08/08/2018

திமுக கலாட்டா...


கலைஞர் சாவிலே சந்தோஷம் அடைந்தேன்.

இரங்கல் தெரிவிக்கவே கூடாது என்பதற்காகவா..? இல்லை.

இறப்பு ஒரு கொடியவனை உத்தமனாக்கி விடக்கூடாதே என்பதற்காக.

திமுக உடன்பிறப்புகளை நக்கல் அடித்தேன்.

அவர்களின் தலைவன் இறந்தான் என்பதற்காகவா? இல்லை...

மற்ற கட்சி மற்றும் மற்ற சமுதாய தலைவர்களின் இறப்பை கேலி செய்து கிண்டலடித்த உ.பி-களை கண்டிப்பதற்காக...

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை? என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்கப்பட்டேன். (ஈழத்தமிழர்கள் இறந்த போது)

சுயநலம் என்பீர்கள்?

ஆம்! என் சுயநலத்தில் நாளை யார் மரணத்தின் போதும் உடன்பிறப்புகள் நக்கலடித்து சிரிக்ககூடாது என்ற பொதுநலமும் கலந்திருக்கிறது...

சென்னை மெரீனா அண்ணா சமாதிக்கு வெளியே விரைவு அதிரடிப் படையினர் குவிப்பு...


திமுக கருணாநிதியே அள்ளி இடுகிறோம் கொள்ளி...


ஈழத் தமிழா இரங்காதே புறம் தள்ளி அறம் பாடு
மானத் தமிழினம் ஈனச் சிறை யிருந்து
ஈகப் போராடி ஏற்றிய வீரக் கொடியதனை
ஈனப் பிறவி கூடி அறுத்தானே
குல வேரோடு மீண்ட தமிழீழத்தின்
ஆண்ட பரம்பரையின் மாழாத் தீரத்தை

கொடும் மழை அளவு கண்ணீர்
வங்கக் கடல் சிவந்த குருதி
மலை யளவு பிணங்கள்
ஏறத் தள்ளி எரித்து
எள்ளி நகை செய்தும்
ஏசிக் காற்று வாங்கி கிடந்தானே
கடற் கரையில் கட்டு மரம்

அபயம் அபயம் என
ஈழத் தமிழரின் ஓலம் கேட்டும்
மௌனம் காத்த மெரீனாவே
மாடு பிடிக்கத்தான்
நீ பேரலை கொண்டெழுவாயா

மானப் போர் வென்று வீரச் சமர் கூட்டி
ஈகம் தந்த லெட்சம் உறவுகள்
உயிரெனத் தெரியலையா
தமிழ் குலக் கொடி வேந்தரென அறியலையா
தேடிய விடிவெங்கே சுய உரிமை நிலை எங்கே
முடிவின்றி மூழ்கிய முகாரி தானே அங்கே

வித்தகரே வீண் விரையம் கொள்ளாதீர்
தேசியத் தமிழினத் தலைவன்
தெய்வம் ஆனான் தெரியாதோ

ஏசி காற்றும் சூரியக் கண்ணாடியும்
காலமுக்க உறவும் காவலுக்கு காவலரும்
மெரினாவில் அன்று அன்றலர்ந்த காட்ச்சி 
கலைஞனின் சின்னத் திரை சீரியல் தானே
போதுமடா சாமி போயிடு போயிடு

இரங்காது நெஞ்சு தாங்காது பூமி
தமிழீழம் என்றோ பிறந்திருந்தால்
உன் பெயரையும் பொன்னெழுத்தில் மின்ன
வண்ணம் தீட்டி வாசலிலே வைத்திருப்போம்
கண்ணிழந்த கபோதியே
களம் ஆடி வென்ற தமிழீழக் கனியை இழந்தோமடா உன்னால்
வெறுங் கையில் முழம் போட்டு
முகத் துதி பாடமாட்டோம்
அகத்தின் அனலில் அள்ளி இடுகிறோம்
கொள்ளி
பிடி சாம்பலும் மிஞ்சாது உன் மேனி

- பாவலர் வல்வை சுயேன்...

குறிப்பு : ஈழத்தில் தமிழர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்...

திருட்டு திராவிடர்ஸ்...


நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்..

திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ? , ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்?, திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூற வேண்டும்?

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும், ஆள்பவர்களு தமிழர்களும் இல்லையே ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போயிருந்தோம்.

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் அனைவரும் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் . வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில், இல்லாத திராவிடத்தை விட நாம் தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளுக்கு விடையளித்து புரிய வைக்கவும். அப்படி நாம் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் தமிழர் என்று கூவாமல், உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க முடியாது...

இன்னைக்கு இந்த அரசியல் நாகரீகம் பட போற பாடு இருக்கே அதை நெனச்சா...


உடல் எடையை குறைக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள்....


1. 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

2. சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

3. சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

4. 1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

5. உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

6. எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

7. மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு...

சேலம் 8 வழிச் சாலை...


இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி, அடையாறு, க்ரவுன் ப்ளாஸா ஹோட்டலில் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை இன்று காலை சந்திக்கிறார்...

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடித்தளம்...


திராவிடக் கட்சிகளுக்கு அடித்தளம் திராவிடர் கழகம்.

இது 'நீதிக் கட்சியும்' 'சுயமரியாதை இயக்கமும்' இரண்டறக் கலந்து 1944ல் உருவானது.

இவ்விரண்டில் (ஸ்வய மர்யாதா என்பதை தமிழாக்கி) 'சுயமரியாதை இயக்கம்' என்பது ஈவேரா காங்கிரசிலிருந்து ஆறாண்டுகளுக்குப் பிறகு விலகி 1925ல் தொடங்கியது.

1926ல் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து நடத்திய பிராமணரல்லாதார் மாநாடு மதுரையில் நடைபெற்றது.

இதற்கு தலைமை தாங்கியவர் தெலுங்கரான சர்.ஏ.பி.பாத்ரோ.

1927ல் இதேபோல கோவையில் பிராமணரல்லாதார் மாநாடு நடந்தது.

இதற்கு தலைமை வகித்தவர் தெலுங்கரான குமாரசாமி ரெட்டியார்.

1928ல் நடந்த முதல் சுயமரியாதைக் கூட்டத்தில் முன்னிலை வகித்தவர் தெலுங்கு பிராமணரான 'மணத்தட்டை சேதுரத்தின ஐயர்'.

1929ல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை, கன்னடன் என்று தன்னைக் கூறிக்கொண்ட தெலுங்கர் ஈவேரா.

