04/09/2018

அறிவாளி காக்கா...


மனித ஜென்மங்கள் எல்லாம் கேடுகெட்டு போகிறார்கள்...

மிருகங்கள் எல்லாம் தர்மம், அன்பு, பாசம், என்று சிந்தித்து ஒழுங்காக வாழ்கிறது...

நான் என் வாழ்க்கையில் மனிதர்களை விட அதிகம் மிருகங்களிடமே நேரத்தை செலவழிக்கிறேன்...

காரணம் அதுவே நம்ப தகுந்தது...

கணவனுக்கு பிறந்தநாள் பரிசாக சாவை பரிசாக அளிக்க நினைத்தேன்.. அபிராமியின் பகீர் வாக்குமூலம்...


சென்னையில் இரண்டு குழந்தையை கொன்று கள்ள காதலனுடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அளிக்கும் ஒவ்வொரு வார்த்தையுமே பீதியை கிளப்புவதாக உள்ளது.

இதுதொடர்பாக அபிராமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எங்கள் நெருக்கத்தை தெரிந்த என் அப்பா, என்னை வீட்டு சிறையில் வைத்தார். குழந்தைகளும் எப்போதும் என்னை விட்டு விலகாமல் இருந்தனர். தூக்க மாத்திரைகள் இதுகுறித்து சுந்தரத்திடம் தெரிவித்தேன். அவர் மூன்று பேரையும் கொலை செய்தால்தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என்றார். அதற்காக மூன்று பேரையும் கொலை செய்ய தூக்க மாத்திரைகளை வாங்கி தந்தார்.

எனவே, கடந்த 30ம் தேதி இரவு எனது கணவர் விஜய் பிறந்த நாள் பரிசாக இவர்களை கொல்ல முடிவு செய்தேன். பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன்.

ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள். வேலைக்கு போகும் முன், தன் பெண் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கணவர் விஜய் அவள் அறைக்கு செல்ல முயன்றபோது நீங்கள் குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் எழுந்துவிடுவாள் என தடுத்தேன்.

வேலைக்கு சென்ற விஜயின் பின்னாலேயே சென்ற மகன் அஜய் கீழ் தளத்திற்கு சென்று ஹெல்மெட்டை கொடுத்து டாடா சொல்லி தந்தையை வழியனுப்பி வைத்தான். திரும்பி வந்த மகனை படுக்கை அறைக்கு அழைத்து சென்று மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.

பின்னர் குழந்தைகளின் சடலத்தையும் படுக்கை அறையில் அருகருகே கிடத்திவிட்டு, இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அவரை கொலை செய்யும் முடிவில் இருந்தேன். கடந்த 31ம் தேதி மாத கடைசி நாள் என்பதால் வேலை பளு காரணமாக விஜய் வீட்டிற்கு வரவில்லை. அதனால் அவர் தப்பித்துவிட்டார். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார் அபிராமி...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பாதி வெற்றி...


கருப்பு விண்கல்...


இஸ்லாமியர்களின் புனித தளமான மஸ்ஜிதுல் ஹரம் என்று அழைக்கப்படும் மக்காவில் அமைந்துள்ள காபாவின் நடுவில் மூன்றாவது கண் குறிக்கும் விதமான ஒரு கருப்பு விண்கல் உள்ளது.

இது மெக்கா பயணத்தின் முக்கிய நோக்கமாக ஞானம்.. மூன்றாவது கண் போன்றவற்றை அடையும் வழியை உணர்த்துகிறதா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...


வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ.

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்து கொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

டிவி உண்மையில் ஒரு பொழுதுபோக்கு சாதனமா?


அனுபவம் ஒரு ஆசான்...


எல்லோரையும் நேசியுங்கள், யாரையும் வெறுக்காதிர்கள்.

வெறுப்பு வாழ்நாளை குறைக்கும்.

ஓர் 100 - உற்றாரைவிட ஒரு கற்றவருடைய நட்பே மேல்.

உண்மையான அறிஞரிடம் பிறரை தாழ்மையாக என்னும் எண்ணம்
சிறிதும் இருக்காது.

நம்பிக்கை துரோகம் செய்பவன் மாபெரும் குற்றவாளி.

உழைப்பு பிழைப்புகாக மட்டுமிலாமல் உண்மைக்காகவும் இருக்க வேண்டும்.

பொய் சொல்லி பரிசு பெறுவதை விட உண்மை சொல்லி துன்பபடலாம்.

சோம்பேறிதனம்தான் பொறுமை என்ற பெயரில்  தவறாக கணிக்கப் படுகிறது.

கவலைகளை மறக்க கடமையை செய் மனம் நிம்மதி அடையும்.

தளராத முயற்சிக்குத் தன்னம்பிக்கை அவசியம்.

உன்னைத்தவிர உன்வேலையை யாராலும் சிறப்பாக செய்ய முடியாது.

பலர் முன் பயனில்லாததைக் கூறுபவன் அனைவராலும் வெறுக்கப்படுவான

அழிவுக்கு முன் கர்வம் வரும், வீழ்ச்சிக்கு முன் திமிர் வரும்.

அமைதி அனைத்தும்  பெற்று தரும்.

எல்லோரும் கடை திறக்கலாம் ஆனால் புத்திசாலிதான் லாபத்தோடு நடத்துவான்.

ஒவ்வொரு புதுசெயலிலும் உங்கள் பழைய அனுபவத்தைப் பயன் படுத்துங்கள்.

நம்முடைய செயல்களே நம்மை யார் என்று பிறர்க்கு உணர்த்தும்.

சோம்பலை போக்கு அப்போதுதான் நீசுதந்திரமான மனிதன்.

தனை புகழ்ந்து கொள்பவன் இகழப்படுவான், பணிவு உடையவன் புகழப் படுவான்.

பொறுப்பு உள்ளவன் புகழ் பெறுவான் இருமாப்புள்ளவன் ஏமாறுவான.

குறை சொல்பவன் தேவை இல்லை வ்ழிகாட்டுபவன்  தேவை.

வாழ்க வளமுடன்...

திருப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை...


ஒலிம்பிக் பதக்கத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா?


ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கத்தை கடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர்.

அவர்கள் எதற்காக பதக்கத்தை கடிக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. தற்போதுள்ள வீரர், வீராங்கனைகள் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக பதக்கத்தை கடிக்கிறார்கள்.

ஆனால், அதற்கு உண்மையான காரணம் வேறு.

ஒலிம்பிக்கின் ஆரம்ப காலத்தில், வீரர்கள், தாங்கள் வென்ற தங்க பதக்கம் உண்மையான தங்கம் தானா அல்லது கலப்பட மிக்க தங்க பதக்கமா என்பதை கண்டறிவதற்காகவே பதக்கங்களை கடித்து வந்தனர்.

