07/12/2017

கண்ணில் கட்டி, கண் வலி குறைய‌...


1).  சுடு தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் கலந்து கர்சீப் அல்லது பஞ்சை நனைத்து கையின் தோல் உள்ள பகுதியில், உள்ளங்கைக்கு பின் பகுதியில் வைத்துப் பார்க்க வேண்டும்.  கை பொறுக்கும் சூட்டில் இந்த ஒத்தடத்தை காலை, மாலை இரண்டு வேளையும் 5 நிமிடத்துக்கு கண்களுக்கும் தரலாம்.

2). வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும். சோற்றுக் கற்றாழை தோலைச்சீவி அதன் சிறிது ஜெல்லை தண்ணிரில் கழுவி கண் இமைகளுக்கு மேலே வைத்து கட்டி 5 நிமிடம் கழித்து எடுக்க கண்ணில் கட்டி, கண் வலி குறையும்.

3). 10 மி.லி பன்னீரில்10 கிராம் மரமஞ்சள், 3 கிராம் மஞ்சள் மற்றும் 3 கிராம் படிகாரம் ஆகியவற்றை கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை எடுத்து ஒரு துணியில் வடிகட்டி அந்த நீரை கொண்டு 7 நாட்கள் முகம், கண்கள் ஆகியவற்றை நன்றாக கழுவி வந்தால் கண்ணில் ஏற்படும் கட்டிகள் குறைந்து கண் சிவப்பு, கண் வலி ஆகியவை குறையும்...

இனப்படுகொலையை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஜனநாயக படுகொலையை ஏற்றுக் கொள்ள முடியாது -- தமிழின துரோகி விசிக திருமாவளவனின் புதிய கணடு பிடிப்பு...


இனி இவர் எழுச்சி தமிழர் அல்ல.. தெலுங்கர் பணியாள்...

கன்னியாகுமரி : மாயமான மீனவர்களை மீட்க கோரி பாதிக்கப்பட்ட மீனவ குடும்ப உறுப்பினர்கள், பாதிரியார்கள் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட குழித்துறை ரயில் நிலையத்தை நோக்கி நடைபயணம்...


பாஜக விற்கு பயந்து மருத்துவமனையில் அனுமதியான கங்கை அமரன்...


தமிழக அரசின் மேல் இதை விட ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ன இருக்க முடியும்...


கேரள முதல்வரை சந்தித்து உதவி கேட்கும் தூத்துக்குடி மீனவர்கள்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த புதிய சாதனை...


நாம் தமிழர் கட்சியா அல்லது நாம் தெலுங்கர் கட்சியா..?


தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு...


1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

2. பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

3. எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

4. காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

5. இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

6. உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

7. தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

8. எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

9. இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

கதிராமங்கலம் மக்களின் போராட்டம் 200வது நாளை தாண்டியது...


நமது மூளைக்கு வருங்காலம் அறியும் திறன் இருக்கிறது...


மனித மூளை எப்போதும் விசித்திரமானது. அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

பல விசித்திரங்களுக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை.

நாம் தூங்கும் போது மூளையும் நம்முடனே சேர்ந்து தூங்குவதாகத்தான் பலரும் நினைக்கிறோம். ஆனால், மூளை தூங்குவதில்லை. மாறாக, இரவில் அதிகமான சுறுசுறுப்புடன் அது இயங்குகிறது.

கனவு வந்தாலும் வராவிட்டாலும் மூளை தொடர்ந்து உற்சாகமாக இயங்குகிறது.

மூளை எப்போதும் தூங்கவே தூங்காது என்பது தான் உண்மை.

அப்படி அது தூங்கினால் நாம் நிரந்தரமாக தூங்கி இருப்போம்.

நமது மூளைக்கு வருங்காலத்தை அறியும் திறன் இருக்கிறது.

பின்னாளில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறன் நம் மூளைக்கு உண்டாம்.

அவற்றை கனவுகளாக நமக்கு உணர வைக்கவும் அவை தவறுவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த கனவு வழியாக எதிர்காலத்தை அறியும் திறன் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும்.

அதனால் தான் சிலர் காணும் கனவுகள் மட்டும் அப்படியே பலிக்கின்றன. சிலரின் கனவுக்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. இது எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே முழுமையாக புரியவில்லை.

மனித மூளையால் வருங்காலத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானம், மெய்ஞானம் என இரண்டுமே ஒப்புக் கொண்டுள்ளன. அது இப்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நடுப்பகுதி மூளையில் உள்ள டோபமைன் என்ற அமைப்பு நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை தந்து கொண்டே இருக்கும்.

