04/09/2018

கணவனுக்கு பிறந்தநாள் பரிசாக சாவை பரிசாக அளிக்க நினைத்தேன்.. அபிராமியின் பகீர் வாக்குமூலம்...


சென்னையில் இரண்டு குழந்தையை கொன்று கள்ள காதலனுடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அளிக்கும் ஒவ்வொரு வார்த்தையுமே பீதியை கிளப்புவதாக உள்ளது.

இதுதொடர்பாக அபிராமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எங்கள் நெருக்கத்தை தெரிந்த என் அப்பா, என்னை வீட்டு சிறையில் வைத்தார். குழந்தைகளும் எப்போதும் என்னை விட்டு விலகாமல் இருந்தனர். தூக்க மாத்திரைகள் இதுகுறித்து சுந்தரத்திடம் தெரிவித்தேன். அவர் மூன்று பேரையும் கொலை செய்தால்தான் நாம் ஜாலியாக இருக்க முடியும் என்றார். அதற்காக மூன்று பேரையும் கொலை செய்ய தூக்க மாத்திரைகளை வாங்கி தந்தார்.

எனவே, கடந்த 30ம் தேதி இரவு எனது கணவர் விஜய் பிறந்த நாள் பரிசாக இவர்களை கொல்ல முடிவு செய்தேன். பாலில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கணவர் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொடுத்தேன். மறுநாள் அதிகாலையில் 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன்.

ஆனால், கணவன் மற்றும் மகன் அஜய் ஆகியோர் சாகவில்லை. ஆனால், பெண் குழந்தை கார்னிகா படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள். வேலைக்கு போகும் முன், தன் பெண் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கணவர் விஜய் அவள் அறைக்கு செல்ல முயன்றபோது நீங்கள் குழந்தைக்கு முத்தம் கொடுத்தால் எழுந்துவிடுவாள் என தடுத்தேன்.

வேலைக்கு சென்ற விஜயின் பின்னாலேயே சென்ற மகன் அஜய் கீழ் தளத்திற்கு சென்று ஹெல்மெட்டை கொடுத்து டாடா சொல்லி தந்தையை வழியனுப்பி வைத்தான். திரும்பி வந்த மகனை படுக்கை அறைக்கு அழைத்து சென்று மூக்கையும், வாயையும் பொத்தி துடி துடிக்க கொன்றேன்.

பின்னர் குழந்தைகளின் சடலத்தையும் படுக்கை அறையில் அருகருகே கிடத்திவிட்டு, இரவு நேரம் நெருங்கி விட்டதால் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அவரை கொலை செய்யும் முடிவில் இருந்தேன். கடந்த 31ம் தேதி மாத கடைசி நாள் என்பதால் வேலை பளு காரணமாக விஜய் வீட்டிற்கு வரவில்லை. அதனால் அவர் தப்பித்துவிட்டார். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார் அபிராமி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.