தங்கத்தை கடிக்கும்போது பல்லில் ஒரு வித உள்ளீர்ப்பு விசை உணர்வை வைத்து உண்மையான தங்கத்தின் தரத்தை கண்டறிந்தனர். ஆனால் வீரர்கள் அதை மறந்து, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகின்றனர்.

இது போன்று, 2010-ஆம் ஆண்டு நடத்த ஒலிம்பிக்கில் உணர்ச்சிவசப்பட்டு பதக்கத்தை கடித்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒலிம்பியன் டேவிட் மொலிலரின் பல் உடைந்து போனது குறிப்பிடத்தக்கது...

தமிழகத்தில் சென்னை-பாண்டிச்சேரி நெடுஞ்சாலை ஏற்கனவே இராணுவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது...


தமிழர்களை தொடர்ந்து கொன்று கொண்டிருக்கும் திராவிட தெலுங்கர்கள். வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு...


தமிழக அரசு முதல், போராளிகளாக காட்டும் திராவிட கும்பல் வரைக்கும் வாய் பொத்தி  மெளனமாக இந்த கொலையை  அங்கீகரிக்கின்றன. உலகில் வேறு எந்த நாட்டிலும் தனது நாட்டினரை வேறு ஒரு நாடு கொல்ல அனுமதிப்பதில்லை...

திமுக ஸ்டாலினும் பிராடுத்தனமும்...


தமிழர் கடவுளா விநாயகர் ?


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை என்று மிகத் தொன்மையான நூல்களிலும் தொடக்கபாடலாக திணிக்கபட்டு , மூல முதல்வன் , கணங்களின் அதிபதி ,என்றும் துதிக்கப்பட்டும் , இந்திய கடவுள்களிலேயே எல்லா ஆலயங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகர் தமிழரின் கடவுளா?

தமிழ் நாட்டுக்கு எப்படி வந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்...

ஆறுமுகம் பன்னிரு கரம் , என்று தமிழின் வடிவமாகவே உருவகிக்கப்படுகிற முருகனையும்  , தென்னாடுடைய சிவனே போற்றி என்று போற்றப்பட்ட தென்னிந்திய கடவுளான சிவனையும் இடம் பெயர்த்தி வந்த இந்த விநாயகர் தமிழரின் வாழ்வில் , பண்டிகையில் , கலாசார , பண்பாட்டில் நுழைந்த கதை சற்றே யோசிக்க வேண்டிய ஒன்றாகவே உள்ளது..

பொதுவாகவே இந்தியாவின் வரலாறு மத சண்டைகளின் வரலாறு , முகலாயர் , ஆங்கிலேயர் , பல்லவர்  களப்பிரர் என்று மாறி மாறி நம்மை பலரும் ஆண்டதால் , அவரவர் ஆட்சியின் போது அவர்கள் திணித்த பண்பாட்டு , கலாசார திரிபுகளை அப்படியே ஏற்று கடைபிடித்து வருகிறோம் சுயம் மறந்து..

இப்பொழுது ஜனநாயகம் வந்த பின் நமக்கான , நாம் தொலைத்த நமது பண்பாடு கலாசாரத்தை கண்டு பிடித்து கடைபிடிக்க வேண்டாமா ?

தமிழரின் பண்பாட்டின் மீது திணிக்கப்பட்ட இந்த கணபதி சாளுக்கிய மன்னர்களால் அறிமுகபடுத்தபட்டு மிக லாவகமாக சிவ பார்வதி குடும்பத்தில் திணிக்கப்பட்ட ஒருவர்..

விநாயகர் என்கிற குறியீடு இருக்கும் வரை சாளுக்கிய மன்னர்களின் பண்பாடு , கலாசாரம், அவர்களின் நினைவு பாதுகாக்கப்படும்..

போதி மரம் எனப்படுகிற அரச மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதின் அடையாளமாய் பிக்குகளால் அரசமர அடிதோறும் புத்தர் சிலைகள் இடம் பெற்றிருந்திருக்கின்றன. அவைகளை புத்தமத அழித்தொழிப்பின் போது இடம் பெயர்த்தி இவ்வினாயகரை அரசமரம் தோறும் இடம்பெற செய்திருக்கிறார்கள்.

எப்படி தமிழில் தெலுங்கு கலந்ததால் நாஸ்தா என்கிற வார்த்தை வந்தோ.

தமிழில் சமஸ்கிருதம் கலந்ததால் எப்படி மறைக்காடு வேதாரண்யம் ஆனதோ ?

முதுகுன்றம் , விருதாசலம் ஆனதோ அப்படி தமிழக கலாசார பண்பாட்டில் இடை செருகல் வருகிற போது நமது பண்பாடும் , கலாச்சாராமும் அழிந்து போகிறது.

கி. மு . மூன்றாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி , கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தை அடுத்து வந்த மூன்று நூற்றாண்டுகளில் ( கி.பி.இருநூறு முதல் கி.பி ஐநூறு ) வரை தமிழகம் தமிழ் மன்னர்களின் கையிலிருந்து நழுவிய நேரத்தில் தான் இது நிகழ்ந்திருக்கிறது.

இந்திய பரப்பில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமாக நடத்தபடுகிற இத்தருணத்தில் தமிழ் கடவுள்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம் , இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற , பண்டிகைகளுக்கு உகந்தவராக , எல்லோராலும் வணங்கப்படுகிற  கணபதியை போல , தமிழகம் தாண்டி  முருகன் வணங்கப்படுகிறாரா ?

அல்லது பண்டிகைகளுக்கு  உகந்தவராகிறாரா ? இல்லையே ?

சிவனுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தேசிய கடவுளாகவும் , ஒருவர் பிராந்திய கடவுளாகவும் பேதபடுத்தபடுவது ஏனென்று இன்னுமா புரியவில்லை உங்களுக்கு ?

தமிழனுக்கும் , தமிழ் கடவுளுக்கும் ஏனிந்த நிலை என்று தமிழர்களே சிந்திப்போம்...

விநாயகர் என்கிற குறி ஈட்டிற்கான பிறந்தநாளை வருடா வருடம் நினைவுபடுத்திக் கொண்டாட வைத்து தன் பண்பாட்டு , கலாசாரத்தை அணையாமல் பாதுகாத்து வருபவர்களுக்கு தமிழர்கள் தரப்போகும் பதில் தான் என்னோவோ ?

கெயில் நிறுவன சதி...



வேற்றுக்கிரவாசிகள் மற்றும் அவர்களின் பறக்கும் தட்டுகள் 'UFO' வந்து சென்றதை உறுதிப்படுத்தும் விதமாக நமது காலத்திலேயே ஒரு மிகச்சிறந்த உதாரணம் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது...

