09/06/2021

73 ஆயிரத்து 28லட்சம் கோடி - திமுக அரசால் நியமிக்கப்பட்ட பொருளாதார நிபுணர் 😂



சார் யாருனு தெரியல ஜெயரஞ்சன்..

ஸ்டாலினால், தமிழகத்தை நட்டமாக நிறுத்த மாநிலவளர்ச்சி குழுவுக்கு போடபட்ட பிரபல பொருளாதார.....

இதுக்கு நாலஞ்சு தடவ ௭ண்ணி  பார்த்தாராம்... ௭துக்கு தப்பு தப்பா சொல்ரதுக்கா 😅

1 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் 73 ஆயிரம் கோடி ௮ல்ல...

= 7.316 Crores...

பாஜக மோடி ஒரு டுபாக்கூர் பார்ட்டி....

 


அவர் அவிழ்த்து விடுகிற பீலா கதைகளை நீங்கள் நம்பினால்... அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்..???  

- வங்கி மற்றும் EMI நிதி நிறுவனங்கள்...

கடந்த வருடம் இதே நாளில்... ஊரடங்கை அறிவித்த மோடி... 3 மாதத்திற்கு யாரும் EMI தொகைகளை செலுத்தவேண்டாம். அதை மத்தியஅரசே பார்த்துக்கொள்ளும் என்று அறிவித்து இருந்தார். 

என்றாலும் கூட அதில் எனக்கு முழு  நம்பிக்கை இல்லாததால்... முதல்மாத தொகை 1,950ஐ செலுத்திவிட்டேன். 

பிறகு மற்றவர்கள் யாரும் பணம் கட்டவில்லையே.. என்று அடுத்த 2மாதங்களுக்கான தொகை 3,900ஐ கட்டாமல் விட்டுவிட்டேன். 

நிதி நிறுவனங்களும் அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு... அதற்கு அடுத்த அடுத்த தவனைகளை கேட்டு வீட்டிற்கே வந்து வசூலித்துச் சென்றனர். 

எனக்குள் ஒரு அளப்பறிய மகிழ்ச்சி....!

இந்த மோடி பரவாயில்லையப்பா... ஏற்கனவே 20ஆயிரம் கோடி'யை ஒதுக்குவதாக கூறி நம்மை ஏமாற்றி விட்டாலும்... இந்த EMIஐ தொகையை அவரே செலுத்திவிட்டாரே என்று.....

கடந்த ஒரு வருடமாக இப்படி... சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த போது... 

இன்று காலை வீட்டுக்கு வந்த EMI நிதி நிறுவன வசூலிப்பாளர்கள்... வழக்கமான  EMI ₹1,950ஐ வாங்கிக்கொண்டு... 

அப்புறம் அந்த பாக்கி தொகை ₹5,900ஐ எப்போ கட்டுவீங்க? 

உடனே கட்டிடுங்க... 

இல்லேனா உங்க OD ரேட்டிங்கில் மார்க்கை குறைத்துவிடுவோம்.

அப்புறம் உங்க ஆதார் கார்டை காட்டி நீட்டி நீங்க எங்கயுமே கடன் வாங்க முடியாது பார்த்துக்கோங்க என்றார்..! 

என்னப்பா... இது புதுசா கதை சொல்றீங்க? 

நாங்க எதுக்கு 5,900 கட்டனும் என்று கேட்டதற்கு.... 

போன வருசம் 2மாத EMI செலுத்தாத தொகை 3,900 + அதற்கான அபராத வட்டித் தொகை 2,000 என்று உங்க கணக்கில், நாங்க இப்போ புதுசா சேர்த்து இருக்கோம் என்றார்..! 

அதான் அந்த பணத்தை கட்ட வேண்டாம்னு பிரதமர் மோடி'யே சொல்லியிருந்தாரே...?? 

அவரு  அந்த EMI தொகையை எங்களுக்கு தரலேனாலும் பரவாயில்லை, அதற்கான வட்டி தொகையை கூட அவரு  எங்களுக்கு, அந்த மாதமே தரலை. அந்த வட்டிதான் இப்போ 2,000ரூபாயாக வளர்ந்து விட்டது,  மோடியோட பேச்சையெல்லாம் நம்பி EMI கட்டாமல் விட்டது நீங்கதான். 

எனவே வட்டியும் முதலுமாக உடனே பணத்தை செட்டில் பண்ணுங்க.. இல்லேனா.. வேற எங்கயுமே நீங்க கடன் வாங்க முடியாதபடி OD ரேட்டிங்கை மைனஸ் பண்ணி விட்டுடுவோம் ஜாக்கிறதை என்று.. சொல்லிவிட்டுப் போகிறார்.  