இதுதான் நாம் சில செயல்களை செய்யும் போது தடுத்து, ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதையும் மீறி அந்தக் காரியத்தை நாம் செய்யும் போது தோல்வி அடைகிறோம் என்றும், மூளை தரும் அந்த அச்சம் தான் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு என்றும் கூறுகிறார்கள்.

இதைதான் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்.

பெண்கள் மூளையை குறைவாகவே
பயன்படுத்துகிறார்கள். ஆணோடு
ஒப்பிடும் போது பெண்கள் தங்கள் மூளையை 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரும் போது பெண்கள் சற்று குழம்புகிறார்கள்.

உடலில் எந்த இடத்திலும், சிறு காயம் பட்டால் கூட உடனே வலி தெரியும். ஆனால் மூளை தனக்கு வலி ஏற்பட்டால் மட்டும் அதை தெரிவிப்பதில்லை. ஏனென்றால் மூளையிடம் வலி உணர்விகள் கிடையாது. அவற்றுக்கான இடமும் மூளையில் இல்லை.

மூளையின் அளவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவுத் திறனில் இது முக்கிய பங்களிக்கிறது. மூளையின் அளவு பெரிதாக இருப்பவர்கள் ஒரு பிரச்சினைக்கு மிக நல்ல தீர்வு காண்பார்கள் என்றும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வார்கள் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மூளைதான் மனித உடலிலே அதிக அளவு சக்தியை எடுத்துக்கொள்ளும் அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதனின் மூளையின் சக்தி...

நமக்கு எல்லாம் சுவாமி விவேகானந்தர் பற்றி தெரியும்.

எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

இவர் ஒரு புத்தகத்தை ஒரு முறை
படித்து விட்டால், அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்கள் போட்டோ காபியாக மூளையில் பதிந்து விடும். என்பதை நாம் அறிந்த ஒன்று தான்.

இதை ஆங்கலத்தில் (Photographic memory) என்பர்கள்.

மாணவர்கள் தேர்வு எழுதும் போது சில
நேரங்களில் அந்த பக்கம் கண்முன் வரும். அந்த பக்கத்தை படிக்கும் போது அவர்களின் ஆழ்மனம் திறந்து இருந்திருக்கும். அதனால் தான் அந்த பக்கம் நமக்கு எழுதும் போது பார்க்க முடிகிறது.

ஒரு வேளை நமக்கு ஆழ்மனதை திறக்க
தெரிந்தால் நாமும் விவேகானந்தர் போல முழுபுத்தகத்தையும் (அனைத்து
புத்தகத்தையும்) ஒருமுறை படித்தால்
போதும்.

அல்பா முதல் கட்டத்தின் முலமாக இதை
நம்மால் சாதிக்க முடியும்...

ஊடகமே மக்களின் முதல் எதிரி...


வங்கியில் போட்ட டெபாசிட்களுக்கு ஆபத்து. புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மக்கள் விரோத மத்திய பாஜக மோடி அரசு...


வங்கியில் சாமானிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர் போட்டுள்ள டெபாசிட் பணத்தை முழுவதுமாக உடனே திருப்பித்தர வேண்டிய அவசியம் வங்கிகளுக்கு இல்லை என்பது போன்ற சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.

வங்கிகளை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், வங்கிச் சீர்திருத்தங்கள் செய்யவும், “வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதா 2017 ’’ என்ற மசோதாவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த மசோதாவில் சாமானிய மக்களின் சேமிப்புகளையும், டெபாசிட்களையும் முடக்கும் வகையில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால்,  வங்கிகளை இழப்பில் இருந்து காக்கும் வகையில் ‘தீர்மானம் கழகம் (ரெசலூஷன் கார்பரேஷன்) என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்த தீர்மானம் கழகம் வங்கிகளை திவாலாகவிடாமல் காப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்.

வாராக்கடன் வசூலில் வங்கிகளுக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.

வாராக்கடன்வசூலிப்பில் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துப் பார்த்தும் அதில் 20 சதவீதம் மட்டும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், அரசு வங்கிகளின் திவால் சூழலை உணர்ந்த மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு தொகையாக வழங்குவதாக உறுதியளித்தது. வங்கிகள் எதிர்காலத்தில் திவாலாகா வகையில் காப்பதற்காக தீர்மானம் கழகம் உருவாக்கப்பட உள்ளது.

இந்த “வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதா 2017 ’’ என்ற மசோதாவை மோடி தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. ஆனால், தற்போது, இந்த மசோதா நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் முன் பரிசிலனைக்கு இருக்கும் நிலையில், வரும் 15ந்தேதி தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவில் பிரிவு 52ன்படி, தீர்மானம் கழகத்துக்கு ஏராளமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வங்கியின் அடிப்படை கடமையைக் கூட ரத்து செய்யும் அதிகாரம் இதற்கு இருக்கிறது.