ஜப்பான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அருகிலுள்ள தீவுகளில் ராணுவத் தளவாடங்களைக் குவித்ததுடன், அப்பகுதியில் விமானத் தளத்தையும் அமைத்தது.

அப்பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள், அமெரிக்க போர்வீரர்களை வானத்திலிருந்து கடவுள்கள் பறந்து வருவதாக நினைத்தார்கள். போர் வீரர்களும் தாங்கள் கொண்டு
சென்ற உணவுவகைகளை அவர்களுக்குக் கொடுக்க, ஆதிவாசிகள் உண்மையிலேயே இவர்களைக் கடவுளாக நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். போர் முடிந்து அமெரிக்க வீரர்கள் நாடுதிரும்பினர். ஆனால் விமானதளங்கள், பழுதுபட்ட விமான உதிரிப் பாகங்களை அப்படியே விட்டுச்சென்றனர்.

அமெரிக்கர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பது ஆதிவாசிகளுக்குக் கடைசிவரை தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமட்டும்தான். "ஏதோ ஒரு நோக்கத்திற்காக, வானத்திலிருந்து கடவுள்கள் வந்தார்கள். பிறகு சென்று விட்டார்கள்" என எண்ணினார்கள். பின்னர் அந்த ஆதிவாசிகள், ராணுவ உடையில் வந்த வீரர்கள் மற்றும் விமானங்களைப் பார்த்து, அதை அப்படியே மாதிரி வடிவங்களாக உருவாக்கி வழிபடத் தொடங்கினார்கள்.

இதைப்போலத்தான் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் வானத்திலிருந்து வந்தவர்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிகால மனிதர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் மறுக்கமுடியாத கருத்தாக உள்ளது...

மனிதரை பாம்பு கடித்துவிட்டால் அவர் மீண்டும் உயிர் பெற முடியுமாம்... இதோ ஆச்சரிய தகவல்...


பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா?

அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா?

சித்த வைத்தியத்தால் முடியும்..

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை..

பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.

கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...

அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்...

எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்..

அதன் பிறகு கரு ஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்..

மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்...

மனதில் உள்ளதை வெளிப்படுத்து... சுதந்திரம் வேண்டுமெனில்...


ஆழ்மனமும்.. வெளிமனமும்...


மனதை, பொதுவாக அறிவு மனம்(conscious mind), ஆழ்மனம்(Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்..

விவாதங்கள் மனதில் மிகும். அறிவின் துணை கொண்டு ஆய்வுகள் நடைபெறும். நல்லது கெட்டது தெரியும். அதனால் வாழ்வில் சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலதை விரும்புவோம். அதற்குரிய செயல்கள் தொடரும். பழக்கங்கள் மிளிரும். பண்புகள் தோன்றும். தன் அனுபவத்தை வைத்து சிந்தித்து சீர்தூக்கி முடிவு செய்யும்.

ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டகம். இது தன்னிச்சையாக இயங்கும். அறிவு மனத்திற்குக் கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி,தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்ன தான் செய்யும்?

அடிக்கடி காண்பவைகள், திரும்ப திரும்பக் கேட்பவைகள் உணர்வு வயப்பட்ட நிலையில் கண்டு, கேட்டவைகள், அனுபவித்தவைகள், ஆல்ஃபா என்ற தளர்வு நிலையில் அல்லது தியானநிலையில் கேட்டவைகள் ஆகியவை மட்டுமே அதனுள் செல்லவல்லது. எந்த எண்ணத்தை வேண்டுமானாலும் ஆழ்மனதுள் ஆல்ஃபா நிலையில் நாம் செலுத்தலாம். நல்ல எண்ணம் அல்லது தீயஎண்ணம், வாழ்விற்கு உதவும் எண்ணம், உதவாத எண்ணம் என அது விவாதம் புரிவதில்லை. எண்ணத்தின் தன்மைகளை பார்ப்பதில்லை. அனிச்சையாக நாம் எந்த செயல் செய்தாலும் அது உள்மனதின் வழிகாட்டுதல் தான்.

திரும்பதிரும்பச் சொல்லப்பட்டவைகளை, தனக்கு தரப்பட்டவைகளை ஏற்றுக்கொள்வது என்கிற ஒரே நிலையில் அது பணிபுரிகிறது. ஆனால் இது மகத்தான சக்தி உடையது. எந்த எண்ணத்தை அதற்குத் திரும்பதிரும்ப கொடுக்கிறோமோ அதை ஆழ்மனக் கட்டளையாக மாற்றி ஏற்றுக்கொண்டு, அக்கட்டளைகளைப் புற உலகில் வேண்டியவைகளை ஈர்த்து, தனதாக்கிக் கொண்டு அவ் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. தன்னிடம் தரப்படுவதை, ஊட்டப்படுவதை ஒன்றுக்கு பத்தாக பெருக்கிக் காட்டுவதே இதன் இயல்பு.

இதை பண்படுத்தப்பட்ட நிலமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. நல்ல விசயங்களை ஆழ்மனதிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். உண்மையாகவும், விசுவாசமாகவும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். நினைத்தேன் நடக்கவில்லை என்றால் மேலோட்டமாக நினைத்துள்ளோம் என்பதே பொருள். நமக்கு நாமே எப்படி உண்மையாக, விசுவாசமாக இருக்கிறோமோ அதுபோல் எண்ணம் இயல்பானதாகி விடவேண்டும். நம்மை மாற்றியமைக்க ஒரே வழி, நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆழ்மனதை உற்ற நண்பனாக்கிக் கொள்வது தான்.

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள், நீங்கள் அடிக்கடி எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? எதைப் படிக்கிறீர்கள் ? அடிக்கடி என்னவிதமான எண்ணங்களை மனதில் சுழல விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? இவை உங்கள் வாழ்வில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன? இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா?

சிந்தியுங்கள், வாழ்க்கை வளம் அடையும்...

திராவிடமும் தமிழ்தேசிய இனத்தின் உரிமை பறிப்பும்...


திராவிடம் எனும் பொய்மை கருத்தியலால் கட்டமைக்கப்படும் புனைவுவாதமும்...

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம்.. காலத்தை கவனித்தல் அதாவது கடிகாரம் CLOCK TECHNIQUE மிகப்பெரிய ரகசியம்...


பழந்தமிழர்கள் காலத்தை கணிக்க சூரியனையும் சந்திரனையும் நம்பி இருந்தனர். இவை இரண்டும் தெரியா சமயத்தில் எதை வைத்து கணித்தனர் என்ற கேள்வி வரும்போது சங்க இலக்கியம் சொல்கிறது குறுநீர்க் கன்னல் என்ற ஒன்றை வைத்து காலத்தை கணித்தனர் என்று.