ஹலோ... ஒரு நிமிஷம் நில்லுங்க...

முடிஞ்சா OD ரேட்டிங்கை மைனஸ் பண்ணுங்க நானும் அதை பார்த்துவிடுகிறேன்..! 

உங்களுக்கு தரவேண்டிய 2மாத EMI தொகையை மட்டும்தான் என்னால் தரமுடியும், அதற்கான அபராத வட்டியெல்லாம் என்னால் தரமுடியாது என்று... நாங்கள் சவுண்டு விட.... 

உங்களுக்காக'த்தான் நாங்களும் மத்திய அரசுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.. 

ஒருவேலை அந்த அபராத தொகையை அரசு எங்களுக்குச் செலுத்திவிட்டால் உங்களுக்கு பிரச்சணை இல்லை, இல்லேனா அதை நீங்கதான் தரனும் என்று கூறிவிட்டு போய்விட்டார் அந்த வசூலிப்பாளர்..! 

மேலே சொன்ன அந்த நிதி நிறுவனம் ஏதோ ஒரு லோக்கல் கம்பெனி அல்ல... இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான L&T நிறுவனம்.

இப்படித்தான்... தொழில் வளர்ச்சிக்காக 20ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்று மோடி அறிவித்தவுடன், ஏற்கனவே  வங்கியில் நாங்கள் வாங்கியிருந்த 90ஆயிரம் தொழில் கடனை உடனடியாக முடித்துவிட்டு..... 

இரண்டாம் தவனையாக 1லட்சம் கேட்டு விண்ணப்பித்தபோது.. மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் IOB வங்கி இனி கடன் தரும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லையென்று சொல்லி ஏமாற்றிவிட்டது. 

தொழில் வளர்ச்சிக்காக... 

20ஆயிரம் கோடியை மோடி ஒதுக்கி இருக்கிறாரே என்று நாங்கள் கேட்டபோது...

மோடி எந்த பேங்கின் மேனேஜாராக இருக்கிறார் என்று தேடிப்பார்த்து அந்த பேங்கிலேயே போய் தொழில் கடன் கேளுங்கள், உடனே தூக்கி கொடுப்பார், ஆனால் இந்த கிளியனூர் வங்கிக்கு நான்தான் மேனேஜர், எனவே என்னிடம் பணம் இல்லாததால் உங்களுக்கு கடன் தரமுடியவில்லை, என்று சொல்லிவிட்டார்.  

மூன்று மாத EMI தெகையின் வட்டியையாவாது... மோடி அரசு அன்றே செலுத்தியிருந்தாலும்... அந்த வட்டி இப்படி குட்டிமேல் குட்டி போட்டு குடும்பத்தோடு வந்து நின்றிருக்காது, 

அந்த வட்டியை இனி மக்கள் கட்டினாலும், அரசே கட்டினாலும்.. பொருளாதார இழப்பு என்னவோ இந்தியாவுக்குத்தான்.!!

நானும் என் வயதில்... எத்தனையோ பிரதமர்களை பார்த்துவிட்டேன்..! 

இப்படி விதவிதமாக வடை சுடுவதையே தனது பிழைப்பாக கொண்ட ஒரு பிரதமரை இப்பதான் பார்க்கிறேன்..!! 

- Abubakkar Gpm

திமுக 2G ஊழல் ராணி கனிமொழியின் பொய், பித்தலாட்டம்...

 


திமுக ஸ்டாலின்.. பிரச்சனா மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பாரா என்று பார்ப்போம்...

 


அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்...

 


லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்.

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்...

அய்யோக்கிய பிராடு பயலுங்க...

 


பாஜக மோடி எனும் வரி கொள்ளையர் அரசின் பொய், பித்தலாட்டம்...

 


இறைவன் எந்த மதத்தவன்?

 


இறைவன் இருக்கிறான் என்பதை நம்பாதவர்கள் கூட மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்..

கோடானு கோடி உயிர்கள், உலகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத அண்டவெளியில் துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதைப் பார்க்கும் போது அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இன்று அந்த இறைவனைத் தங்கள் மதத்தவராக பல மதத்தவரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவன் பெயரால் தர்மங்களும் நடக்கின்றன. அதர்மங்களும் நடக்கின்றன. இறைவனின் பெயரால் யுத்தங்களும், சண்டைகளும் சர்வசகஜமாக நடப்பதை வரலாறு பதிவு செய்கிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். செத்து மடிகிறார்கள்.

