனது செயல்திட்டங்களை ஆரம்பித்து விடுகிறான். இதைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்திக் காட்டுகிறது: பிறக்கும் குழந்தை எதுவாயினும் பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 4548)

இந்த ஹதீஸ் மூலம் சில உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன. அதாவது, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் ஷைத்தான் தீண்டுகிறான் என்பதை இந்த ஹதீஸ் இலக்கியமான அர்த்தத்தில் கூறவில்லை. மாறாக ஷைத்தான் எனும் ஜின், அந்தக் குழந்தையைத் தனது கைகளால் பிடிப்பதையே இந்த ஹதீஸ் பச்சையாகச் சொல்கிறது. ஷைத்தானின் பிடியின் வேதனை தாங்க முடியாமல் தான் ஒவ்வொரு மனிதக் குழந்தையும் இவ்வுலகில் தனது முதலாவது அழுகையை வீரிட்டு அழுகிறது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

இவ்வாறு பிறப்பிலேயே ஷைத்தான் வந்து பிடிக்கும் இந்தப் பிடியை, அந்த மனிதனது ஆயுள் உள்ளவரை ஷைத்தான் விடவே மாட்டான். தன்னால் முடியும் போதெல்லாம், தனது பிடியை இன்னும் இறுக்கத் தான் முயற்சிப்பான். அந்தக் குழந்தை வளர வளர, அதன் பெற்றோரின் வளர்ப்புக்கு ஏற்ப ஷைத்தானின் பிடி இறுகும்; அல்லது தளறும். ஷைத்தானின் இருள் சிறையின் ஆரம்பம் இது தான். இந்தச் சிறையிலிருந்து அந்த மனிதனது உள்ளத்தை விடுதலை செய்யும் சக்தி ஏகனுக்கு மாத்திரமே உண்டு. ஆனால் இந்த விடுதலையை ஏகன் எல்லோருக்கும் ஒரேமாதிரி வழங்கி விடுவதில்லை. தன்னை நேர்வழியில் செலுத்துமாறு அந்த மனிதன் தன்னிடம் பிரார்த்திக்க வேண்டுமென்று எதிர்பார்த்து காத்திருப்பான்.

தன்னை மட்டுமே கடவுளாக ஏற்றுத் தன்னிடம் நேர்வழிக்காகப் பிரார்த்திக்க மாட்டானா என்று ஆவலோடு காத்திருப்பான். பிரார்த்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தியும் கொடுக்கிறான். குறைந்தது ஒரு நாளைக்கு 17 சந்தர்ப்பங்களை ஐவேளைத் தொழுகையில் ஓதப்படும் ஸூரத்துல் பாத்திஹா மூலம் ஏகனே வழங்குகிறான். “யா ஏகனே என்னை நேரான பாதையில் செலுத்துவாயாக” என்று அவனிடம் உளமாற உதவி கேட்பதற்கு வாய்ப்பையும் அவனே கொடுத்து, அன்போடு உதவக் காத்திருக்கிறான். வாய்ப்பைப்பயன்படுத்தி, வாய் விட்டு அவனிடம் மனப்பூர்வமாக உதவி கோரினால் போதும்; ஷைத்தானின் சிறைக் கதவுகளை உடைத்தெறிந்து, அந்த மனிதனின் உள்ளத்திற்கு மீண்டும் இலாஹ் விடுதலையைப் பெற்றுக் கொடுக்கிறான். விடுதலை கிடைத்த அடுத்த கணமே, அவனது மனக் கண் திறக்கும். இதற்கு முன் புலப்படாதிருந்த சத்தியப் பாதை தெளிவாகப் புலப்படத் தொடங்கும்.

அதன் பிறகு, அந்த நேரான பாதையில் எப்படி நடப்பது? எவ்வளவு தூரம் நடப்பது என்பதை அந்த மனிதனே தீர்மானித்துக் கொள்ளட்டுமென்று இலாஹ் சுதந்திரமாக விட்டு விடுகிறான். அதே நேரம், நேர்வழிக்காகப் பிரார்த்திப்பதற்காகவேனும் ஒரு மனிதன் ஏகனின் பால் ஒரு கணம் கூடத் திரும்பவில்லையென்றால், அவன் காலத்துக்கும் குருடனாகிறான்; ஷைத்தானின் பூரண கைப்பாவையாகவே வாழ்ந்து, முடிவில் நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுகிறான். நேர்வழியைக் காட்டுவதென்பது ஓர் ஆட்டிடையன் தன் ஆட்டு மந்தையை வீடு நோக்கி வழி நடத்திச் செல்வதைப் போன்றது.

எந்தவொரு ஆட்டையும் அந்த மந்தையில் அவன் கட்டி இழுத்துச் செல்வதில்லை. ஒரேயொரு குச்சி மூலம் ஆடுகளை வழி நடத்திச் செல்கிறான். அத்தனை ஆடுகளும் முன்னால் செல்லும் ”முன்மாதிரி” ஆட்டைப் பின்பற்றி ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கும். ஓரிரு ஆடுகள் ஆங்காங்கே கொஞ்சம் பாதையை விட்டு விலகும் போது, குச்சியைக் கொண்டு இடையன் லேசாகத் தட்டுவான். அத்தோடு அத்தோடு அவை மீண்டும் சரியான பாதைக்கு மீண்டு விடும். இந்த அடிப்படையில் மொத்த ஆடுகளையும் வீடு கொண்டு சேர்க்க வேண்டுமென்றால், அத்தனை ஆடுகளுக்கும் கண் பார்வை இருக்க வேண்டும்.