இந்த நீர் வைத்து கணிக்கும் முறை யவனர்கள் (எகிப்தியர்) கண்டது என அனைத்து உலகமும் நம்புகிறது.

ஆனால் அது உண்மை அன்று தமிழர்தான் இதன் முன்னோடிகள் என காட்டுகிறார் நம் விஞ்ஞானி……

அதனுடைய இன்னோரு பெயர் மற்றும் யார் என அறியும் முன் அக்கடிகார பாடலை கண்டு விடுவோம்.


பொழுதுஅளந் தறியும் பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்  நின்
குறுநீர்க் கன்னல் இனைத்தென்று இசைப்ப

- (முல்லைப்பாட்டு, 55-58)

மேற்கண்ட பாடலின் விளக்கம் சுருக்கமாக போருக்கு செல்லும் மன்னா உன் வாழ்நாளில் இத்தனை நாழிகை கழிந்து விட்டது என குறுநீர்க் கன்னலில் இத்தனை நாழிகை கழிந்துவிட்டது என கூறுவர் அந்த நாழிகை கணக்கர்.

அவர் பெயர் நாழிகை கணக்கர் என்பதற்கு ஆதாரம் கீழே இரண்டு அடிகளை கவனிக்க

குறுநீர்க் கன்னலின் யாமம் கொள்வர்
 - ( மணிமேகலை 7:64-68)

நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
- சிலப்பதிகாரம் 5: 49

இந்த குறுநீர்க் கன்னல் என்பதன் மற்றொரு பெயர் கூறிவிடுகிறேன்.


அதன் பெயர் நாழிகை வட்டில்.அதாவது ஒரு ஜாமத்திற்க்கு இவ்வளவு தண்ணீர் என நம் மக்கள் நாழிகை வட்டிலில் நீர் ஊற்றி ஒவ்வொரு சொட்டாக விழுமாறு செய்தனர் கீழே வரும் அளவையை அளந்து ஜாமத்தை கணித்தனர்.ஒரு நான்கு ஜாம அளவு உள்ள நீரை ஊற்றி நாழிகை வட்டிலை கணித்தனர். நான்கு ஜாமத்திற்க்கு முப்பது நாழிகைகள் என்பதை கவனிக்க.ஒரு ஜாமத்திற்க்கு 7-1/2 நாழிகை அதனால் நாழிகை வட்டில் என்று கூறினர்.

சரி இந்த நாழிகை வட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கணக்கதிகாரம் என்ற நூல் கூறுவதை கீழே கவனிக்கவும்

மட்டாறு விட்டம் விரலிட்டு வன்செம்பு
கொட்டார் பதின்பலமாங் கொள்ளுமுளை - கட்டாணி
நாலெட்டு நான்மாப்பொன் நாலுவிரல் நாழிகையின்
பால் வட்டிற் பாதிமதிப் பாம்
- கணக்கதிகாரம்-10

அதாவது இதன் விளக்கம் யாதெனில் பலமாகிய செம்புவட்டில் கொட்டுமிடத்து மட்டு ஆறுவிரல்விட்டம் அதாவது பன்னிரண்டு விரல் வட்டம் உடைய வட்டிலை எடுத்து, கொட்டின வட்டிலுக்குத் துளைவிடுவதற்க்கு முப்பத்தாறு மாற்று பொன்னால் நான்குவிரல் அளவு ஓர் ஊசி செய்து அந்த ஊசியாலயே துளையிட்டு அத்துளையில் நீர்புகுந்து அமிழ்ந்தால் ஒரு நாழிகை கணக்காம்.

இந்த நாழிகை வட்டிலில் முப்பது நாழிகை சென்ற பின் மீண்டும் நீர் நிரப்பி இறங்கும் அளவை வைத்து கணித்தனர்.சரி இந்த கடிகாரம் உள்ள நாழிகை வட்டில் எங்கு வைக்கபட்டது என்றால், கோவில்களில் சிவன் தலைக்கு மேலே நேராக இருக்கும் அந்த பாத்திரம் தான்.

ஒரு காலத்தில் கண்ணாடியில் இருந்தது. அக்கண்ணாடியில் அளவைகோடு இருக்கும் அதை வைத்து எளிதாக ஜாமத்தை கணித்து பூஜைகள் செய்தனர்.

அந்த கால கடிகாரம் இன்றும் உள்ளது ஆனால் வேறு வடிவத்தில்.

அது ஏன் சிவன் சிலைக்கு மேல் வைத்தனர் என்ற கேள்வி எழுகிறது பக்தி காரணம் விடுத்து அறிவியல் காரணம் கொண்டு உள்ளே செல்வோம்.

சிவனை கால சம்ஹாரமூர்த்தி என்றும் காலத்தை கடந்தவர் என்றும் திரிகால ஞானி என்றும் கூறுவர். இதன் அர்த்தம் எல்லாம் தலைக்கு மேலே உள்ளது.

நாம் அசையாமல் இருந்தால் காலத்தை கணிக்கலாம் அதாவது வெல்லலாம். நாம் அசைந்தால் காலமும் நம்மோடு அசையும் காலத்தை கணிப்பது அதாவது காலத்தை கடப்பது நமக்கு தெரியாது.

நாம் அசைகிறோம் என்றால் நாம் காலத்தோடு சேர்ந்து பயணிக்கிறோம் என்று அர்த்தம். அப்போது காலம் நம் கட்டுபாட்டில் வராது.

தியானம் செய்பவரை காண்க அசையாமல் இருப்பர்..

நம் புலன்கள் அசையாமல் இருந்தால் அனைத்தும் நம் கட்டுபாட்டில் வரும். இலிங்கம் அசையுமா என்றால் அப்படியே இருக்கும் அப்படியானால் அவரால் காலத்தை கடந்து இருக்க முடியுமல்லவா.

சரி அடுத்து நடராஜரை கவனிப்போம் அவர் என்ன செய்கிறார் அசைகிறார் அவர் தலைக்குமேல் ஏன் நாழிகை வட்டில் வைக்கவில்லை அவரும் அதே சிவன் தானே.

சிந்திக்க காலத்தை உணர்ந்தவர் அசையும்போது, காலம் செயல்படும் அவர் எந்தகாலத்தில் வேண்டுமானாலும் பயணிப்பார் அவர் பயணத்தை யாராலும் கணிக்க இயலாது என்பது இரகசியம். ஆதலால் அவர் ஆடும்போது அவர் காலத்தை அவரே வழிநடத்துகிறார் அதை யாரலும் காணமுடியாது என்பதே நாழிகை வட்டில் நடராஜர் தலைக்கு மேல் வைக்ககூடாது என்ற தத்துவம்.

நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.

சிவனை கால விஞ்ஞானி என கூறுவதில் தவறு இல்லை.

இனி சிவன் கோவிலில் அடுத்த தடவை மேலே உள்ள பாத்திரம் கண்டால் அதன் அறிவியல் கலந்த ஆன்மீகம் சொல்லவும். சிவன் சூடு, அதான் குளிர்ச்சிக்கு வைத்தார்கள் என ஒருசார் கூறும் பதில் மட்டும் கூற வேண்டாம.

இது தமிழன் அறிவியல் சம்பந்தபட்ட விடயம் மற்றும் சங்க இலக்கியத்தோடு இறைவனின் கால தத்துவ ரகசியம் இதை இன்னும் ஊன்றி தியானத்தில் கவனித்தால் நான் கண்ட அனுபவம் உங்களுக்கும் என் அப்பன் சிவன் அளிப்பான் என்பது திண்ணம்...

திட்டம் போட்டு விவசாயிகளை அழிக்கும் பாஜக அடிமை அதிமுக...


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது உழவர்களை அழிக்கும் சதி - பாமக அறிக்கை...


தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு ஆணை   பிறப்பித்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல்  நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது; உழவர்களுக்கு இதைவிட மோசமான துரோகத்தை இழைக்க முடியாது.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஆண்டு எனப்படுவது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் தேதி நெல் கொள்முதலுக்கான விலை அறிவிக்கப்பட்டு, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு , கொள்முதல் தொடங்கப்படுவது வழக்கம். குறுவை நெல் அறுவடை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பா அறுவடை முடிந்த பிறகு கொள்முதல்  அளவு குறைந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் மாதம் வரை இயங்கும். அறுவடை நடக்காவிட்டாலும் உழவர்கள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்படும்.

ஆனால், நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தமிழக  அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டதன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்ப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக்கி விட்டு நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள உழவர் அமைப்புகள் செப்டம்பர் 3-ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இதுபற்றி விளக்கம் அளிக்காமல் அமைதி காப்பது சரியல்ல.

இந்தியாவில் உழவர்களின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதன் ஒரு கட்டமாக வேளாண்மை விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலைகளை நிர்ணயம் செய்தது. அது போதுமானதல்ல என்று உழவர்கள் கூறி வரும் நிலையில், ஒட்டுமொத்த கொள்முதலையே  நிறுத்தும்படி மத்திய அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒருபுறம் கொள்முதல் விலையை உயர்த்தி விட்டு, மறுபுறம் கொள்முதலை நிறுத்துவது பசியில் வாடும் மனிதனுக்கு உணவைக் கொடுத்து விட்டு, உயிரைப் பறிக்கும் கொடுமைக்கு இணையானதாகும்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற நாளில் இருந்தே நேரடி கொள்முதலையும்,    பொதுவினியோகத் திட்டத்தையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் நேரடி பயன் மாற்றத் திட்டம் ஆகும். உணவு மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் இந்த திட்டத்தை பல மாநிலங்களில் சோதனை அடிப்படையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. நியாயவிலைக்கடைகளில் மானிய விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்த பயனாளிகளுக்கு, புதிய முறைப்படி பணமாக மானியம் வழங்கப்படும் என்பதால் நியாயவிலைக் கடைகளே தேவையிருக்காது; அதனால் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்ய வேண்டியிருக்காது. இத்திட்டத்தை தமிழகத்திலும் நடைமுறைப் படுத்தும் நோக்குடன் தான் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை தனியார் வணிகர்களிடம் தான் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வணிகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு நெல் உள்ளிட்ட விளைபொருட்ளை அடிமாட்டு விலைக்கு வாங்குவர். அதேநேரத்தில் அரசு நெல் கொள்முதல் செய்யாவிட்டால் நியாயவிலைக்கடைகளில் வழங்குவதற்கு அரிசி கிடைக்காது. இதனால் நியாயவிலைக் கடைகளை மூட வேண்டியிருக்கும். அத்தகைய நிலை ஏற்பட்டால் பொதுமக்களும், விவசாயிகளும் வாழவே முடியாமல் போய் விடும். அதனால் தான் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதை விவசாயிகளை அழிக்கும் சதி என்று குற்றஞ்சாற்றுகிறேன்.

நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசே அவ்வாறு ஆணையிட்டிருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசே அதன் சொந்த செலவில் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும்; அவற்றை பொதுவினியோகத் திட்டத்தின்படி நியாய விலைக்கடைகளில் வழங்கி உழவர்களையும், மக்களையும் காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்...

எப்டியும் நீ இன்னொரு இடத்த தேடி போய் தான் ஆகனும்... நல்ல இடமா தேர்ந்தெடுக்குறதும் உன்னோட சாமர்த்தியம்...


புத்தரின் தத்துவங்களுக்கு எழுத்து வடிவம் தந்தது தமிழ்...


புத்தர் கிமு 500 வாக்கில் வாழ்ந்தவர். 45 ஆண்டு காலம் தன் போதனைகளை பாலி மொழியில் பேசினார். எழுத்து வடிவம் இல்லாததால், அவர் போதனைகளை சூத்திரமாக அவரின் சீடர்கள் மனப்பாடம் செய்து வந்தனர். புத்தர் இறந்தபின் அவர்கள் ஒன்றுகூடி தான் மனப்பாடம் செய்த சூத்திரங்களை தொகுத்தனர்..

அந்த புத்தரின் சூத்திரங்களே விநயபிடகம், அபிதம்ம பிடகம், சூத்திரபிடகம் எனும் திரிபிடகங்கள் ஆகும்.

சுமார் 400 ஆண்டு காலம் எழுத்துவடிவம் இல்லாமல் மனப்பாடம் செய்யப்பட்ட அந்த சூத்திரங்களை இலங்கையில் பரப்பியபோது தமிழி எழுத்து வடிவத்தை பயன்படுத்தி, மாத்தளை எனும் ஊரில் கிமு 80 ஆம் ஆண்டு முதன்முதலாக எழுத்து வடிவத்தில் எழுதினர்.

மொழி பாலியிலும் எழுத்தோ தமிழியிலும் அமைந்த அந்த சூத்திரங்களே முதல்முதலாக புத்த தத்துவங்களான திரி பிடகங்களுக்கு எழுத்து வடிவம் தந்து உயிர் கொடுத்ததாகும்.

புத்தரின் தத்துவங்களுக்கு எழுத்து வடிவம் தந்தது நம் தமிழே...

விவசாயிகளுக்கு எச்சரிக்கை...


ஆழ்மன சக்திகளில் ஒன்பது வகை...