அதாவது, நாம் வங்கியில் வைத்திருக்கும் டெபாசிட் தொகையை, நாம் கேட்கும் போது உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்பது இப்போது வங்கிகளின் கடமையாகும்.

இனி அப்படி இருக்காது. அந்த உத்தரவாதத்தை ரத்து செய்வதற்கு தீர்மானம் கழகத்துக்கு (Resolution Corporation) இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

உதாரணமாக மகன், மகளின் திருமணம், படிப்புச் செலவுக்காக ரூ.10 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து இருப்போம். முதிர்காலம் முடிந்தபின், அந்த தொகையை திருப்பிக் கேட்டால், வங்கிகள் அதை முழுமையாக உடனடியாக கொடுக்க வேண்டியது கடமையாகும். ஆனால், தீர்மானம் கழகம் உத்தரவிட்டால், அந்த தொகையை வங்கிகள் முழுமையாக உடனடியாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

டெபாசிட் தொகையில், குறிப்பிட்ட பகுதியை வங்கி தனது மூலதனத்துக்கு எடுத்துக் கொள்ளும் அல்லது  கணக்கில் உள்ள பணத்தை டெபாசிட் தாரர்கள் அனுமதியின்றி, ஒப்புதலின்றி, கூடுதலாக 10 ஆண்டுகளுக்கோ அல்லது 20 ஆண்டுகளுக்கு டெபாசிட்டாக மாற்றிக் கொள்ளும். அதற்கு அப்போது நடப்பில் இருக்கும் பணவீக்கத்துக்கு ஏற்ப வட்டி தர தீர்மானம் கழகம் முடிவு எடுக்கும்.

அதாவது நம்முடைய சேமிப்பின் பகுதியை நம்முடைய அனுமதி இல்லாமல் வங்கிகள் எடுத்துக் கொண்டு, முழுமையாக உடனடி தேவைக்கு தராமலும் மறுக்கலாம். இது சட்டமாக நிறைவேறிவிட்டால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது.

மகன், மகள் திருமணத்துக்காகவும், படிப்புச் செலவுக்காகவும், வீடு கட்டவும், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் சேர்த்து வைத்த டெபாசிட் தொகையை முடக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

மேலும், இந்த சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், மூத்த குடிமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள், அவர்களின் டெபாசிட்களுக்கு தான்அதிகமான ஆபத்து  ஏற்படும்...

இந்தியா தான் தமிழினத்தின் முதல் எதிரி என்பதை புரிந்துக் கொள் தமிழா...


தமிழ்நாடு ஏன் எப்போதும் நடிகர் பின்னாடி அலைகிறது என்பதற்கு முக்கிய காரணமே விபச்சார ஊடகங்கள் தான்....


நடிகன் எவனாவது ஒருவன் வந்துவிட்டால் போதும் தமிழ்நாடே அழிந்தாலும் அதை கண்டுக்கமாட்டானுங்க இந்த விபச்சார  ஊடகங்கள்..

கன்னியாகுமாரி மீனவர்கள் பற்றிய செய்தி நேற்று காணாமல் போய் விட்டது....

விஷால் என்ற தெலுங்கன் தான் முதன்மை செய்தியா இருந்தான்...

தமிழ்நாடு நாசமா போனதற்கு விபச்சார ஊடகங்களே காரணம்...

தெலுங்கர் விஷால் ரெட்டிக்கு செருப்படி... நீயே ஒரு பிராட் பய...


நம் உடலில் உயிர் எங்கு உள்ளது? எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்...


நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில்.

நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது.

அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது.

இவ்விடத்தை லல்லாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.

“உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நிதம் எரியுதடி” – சித்தர் பாடல்.”மையமர் கண்டன்” என்று மாணிக்கவாசகரும் தலையின் மத்தியில் உயிர் உள்ளதை கூறிப்பிடுகிறார்...

மகிந்தாவின் மகனோடு கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு...


திராவிடம் - கம்யூனிசம் - தலித்தியம் எல்லாமே சந்தர்ப்பவாத போலிகள்...


ஒவ்வொரு தேர்தலுக்கு தமிழ்நாட்டை கைப்பற்ற கூட்டணி என்று எவன்கூடவாவது கூட்டணி வைத்து கொள்வானுங்க...

அதுவும் தமிழினத்தை அழித்தவனிடமும்.. அழிப்பவனிடமும்...

ஏனெனில் இவை அனைத்துமே தமிழின விரோதிகள்...