மந்தையில் ஒரு ஆட்டுக்குக் கண் பார்வையில்லாமலிருந்தால், என்ன தான் குச்சியால் தட்டினாலும், என்ன தான் முன்னால் செல்லும் ஆடு சரியான பாதையில் நடந்து காட்டினாலும், அந்தக் குருட்டு ஆடு சரியான வழியில் பயனிக்கப் போவதில்லை. தான்தோன்றித் தனமாகக் கால் போன திக்கில் அந்த ஆடு விலகிப் பயணிக்கும். ஈற்றில் வழி தவறிக் காட்டில் தனியே சிக்கி, ஓநாய்களுக்கு விருந்தாகி விடும். இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் ஏகன் மனிதனுக்கு நேர்வழி காட்டுகிறான். இந்தத் தத்துவத்தை ஒவ்வொரு நபியும் அடிமனதில் உணர்ந்திருக்க வேண்டுமென்பதனால் தான் அத்தனை நபி மார்களையும் ஏகன் ஆடு மேய்ப்பவர்களாக ஆக்கியிருக்கலாம்.

தினமும் எத்தனை தடவை ஷைத்தான் மனிதனை நேர்வழியை விட்டும் விலகச் செய்ய முயற்சிக்கிறான்? குறைந்தது எத்தனை தடவை நம்மை மேய்க்கும் இடையன் நம்மைக் குச்சியால் தட்டி, நேரான பாதையில் செலுத்த வேண்டியிருக்கிறது? ஆகக் குறைந்தது தினம் ஐந்து தடவையாவது நம்மை மேய்க்கும் இடையன் நம்மைக் குச்சியால் தட்டி நேர்வழியில் செலுத்த வேண்டிய அளவுக்கு நமது நிலைமையிருக்கிறது. இதனால் தான் குறைந்த பட்சம் ஐந்து விடுத்தமாவது ஒரு முஸ்லிம் தொழுது, அல்லாஹ்விடம் நேர்வழியைக் காட்டச் சொல்லிப் பிரார்த்திக்க வேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒரு நாள், ஒரு மணித்தியாலம், ஒரு நிமிடம் நாம் அல்லாஹ்வின் கருணையிலிருந்தும், உதவியிலிருந்தும் தூரமாகினால், அது ஒன்றே ஷைத்தானுக்குப் போதும். அந்த ஒரு நிமிடத்தை சந்தர்ப்பமாக உபயோகித்து, நம்மை மொத்தமாகக் கவ்விக் கொள்ளும் அத்தனை செயல்திட்டங்களையும் ஷைத்தான் தயார் நிலையிலேயே வைத்திருக்கிறான். ஷைத்தானின் சக்தியை நம்மில் பலர் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையென்றே சொல்ல வேண்டும்.

அதுவும் தஜ்ஜாலின் ஃபித்னா யுகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஷைத்தானின் ஆதிக்கம் மனித வரலாற்றில் இதற்கு முன் இருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாகவே இருக்கும் என்பது தான் நபி (ஸல்) அவர்களின் பல முன்னறிவிப்புகளைப் பார்க்கும் போது தெளிவாகப் புலப்படுகிறது. தஜ்ஜாலின் யுகத்தைச் எதிர்பார்க்கும் ஷைத்தானிய சக்திகள் தம் பலத்தையும், தொழினுட்பங்களையும் பன்மடங்காக விருத்தி செய்யும் வேலைத்திட்டங்களில் மும்மரமாக ஈருபட்டிருக்கின்றன. அதே அளவுக்கு நம்மிடம் பலம் இல்லையென்றாலும், அவற்றுக்கு முகம் கொடுக்கும் அளவுக்காவது நம்மிடம் அவர்கள் திட்டங்கள் பற்றிய அறிமுகமாவது இருக்க வேண்டும். அவ்வாறான ஓர் அறிமுகத்தைக் கொடுக்கும் நோக்கிலேயே இனிவரும் பகுதி அமையவிருக்கிறது.

மனித உள்ளத்தை ஷைத்தான் ஆதிக்கம் செலுத்துவது ஊசலாட்டத்தின் மூலம் மட்டுமே என்று நம்மில் அனேகமானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறான நினைப்பு. உள்ளத்தில் ஊசலாட்டம் ஏற்படுத்துவதையும் தாண்டிய பல சதித் திட்டங்கள் பௌதீக மட்டத்திலும் நம்மைச் சுற்றி அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் இப்லீஸ் தான் சூத்திரதாரி. அவனது பரிவாரங்களுள் ஜின்கள் மட்டுமல்ல; மனிதர்களும் சேர்ந்து தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான மனிதர்கள் தாம் மேலே குறிப்பிடப்பட்ட “இலுமினாட்டி” எனும் 13 யூதக் கோத்திரங்களையும் சேர்ந்த ஷைத்தானின் ஊழியர்கள் இந்தப் பரிவாரங்கள் மூலம் ஷைத்தான் பல்வேறு வகைகளில் மனித உள்ளங்களைக் கைப்பற்றும் நோக்கில் பல சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகளை இன்றைய உலகில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான். அவற்றுல் ஒருசில திட்டங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்...