1930ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைமையேற்றவர் எம்.ஆர்.ஜெயகர் என்ற வடஹிந்தியர்.

1931ல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுக்கு சர்.ஹரி சிங் என்பவர் அழைக்கப்பட்டார். அவர் பாதிவழிவரை வந்து உடல்நலமின்றி திரும்பிவிட்டார். அதனால்  தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார்.

1933ல் கோவை சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் கே.ஐயப்பன் என்ற மலையாளி.

அடித்தளமே இப்படியென்றால், ஆட்சி எப்படி என்பது இப்போது தெரிகிறதல்லவா?

உங்கள் அதிகாரம் எத்தகைய வலிமையானது என்பதை நீங்கள் உணர்ந்தால் மட்டுமே...


இந்த அமைப்பு எப்படி கொடூரமானது என்பது தெரியவரும்...

கோவிலூர் இரசாயன ஆலையில் தீ விபத்து. விச வாயு பரவும் அபாயம்.. போக்குவரத்து முடக்கம்...


ஆங்காங்கே  வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் வெளியூர்களுக்கு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.....

தொடர்ந்து  பொதுமக்கள்...
சாலை மறியல் போராட்டம்...

அணையைத் தகர்த்து காவிரியை மீட்டவன்...


மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173) காவிரியைத் தடுத்த போது..

இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163) அணையை உடைத்து காவிரியை விடுவித்தான்.

இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும் நாம் உருவாக்கி இருந்தோமானால்..

காவிரியை கன்னடவன் விதிமீறி அணை கட்டித் தடுத்திருப்பானா?

அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?

அல்லது பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கை விடுவானா?

பணங்களை செல்லாது என அறிவிகௌக வெனிசூலா அரசு முடிவு...


தமிழர் நாட்டுக்கொடியை ஏற்றும் வீரப்பனார்...


தமிழ் நாட்டுக்கொடியானது முதன்முதலாக 1968ல் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி (தற்போது TNAU) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 25ம் நாள் வ.உ.சி பூங்காவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏற்றப்பட்டது...

வீரப்பனார் தமிழர் விடுதலைக் குழுக்களான..

தமிழர் நாடு விடுதலைப் படை (TNLA)..
தமிழர் நாடு மீட்புத் துருப்புகள் (TNRT)..

ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி உருவாக்கிய போது காட்டில் தமிழர் நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது.

படத்தில் வீரப்பனாருடன் சேத்துக்குளி கோவிந்தன்...

தடுப்பூசி யும் உண்மைகளும்...


கருப்புச் சிங்கக் கூட்டங்களை வெள்ளைப் பன்றிகள் அழிக்க திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறது...

தமிழினமே... தடுப்பூசி போடுவதற்கு முன் அந்த தடுப்பூசியை பற்றிய முழுமையான அறிதல் இல்லாமல் அதை உங்கள் குழந்தைகளுக்கு செலுத்த அனுமதிக்காதீர்கள்...

தமிழ் மருத்துவம் - சித்த மருத்துவம்...


சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள்.

சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர்.

சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய், சீனி, முதலியக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஓர் மருத்துவ முறையாகும்.

சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் த்ததுவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்கள் சான்றுள்ளது.

சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....
(-- சித்தர் நாடி நூல் 18 --)

சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பனிரெண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது. நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதினாலும் பிணிகள் உற்பத்தி ஆகின்றன.

நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்ற காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.

வாத சம்பந்த பிணிகள்...

வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.

கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

பித்த சம்பந்த பிணிகள்...

பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

சிலேத்தும சம்பந்த பிணிகள்...

சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றிய திருக்குறளைப் பார்ப்போம்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.- திருவள்ளுவர்.

நோய் விளைவிக்காதவை என்று கூறப்பட்டவைகளை மட்டும் உண்டு வந்தால் மருந்து என்று எதுவும் தேவையில்லை.

பரிசோதனை...

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உங்கள் உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு.

காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது.

மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்து விட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது...

கூடங்குளம் அணுஉலை உண்மைகள்...


கூடங்குளம் அணு உலைகள்தான் உலகத்தின் தலைசிறந்த உலைகள் என்றும், அதற்கு எதிராக போராடக்கூடிய மக்கள் தேச விரோதிகள் என்றும் நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள் என்று மிகப்பெரிய பிரச்சாரம் செய்யப்பட்டது...

கூடங்குளம் அணு உலைகள் மொத்த தென்னிந்தியாவிற்கும் ஆபத்தானவை - அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன்...

இயேசு தோமா என்ற தனது சீடரை தனக்கு தெரிந்த வணிகக்கப்பலின் உரிமையாளரான அப்பன் என்ற பெயருடைய தொலைதூர தேசத்தார் ஒருவருடன் அவரது கப்பலில் அனுப்பி வைத்தார் - கோகர் கிரிஸ்டன் (ஜெர்மானிய வேத ஆராய்ச்சியாளர்)...


சாத்து அப்பன் - சாத்தப்பன்
ஆவுடை அப்பன் - ஆவுடையப்பன்
மெய் அப்பன் - மெய்யப்பன்

போன்ற வாரிசுப் பெயர்கள் தமிழ்நாட்டு கடல் வணிகர்களான நகரத்தார்களை (காரைக்குடி செட்டி) தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை நோக்க வேண்டும்....

அந்த தோமா என்ற சீடர் தமிழ்நாட்டு பகுதியில் தான் கிருத்தவத்தை பரப்பினார் என்பது அனைவரும் அறிந்ததே..

அப்படியெனில் சூரிய வழிபாட்டின் மறு உருவமான கிருத்தவத்தை உலகம் எங்கிலும் பரப்ப சொல்லியது யாராக இருக்கும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...


குறிப்பு : அடிமைகளை ஏற்றி செல்லும் கப்பலின் கொடி இது.. நகரத்தார்கள் தான் கப்பலில் சிங்க கொடியை உபயோகித்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே...

உண்மையை கூறுங்கள்...


பேச்சிலர்ஸ் கல்லறைத்தோட்டம் – 1991...


இதுவரையிலான புகைப்படங்களில் இந்த புகைப்படமும் ஒரு முக்கிய உண்மைப்படமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் இந்த புகைப்படம் ஹை-ஸ்பீடு ஷட்டர் கேமரா மூலம் சுடுகாட்டில் அதுவும் பட்டப்பகலில் எடுக்கப்பட்டது.