பாஜக மோடியின் குஜராத்தி இனவெறி...


குஜராத்தில் இன்னும் வராத புயல் பற்றி பேச முடியுது.. கன்னியாகுமரியில் அழிவு பற்றியோ காணாமல் போன மீனவர்கள் பற்றியோ பேச துப்பில்லை...

பாஜக மோடி கும்பலின் அடுத்த மோசடி...


2017 மார்ச் மாதம் எடுத்த புகைப்படத்தை தற்போது ஓகி புயலின் போது எடுத்த புகைப்படம் என்று பதிவு செய்கின்றனர்...

05/12/2017 அன்று திருவண்ணாமலையில் வானில் தோன்றிய அரிய காட்சி...


லஞ்சம் வாங்குபவர்களை குண்டர் சட்டத்தில் ஏன் கைது செய்யக் கூடாது? : உயர்நீதிமன்றம் கேள்வி...


சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த பூபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், தாத்தாவின் சொத்துகளை பாகப்பிரிவினை செய்து பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்து உரிய கட்டணங்கள் செலுத்திய பின்னரும் பம்மல் சார் பதிவாளர் பத்திரங்களை வழங்கவில்லை. எனவே பத்திரங்களை வழங்க உத்தரவிடக்கோரி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கடந்த 10 ஆண்டுகளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்றதாக 77 அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆசியாவிலேயே அதிக ஊழல் நடைபெறும் நாடாக இந்தியா இருப்பதாகவும், அந்த ஊழல்கள் அரசு அலுவலகங்களில் நடப்பதாகவும் வேதனை தெரிவித்தார். சட்டத் திருத்தம் கொண்டு வந்து லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார்.

மேலும்,கடந்த 10 ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் எத்தனை முறை லஞ்ச ஒழிப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், லஞ்சம் அதிகளவில் புழங்கும் 5 அரசு அலுவலகங்கள் எவை என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.

இதுகுறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் வரும் டிச. 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்...

அப்படியே உங்க ஆந்திரா பக்கம் போய் முதல்வர் ஆகிடு விஷால் ரெட்டி...


கண்களின் அழகைப் பராமரிக்க...


நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும்.

மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்…

தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.

போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்...

அதிசியம் நியூஸ் 7 தொலைக்காட்சி கூறிய உண்மை...


இந்திய கடற்படையின் மதவெறி...


கடற்படையால் மீட்கப்பட்ட குமரி மீனவர்களுக்கு காவி வேட்டி வழங்கிய கடற்படையின் மதவெறி அவலம்...

இறந்தவர்களின் படங்களை மட்டுமே வைத்து கொள்ளலாம் தான் ஆனால் அதற்கும் ஒரு வரைமுறை வேண்டாமா?


உண்மையிலேயே இது மங்குனி அரசுதானா ? மக்களின் குறைந்த பட்ச எண்ணங்களைக் கூட அறிந்து கொள்ள முடியாமலா உள்ளது ?

இன்னும் எத்தனை ரகுக்களை காவு கேட்கிறது ?

எம்ஜி யார் , ஜெயா வின் ராட்சத பேனர்களை கோவையில் போக்குவரத்து மிகுந்த இடங்களில் ரோட்டில் வைத்து தொல்லை தரும் அதிமுக...

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்...


சமீபகாலமா நம்ம ஊர் கல்லூரி, பள்ளிக்கூடங்களைச் சுத்தி இருக்க பெட்டிக்கடைகளில் ‘கூல் லிப்’னு (Cool Lip) ஒரு பொருள் அமோகமா விற்பனை ஆகுது.

மாணவர்களை குறி வைக்கும் ஒரு சில நபர்களும் இதனை பள்ளி கல்லூரிகளின் அருகே விற்பனை செய்கிறார்கள்.

சின்னச் சின்ன புகையிலை போதைப் பொருள் அடங்கின பொட்டலங்கள் இந்த பாக்கெட்டுக்குள்ள இருக்கும்.

12 பொட்டலங்கள் இருக்குற பாக்கெட் 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய்க்கு விற்கப்படுது.

இதை உதட்டுக்குள்ளேயோ அல்லது நாக்குக்கு அடியிலோ வச்சிக்கிட்டா போதை ஏறும். இதில் வாசனை கிடையாது, வாய் சிவக்காது, பக்கத்துல வந்தா கூட யாராலயும் கண்டு பிடிக்க முடியாது.

இதனால ஆசிரியர்களுக்கு கூடத் தெரியாம பசங்க பல பேர் இதைப் பயன்படுத்துறாங்க.

நிக்கோட்டின் கலந்த புகையிலை வஸ்துதான் இது.