தமிழ்தேசிய அரசியலில் தான் மட்டுமே "தனிக் காட்டு ராஜா" என்ற நினைத்துக் கொண்டிருந்த சீமான் சமீப காலமாக கடும் கோபத்தில் உள்ளதாக அறியப்படுகிறது...


நாடார் தவிர்த்து வன்னியர், பறையர், மறவர், தேவேந்திரர் போன்ற பெரும்பான்மை சமூகத்தில் உள்ள தமிழ் தேசிய சிந்தனை கொண்ட இளைஞர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவனாகக் கொண்டு செயல்பட விரும்புகின்றனர்..

இது இயக்குனர் சீமானுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது!! எனவே தனது நாடார் சமூகத்தை சேர்ந்த சமூக விரோதிகளான கூலிப்படை ரவுடிகள் கோழி அருள் (பசுபதி பாண்டியன் கொலை குற்றவாளி சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளி) & செவிட்டு மெஷின் அரி போன்றவர்களை 24 மணிநேரமும் தன்னுடனே வைத்துள்ளார்..

தமிழ்தேசிய அரசியலில் தனக்கு போட்டியாக வளர நினைக்கும் இளம் அரசியல்வாதிகளை இந்த கூலிப்படை கயவர்களை வைத்து மர்மமான முறையில் கொலை செய்வது தான் சீமானின் கொடிய எண்ணம்...

இப்பதிவை படித்ததும் தமிழர் நடுவம் செல்வா பாண்டியரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டால் நீயும் என் தோழனே...

பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கவில்லை - ஈ.வே.ரா பக்தர்...



அப்டியாப்பா?

அதிகாரிச்சி அப்டினா என்னு தெரியுமா?

1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழன் காலத்து அரசாங்க அதிகாரிகளில் பெண்களும் இருந்தனர் அவர்கள்தான் அதிகாரிச்சி.

அதிகாரிச்சி 'சோமயன் அமிர்தவல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.

180 பேரை வைத்து வேலைவாங்கிய அதிகாரிச்சி 'எருதன் குஞ்சரமல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.

இவர்களைப் பற்றி (ராஜராஜ சோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய கோவிலான) திருவையாறு கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.

இது போக கோவிலுக்கு தனது சொத்திலிருந்து  கொடை வழங்கிய பெண்கள் விபரமும் உள்ளது.

உங்கள்  பெண்ணுரிமை கருத்துகளான
கர்ப்பப்பை நீக்குதல்,

ஆண் போல முடிவெட்டுதல்,

ஆசைநாயகர்கள் வைத்துக்கொள்ளல் போன்றவற்றை வேறு எங்காவது போய் பரப்பவும்.

படம்: ராஜராஜசோழன் மற்றும் ஒலோகமாதேவி (அகமதாபாத் அருங்காட்சியகம்)...

நாம் அனைவருக்கும் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும்...


இயற்கை என்னும் வாழ்வியலை நீங்கள் தேட தொடங்கினால்...




தாயின் அன்பு போல் அது என்றைக்கும் அது முடிவு பெறாத தேடல்..

ஏனெனில் தாய் என்றைக்கும் அன்பு தருவதில் குறை வைப்பதில்லை..

அதுபோல் தான் இயற்கையும்..

இயற்கை என்னும் தாயே தேடி செல்லுங்கள், வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பது தெரியவரும்..

நாம் இப்போது வாடகைதாய் என்னும் செயற்கை உலகில் அனாதைகளாக நிற்கின்றோம்...

நம்ம ஊரு சொடக்கு தக்காளியை.. கார்பரேட் விற்கும் விலையை பாருங்கள்...


சித்தர் ஆவது எப்படி? - 9...


சித்தத்தின் வெளிச்சத்தால் வரும் அலைச்சல்...

வெளிச்சம் என்பது சிதறிய ஒளி.. ஒளி என்பது ஒரே நேர் கோட்டில் பயணப் படுவது..

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே என்று ஒரு சிவனடியார் சொன்னால் அவர் தன் வெளிச்சமான சித்தத்தை பலவகைகளில் சிதற விடாமல், ஒரே நெறியாக கொள்கையாக, ஒரே நோக்கமாக,பார்வையாக, ஒளியாக சிவ நெறிபால் மாற்றி கொண்டார் என்று அர்த்தம்...

இதை தான் தெளிந்த சித்தம் எனப்படும்...

அதாவது பல தரப்பட்ட எண்ணங்கள் செயல்பாட்டால் எது செய்வது என்று நிலை குழைந்து போகாமல், எதை செய்தால் எல்லாம் செய்வதாக ஆகுமோ, அதற்கான ஒரு எண்ணத்தோடு இருந்து தன் முழு ஆற்றலையும் சிதற அடிக்காமல், ஒரே குறிகோள் உடன் இருந்து முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெற்றி பெறுபவர் என குறிக்கும்..