(பேய் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் இரவில் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது).

அதுவுமில்லாமல் இந்தப்படம் அமானுஷ்யம் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களாலேயே எடுக்கப்பட்டது.

மேலும் இந்தப்படத்தை கிளிக்கும் முன் அவர்களின் ஆராய்ச்சிக்கருவிகளில் எலெக்ட்ரோ மேக்னட் அலைவரிசை அதிகமாகவே அலை பாய்ந்திருக்கிறது.

ஆகஸ்ட் 11, 1991ம் ஆண்டு பேய் ஆராய்ச்சி சொஸைட்டியைச் சேர்ந்த மரி ஹஃப் என்ற புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரையிலும் டபுள் எக்ஸ்போசர் என்றோ, போலி என்றோ நிரூபிக்கப்படாதது கூடுதல் சிறப்பு...

இந்திரா பானர்ஜி கலாட்டா...


சைனஸ் பிரச்சனையை போக்க...


பருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று நாட்களில் போய்விடும். ஆனால் அது சிலருக்கு நீண்ட நாட்கள் இருந்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப்பதால், அது சைனஸாக மாறிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், தலைக்கு குளித்தப்பின்னர், தலையில் இருக்கும் ஈரத்தை காய வைக்காமல் இருப்பர். இதனால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும் போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்றவை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை போக்க ஈஸியான வீட்டு மருந்து இருக்கிறது.

சைனஸ் பிரச்சனையை போக்க...

ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வர வேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலைவலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.

தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.

தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க்கோர்வை போன்றவை சரியாகும்.

குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.

கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும் முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட் போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவ வேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலைபாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்...

பாரம்பரிய உணவு முறைகளை கூறி விழிப்படைய செய்தால் கோமாளிப் பட்டம்...


கோமாளிகள் நாங்கள் அல்ல மானங்கெட்ட சமூகமே...

மாதத்தவணையில் குழந்தை பெறப்போகும் நீங்கள் தான்...

மூலக்கனல்...


ஞானிகளது உடம்பில் மூலக்கனல் மிகுந்தால் சுக்கிலம் வெளியாகாமல் உள்ளேயே தங்கிவிடும்.

அங்கிமி காமாவைத் தானுடல் வைத்தான்
எங்குமி காமாவைத் தானுல கோழையுந்
தங்கமி காமாவைத் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.

-திருமந்திரம் - திருமூலர் வரலாறு - கவி எண் 87..

இங்கு திருமூலர் “தங்கமி காமாவைத் தமிழ்ச் சாத்திரம்” என்கிறார்.

எந்த ஒரு சாத்திரமும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பொருளை விளக்கமாகச் சொல்லாது என்றும், பொங்கி மிகாமை வைத்தான் எனப் பொருள் கூறுவது சம்பிரதாய இரகசியமாகும்.

ஒரு மனிதன் பெண்போகம் கொள்ளாமல் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் அவனுள் சுக்கிலமானது தானே வெளியாகிவிடும்.

ஆனால், ஞானிகளுக்கு ஆசான் ஆசியால் அவ்வாறு வெளியேறாது. உடம்பினுள்ளேயே தங்கி உடம்போடு கலந்துவிடும் எனக் கூறுகிறார்...

பல நாடுகளின் சீரழிவிற்கு காரணமான உளவாளிகளுக்குத் தன் சொந்தச் செலவில் தீனி போடும் உலகின் ஒரே வில்லன் இந்த இலுமினாட்டி ரோத்சைல்ட்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 4...


அனுபவம் மிக்க மருத்துவரே தடுமாறும் சில மருத்துவப் புதிர்களில் அனாயாசமாக எப்படி எட்கார் கேஸால் பதில் கண்டு பிடிக்க முடிகிறது? என்ற கேள்விக்கு எட்கார் கேஸ் எளிமையாகப் பதில் சொன்னார்.

ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்.

எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாக எட்கார் கேஸ் சொன்னார். அவற்றை அவர் Akashic Records (ஆகாய ஆவணங்கள்) என்றழைத்தார். அதைப் படிக்கும் கலையைக் கற்றுக் கொண்டால் எந்த அறிவையும், தகவலையும் சுலபமாகப் பெற முடியும் என்றார். எட்கார் கேஸ் உபயோகித்த அந்த ஆகாசம் என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். அவர் சொன்ன கருத்தும் நம் நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக, 'ஒரு யோகியின் சுயசரிதை'யில் பரமஹம்ச யோகானந்தா தன் குரு ஸ்ரீ யுக்தேஸ்வருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கிறார்.

கல்லூரியில் படிக்கையில் ஒரு கோடை விடுமுறையில் பூரி ஆஸ்ரமத்தில் உள்ள தன் குருவை சந்திக்க யோகானந்தா செல்கையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த ஆறு காலி·பிளவர்களை எடுத்துச் சென்றார். அவற்றை யோகானந்தாவின் அறையிலேயே வைத்திருந்து மறுநாள் சமையலுக்குத் தர யுக்தேஸ்வர் சொல்ல அவற்றைத் தன் கட்டிலுக்கு அடியில் யோகானந்தா உள்ளே தள்ளி வைத்தார். மறுநாள் அதிகாலை யுக்தேஸ்வருடன் யோகானந்தரும் மற்ற சீடர்களும் வெளியே காற்று வாங்க நடந்தனர். சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கேட்டார்.

"நீ ஆஸ்ரமத்தின் பின் கதவை சரியாகப் பூட்டினாயா?"

யோகானந்தர் யோசித்து விட்டு "பூட்டியதாகத் தான் நினைவு" என்றார்.

யுக்தேஸ்வர் சிரித்தபடி சொன்னார் "நீ சரியாகப் பூட்டவில்லை. அதன் தண்டனையாக நீ கொண்டு வந்திருந்த ஆறு காலி·ப்ளவர்களில் ஒன்றை இழக்கப் போகிறாய்". பிறகு அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். ஆசிரமம் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்தவுடன் அனைவரையும் அங்கேயே நின்று கவனிக்கச் சொன்ன யுக்தேஸ்வர் யோகனந்தரிடம் "இப்போது உன் தண்டனையை நிறைவேற்றப் போகிறவன் வருகிறான் பார்" என்றார். எல்லோரும் தூரத்தில் நின்றபடி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நாட்டுப்புறத்தான் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் ஆசிரமத்தைக் கடந்து சென்றான்.