அதனால இதை ஒருதரம் பயன்படுத்தினவங்க விடவே முடியாத அளவுக்கு அடிமையாவாங்க..

காவல்துறை உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்...

கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் கோபுரம்...


தற்போது மொட்டை கோபுரமாக காணப்படும் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் கோபுரம்... பிரிட்டிஷ் காலத்தில் இடித்து அணை கட்டுவதற்கு முன் இப்படித்தான் இருந்துள்ளது...

முஸ்லிம் படையெடுப்பிற்கு முன், சோழர் காலத்தில் இது தஞ்சை கோபுரம் போன்று முழு கற்றளியாக இருந்திருக்க வேண்டும்..

காவிரி கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழணையானது ஆங்கிலேயர்களால்  கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் சுற்றுச் சுவர்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது...

சோழகங்கம் ஏரியின் நடுவில் சாலை அமைத்ததும் ஆங்கிலேயன், நம் வரலாற்று பெருமைகள் பலவற்றை சீர்குலைத்தவன்..

கல்வெட்டுகளையும் கொண்டு அணை கட்டியுல்லான் ஆங்கிலேயன்....

ஸ்வஸ்திக் கிணறு...


எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட ஸ்வஸ்திக் வடிவ கிணறு திருச்சிராப்பள்ளி யில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது..

இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்கையை பற்றி பாடல் வரிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கிணற்றை மற்பிடுகு பெருன்கிணறு என்றும் கூறுகின்றனர்...

பாஜக மோடியால்.. ஆதாருடன் இணைக்க வேண்டிய ஆறு...


எங்கே போகரின் இரண்டாம் பாஷாணம்...


தமிழ் மண்ணில் தலைசிறந்த  சித்தர்கள் வந்து போனார்கள் என்பதற்கு அவர்கள் விட்டு சென்ற பாதசுவடுகளாகிய ஒலைச்சுவடிகள் அடையாளமாய் இருக்கின்றன..

இப்படி எத்தனையோ சித்தர்கள் இங்கே வந்து போனாலும்  வந்து போனவர்களில் ஒரு வித்தியாசத்தை தந்து போனவர் போகர்  முனிவர்..

போகர் என்றாலே பாஷாண நினைவு பலருக்கு வரும்..

போகரையும் பாஷாணத்தையும் பற்றி அறிய பலர் முயற்சி செய்து பல நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளிலும் வலைதளத்திலும் போடுவதை பார்க்கிறோம்..

கிராமங்களில் பொதுவான சில கதைகள்  தன் முன்னோர் காலத்தில் நடந்ததாய் சொல்வார்கள்..

தன் வீட்டில் உள்ள முன்னோர்கள் நாகரத்தினத்தை  வைத்திருந்தார்கள் என்ற கதையை சொல்வது போல் போகருடைய விசயத்திலும் ஒரு கதை உருவாகிவிட்டது..

அதாவது போகர் இரு பாஷாணங்களை செய்தார் என்றும்  அதில் ஒன்று தற்போது பழனியிலே சீல் வைக்கப்பட்ட செல்லா சிலையா இருக்கும் முருகர் சிலை.. மருத்துவ குணம் கொண்ட மகத்தான இந்த சிலை..

சித்தவைத்தியத்தில் சிறப்பாய் பேசப்படும்  மருந்துகள், மூலிகைகள், கசாயங்கள் (ஆயுர்வேதம்), யுனானி, என பலதரப்பு மருந்துகள் இருந்தாலும் ரசவாதிகள் என சொல்லப்படும் உயர்தர சித்தர்களால் செய்யப்படும் பாஷாணம்  எல்லாவற்றையும் விட உயர்வானதாய்  வீரியமிக்கதாய் பேசப்படும்..

இப்படி வீரியமிக்க விஷேசமான பாஷாணத்தை கட்டி போகர் பழனி மலையிலே சிலையாய் வைத்து முப்பூ என்ற தன்மையில் ஒப்பு உயர்வு அற்றதாய்  மருத்துவத் தன்மையோடு மகத்தான தன்மைபெற நன்மைபெற வைத்தார் போகர்..

எனவே முதல் சிலையைப் பற்றி எந்த பூடகமும் இல்லை..

சொல்லும் ஊடங்களில், பிரச்சனையே அவரால் எழுப்பபடும் இரண்டாம் பாஷாணம் தான்.

முன்னதை விட  மிக மிக சிறப்புப் பொருந்தியதாக தீர்க்க தரிசனங்களில்  திவ்யமாய் உரைக்கப்பட்டு நிற்கிறது..