இப்படி பட்டவர்களை ஒளி நெறியாளர்கள் என அழைக்கப் படுவார்கள்...

சித்தம் தெளிந்தாரே ஒளி நெறியாளர் ஆக முடியும்....

சித்தர்கள் தோற்றுவித்த ஒளி நெறி பீடம் ஒளி நெறியாளர்களுக்காகவே...

சித்தம் தெளியாமையாலே சிதறிய ஒளி, சிதறிய வண்ணமான வெளிச்சமாகவே இருந்து, முதலில் குறிகோள் அற்று இருப்பதும், பின் குறிகோள்களை அடிக்கடி மாற்றி மாற்றி அலைவதும், பின் ஏதாவது குறிக்கோளை பிடித்து விட்டால் அதில் முழு கவனம் செலுத்த முடியாமல், பலதரப்பட்ட எண்ண ஆதிக்கங்களால் தடைகள் ஏற்பட்டு, அந்த குறிகோளை தவற விடுவதும், இது போன்ற நெறி கெட்ட செயல்கள் நடந்து கொண்டே இருக்கும்..

சித்தம் தெளியவில்லை என்றால் வாழ் நாள் முழுமைக்கும் மனிதன் துன்பத்தை தவிர வேறு ஒன்றை அனுபவிக்க முடியாது...

எதையும் அடையாமல் அலைச்சல் ஒன்றே மிஞ்சும்....

சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கவல்லது புத்தியும் அறிவுமே..

மன சாட்சியாகிய புத்தியில் நிலை கொள்ள கொள்ள புத்தி பலப் பட்டு விட்டால், பின் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கும் வலிமை புத்திக்கு வந்து விடும்...

புத்தி பலப் படுவது மனிதனுடைய இருப்பு தன்மைதான் என்றும் அந்த இருப்பு தன்மை வாசியோகத்தில் சூரிய கலையில் முடியும் தருவாயில் கிடைப்பதை நாம் ஏற்கனவே கண்டோம்..

இருப்பு தன்மையில் இருக்க இருக்க ஒரு உள் உணர்வு தோன்றுவதை பயிற்சியில் கண்டோம்..

அந்த உணர்வு பேரண்ட பேராற்றலின் வரவாக கனலை உணர்வதே.. அப்படி உள் உணர்வை உணர உணர புத்தியில் கனல் பெருக்கம் அதிகமாகிறது..

இதை தான் குரு பீடம் உருவாகி, வலுவான குரு தோன்றுகிறார் என்கிறோம்..

உள் குரு புத்தியில் வலுவாக உட்கார்ந்து விட்டால், நம் பிரச்சனை முக்கால்வாசிக்கு மேல் தீர்ந்தது போலதான்..

நம் உள் குரு பீடம் அமைய, ஒரு உருப்படியான உபாயம், வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையின் முடிவில் உணரும் கனல் தன்மை தான் என்பதை மறக்காமல், அதை சூரிய கலை முழுமைக்கும் பயின்று, அனுபவப் படும் போது, கனல் பெருக்கம் ஏற்படும்..

நாத ஒளியோடு நாம் இருக்கின்ற போதும், கனல் பெருக்கம் ஏற்படுகிறது..

அக குருவாகிய உள் குரு தோன்றி பலப்படும் போது சித்தம் அடக்கப் படுகிறது...

அடக்கப் பட்ட சித்தம் என்றாவது ஒரு நாளோ சற்று தாமதமாகவோ மீண்டும் எழுந்து ஆட தொடங்கலாம்...

சித்தத்தை தற்காலிகமாக அடக்கி அடக்கி வைத்து கொண்டாலும் ஞானம் பெற்ற உள் குரு ஒன்றே, சித்தத்தை நிரந்தரமாக சமாதானப் பெற்ற நிலைக்கு சித்தத்தை கொண்டு வர முடியும்..

அக குரு ஞான குருவாக உயர வேண்டிய அவசியம் ஆகிறது..

அதனை பின் வரும் பகுதிகளில் காணலாம்..

அக குரு பலப் பட்டு விட்டாலே போதும், வாழும் உலகில் நம்முடைய எந்த பிரச்சனை இருந்தாலும், அதனை திறம் பட சமாளிக்கும் வல்லமை வந்து விடும்..

நாம் நன்றாக வாழும் வழி நம் கையில் மட்டுமே உள்ளது...

நம்மிடம் தற்போது இருக்கின்ற புத்தியை திசை திருப்பி அதனையே, அதாவது அந்த புத்தியையே வலுப் படுத்தும் நெறிக்கு செல்வோமாக...

இதை தவிர வேறு ஒரு வழி இல்லை, இல்லவே இல்லை.. உணர்ந்து செயல் படுவோமாக...

தமிழக அரசின் இணையதளம் முடங்கியது...


எஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்ததற்காக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் விபரம்....


1)  எம்.லோகேஷ், நிர்வாக ஆசிரியர், தாய் பனை பப்ளிகேஷன்ஸ்.

2) எச்.நாசர், செய்தி வாசிப்பாளர், சன் நியூஸ்.

3) ஜே.சதீஷ் குமார், நிருபர், தினகரன்.

4) ஜீவசகாப்தன், ப்ரொடியூசர், நியூஸ் 18.