யுக்தேஸ்வர் சொன்னார். "இப்போது அவன் திரும்புவான் பார்".

அவர் சொன்னபடியே அவன் திடீரென்று திரும்பி வந்து ஆசிரமத்தின் பின் வாசற்புறம் சென்றான். அனைவரும் பரபரப்புடன் பார்த்துக் கொண்டே நின்றனர். சிறிது நேரத்தில் அவன் ஒரு காலி·ப்ளவருடன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து தன் வழியே எதைப் பற்றியும் கவலைப்படாமல் போனான்.

யோகானந்தர் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாத யுக்தேஸ்வர் சிரிப்பினூடே சொன்னார். "அந்த நாட்டுப்புறத்தானுக்கு காலி·ப்ளவர் அவசரமாகத் தேவைப்பட்டது. அதனால் தான் அவனுக்கு நீ கொண்டு வந்த காலி·ப்ளவர்களில் ஒன்றைத் தர நினைத்தேன்....."

யோகானந்தர் ஓடிச் சென்று தன் அறையை சோதனை செய்தார். அவருடைய தங்க மோதிரங்கள், கைக்கடிகாரம், பணம் எல்லாம் கட்டிலின் மேலே பார்வைக்குத் தெளிவாகத் தெரிந்தபடி இருக்க திருடன் குனிந்து கட்டிலிற்கு அடியில் மறைவாக இருந்த காலி·ப்ளவர்களில் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றிருப்பது தெரிந்தது.

யோகானந்தர் தன் குருவிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது "விஞ்ஞானம் ஒரு நாள் இந்த ரகசிய சக்திகளை அறியும்" என்று மட்டும் யுக்தேஸ்வர் சொன்னார்.

சில வருடங்களில் ரேடியோ என்ற அதிசயக் கருவியை இந்த உலகம் அறிய ஆரம்பித்தது. அப்போது யோகானந்தர் தன் குருவும் ஒரு மனித ரேடியோ என்று நினைத்தார். ரேடியோ எப்படி ஆயிரக்கணக்கான ஒலியலைகளுக்கு இடையில் ஒரு தனிப்பட்ட அலையை எடுத்து ஒலிபரப்ப முடிகிறதோ அதே போல் அவர் குருவாலும் எங்கிருக்கும் எந்தத் தகவலையும் படிக்க முடியும் என்று கூறினார். அதே போல் தன் குருவால் யாருக்கும் தகவலை அனுப்பவும் முடியும் என்றும் நம்பினார்.

இன்னொரு முறை ஆசிரமத்தில் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவற்றில் கலந்து கொண்டு இரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் திரும்பிச் சென்றனர். ஆசிரமத்தில் அனைவரும் தங்கள் பணிகளை முடித்து விட்டு உறங்கச் சென்ற போது நடுநிசியாகி விட்டது. உறங்கச் சென்ற சில நிமிடங்களில் யுக்தேஸ்வர் எழுந்ததைக் கண்ட யோகானந்தர் குருவிடம் காரணம் கேட்டார்.

"நம் நண்பர்களில் ஒரு குழு தங்கள் ரயிலைத் தவற விட்டு விட்டது. அவர்கள் திரும்பி இங்கு வரப் போகிறார்கள். பசியுடன் வரும் அவர்களுக்கு உண்ண ஏதாவது உணவு தயாரிக்க வேண்டும்"

அந்த நள்ளிரவில் அந்தக் குழுவினர் திரும்பி ஆசிரமத்திற்கு வருவார்கள் என்பதை நம்ப யோகானந்தருக்கு சிரமமாக இருந்தாலும் அவர் குருவுடன் சேர்ந்து உணவு சமைக்கக் கிளம்பினார். அவர்கள் உணவு தயாராகிய போது உண்மையிலேயே ரயிலைத் தவற விட்ட குழுவினர் அந்த அகால நேரத்தில் தொந்திரவு செய்வதற்கு வருத்தம் தெரிவித்தபடி வந்து சேர்ந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு சூடாகக் காத்திருந்த உணவையும் கண்டபின் ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை.

எட்கார் கேஸ் சொல்வதையும் யோகானந்தர் சொல்வதையும் பார்த்தால் தொலைக் காட்சியில் விருப்பப்பட்ட சேனல் பார்க்க முடிவதும் வானொலியில் விருப்பப்பட்ட ஸ்டேஷன்களைக் கேட்க முடிவதும் எவ்வளவு இயல்போ இதுவும் அவ்வளவு இயல்பே. நம் மனதை ஒரு ஏண்டனாவாக அமைத்துக் கொண்டு பிரபஞ்ச வெளியில் அலைகளாக இருக்கின்ற, நமக்குத் தேவைப்படுகின்ற தகவல்களை ஈர்த்துப் படிக்கும் வித்தையையும் கற்றுக் கொள்ள முடியும் என்கிறது பலரது அனுபவங்கள்

இது பெரிய அற்புதமாகத் தோன்றினாலும் அதீத சக்தி படைத்த அனைவருமே இதை ஆழமாக நம்பியதாகவும், இதை உபயோகித்து இருப்பதாகவும் தெரிகிறது. இன்று ரேடியோவும் தொலைக்காட்சியும் நம்மை எப்படி அதிசயிக்கச் செய்வதில்லையோ அது போல் இதுவும் ஆழ்மனக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதில்லை. இப்படி விண்வெளியிலிருந்து தகவல்களைப் பெறும் வித்தைகளை அறிந்திருந்த வேறு சிலரின் சுவாரசியமான அனுபவங்களையும் பார்ப்போமா?

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


கிராம்பின் மருத்துவ குணங்களை அறிவோம்…



கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது...

அண்ணா பல்கலைக்கழகம் உமா - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்பு...


பாஜக விற்கு விலைக்கு போன விபச்சார ஊடகங்கள்...


இந்த முறையும் அவர்களே வெற்றி பெறுவார்கள்..

சொல்பேச்சு யார் அதிகம் கேட்கிறார்களோ, அவர்களிடம் தான் அதிகார வர்க்கம் அதிகமாக ஒரினச் சேர்க்கை செய்யும்..

இந்த அரசு ஒரினச்சேர்க்கை செய்யப்பட்டு உருவாகிய அரசு...

கார்பரேட் கைகூலி அரசுகளே... செய்ய தயாரா.?


அரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் பாஜக மோடி அரசு...