இறுதிகால இறையரசு எனும் சித்தராட்சி  இந்த பூமியிலே வர போகரின் தலைமைக் கொண்டு சித்தர்கள் ஒன்று கூடி சித்தர் ஆட்சியை அதாவது இறையரசை இங்கே (தமிழ்நாட்டில்) நிறுவுவார்கள், போகர், கோரக்கர், அகத்தியர்,போன்ற தீர்க்க தரசிகளெல்லாம் நிறையவே சொல்லி நிற்கிறார்கள்...

உலக அரசு உன்னதமாய் ஒரு குடைக்குள் அமையும்..

இறையரசு எனும் சித்தராட்சி சிறப்பாய் தமிழ் மண்ணில் மலரும் என்று சொல்வதில் முதன்மை பெற்று நிற்கிறார் போகர்..

போகரின் சீடர் கோரக்கர் வளமையாய் இக்கருத்தை ஆமோதித்து இறுதி நாள் இறைவனின் நியாய தீர்ப்பு நாளில் என் குருநாதர் போகர் தலைமையில் சித்தர் ஆட்சி மலரும் என தமிழராட்சி தவழும் என சொல்லி நிற்கிறார்..

உலகத்திலே எழுந்து வந்த மார்க்கங்கள் எல்லாம் இதே இறையரசை எடுத்து சொல்லி நிற்கின்றன..

ஒரு மார்கத்தில் இறுதி நாளில்  மோஸஸ் தன் தலைமையில் இறையரசு வருவதாயும் ஒருவர் யகோவா தலைமையில் ஏற்படும் என்றும், இயேசு தலைமையில் ஏற்படும் என்றும், போகர் தலைமையில் ஏற்படும் என்றும்  சொல்லி இறையரசை வர்ணிக்கும் காட்சிகள் எல்லாம் ஒரே காட்சிகளாய் இருப்பதைப் பார்த்து வியப்பாய் இருக்கிறது..

ஆம் மோசேவாகட்டும், எசாயாவாகட்டும், எரேமியாவாகட்டும், எசேக்கியேலாகட்டும், தானியேலாகட்டும், யோவேலாகட்டும், ஆமோஸ், மீக்கா, ஆகாய், மலாக்கி, செக்கரியா, இயேசு, திருவெளிப்பாடு யோவான், பவுல் முகமதுநபி மற்றும் தமிழ் சித்தர்களாகட்டும்  அத்தனை பேரும் ஒரே கருத்தை ஒரே விதமான காட்சிகளை விவரித்து நிற்கின்ற பொழுது, தலைமை தாங்குபவர் மட்டும் பெயர்மாறி நிற்பதை  இங்கு காண முடிகிறது..

இதில் எவர் சொல்வதும் பொய்யில்லை என்றால்  அனைவரும் குறிப்பிடும் நபரும் ஒரே ஒரு ஆன்மாவாகத் தானே இருக்க முடியும்..

எனவே இறுதியில் வரும் அந்த ஒப்பற்ற ஆன்மா கலாச்சார ஓட்டத்தில் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறுதியில் முக்கிய ஆளுமையில் வந்து நிற்கிறது..

இப்படி இறுதியில் வரும் ஆன்மா அவரவர் கருத்துபடி, மார்க்கப்படி யாரை வைத்து அடையாளம் காட்டி நின்றாலும், அனைவரும் இறுதியில் வரும்  ஒருவரையே அடையாளம் காட்டி நிற்கிறார்கள்..

இப்படி இறுதியில் வருபவர் தான் மண்ணின் வாசனைப்படி மணக்கும் போகர் எடுக்கும் இறுதி பிறப்பு பாஷாணத்தோடு சம்பந்தபட்டது அல்லவா.. இது ஒருபுறம் இருக்கட்டும்..

இதுகாறும் போகரைப் பற்றி கதையாய் கதைத்து நின்றவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்..

வைத்திய மார்க்கங்களில் மருந்துகளுக்கு மருந்தின் வீரியம் மடியும் நாள் (expiry date) என்று ஒன்று உண்டு.

அவை "பஸ்பத்திற்கு" ஒரு விதமாய், " கசாயத்திற்கு "ஒருவிதமாய்" இலேகியத்திற்க்கு"  ஒருவிதமாய் இருப்பது போல்  "பாஷாணத்திற்க்கும் " மருந்தின் வீரியம் மடியும் நாள் உண்டு.

ஒரு பாஷாணம் கட்டி செய்து விட்டால் அதன் வீரியம் ஒரு கல்பம் பூராவும் நிற்கும் என்ற கதையைக் கட்டி விடுவதில் கெட்டிகாரரர்களாக இருக்கிறார்கள் அநேகர்.