5) சீனிவாசன், கேமராமேன், பாலிமர் நியூஸ்.

6) இளையபாரதி,  நிருபர், நியூஸ் 18.

7) வீரமணி, நிருபர், நியூஸ் 18.

8) டி.பர்தீன், ஸ்க்ரோலிங், கேப்டன் நியூஸ்.

9) டி.பிரகாஷ், மூத்த நிருபர், நியூஸ் 18.

10) எஸ்.விஜய் ஆனந்த், நிருபர், நியூஸ் 18.

11) கே.சிவராமன், நிருபர் நியூஸ் 18.

12) எஸ்.விஷ்ணு, நிருபர், நியூஸ் 18.

13) ஜி.தமிழரசன், நிருபர், கலைஞர் டிவி.

14) ஐ.ஆசிப், நிருபர், நியூஸ் 18.

15) எஸ்.பாலசுப்ரமணியன், நிருபர், உதயா டிவி.

16) பி.பாண்டியராஜ, நிருபர், நியூஸ் 18.

17) எம்.பிரபாகரன், நிருபர், சன் நியூஸ்.

18) ட்டி.ரமேஷ், நிருபர், இப்போது டாட் காம்.

19) எம்.ஆனந்த் குமார், நிருபர், நியூஸ் 18.

20) ஆர்.சரவணன், நிருபர், நியூஸ் 18.

21) எஸ்.அருணாதேவி, அஸ்ஸைன்மென்ட் ப்ரொட்யூசர், நியூஸ் 18.

22) பி.பூர்ணிமா, செய்தி வாசிப்பாளர், ஜெயா டிவி.

23) ஜெ.சிறுமலர், நிருபர், காவேரி நியூஸ்.

24) எஸ்.இளமதி, ஃப்ரி லான்ஸ் பத்திரிக்கையாளர்.

25) ஜெ.கவின்மலர், ஆசிரியர், தினகரன்

26) என்.மகேஸ்வரி, சப் எடிட்டர், தினகரன்.

27) பி.பரிமளா, சமூக செயற்பாட்டாளர், இளந்தமிழகம்.

28) டி.காமாட்சி, காப்பி எடிட்டர், நியூஸ் 18.

29) ஆர்.தாட்சாயிணி, செய்தி வாசிப்பாளர், சன் டிவி.

30) ஏ.வினோதினி, எடிட்டர், நியூஸ் 18...

கார்ப்பரேட் முதல் உள்ளூர் அரசியல்வாதி வரை வெறிகொண்டு மினரல் வாட்டர் வியாபாரத்தில் ஈடுபடும் காரணம் புரிகிறதா..?


சோழர் ஆட்சியில் மருத்துவம்...




சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை எனும் இலவச மருத்துவ முகாம் இருந்துள்ளது.

மற்றும் மருந்து எழுதிக் கொடுக்கும் பணியாளரும் சல்லியக் கிரியை என்றழைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றியும் கல்வெட்டு உள்ளது.

மருந்து இட பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

கல்வியோடு மருத்துவமும் கற்றுக் கொடுத்த கல்லூரியும் இருந்துள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்ட கூலி விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன...

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பாஜக வில் இருந்து விலகல்...


நம் வாழ்வாதாரத்திற்காக நாம் ஒன்றாகும் போது...


அவர்கள் நினைத்ததை எந்தவித குழப்பமில்லாமல் ஆரம்பித்து..

நம்மை வைத்தே அதை பிரபலப்படுத்தி..

நம் வாழ்வாதாரம் பிரச்சனையே மறக்கடித்து விடுவார்கள்...

எஸ்.வி.சேகர் தேவையா இந்த நிலை உனக்கு...


வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்...


காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கி வர வேண்டும்..

நிறைய நீர் குடித்து. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிட்டு வர வேண்டும்.

வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது...

திருட்டு விபச்சார ஊடகங்கள் தான்.. பல மாதங்களாக நமது நாட்டில் ஏற்படும் குழப்பங்களுக்கு காரணம்...


குறிக்கோள்கள் எவ்வாறு வெற்றியை தீர்மானிக்கின்றன...


குறிக்கோள்கள் இல்லாத வாழ்கைப் பயணம் என்பது இலக்கை நிர்ணயிக்காமல் எய்த அம்பினைப் போன்றது.

நீங்கள் இப்பொழுது கிரிக்கெட் விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது என்று முடிவெடுத்து விட்டீர்கள் என்று எடுத்துக் கொள்வோம்.

அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் ஆர்வம் எந்தத் துறையில் உள்ளது பேட்டிங், பவுலிங் அல்லது இரண்டிலுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இங்கே தான் நம்மில் பலர் தவறு செய்கின்றனர்.

இலக்குகள் வெற்றியினைத் தீர்மானிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் பலர் நான் சச்சின் டெண்டுல்கர் போல மிக சிறந்த பேட்ஸ்மேன் ஆக வேண்டும் என்று தனது இலக்கிணை தீர்மானிக்கின்றனர்.

நாம் சச்சினைப் போல சிறந்த ஆட்டக்காரராக வரவேண்டும் என்ற இலக்கிணை நிர்ணயிக்கும் போது வெற்றியை நோக்கி நமது இலக்கிணை தீர்மானிக்கின்றோம். அது நம்மை தோல்விப் பாதைக்கே அழைத்துச் செல்லும்.