2014இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் மோடி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பினை அதிகரிப்போமென்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கையால் நாட்டில் சிறு குறு தொழில் செய்துகொண்டிருந்த பலர் தங்களது தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த தொழிற்சாலைகளை மட்டுமே நம்பியிருந்த கோடிக்கணக்கானவர்கள்  வேலை வாய்ப்பினை இழந்தனர்.மேலும் புதிதாக எந்த வேலைவாய்ப்பினையும் உருவாக்காததால் பட்டதாரிகள் பல லட்சம் பேரும் வேலை கிடைக்காமல் இந்தியாவின் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் வேலைவாய்ப்பின் நிலைமை இப்படியிருக்க நாடெங்குமிருக்கிற மத்திய மற்றும் மாநில அரசுகளிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 23.8லட்சம் இடங்கள் காலியாக நிரப்பப்படாமல் இருக்கின்ற என்று பிஜேபி அரசு நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக   அடுத்த தலைமுறையினரை நல்லபடியாக உருவாக்கும்  பொறுப்புகொண்ட ஆசிரியர் பணியிடங்களே 10லட்சம் நிரப்பப்படாமல் இருக்கின்றன..

நாடுமுழுவதும் வேலைவாய்ப்பின்மை தலை விரித்தாடும் சூழலில் இருக்கிற குறைந்தபட்ச வேலையையும் நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசின் நோக்கமென்ன? ஒருவேளை மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றையும் தனியாருக்கு தாரை வார்த்துக்கொண்டு வருகிறாரே ஒருவேளை மொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டமோ?

ஒருவேளை மோடி அரசின் இந்த  செயலுக்கு பின்னால் இப்படியான சதிகள் இருக்குமாயின் நாம் அதை முதலிலேயே எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அவசியாமாகும். இல்லையென்றால் எதிர்காலத்தில் இந்தியாவில் அரசு என்ற ஒன்று இருக்கும் ஆனால் அரசு நிறுவனங்கள் என்ற ஒன்று காணாமல் போய்விடும்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலைகளும்...


அவரை பத்திரமாக வெளியே அனுப்பிவிட்டு பிறகு ஏன் எங்கள் காலை நக்குகிறது இந்திய ஒன்றியம் என செருப்பால் அடித்தாற் போல் கேட்டுள்ளது ஆன்டிகுவா அரசு...

என்னுடைய தியான முறைகள் ஆபத்தானவை தான்...


பார்க்கப் போனால் ஆபத்தில்லாத தியான முறைகளே இல்லை...

ஆபத்தில்லை என்றால் அவை தியான முறைகளே அல்ல.

அவை வெறும் வித்தைகள் தான்.

ஆமாம் ஆபத்தானவை தான். எனவே நுழையும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்துவிடு.

மாணவர்களாக என்னுடைய தியான முறைக்குள் நுழைந்து விடாதே.  ஆபத்தாகிப் போகும்...

சீடனாக நுழைந்து பார்.

தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வறட்டு ஆர்வத்தோடு நுழைந்து விடாதே. அந்த ஆர்வம் எப்போதும் உன்னை ஆபத்திற்குத்தான் இட்டுப் போகும்.

உண்மையாகவே நீ தயார் என்றால் பேதலிப்பை எதிர்கொள்ள தயார் என்றால் நீ வரலாம்.

இல்லையேல் அப்படியே இருந்துவிடு..

ஆனால் நான் சொல்வதைச் சரியாகக் கவனிக்காவிட்டால் தான் தோற்றுப் போவாய். என்னை கவனித்து கேட்டால் தோற்றுப் போவது என்ற கேள்விக்கே இடமில்லை.

நான் சொல்வது எதுவும் பேச்சளவிலானது அல்ல. நான் சொல்வதெல்லாம் நான் செய்து பார்த்து விட்டவை.

அவற்றைக் கடந்து வந்திருக்கிறேன். எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்.

எது நடக்கும் எதில் தவறுகள் நடந்து போய் விடும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

இந்தப் பிரதேசத்தின் ஒவ்வோர் அங்குலமும் எனக்குத் தெரிந்தது தான். எனவே ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் நீ சரியாகக் கவனிக்கவில்லை என்று தான் பொருள்.

நான் சொல்வதைக் கவனித்தால், என்னை நம்பினால் எதுவும் தவறாகிப் போகாது. அப்படித் தான் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கையும் சரணாகதியும் தேவை என்பது...

இப்படிக்கு ஆன்மா...

ஊடகம் vs சமூக வலைதளம்...


M SAND: என்பது பற்றி இன்று அறிந்து கொள்வோம்...


Manufactured Sand என்பது தான் எம் சாண்ட் என அழைக்கப் படுகிறது. இது கட்டுமான தொழிலில் ஆற்று மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் செயற்கை மணல் ஆகும்.

இந்த எம் சாண்ட் கடினமான கருங்கற்களை இயந்திரங்கள் மூலம் தூள் தூளாக அரைத்து உற்பத்தி செய்யப் படுகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எம் சாண்ட் எனும் செயற்கை மணலைக் கொண்டு தான் பெரும்பாலான கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் பெரும்பாலாக ஆற்று மணல் வைத்தே கட்டடம் கட்டப் படுகிறது.

ஆற்று மணலை விட குறைந்த குறைபாடுகளும், அதிக வலிமையும், குறைந்த விலையும், சூழியலுக்கு உகந்ததாக எம் சாண்ட் மணல் உள்ளது. இதனால் கட்டுமானச் செலவு குறைகிறது. எம். சாண்ட் எனும் செயற்கை மணல் பெருமளவில் பயன்படுத்துவதால், ஆற்று மணல் அள்ளப்படுவது பெருமளவில் குறையும். எனவே ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரக் கூடும்.

நமது வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கும்  எம் சாண்ட் எனும் செயற்கை மணலை பயன்படுத்தலாமே.. ஆற்று மணலை தவிர்ப்போம்..

நாம் ஆற்று மணலைத் தவிர்த்தாலே நாளடைவில் ஆற்று மணல் கொள்ளை அடிக்கப் படுவது குறைந்து விடும்...

வீட்டில் பிரசவம் பார்ப்பது தவறு இல்லை என்று சட்டம் சொல்கிறது...


கன்னட ஈ.வே.ராவும் முத்துப் பல்லக்கும்...


13.08.1972 அன்று ஈ.வே.ரா உயிரோடு இருக்கும்போதே தமிழக முதல்வர் கருணாநிதி கையினால் தனக்குத்தானே சிலை திறந்த விழாவில் நடந்தவை...