எப்படிபட்ட நிலையில் செய்த பாஷாணமானாலும்  மிக அதிகபட்சமாக 700வருடங்களுக்கு மேல் இருக்காது.

அதற்கு பிறகு அதன் வீரியம் மடிவதோடு அதுவும் வீணாகி போகும்.

ஏன் புழு பூச்சிகள் கூட வைத்து விடும்.

அப்படியிருக்க போகரின் இரண்டாம் பாஷாணம் இந்த பூமியில் எழுந்து வந்து உலகாளும் என்று சொல்லி திரிபவர்களை பற்றி என்ன சொல்வது, போகர் செய்த" முதல் பாஷாணசிலை வீரியமிழந்து  சிதலமடைந்து  சீல்வைக்கப்பட்டு "அந்த இடத்தை  விட்டு அப்புறபடுத்தி  நகர்த்தி வைத்ததை உலகம் அறியுமல்லவா..

அப்படியிருக்க அதே காலத்தில் செய்யபட்ட இன்னொரு பாஷாண சிலை இப்போது இருந்தால் அதன் வீரியம் மட்டும் எப்படி காலத்தில் ஜீவிக்க முடியும். கொஞ்சமாவது சிந்தித்தார்களா இந்த அப்பாவிகள்.. தேடி நிற்கிறார்கள் இரண்டாம் பாஷாணத்தை..

வீரியமற்ற அந்த இரண்டாம் பாஷாணம் என்ன விடியலை தரபோகிறது என்று சிந்தித்துப் பாருங்கள்..

எனவே இந்த ரகசிய முடிச்சை " போகர் ஒருவரே அவிழ்க்க கூடியவர்..

அப்படியென்றால் போகரின் இறுதி பிறப்பு நிச்சயமாய் இதற்கு விடைச் சொல்லி நிற்கும். 

அப்படியென்றால் மறுபிறப்பெடுக்கும் இரண்டாம் வருகை போகர் தான் எழுப்பி தரமுடியும் இன்னொரு பாஷாணத்தை புதிதாக தன் காலத்தில் இப்போது...

ஆழ்மனம் இரகசியம் - மனமும் உடலும்...



நம் உடலானது  உயிரை தக்க வைத்துக் கொள்வதற்காக 24 மணிநேரமும் போராடுகின்றது.

நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் நம் உடல் நமக்காக வேலை செய்து கொண்டே இருக்கும்.

என்ன உணவுக்கு என்ன இரசாயனம் சுரக்க வேண்டும். எதை கொழுப்பாக மாற்ற வேண்டும். எதை இரத்தத்தில் இருந்து பிரிக்க வேண்டும் போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு செல்களிலும் உள்ளது.

நாம் உடலை பற்றி என்ன யோசித்தாலும் அதை உடனே நம் உடல் செயல்படுத்த ஆரம்பித்து விடும்.

உதாரணமாக நீங்கள் படுத்துக் கொண்டு, ஓடுவதாக கற்பனை செய்தால் உடனே உடல் அதை உண்மை என நம்பி அதற்கு தேவையான அனைத்து தசைகளையும் இயக்க ஆரம்பித்து விடும்.

ஆம் உடலை மனதால் ஏமாற்றி விடலாம். நீங்கள் நம்ப முடியாத ஒரு விடயத்தை இங்கே கூற போகிறேன்.

நீங்கள் தினமும் ஒரு அரைமணி நேரம் படுத்துக் கொண்டு, வெறும் கற்பனையால் யோகாசனம் செய்வதாக நினைத்தாலே போதும். நீங்கள் யோகா செய்தால் என்ன பலனோ அதே பலன் இதிலும் கிடைத்து விடும்.

ஆம் சூரிய நமஸ்காரம் ஒவ்வொன்றாக செய்வதாக மனதில் ஆழ்ந்து நினைத்துவந்தாலே போதும்.

மனதிற்குள் புக முடிந்தால் உடலுக்குள்ளும் புக முடியும்...

மெய்பொருள், திருவடி என்பது என்ன?


இறைவன் திருவடியை பற்றி பாடாத ஞானிகளே இல்லை.

“நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்றும் எல்லா மகான்களும் ஆண்டவனை வேண்டினர்.

ஜோதி வடிவான இறைவனின் திருவடி எது? எங்கும் நிறைந்த இறைவன் நம் உயிருக்கு ஒளியாக – ஒளிக்கு ஒளியாய் உள்ளான்.

மேலும் நம் கண்களில் ஒளியாக துலங்குகிறான்.

நம்மை அறிய , இறைவனை உணர திருவடியையே பற்ற வேண்டும். நாம் இறைவனை தேடி அலைய கூடாது என்பதற்காக நம் கண்ணனுக்கு எட்டிய தூரத்திலே கண்ணிலே இறைவன் ஒளியாக துலங்குகிறான்.