அவ்வாறு இல்லமால் நம்முடைய இலக்கிணை நம்முடைய செயலில் அதாவது இங்கே கிரிக்கெட் ஆட்டத்தில் வைக்க வேண்டும்.

இலக்கிணை செயலில் எவ்வாறு நிர்ணயிப்பது?

முதலில் இலக்கு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால்...

அது மாறிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு தொடர் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் ஒரு மலையினை முழுவதுமாக உடைக்க எண்ணினால் அந்த மலையையே இலக்காக வைத்து செயல்பட்டால் அது உங்களுக்கு மிகவும் பெரிதாக தோன்றி பயத்தினை ஏற்படுத்தும்...

மாறாக நீங்கள் அந்த மலையை கற்களாகவும், சிறு சிறு பகுதிகளாகவும்  இலக்கிணை நிர்ணயித்து உடைத்து வந்தால் உங்களால் அந்த முழு மலையையும் உடைக்க முடியும்.

உதாரணமாக உங்களுக்கு பிடித்த செயலான கிரிக்கெட்டில் நீங்கள் இலக்கிணை எவ்வாறு தீர்மானிப்பது என்று பார்போம்..

முதலில் நீங்கள் சிறந்த பேட்டிங் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், உங்களைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் அதிகம் விளையாட வேண்டும், அதிக நேரம் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும், பல மாறுபட்ட சிறந்த பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்த்து பயிற்சி செய்ய வேண்டும், பல்வேறு தன்மை கொண்ட ஆடுகளங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும், உடலினை வலிமையாக ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இப்படி உங்களின் இலக்குகள் முழுவதும் உங்களின் செயலினைத் தொடர்ந்தே இருக்க வேண்டும்.

இலக்கை நோக்கி பயணிக்கும் போது சிலசமயங்களில் சிலரின் எதிர்மறை எண்ணங்கள், அல்லது சிறு தோல்விகள் உங்களை சோர்வடைய செய்யலாம்...

அதைப் பற்றி கவலைப் படாமல் நம் முயற்சியை தொடர வேண்டும்...

அடுத்த தலைமுறையின் அடிமையில்லா அரசியல் வாழ்வியலுக்காக...


நாம் அடையாளமற்ற உவன்களாக நம்பிக்கையுடன் பயணிப்போம்...

இம்பூட்டு தாங்க திமுக வில் பெண் பாதுகாப்பு....


பெண்ணின் இடுப்பை கிள்ளிய திமுக காம கொடூரர்களிடம் இருந்து அந்த பெண்ணை காக்க...

புகார் கொடுத்த அந்த பெண்ணையே திமுக வை விட்டு நீக்கினார் நமக்கு நாமே ஸ்டாலின்...

வடகொரியா அதிபரை அமெரிக்க சிஐஏ சந்திப்பு...


அமானுஷ்யம் - அழுமூஞ்சிப் பேய்...


பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் கருதப்படுகின்ற ஜப்பானிய சாமுராய் அயோமா.

ஆள் கொஞ்சம் சபலிஸ்ட் தன் வீட்டில் வேலை பார்த்த அழகு வேலைக்காரி ஒகிகு மேல் அவருக்கு ஆசை.

ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்தார்.அவள் கண்டு கொள்ளவில்லை.

நேரடியாகவும் கேட்டு பார்த்தார் பயந்து மறுத்தாள். எனக்கு இணங்கினால் நீ என் ஆசை நாயகியாக காலமெல்லாம் சுகமாக வாழலாம் டார்லிங் என்று ஆசை காட்டியும் பார்த்தார். ஒகிகு மசியவில்லை.

ஒகிகு வீட்டில் இல்லாத சமயத்தில் சமையலறைக்குள் சென்றார் அயோமா. அங்கே விலையுயர்ந்த டச்சு தட்டுகள் பத்து இருந்தன. அவற்றை எடுத்து கொண்டு சென்று கிணற்றில் போட்டு விட்டார்.

ஒகிகு இரவில் அயோமாவுக்கு உணவு பரிமாறினாள். டச்சு தட்டு எங்கே அதில் உணவைக் கொண்டு வா என்றார்.

சமையலறைக்கு சென்ற ஒகிகு அதிர்ந்து நின்றால் படபடப்புடன் தட்டுகளைத் தேடினாள். கண்ணிருடன் அயோமா முன் வந்து நின்றாள்.

என் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னால் உன்னை மன்னிக்கிறேன் என்று ஒகிகுவே மிரட்ட ஆரம்பித்தார். அவள் உறுதியாக நின்றால்.

அயோமா அவளைக் கட்டி வைத்து துன்புறுத்திக் கொன்றார். அதே கிணற்றில் அவளது உடலையும் தூக்கி போட்டார்.

சில நாள்கள் கடந்திருக்கும். இரவில் அந்த கிணற்றில் இருந்து அகோரமான ஓசைகள் கேட்க ஆரம்பித்தன.

ஒன்று இரண்டு மூன்று என்று தட்டுகளை எண்ணும் ஒகிகுவின் குரல் அயோமாவின் காதுகளில் விழந்தன.