13.8.1972இல் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் தந்தை பெரியார் திருவருவச் சிலை திறப்பு விழா மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு அவர்கள் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அய்யா சிலையைத் திறந்து வைத்தார்கள்.

மாலை 6.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில்  திருப்பாதிரிப்புலியூரிலிருந்து இலட்சக் கணக்கான தமிழ் மறவர்கள் சூழ அய்யா அவர்கள், மேளவாத்தியம் கொட்டு முழக்கத்துடன் முடி சூடாமன்னராகப் பவனி வந்தார்கள்.

ஈ.வே.ரா வுக்கு நடக்க முடியாது அதனால் கார் வேண்டும் என்று பொதுமக்களிடம் நிதி திரட்டி ஏ.சி பொருத்தப்பட்ட வேன் வாங்கி அதை அவரிடம் ஒப்படைக்கும் விழாவில் நடந்தவை..

19-8-73 தஞ்சை மாநகரில் கோலாகலமாகக் குதூகலப் பெருநாள் திருநாள்.

ஆம் அது என்ன விழா? தந்தை பெரியாருக்கு பிரச்சார பயணம் மேற்கொள்ள வேன் வழங்கும் விழா.

பெரியதோர் ஊர்வலத்தில், யானை முன் செல்ல கருஞ்சட்டையினர் அணிவகுத்து முழக்கமிட்டுப் பின்தொடர,

அழகு ஒளி உமிழத் தஞ்சையின் தனிச் சிறப்புப் புகழ் வாய்ந்த முத்துப் பல்லக்கில் பெரியாரும், கி.வீரமணியும் அமர்ந்து வந்த பவனி..

பின்னர் திலகர் திடலில் மக்கள் வெள்ளத்தினிடையே மகத்தான பொதுக்கூட்டம்.

அமைச்சர் எஸ் இராமச்சந்திரன் கூட்டத் தலைமை ஏற்றார்.

தஞ்சை மாவட்டக் கூட்டமெனினும், மாநிலச் சிறப்புப் பொருந்தியதாகையால், கி.வீரமணி வரவேற்கட்டும் எனத் தோலி சுப்ரமணியம் உரைத்திட, வரவேற்புரை நிகழ்த்தினார் விடுதலை ஆசிரியரும், கார் நிதி அமைப்பாளருமான கி.வீரமணி.

அவர் கேட்டதோ ஒரு லட்சம், ஆனால் திரண்டதோ ஒன்றரை லட்சத்திற்கும் மேல் மீதியில் 50 ஆயிரம் ரூபாய் பெரியாரிடம் நிதியாக வழங்கப்பட்டது.
10 ஆயிரம் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகத் தரப்பட்டது.

பெரியார்பால் கரிசனமிக்க மருத்துவ நிபுணர்களான டாக்டர்கள் கே. ராமச்சந்திரா. பட். ஜான்சன், ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

(ஆட்டோமாட்டிக்) தானியங்கிக் கடிகாரம் ஒன்றை விழாக்குழு சார்பில் அமைச்சர் மன்னை நாராயணசாமி பெரியாரிடம் தந்தார்.

ஒரு டேப் ரிக்கார்டர், தங்கத்தாலான கார் சாவி ஆகியவற்றைப் பெரியாரிடம் தந்து, பொன்னாடையும் போர்த்தினார் முதல்வர் கலைஞர்.

ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு, வேனிலிருந்தவாறே பேசுவதற்கு ஏற்ற முறையில் இந்த வேனை அமைத்தவர்கள் எல்.ஜி.பாலகிருஷ்ணன் கம்பெனியார்.

விழாவில் கி.வீரமணிக்கு மோதிரமும், ஓவியர் கருணாவுக்கு நல்லாடையும் பெரியாரால் அணிவிக்கப்பட்டன.

நூல்: தமிழர் தலைவர்
ஆசிரியர்: கே.பி.நீலமணி
பக்கம்: 813

இச்செய்தி கி.வீரமணி அவர்களின் இணையதளமான kveeramani.காம் இலும் உள்ளது.
அதன் சுட்டி http://kveeramani. com/dravidar-ta. php

வீரமணி இதனை "உண்மை" இதழில் நினைவுகூர்ந்தும் உள்ளார்.

சிம்மாசனம் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு முத்துப் பல்லக்கில் தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அய்யா அவர்களுடன் நானும் அமர்ந்து வந்தோம்.

வழி நெடுக மலர்மாலைகள் அளித்து, தாய்மார்களும், தமிழ் மக்களும் கைகூப்பி, அய்யாவைக் கண்டு உவகை பூத்த காட்சி மெய்சிலிர்க்கக்கூடியதாக இருந்தது.

சுட்டி: http://www.unmaionline.com/index.php/2011-magazine/17-apr-16-30/184-அய்யாவின்-அடிச்சுவட்டில்.html

தஞ்சாவூர் முத்துப் பல்லக்கு அந்நாட்களில் மிகவும் பிரபலமானதும் ஆடம்பரமானதும் ஆகத் திகழ்ந்தது.

தெய்வச்சிலைகளையும் அர்ச்சகர்களையும் மட்டுமே முத்துப் பல்லக்கில் சுமக்கும் நடைமுறை இருந்தது.

இதையெல்லாம் மறைத்துவிட்டு கட்டுக்கதை ஒன்று எழுதி பரப்பிவிட்டுள்ளனர் வந்தேறிகள்.

அதாவது காஞ்சியில் சங்கராச்சாரி பல்லக்கில் போனாராம் அப்போது "துறவிக்கு ஏன் பல்லக்கு சுகம்? மனிதனை மனிதன் சுமக்கலாமா?" என்று ஒரு குரல் கேட்டதாம்.பார்த்தால் அது பெரியாராம்.

உடனே பல்லக்கையே துறந்துவிட்டு அன்றுமுதல் நடந்து செல்வதை பின் பற்றினாராம் சங்கராச்சாரியார்.இது முழுக்க முழுக்க பொய்.

ஈ.வே.ரா இறப்பதற்கு சில மாதங்கள் முன்புவரைகூட பல்லக்கு சவாரி செய்துள்ளார் என்பதே உண்மை...

இயற்கை மரச்செக் எண்ணைக்கு மாறுவோம்...


மரணம்...


வாழ்வைப்பற்றி நிறையப் பேசிய நான் இப்போது அதன் உச்சக்கட்ட அனுபவமான மரணம் பற்றி பேச விரும்புகிறேன்...

மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. வாழ்வுக்கு அர்த்தத்தைக் கொடுப்பது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளைவிப்பது. மனிதன் மறக்க விரும்புவது, ஆனால் அவனுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது.

பிறந்த கணத்திலிருந்து பயணம் அதை நோக்கித் தான். எதிர்காலத்தில் அடுத்த வினாடியில் எதுவெல்லாம் நடக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ, திட்டமிடுகிறோமோ, உழைக்கிறோமோ, அவையெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம்.

ஆனால் நம்மைக் கேட்காமலேயே நமக்கு நிச்சயமாக நடக்கப் போவது மரணம் மட்டுமே. அது மட்டுமல்ல. அது எப்போது வரும், எப்படி வரும் என்பது கூட நமது அறிவிற்கு எட்டாததாகவே எப்போதும் இருக்கிறது.

என்னடா, ஒரேயடியாக பயமுறுத்துகிறானே என்று நினைக்காதீர்கள். இது பயமுறுத்துவதாக நமக்கு பாடம் எடுத்திருக்கிறார்கள். அதனால் பயம் வருகிறது. அது மனம் தூண்டும் பயம். உடலின் பயமல்ல. உடலுக்கும் மரண பயம் உண்டு. அது ஆபத்தான உயரத்தில், ஆபத்தான கடல் கொந்தளிப்பில், இப்படி ஆபத்தான சமயங்களில் எழும் உணர்ச்சி. அதனால் பாதுகாப்பாக நாம் செயல்படுவோமேயன்றி தேவையற்ற பதட்டமும், இறுக்கமும் கவலையும் வேகமும் ஏற்படாது.

ஆனால் இப்போது மனிதனுக்கு ஏற்படும் பயம் மனப்பிராந்தி. இதை இழந்து விடுவோமோ, அதை இழந்து விடுவோமோ, இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ இது கிடைக்காமல் போய்விடுமோ, அது கிடைக்காமல் போய்விடுமோ இதை அனுபவிக்காமல் போய்விடுவேனோ அதை அனுபவிக்காமல் போய்விடுவேனோ என்ற பிடிப்புகள், பேராசைகளால் தூண்டப்படும் பயம்.

மனதின் பயம் உண்மையில் மரண பயம் அல்ல. அது முன்னறியாத எதற்குமே மனம் ஏற்படுத்தும் பயம். புது இடம், புது மனிதர்கள், புது சூழ்நிலை, புது வேலை இப்படி புதிது எதற்குமே பயப்படும் மனதின் பயமே இது.

முதலில் ஒரு குழந்தைக்கு பிடிப்புகளும் ஆசைகளும் ஊட்டப்படுகின்றன. பிறகு அதை இழந்து விடுவோமோ அது கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம்.

அப்படி அது பயப்பட ஆரம்பித்தவுடன் நமக்கு நம் இஷ்டம் போல ஆட்டுவிக்கக் கூடிய ஒரு அடிமை கிடைத்து விடுகிறான். நாம் அந்த குழந்தைக்கு இவ்வுலக பிடிப்புகளும் ஆசைகளும் வெறும் ஒரு விளையாட்டு. அதை உன்னால் இயன்ற அளவு விளையாடி அனுபவித்து பக்குவப்படு என்று சொல்லித் தருவதில்லை. அதனால் எப்போதும் பயம், ஆதலால் பாதுகாப்பு தேடல், மற்றவர் மேல் சந்தேகம், அப்படி ஆகி விடுமோ என்ற கவலை, நடக்காவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம், இவைகளால் தொற்றிக் கொள்ளும் வேகமும் பரபரப்பும்  மட்டுமின்றி வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கும் மூட பழக்கங்கள், பிரச்னையை தீர்த்து விடுவதாகக் கூறும் கொள்கைகள், நான் காப்பாற்றுகிறேன் எனும் தலைவர்கள் இப்படி தாறுமாறாக தவித்துப் போய் கிடக்கிறான் இன்றைய மனிதன்.

ஆகவே முதல் விஷயம் நமது பயம் மரண உணர்ச்சி பயம் அல்ல. மன உளைச்சலின் விளைவு. மரணம் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது. ஆதலால் பயப்பட வாய்ப்பே இல்லை. அது உ.டல் சம்பந்தப்பட்டது. உடலுக்கு அந்த அனுபவம் இருக்கிறது.

ஆகவேதான் அது அதற்கான ஆபத்தான சூழ்நிலையில் பயத்தை ஏற்படுத்துகிறது. அது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. தேவையற்ற மரணத்தை தவிர்க்க
எழும் ஒரு எச்சரிக்கையுணர்வு. ஆனால் வாழ்ந்து வயதாகி பக்குவப்படும் உடல் இறக்க தயாராகவே இருக்கிறது. 

சிறிது சிறிதாக உருவாகும் உடல் சிறிது சிறிதாக இறக்கவும் ஆரம்பிக்கிறது. பிறப்பின் அனுபவம் போல இறப்பின் அனுபவத்தையும் ஏற்கவே செய்கிறது.

மேலும் பிறக்கும் போது இருப்பதை விட இறக்கும் போது நமது உணர்வுக்கூர்மை அதிகரித்திருக்கிறது. ஆகவே நாம் மரணத்தை ஆழ்ந்து அனுபவித்து ஆச்சரியப்படும் வாய்ப்பு உள்ளது.

என்னை கேட்டால் மரணம் வாழ்வின் உச்சம் என்பேன். மேலும் மரணம் இருப்பதால் தான், வாழ்வு ஒரு சவாலாக, சுவை கூட்டுவதாக இருக்கிறது.

மனதின் பிடியில் சிக்காமல் இயல்பாக இயற்கையாக உள்ளுணர்விலிருந்து வாழும் ஒரு மனிதன் மரணத்தைப் பற்றி பயம் கொள்ள மாட்டான். மாறாக அதை வரவேற்பான்.

இந்த உடல் நுண்ணிய சக்தியை { பிராணா என்று இதை அழைப்பர் } உள்வாங்கி இயங்கும் இயங்குதிறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகிறது. மின்சாரத்தை உள்வாங்கி இயங்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் இயந்திரம் போல ஒரு கட்டத்தில் சக்தியற்று இயக்கம் நின்று விடுகிறது. இதுதான் மரணம்.

இயங்காத உடலை புதைத்தோ எரித்தோ விடுகிறோம். அப்போது இந்த இயந்திரப் பொருளான உடல் உருக்குலைந்து மீண்டும் அடிப்படைப் பொருள்களாக மாறி விடுகிறது.