ஆழ்மன சக்திகளில் ஒன்பது வகைகளில் அடிப்படையான ஒருசில சக்திகளை அடையும் வழிகளையும் பார்த்தோம். உயர் உணர்வு நிலை, ஒருமுனைப்படுத்தப்பட்ட மனது, எண்ணங்களில் கட்டுப்பாடு, மனதில் உருவகப்படுத்தி எதையும் தெளிவாகக் காணும் பழக்கம் ஆகியவை ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சக்தி வாய்ந்த உபகரணங்கள். அந்த உபகரணங்களை வைத்துக் கொண்டு, முயல்பவர்களுக்கு மற்ற சக்திகளையும் பெறத் தேவையான, இனி மேல் போக வேண்டிய, வழிகள் தானாகப் புலப்படும்.

ஆவிகளுடன் பேசுதல், தொடர்பு கொள்ளுதல், மற்றவர்களை வசியம் செய்து தங்கள் விருப்பப்படி நடக்க வைத்தல் போன்ற சக்திகளையும் சிலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். பதஞ்சலியோ தன் யோக சூத்திரங்களில் ஆழ்மன சக்திகளைப் பெற்ற மனிதன் கூடு விட்டு கூடு பாயலாம், மற்றவர்கள் கண்களில் இருந்து மறைந்து போகலாம், தண்ணீரில் மூழ்காமல் இருக்கலாம் என்று எல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறார். பதஞ்சலி சொல்லும் பல அதீத சக்திகளுக்கான பயிற்சிகள் கடுமையானவை மட்டுமல்ல, அந்தப் பயிற்சிகள் குறித்த முறையான ஞானம் உள்ளவர்களும் மிகவும் குறைவு. அபூர்வமான சித்தர்கள், யோகிகள் மட்டுமே அறிந்த, கடைபிடிக்க முடிந்தவையாக அந்தப் பயிற்சிகள் கருதப்படுகின்றன. மொத்தத்தில் ஆழ்மன சக்தியால் சாதிக்கக் கூடிய அற்புதங்களின் எல்லை மனிதனின் கற்பனையின் எல்லை என்றே சொல்லலாம்.

இத்தொடரில் நாம் பார்த்த ஆழ்மன சக்தி பெற்றவர்கள் பெரும்பாலும் தற்செயலாக அந்த சக்தியைப் பெற்றவர்களாக இருந்ததைப் பார்த்தோம். ஏதோ ஒரு வகையில் அந்த குறிப்பிட்ட சக்திக்கு ‘ட்யூன்’ ஆனவர்கள் அவர்கள். அவர்களில் ஒருசிலர் அப்படி ’ட்யூன்’ ஆன பிறகு அதனை ஒத்த தன்மையுள்ள ஓரிரு சக்திகளையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சிறப்புத் தன்மை அந்த ஒன்று அல்லது ஓரிரண்டு சக்திகளுடன் நின்று போகிறது. அவர்கள் எவ்வளவு தான் விருப்பப்பட்டாலும் வேறு ஏதாவது ஆழ்மன சக்தியைப் பயன்படுத்த முயற்சித்தால் அதில் தோல்வியே அடைகிறார்கள். இப்படி ஒரு வரம்புக்குள்ளேயே இருக்க நேர்வது தற்செயலாக ஒரு சக்தியைப் பெற்றவர்களுடைய குறைபாடாகி விடுகிறது. இன்னொரு குறைபாடு என்னவென்றால் அந்த சக்தி திடீரென்று வந்தது போல திடீரென்று போய் விடவும் வாய்ப்பு இருக்கிறது.

முறைப்படி பயிற்சிகள் செய்து படிப்படியாக மனதை பக்குவப்படுத்தி, ஆட்கொண்டு, ஆழ்மன சக்திகளை அடைந்தவர்கள் இப்படி ஓரிரு சக்திகளின் வரம்புகளுக்கு உட்பட்டு தங்கி விட வேண்டிய அவசியமில்லை. அது போல அந்த சக்திகளுக்கு எதிரான செயல்பாடுகள் இல்லாத வரையில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பெற்றிருக்க வேண்டிய நிலையும் இருக்காது. யோகிகள், சித்தர்கள் போல எல்லா ஆழ்மன சக்திகளைப் பெற முடியா விட்டாலும், அடைந்துள்ள முன்னேற்றத்தையும், ஆற்றலையும் பொறுத்து, தங்களிடம் பல விதமான ஆழ்மன சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் பார்க்க பிரமிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கைக்கும், நமது முன்னேற்றத்திற்கும் பயன் தராத சக்திகளைப் பெற அதிகமாக ஒருவர் பாடுபடுவது முட்டாள்தனம். உதாரணத்திற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்த சக்தி படைத்த ஒரு சாதுவைச் சொல்லலாம். அந்த சாது ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னாலேயே மறு கரையில் இருந்து நதி நீர் மீது நடந்தபடியே இக்கரைக்கு வந்தார். அந்த சக்தி பெற நிறைய பயிற்சிகளை நிறைய காலம் செய்து பெற்றதாகச் சொன்னார். ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொன்னார். “காலணா கொடுத்தால் படகுக் காரன் நதியைக் கடந்து இறக்கி விடுகிறான். அப்படிப்பட்ட வேலைக்காக நீங்கள் ஏன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்?”. அவர் கேட்டது போல காலணா சமாச்சாரங்களுக்காக நிறைய கஷ்டப்படாதீர்கள். உங்கள் நிஜ வாழ்க்கைக்கு உதவக்கூடிய, உங்களை மேம்படுத்தக்கூடிய ஆழ்மன சக்திகளைப் பெறவே முயற்சியுங்கள். வெறும் புகழுக்காக ஆழ்மன சக்திகளை வெளிப்படுத்த நினைப்பது ஒருவித மூன்றாந்தர வெளிப்பாடாகவே விஷயமறிந்தோர்களால் கருதப்படுகிறது.

இதை தன்னுடைய நூலில் (A search in Secret India) பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவ ஞானி ப்ரம்மா என்ற யோகியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காணச் சென்றார். அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்புவதாகச் சொன்னார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதிலும், அவர்களுக்கு சொல்லித் தருவதிலும் என்ன நஷ்டம்?"

ப்ரம்மா சொன்னார். "ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்...."

மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள் அவை. ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் இதை நினைவில் வைத்திருப்பது நல்லது. தங்களுடைய பயிற்சிகளையும், அதன் விளைவுகளையும் ரகசியமாகவே வைத்துக் கொள்வதே உத்தமம். ஆரம்பத்தில் இதில் கிடைக்கும் சிறு வெற்றிகள் தரும் மகிழ்ச்சி சாதாரணமானதல்ல. அப்போது இயல்பாகவே பலரிடம் சொல்லி ஆனந்தப்படத் தோன்றும். ஆனாலும் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையும் வரை நாம் பெறும் வெற்றிகளை எல்லோருக்கும் பிரகடனப்படுத்துவது முழுமையான வெற்றிக்கு ஒரு தடையாகவே இருக்கும். ஏனென்றால் அப்படிச் செய்கையில் அந்த ஆழ்மன சக்தியைப் பெறுவதை விடவும் அதிகமாக அதை அடுத்தவருக்கு நிரூபிக்கவும், அவர்களிடம் பெயர் வாங்கவுமே நம்மை அறியாமலேயே நாம் முக்கியத்துவம் தர ஆரம்பிப்போம். இது நமது உள்நோக்கிய பயணத்தை வெளி நோக்கிய பயணமாக மாற்றி திசை திருப்பி விடும். சிலர் பாராட்டுவார்கள். சிலர் நம் சக்திகளைக் காட்டி நம்மை சாமியார்களாக ஆக்கியும் விடக் கூடும். இப்படி அற்ப சாதனைகளில் கிடைக்கும் இந்த அற்ப திருப்திகளில் மகிழ்ந்து அத்துடன் நின்று விட்டால் இனியும் நமக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டங்களை நாம் அடைய முடியாமல் போய் விடும்.

இதில் முழு ஆளுமையை அடைகிற வரையில் ஒரு முறை சாத்தியப்பட்டது அடுத்த முறை சாத்தியப்படாமல் போகலாம். அதற்கு காரணங்கள் நமக்குள்ளோ, நமக்கு அப்பாற்பட்டோ இருக்கலாம். உண்மையான காரணங்களை அறிந்து நம் முயற்சியில் உள்ள குறைபாடுகளாக இருந்தால் அதை சரி செய்து கொண்டு, நமக்கு அப்பாற்பட்ட, நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் என்றால் அதை ஏற்றுக் கொண்டு நாம் முன்னே செல்ல வேண்டி இருக்கும். ஆனால் கூட்டம் கூட்டி நாம் முயற்சி செய்யும் போது, வெற்றி கிடைக்காத போது பலர் ஏளனம் செய்ய ஆரம்பிக்கலாம். நமக்கே முன்பு கிடைத்த வெற்றி தற்செயலாகக் கிடைத்தது தான் போல இருக்கிறது, உண்மையில் நமக்கு இந்த சக்திகள் இல்லை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கலாம். இதெல்லாம் நாம் வெற்றி பெற பெரும் தடையாக மாற ஆரம்பிக்கும். மேலும் ஒரிரு முறை வெற்றி பெற்று பின் வெற்றி பெற முடியாதவர்களில் சிலர் தங்கள் புகழைத் தக்க வைக்க பின் ஏமாற்று வேலைகளில் கூட ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். ஏமாற்ற ஆரம்பிக்கிறவர்கள் அந்த சக்தியை நிரந்தரமாகவே இழக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த ஆழ்மன சக்திகள் விஷயத்தில் வெற்றி விகிதம் எப்போதுமே நூறு சதவீதமாக இருப்பதில்லை. பத்து முதல் இருபது சதம் வரை தோல்விகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதற்குக் காரணங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாகக் கூட இருக்கலாம். அந்த உண்மையை மறப்பதும், மறுப்பதும் உண்மையான சாதகனுக்கு உகந்ததல்ல. எத்தனை பெரிய கைராசிக்கார மருத்துவராக இருந்தாலும் அவர் சிகிச்சை செய்யும் நோயாளிகளில் சிலரும் இறப்பதுண்டு. அதற்கென யாரும் அவரைக் குறைத்தோ, அந்த மருத்துவ சாஸ்திரத்தைக் குறைத்தோ மதிப்பிடுவதில்லை அல்லவா? அதே போலத் தான் இதுவும். பெரும்பான்மை வெற்றிகளை வைத்தே மதிப்பிடல் முக்கியம். சில முயற்சிகளில் தோல்வி வருவது இயற்கையே. அதனால் அதை மறைக்கவோ மறுக்கவோ முற்படாதீர்கள். அந்தப் பக்குவம் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தின் அடுத்த கட்டங்களை உங்களால் சென்றடைய முடியும்.

மேலும், ஆழ்மன சக்தி வகை எதுவானாலும் அதை அடைய அதற்கான
பிரத்தியேக, உறுதியான, தொடர்ந்த ஆர்வம் இருத்தல் தேவை. அந்த ஆர்வம் பத்தோடு சேர்ந்த பதினொன்றாக இருந்தால் அதில் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது. முன்பே பல முறை குறிப்பிட்டது போல அசாத்தியப் பொறுமையும் வேண்டும். கீரை விதைத்தவன் படுகிற அவசரம் தென்னை விதைத்தவன் படக்கூடாது. ஆழ்மனசக்தி வேண்டி முயற்சிக்கிறவர்கள் இதை எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். அதே போல சில முறை நமக்கு சில வெற்றிகள் விரைவாகக் கிடைக்கலாம். சில முறை நம் முயற்சிகளுக்குப் பலன் இருப்பது போலவே தோன்றாது. நம் பயணம் அப்படியே தேக்கமடைந்து விட்டதைப் போன்ற பிரமை கூட ஏற்படும். அந்த நேரத்தில் தான் நாம் முயற்சிகளைக் கை விட்டு விடக்கூடாது. வெளிப்பார்வைக்குத் தெரியா விட்டாலும் சில நுணுக்கமான மாற்றங்கள் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டு தான் இருக்கும். ஒட்டு மொத்தமாக ஒரு நாளில் நாம் உணர நேரிடலாம். எனவே பொறுமையாக நாம் தொடர வேண்டியது முக்கியம்.

இதை எல்லாம் சொல்லும் அளவுக்கு செயல்படுத்துதல் அவ்வளவு சுலபமல்ல. படிக்கும் போதும், மற்றவர் சாதனையைக் கேட்கும் போதும் நமக்குள் எழுகிற எழுச்சியையும், ஆர்வத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுதல் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இது சாத்தியப்பட, இது சம்பந்தமான நூல்களை தொடர்ந்து அதிகம் படியுங்கள். இதில் ஆர்வம் உள்ளவர்களுடன் அதிகம் தொடர்பு வையுங்கள். ஓரளவு வெற்றி பெறும் வரை தாக்குப்பிடித்து உங்கள் முயற்சிகளில் தொடர்ந்து இருப்பது மிக மிக முக்கியம். அந்த வெற்றிகள் சாத்தியமானவுடன், உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்.