ஒன்பது வரை எண்ணிய அந்தக் குரல் அதன்பின் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது.

தினமும் நள்ளிரவில் ஒகிகுவின் இந்தக் குரலைக் கேட்டுக் கேட்டே பைத்தியமாகிப் போனார் அயோமா.

வேண்டுமானால் டோக்கிய நகரத்துக்கு செல்லுங்கள் .அங்கே அயோமா டோரி என்ற பெயரில் ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது. அதில் பயணம் செய்து கொண்டே போனால் அகாசகா என்ற பகுதியை அடையலாம்.

அங்கே தான் ஜப்பானுக்கான கனடாவின் தூதரகம் இருக்கிறது.

அதனுள் சென்றால், அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாதவாறு ஒரு பழங்கிணறு இருக்கும். ஒகிகு வாழும் கிணறு தான்.

முடிந்தால் நள்ளிரவு வரை காத்திருங்கள் ஒகிகு அழுது கொண்டே ஒன்று இரண்டு.. எண்ணுவதற்காக வெளியே வரலாம்...

கவனமா இருங்க RELIANCE WATER INDUSTRIES னு நம்ம நீரை அரசு அனுமதியுடன் திருடி நமக்கே விற்பதில் கைத்தேர்ந்தவன் வணிகன்...


திட்டமிட்டு நடக்கும் தமிழ் இன அழிப்பு...


பிறப்பு விகிதத்தில் கடைசி மாநிலமாக தமிழ்நாடு...

சமீபத்தில் மோடி தமிழகவந்தபோது மக்கள் தொகையை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்ப்பட்ட தமிழக அரசுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.அது மக்கள் தொகை என்ற பொது வார்த்தை அல்ல தமிழர்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவது.

கிழே கொடுக்கபட்ட படம்,இது ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்குமான குழந்தை பிறப்பு விகிதாசார கணக்கு.....

இதில் பட்டவர்த்தனமாக தெரிவது இந்தி பேசுகிற மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதம் 4 க்கும் மேலாகவும் 4 ஐ ஒட்டியும் இருக்கிறது, விதிவிலக்காக வடகிழக்கு மாநிலங்களிலும் அதே நிலை தொடர்கிறது அதிகமாக வேற்றின குடியேற்றங்கள் வடகிழக்கு பகுதியில் அதிகரிப்பதும் காரணமாக இருக்கலாம்,

இந்தி பேசாத பகுதிகளில் 2 லிருந்து 3 ஆக மட்டுப்படுத்தப்படுகிறது, குசராத், ஒரியா, மேற்கு வங்கம் விதிவிலக்கு அங்கு குறைந்ததற்கு வேறு சமூக பொருளாதார காரணிகள் இருக்கலாம்,

ஆனால் திட்டமிட்டு தமிழ்நாட்டின் பிறப்பு விகிதாச்சாரம் குறைக்கப்படுகிறது, மிக அபாயமான அளவான 1 லிருந்து 2 வரையில் மட்டுமே குழந்தைகள் பிறப்பது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு தான், இது கேரளாவிலும் தொடர்கிறது,

இது இன்று நேற்று திட்டமிடப்பட்டது அல்ல, இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் தொகையை குறைப்பது என்று இந்திரா காந்தி காலத்திலேயே கொள்கை அளவில் எடுக்கப்பட்ட முடிவு, அதுவே இன்றளவும் நாம் இருவர் நமக்கு இருவர், நாமிருவர் நமக்கு ஒருவர் என்ற சமூக மேம்பாட்டு(?) திட்டங்களின் போர்வையில் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகிறது, இந்த திட்டத்தை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தி சனத்தொகை யை கட்டுப்படுத்தியதாக பாராட்டு வாங்கியதாக அதுவும் கருணாநிதி தான் செயல்படுத்தினார் என்றும் நினைவு,

இது வெளிப்படையான இன அழிப்பு, நீண்ட கால அடிப்படையில் தமிழர் இன அழிப்பு மற்றும் சனத்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பில் நமக்கு தொகுதிகள் உறுதியாக குறைக்கப்படும், ஏராளமான இன அழிப்பு சார்ந்த சமூக பொருளாதார அழிப்பு கள் இதற்குள் அடங்கி இருக்கிறது,

விழிக்கவில்லை எனில் அழிவது உறுதி....

தமிழர்களே குறைந்த இரண்டு குழந்தைகளையும்.. அதிகபட்சம் உங்கள் சக்திக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்...

பாஜக வை எதிர்த்து சாகும் வரை நான் உண்ணாவிரதம் இருக்கும் ஸ்வாதி...


மின்சாரத்தை (மித்ரவருனசக்தி) கண்டு பிடித்தது ஒரு தமிழனே...


மின்கலத்தை கண்டு பிடித்தவர் வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழரே சற்று விழியுங்கள்…

மின்சாரத்தை கண்டு பிடித்தது ஒரு தமிழனே…..

கிறிஸ்து வருவதற்கு முன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழன் மின்கலத்தை கண்டு பிடித்து விட்டான்…. வியப்பாக உள்ளதா? கீழே படியுங்கள்….

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்.

புரியவில்லை என்டா விடுங்க‌…, நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.

இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்..

ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்.

