22/04/2018

திட்டமிட்டு நடக்கும் தமிழ் இன அழிப்பு...


பிறப்பு விகிதத்தில் கடைசி மாநிலமாக தமிழ்நாடு...

சமீபத்தில் மோடி தமிழகவந்தபோது மக்கள் தொகையை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்ப்பட்ட தமிழக அரசுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.அது மக்கள் தொகை என்ற பொது வார்த்தை அல்ல தமிழர்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவது.

கிழே கொடுக்கபட்ட படம்,இது ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்குமான குழந்தை பிறப்பு விகிதாசார கணக்கு.....

இதில் பட்டவர்த்தனமாக தெரிவது இந்தி பேசுகிற மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதம் 4 க்கும் மேலாகவும் 4 ஐ ஒட்டியும் இருக்கிறது, விதிவிலக்காக வடகிழக்கு மாநிலங்களிலும் அதே நிலை தொடர்கிறது அதிகமாக வேற்றின குடியேற்றங்கள் வடகிழக்கு பகுதியில் அதிகரிப்பதும் காரணமாக இருக்கலாம்,

இந்தி பேசாத பகுதிகளில் 2 லிருந்து 3 ஆக மட்டுப்படுத்தப்படுகிறது, குசராத், ஒரியா, மேற்கு வங்கம் விதிவிலக்கு அங்கு குறைந்ததற்கு வேறு சமூக பொருளாதார காரணிகள் இருக்கலாம்,

ஆனால் திட்டமிட்டு தமிழ்நாட்டின் பிறப்பு விகிதாச்சாரம் குறைக்கப்படுகிறது, மிக அபாயமான அளவான 1 லிருந்து 2 வரையில் மட்டுமே குழந்தைகள் பிறப்பது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு தான், இது கேரளாவிலும் தொடர்கிறது,

இது இன்று நேற்று திட்டமிடப்பட்டது அல்ல, இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் தொகையை குறைப்பது என்று இந்திரா காந்தி காலத்திலேயே கொள்கை அளவில் எடுக்கப்பட்ட முடிவு, அதுவே இன்றளவும் நாம் இருவர் நமக்கு இருவர், நாமிருவர் நமக்கு ஒருவர் என்ற சமூக மேம்பாட்டு(?) திட்டங்களின் போர்வையில் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகிறது, இந்த திட்டத்தை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தி சனத்தொகை யை கட்டுப்படுத்தியதாக பாராட்டு வாங்கியதாக அதுவும் கருணாநிதி தான் செயல்படுத்தினார் என்றும் நினைவு,

இது வெளிப்படையான இன அழிப்பு, நீண்ட கால அடிப்படையில் தமிழர் இன அழிப்பு மற்றும் சனத்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பில் நமக்கு தொகுதிகள் உறுதியாக குறைக்கப்படும், ஏராளமான இன அழிப்பு சார்ந்த சமூக பொருளாதார அழிப்பு கள் இதற்குள் அடங்கி இருக்கிறது,

விழிக்கவில்லை எனில் அழிவது உறுதி....

தமிழர்களே குறைந்த இரண்டு குழந்தைகளையும்.. அதிகபட்சம் உங்கள் சக்திக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.