உண்மையில் இறைவனுக்கு என்று ஒரு மதம் இருக்கிறதா? இருந்தால் இறைவன் எந்த மதத்தவன்? பல மதங்கள் தங்களுடையவன் என்று உரிமை கொண்டாடுகின்றனவே, உண்மையில் பல மதக் கடவுள்கள் இருக்கின்றனரா?

பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.

இருப்பது ஒரு இறைவன் என்றால் அவன் ஒரு மதத்தவனாக இருக்க முடியுமா? அப்படி ஒரு மதத்தவனாக இறைவன் இருந்திருந்தால் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓஹோ என்று சுபிட்சமாகவும், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க மற்ற மதத்தினர் எல்லாம் கீழான நிலைகளிலும், சொல்லொணா கஷ்டங்களுடன் இருக்க வேண்டும். அது தான் லாஜிக்காகத் தெரிகிறது.

ஆனால் இன்றைய உலகில் எல்லா மதத்திலும் சுபிட்சமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், எதிர்மாறாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இறைவன் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்ற நிலைபாடும் அடிபட்டுப் போகிறது.

இருப்பது ஒரு இறைவன், நாமெல்லாரும் அவன் சிருஷ்டிகள் என்றால் மதம் என்ற பெயரிலும், தங்கள் கடவுள் என்ற பெயரிலும் மனிதர்கள் சண்டை போடுவது எதற்காக?

தமிழகம் அழிக்க துடிக்கும் பாஜக.. துணை போகும் திமுக...

 


நித்தியானந்தா கலாட்டா...

 


சூட்சும உலகங்கள்...

 


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.

தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),

கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),

வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),

தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),

மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)

ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது.

இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.

உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?

மதுரையில் பட்டா கத்தியுடன் ரவுடி கும்பலுடன் கலவரம் செய்த திமுக பிரகாசம் கட்சியில் இருந்து நீக்கம்...

 


பாஜக தர்மேந்திர பிரதான் கலாட்டா...

 


பயன் தரும் மூலிகைகளும் செடிகளும்...

 


நங்கை மூலிகை - சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக் கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

கசப்பு மருந்து எனப்படும் சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்...

ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு.

விஷக்கடிக்கு மருந்து..

சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள் அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் தாக்காது. தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.

நீரிழிவு நோய்க்கு மருந்து..

இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகளுக்கு மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள்.

கல்லீரல் நோய்களை போக்கும்..

காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும். மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது...

அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது...

 


என் இதயம் கேட்பது சொல்லட்டுமா?

ஒரு தாய்ப்பறவை தன்

குஞ்சுகளுக்களிக்கும் கதகதப்பு.


மழலை பசியுணர்ந்து

மார்பு கொடுக்கும் தாய்மை.


குலுங்கி நான் அழும்போது

குனிந்து என் முதுகு தடவி

ஆறுதல் சொல்லும் தோழமை.


தோல்வி கண்டு நான் துவளுகையில்

இறைவன் துணை சொல்லி

இதயம் தேற்றும் இதம்.


ஒவ்வொரு ஸ்பரிசத்திலும்

உனக்கு நான் இருக்கிறேன் 

என உணர்த்தும் உறுதி.


கைவிரல் பின்னிக் கொண்டு

காலம் முழுமைக்கும்

காதலி நான் உண்டு என்று

கண்டுகொள்ள வைக்கும் சிநேகம்.


கூடல் வயது குன்றிய பின்னரும்

காதல் என்பது கரையாத ஒன்று என

அன்பு காட்டும் அண்மை.


கோபப்பட்டு நான் 

கடின வார்த்தை பேசிய போதிலும்

அமைதி காட்டிப் 

பின் பெரிதுபடுத்தாத பெண்மை.


ஆவேசம் நான் கொள்கையில் 

அடக்கி வைக்கும் 

உன் ஆதிக்கம் கலந்த அன்பு.


எங்கேனும் நான் எல்லை மீறினால்

கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம்.


உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும்

உன்னிரு கண் ஈரம்.


இத்தனை கேட்டாலும்

என் இதழ் அசைவது 

ஒரு கேள்விக்குத் தான்.


நீ கிடைப்பாயா? 

உன் கணவனை விட்டுவிட்டு 

என்னை தேடி ஓடி வருவாயா.?

அய்யய்யோ இந்த காதல் தோல்வி பயலுங்க கிட்ட பழகவே கூடாது போலயே.. அவனுங்க கதை சொல்லி என்னைய புலம்ப விடுறானுங்களே..

😏😏😁

திமுக உபி க்கள் தன் வேலையை தொடங்கினார்கள்...

 


இது தான் பாஜக மோடியின் அருமையான திட்டமாம்...