ஆழ்மன சக்தியில் ஆளுமையைப் பெறும் வரை அதனை சோதித்து பார்த்துக் கொண்டு இருப்பது இயற்கையே. ஆனால் அதனை முழுமையாகப் பெற்ற பிறகும் தேவையில்லாமல் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே. நம்மால் கையை அசைக்க முடிகிறது என்பதற்காக நாம் வெறுமனே கையையே அசைத்துக் கொண்டிருப்போமா? எப்போது தேவையோ அப்போது மட்டும் தானே நாம் கையை அசைப்போம். அது போல ஆழ்மன சக்தியையும் தேவைப்படும் போது தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவது தான் முறையானது.

ஆழ்மன சக்தியின் கீழ்நிலை சக்திகளாக மாந்திரீகம், செய்வினை, பலவீனமானவர்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தல் போன்றவையெல்லாம் கூட சொல்லப்படுகின்றன. உண்மையாக ஆழ்மன சக்தி வாய்ந்தவர்கள் யாரும் இது போன்ற முறைகளில் இறங்குவதுமில்லை. இந்த சக்திகளால் அவர்கள் பாதிக்கப்படுவதுமில்லை. கீழ்நிலை சக்திகள் மேல்நிலை சக்திகள் முன்பு என்றும், எப்பொழுதும் பலம் இழந்து போகின்ற தன்மை வாய்ந்தவை. மேலும் இது போன்ற கீழ்நிலை சக்திகளைப் பயன்படுத்தி அடுத்தவரைத் துன்புறுத்த முயல்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் துன்பப்பட்டு அழிந்து போகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்மை. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த வகை சக்திகளில் ஆர்வம் காட்டக்கூட முற்படாதீர்கள்.

ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன் தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம். உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது. மேலும்
ஆழ்மன சக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம். அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட.

பலர் தாங்கள் அடையக்கூடிய அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்றறியாமலேயே பரம தரித்திரர்களாக இருந்து விடுகிறார்கள் என்பது இரக்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்று அறிந்தும் அதை அடையும் வழி பற்றி தெரிந்தும் அந்த வழியில் பயணம் செய்யாமல் இருப்பதும், அந்த வழியில் சிறிது தூரம் பயணித்து திரும்பி வந்து விடுவதும் வடிகட்டிய முட்டாள்தனம்.

உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள். இது பற்றி நிறைய சிந்தியுங்கள். இந்த உண்மைகளை மனதில் ஊறப் போடுங்கள். நிஜ வாழ்க்கையில் இது ஒரு பாகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பாதையில் பயணத்தைத் தொடருங்கள். பயணத்தின் வேகம் எப்போதும் ஒரே போல சீராக இருக்காது. பயணம் அவ்வப்போது வேகமும் மந்தமுமாக இருக்கலாம். ஆனால் பயணத்தைக் கை விடாமல் இருப்பது முக்கியம். இதில் முழு வெற்றி, தகுதிகளை வளர்த்துக் கொண்டு கடைசி வரை பயணிப்பவர்க்கே வாய்க்கும் என்றாலும் பயணிக்கும் மற்றவர்களுக்கும் முயற்சி செய்த அளவு வெற்றியும் நற்பலன்களும் கண்டிப்பாகக் கிடைக்கும். முக்கியமாக பிரபஞ்ச சக்தியுடன் கண நேரமானாலும் தொடர்பு கொள்ளும் வரையாவது பயணம் செய்யுங்கள். முன்பு சொன்னது போல உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்...

இந்த புத்தகத்தை படித்து தான் நம் பிள்ளை அறிவாளியா ஆகனும்னு அவசியம் இல்லை...


பைக்கை பறிமுதல் செய்யததால் போலீசார் கண்முன்னே தீக்குளிக்க முயன்ற வாலிபர்...


தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வரும் பைக் ஓட்டிகள் மீது காவலாளர்கல் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, நேற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் தூத்துக்குடி மாவட்டம், வி.வி.டி.சிக்னல் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை போலீசார் மடக்கினர்.

அவர் மதுபானம் குடித்துவிட்டு பைக் ஓட்டிவந்ததால் அந்த இளைஞர் மீது, "குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக'' வழக்குப்பதிந்தனர். அதனைத் தொடர்ந்து அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் என்ன செய்வதென்று தெரியாமல், 'எனது பைக்கை திருப்பிக் கொடுங்கள்' என்று போலீசாரிடம் கெஞ்சி கேட்டுள்ளார். அதற்கு போலீசாரோ, "கோர்டில் அபராதத்தை கட்டிவிட்டு பைக்கை எடுத்துக் கொள்" என்று கண்டிப்பாக கூறிவிட்டனர்.

போதையில் இருந்த அந்த இளைஞர் அங்கிருந்து சென்றுவிட்டார். காவலாளர்களும் தங்களது வாகனச் சோதனையை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மீண்டும் போலீசார் இருக்கும் இடத்திற்கு கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார்.

போலீசார் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, "எனது பைக்கை தராவிட்டால் தீக்குளித்து விடுவேன்" என்று தீக்குச்சியை பற்ற வைக்க முற்பட்டார். அப்போது அங்கு இருந்த போலீசார் உடனே ஓடிச்சென்று அந்த இளைஞரி தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்...

பாஜக - அதிமுக வின் திட்டமிட்ட சதி...


வேறுகிரக வாசிகளின் உண்மைகள்...


இன்றைய விண்வெளி வீரரின் உருவ அமைப்பில் இருக்கும் இந்தச் சிற்பங்கள், விண்வெளி வீரர்கள் அணியும் தலைக்கவசத்துடன் இருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது...

இந்தச் சிற்பம் இன்றைய நவீன விண்வெளி வீரரை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது போல் உள்ளது. மேலும் ஒரு சிலையில் விண்வெளி ராக்கெட் வடிவங்கள் பல உள்ளது. இதற்கான காரணம் அன்றைய மனிதர்கள் விண்பயணம் செய்ததை தான் சிற்ப்பமாக செதுக்கியுள்ளனர் என்பதை தான் வெளிபடுத்துகிறது.

இந்த குகை ஓவியங்கள், சிற்பங்கள், விண்வெளி ராக்கெட் போன்ற ஊர்திகள் போன்றவற்றை எப்படி ஒரே மாதிரியாக வரையவும், செதுக்கவும் முடியும்? அவையெல்லாம் கற்பனை ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் என்று எடுத்துக்கொண்டாலும்கூட, எப்படி ஒரே மாதிரியான வடிவங்களைக் கற்பனையாக வரையவோ அல்லது செதுக்கவோ முடியும்?

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் எதை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்? யாரைப் பார்த்து மனிதர்கள் இவற்றை உருவாக்கி இருப்பார்கள்.? என்பதே ஆராய்ச்சியாளர்களின் மிகப்பெரிய ஆச்சர்யம்..?