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? என்று யோசிக்கிறீர்களா? மித்ரவருனசக்தி என்றால் மின்சாரம் என்பது தாங்க பொருள்.

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள்.

ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா?

தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி [Baghdad Battery] என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்’ தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.. நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால electroplating என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1891 ஆம் ஆண்டு Rao Saheb Krishnaji Vajhe புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேறு சில மேதாவிகளுடன் சேர்ந்து இதனை செய்து பார்த்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்..

எப்படி இருக்கிறது தமிழனின் அறிவியல்?

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

அகத்தியர் தமிழன் என்கிறீர்கள் ஆனால் அவர் ஏன் சமஸ்கிருதத்தில் எழுதினார் என்பது இங்கு பலரது கேள்வி..

உங்களுக்கும் கூட இது எழலாம். அதை முழுவதுமாய் இங்கு விலக்க முடியாது ஆனால் சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழும் சமஸ்கிருதமும் பாரதம் முழுவதும் பரவி இருந்த மொழிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

அதே நேரம் படத்தில் இருப்பது அகத்தியர் தயாரித்த மின்கலம் ஏன்று இந்த கட்டுரையில் எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை.

இந்த பதிவில் உள்ள ஸ்லோகம் மட்டுமே அவருக்கு சொந்தமானது. இருந்தாலும் இந்த அறிவியல் உண்மையாய் இல்லாவிட்டால் ஒரு வெளிநாட்டு தனியார் தொலைகாட்சி நிறுவனம் இதை அங்கீகரித்து இருக்காது என்பதையும் நாம் உணர வேண்டும்...

தன் ஏழை ரசிகர்கள் பணத்தை நுழைவுச்சீட்டு கட்டணத்திற்கும் அதிகமான தொகை வசூலித்து கொள்ளையடிக்கும் ரஜினி படம் தமிழகத்தில் தடை செய்யப்பட வேண்டுமா ?


திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் பெண்ணை தாக்கியதாக பிரபல நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது...


சென்னை விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் உதயா என்பவர் தனது கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் இருக்கிறார். இந்நிலையில், ஃபேஸ்புக்கில் பழக்கமான பிரபல ஆபாச நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன் உதயாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். 


இதைத் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு உதயாவிடம் கூறி மிதுன் வற்புறுத்தியுள்ளார். ஆனால், மிதும் போதை பழக்கத்துக்கு ஆளானவர் என்பதை அறிந்த உதயா, அவரை திருமணம் செய்துக் கொள்ள மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மிதுன் உதயாவை தாக்கி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். மிதுனின் பிடியில் இருந்து தப்பி வந்த உதயா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். உதயாவின் புகாரையடுத்து மிதுனை போலீஸார் கைது செய்தனர்...

தரமான முடிவு காவேரி நியூஸ்...


மனம் - 2...


மனிதன் நினைத்தாள் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் பல வெற்றியாளர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம், படித்திருப்போம்.

ஆனாலும் நம் மனம் பல நேரங்களில் இதை ஏற்றுக்க கொள்வதில்லை, வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துவது இல்லை.

நாம் அதை ஏற்றுக் கொண்டாலும் நம்முடன் இருக்கும் சிலர் அல்லது நமது சமூகம் நம்மை எதிர்மறையாக பேசி நம்முடைய நம்பிக்கையைக்  குறைத்து விடுகின்றனர்.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்காக மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி காண்பது, எதிர்மயையாக பேசுபவர்களை எவ்வாறு சமாளிப்பது, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி கொண்டனர் என்பதை வரும் பதிவுகளில் காண்போம்.

உங்களால் முடியும் உங்களால் முடியாது என்று நீங்கள் எதை எண்ணினாலும் இரண்டும் சரி தான்.

இது ஹென்றி போர்ட் அவர்களின் அனுபவ வார்த்தைகள்...

இம்பூட்டு தாங்க பாஜக சாதனை...


பாஜக S.V. சேகரின் ஏமாற்று வேலை...


மைலாப்பூர் எம்எல்ஏ வா இருந்தது பத்து வருஷம் முன்பு.. இன்னுமா அந்த பழைய லெட்டர் பேட மாற்றவில்லை...

தமிழ்நாடு அரசு முத்திரையை இப்ப இவர் பயன்படுத்துறது சட்டப்படி குற்றமில்லையா?

இலுமினாட்டி கன்னடன் கமலின் இரகசிய வேலைகள்...


நரம்புகளை வலுப்படுத்தும் புளியங்கொட்டை...


மூளை, முதுகெலும்பு ஆகியவற்றில் உள்ள நரம்புகள் சேதம் அடைந்து இருந்தால் அவற்றை குணப்படுத்தி மீண்டும் வளர உதவும் மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்தமருந்து புளியங்கொட்டையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

பர்க்கின்சன் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் இந்த மருந்து ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து பார்த்து இது சேதம் அடைந்த நரம்பு செல்களை குணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது.

இந்த மருந்தை காயம்பட்ட இடத்தில் திரவமாக ஊசி மூலம் செலுத்த முடியும் என்றும் அந்தக் குழு தெரிவித்தது...

சேவல் சண்டையும்.. கார்பரேட் வியாபார இரகசியமும்...