இதில் இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால் அடிப்படைப் பொருள்களிலும் நுண்ணிய சக்தி புதைந்தே இருக்கிறது.

நுண்ணிய சக்தி இறுகிய நிலையே பொருள். இயங்கிக் கொண்டிருக்கும் நுண்ணிய சக்தியே இப்பிரபஞ்சத்தின் பெரும்பகுதியாக இருக்கிறது. நுண்ணிய சக்தி சில சமயங்களில் இறுகி பொருளாக உருவாகிறது. அதுவும் நுண்ணிய சக்தியால் பாதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. பல அடிப்படைப் பொருள்கள்  சேர்ந்து மென்மையான நுண்ணிய சக்தி ஓட்டத்தை உள்வாங்கும் ஒரு மையம் கொண்ட வாழ்வை தொடங்குகின்றன. நகரவும் இனவிருத்தி செய்யவும் கூடிய அதன் பரிணாம வளர்ச்சியின் உச்சமாக வருகிறான் மனிதன். இவன் இயங்கிக் கொண்டிருக்கையில் உணர்வை மேன்மேலும் கூர்மை படுத்திக்கொண்டே
போய் அந்த நுண்ணிய சக்தியை உணரலாம். அப்படி அந்த நுண்
உலகத்திற்குள், உணர்வின் உணர்வாய் நுழைகையில் ஒரு மாபெரும் புதிய அனுபவம் ஏற்படுகிறது. புலன்களால் உணர்ந்த உலகம் உடைந்து போகிறது. அங்கு பெறும் அனுபவத்தை மௌனம் என்றும், குளிர்ந்த ஒளி என்றும், சாட்சி பாவம் என்றும், அசைந்தாடும் சக்தி நடனம் என்றும், சூன்யம் என்றும், தானாயிருத்தலென்றும், உணர்வின் உணர்வென்றும், பரவசம் என்றும், விழிப்புணர்வென்றும், மெய்யுணர்வென்றும், அழகென்றும், சத்தியமென்றும், சாசுவத நிலையென்றும், சிவமென்றும், பரமானந்தமென்றும், என ஒவ்வொருவரும் விதவிதமாய்
வர்ணித்துள்ளனர். இந்த ஞானம் மனிதனுக்கு மட்டுமே எளிதில் சாத்தியம். இதை பெற்றவனது உடலிலிருந்து தற்காப்பு பயம் விலகிவிடுகிறது. வாழ்க்கை விளையாட்டாக மாறிவிடுகிறது.

மற்றொரு விதத்தில் ஞானத்தில் ஒருவன் இறந்து விடுகிறான். மன இயக்கம் முதலில் இறக்கிறது. இதனால் சொந்த உலகமும், பிறப்புகளும், திட்டங்களும் போய் விடுகிறது. பிறகு உடலாக இயங்கும் இயந்திரத்தனம் தாண்டி நுண் உலகத்தை உணர ஆரம்பிக்கும் போது உடலால், புலன்களால் தோற்றமளிக்கும் இந்த பொருளுலகமும் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. மரணமடையும் உடல் வெறும் விளையாட்டுப் பொருளாகி விடுகிறது. உடல் கடந்த நுண் உலக அனுபவம் கிடைத்துவிடுவதால் மரணமடைந்து விடுவோம் என்ற
எண்ணம் மறைந்து விடுகிறது.

ஆனால் இந்த அனுபவத்தேடலின் ஆரம்பம் கூட மரணம் என்ற மனித வாழ்வின் முற்றுப்புள்ளி தான்.

இன்றைய மனிதனின் நிலை என்ன?

மரணம் மற்றவர்க்கு தான், நமக்கில்லை என்ற மாயையான மனப்போக்கு.

மரணமில்லா உடல் இல்லை. இதை மறந்து எண்ணிலடங்கா சொத்து சேர்ப்பதும், அதற்காக எத்தகைய லஞ்சம், ஏமாற்றுதல், பொய், தந்திரம், சூழ்ச்சிசெய்வதும், அதை திறமை என போற்றுவதுமான இழிந்த மனப்போக்கு, மரணத்தை வாழ மறந்துவிட்டதால் அதைப்பற்றிய தவறான பிடிக்குள் மனிதன் சிக்கிவிட்டதால் மனிதன் இழந்துவிட்ட வீரமும், துணிவும் தான் எல்லாவற்றிலும் பெரிய கொடுமை.

கடைசியாக தியானிக்கும் நமக்கு அடிப்படையாக இரண்டு விஷயங்களைக் குறித்த ஆராய்ச்சியுடன் கூடிய தெளிவு தேவை.

1. மனஇயக்கம் கொண்டுள்ள என் சொந்த உடமைகள், உறவுகள் என்ற உலகம் ஒரு மாயை, பொய் தோற்றம், கற்பனை. இதை விழிப்புணர்வில், உணர்வோடு கூடிய வாழ்வில் ஈடுபடும் போது உணர்ந்து கொள்ளல்.இதன் பொருள், இந்த உலகம் பொய்யல்ல, நமது பிடிப்பு பொய் என்பதே.

2. உடல் மரணமடையும், அதுவே அதன் வரையறை. அதன் புலன்களின் வழியாய் நான் இப்போது காணும் உலகும் மரணத்தோடு மறைந்துவிடும். ஆகவே அதைத் தாண்டி ஏதாவது உள்ளதா என்ற ஆராய்ச்சியே ஆன்மீகம்.

இப்படி ஆராய்ந்து அறிய உதவுவதுதான் தியானயுக்தி. அதில் நம்மை நாமே பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறோம். விடையாய் நாம் தியானத்தில் கரைகிறோம். பின் அதிலிருந்து மீண்டு வந்தவுடன் இந்த உலகம் விளையாட்டு மைதானமாய் இருக்கிறது நமக்கு.

வாருங்கள் இந்த மனிதனுக்கு மட்டுமே உரிய வாழ்வின் பாக்கியத்திற்கு.

உள்ளுணர்வில், நுண்ணுலகில் கரைந்து இயற்கையின் இயல்பாய் தன்னை உணர்வதே தியானம்.

ஆகவே தியானிப்போம், கரைந்து அனுபவிப்போம்.

திரும்ப பிறப்போம், திரும்பவும் அடுத்த கணத்தில் கரைந்து போவோம்.

மறுபடி பிறப்போம் கரைவதற்காக.
இப்படிக் கொண்டாடுவோம் வாழ்வை.

வாழ்க விழிப்புணர்வுடன்...