இந்த ஜீவ ஒளியை தாங்குவதால் நம் கண்களே இறைவன் திருவடி. மெய்யான பொருளை கொண்டு உள்ளதால் கண்களே மெய்பொருள்...

காவிரி மேலாண்மை அமைக்கும் ஐடியா இல்லை - இந்திய பாஜக மோடி அரசு...


இறுதி தீர்ப்புன்னீங்க..  அது வந்து பல வருசம் ஆகுது..

மேலாண்மை வாரியம் அமைச்சு நடைமுறை படுத்துங்கையா..

காவிரி இல்லாம விவசாயம் பாதி அழிஞ்சு போச்சு..

45 வருசமா வழக்கு நடக்குது ஆனா நியாயம் கெடைக்கல.

இந்திய அரசு...

இறுதி தீர்ப்பாவது?
நடுவர் மன்றமாவது?
மேலாண்மையாவது?

போங்கடா போக்கத்த முட்டாள் தமிழர்களா..

காவிரியை திறந்து விட்டா நாங்க எப்படி மணல் அள்ளி, மீத்தேன் எடுத்து, நிலக்கரி எடுத்து பணக்காரன் ஆகிறது?

எவ்வளவு திமிர் இருந்தா குடிக்க தண்ணி கேப்ப?

தொடங்குடா அடுத்த திட்டமான நியுட்ரீனோ வை...

இலுமினாட்டி - கார்போரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்...


ஈஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘ “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”
இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில்  ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்துமிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில் கோவை மாநகரில், மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத்தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும், இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில்  பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவித்திகிறார்கள்.

சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும் ‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார். அதன் விவரம்..

1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்? இதுவும் உண்மையா?

4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவது போல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது….

ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள்.

வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகையாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார்.

நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்துவேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்தது தான் மிச்சம்.

இதுபோல பல மாவட்டங்களிலிருந்த 18வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?

உத்ரகண்டில் நிலநடுக்கும், பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வந்தனர்...


திமுக அரசியல் நாகரீகம் கடை பிடிக்கும் கட்சி என்று சொல்லிக் கொண்டு திரியும் உடன் பிறப்புகள் கவனத்திற்கு...


1989.. தி.மு.க சட்டசபையில் மானபங்கம்… ஐயோ.. அதைச் சாகும் வரை மறக்காத முதல்வர் ஜெ..

பூ போல பிறந்து.. பூவாய் வளர்ந்து… பூ முகத்தை திரையில் காட்டி.. பூ போல சிரித்து மகிழ்ந்த ஒரு பெண்ணை.. செல்வச் சீமாட்டியை… உலுக்கி எடுத்த ஒரு அதிர்ச்சி சம்பவம் அன்று அரங்கேறியது..

ஆம்.. தமிழக சட்ட மன்றம் அதுவரை கண்டிராத அவலம்.. ஒட்டு மொத்த தமிழகமும்.. ஏன்.. உலகமே   ச்சீ.. என்று இகழ்ந்த காரி துப்பியச் சம்பவம் அன்று நடந்தது..

அத்தனை  பேர் கூடி இருந்த சபையில் திமுகவின் ரவுடி எம்.எல் .ஏ கள் பாய்ந்து சென்று முதல்வரின் சேலையைப் பிடித்து இழுத்து மரணத் தாக்குதல் நடத்தினர்..

கதறினார் ஜெ.ஜெயலலிதா...

கூக்குரலிட்டு அபயக் குரல் எழுப்பினார்… ஆனாலும் விடாமல் சேலையைப் பிடித்து இழுத்து கடுமையாகத் தாக்கினர் திமுக ரவடிகள்..

திடுக்கிட்டு ஓடிவந்த ஜெ.விசுவாச படை சூழ்ந்து நின்று தங்கள் மேல் அடியை தாங்கிக் கொண்டு ஜெயலலிதா வை கைப்பற்றினர்..

அன்று தான் பூ ஒன்று புயலானது..

அன்று அவர் போட்ட சபதம்.. இனி நான் சட்டமன்றத்தில் நுழைந்தால் முதல்வராக மட்டுமே நுழைவேன் என்று...


பிறகு முதல்வர் ஆகி ஜெ. சாகும் வரை தி.மு.க விற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்…

இவை அனைத்தும் சட்டமன்ற குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டவையே.. தேவை படுவோர்.. உண்மையா என்று ஆராய்ந்துக் கொள்ளலாம்...

மங்களுர் மற்றும் கொச்சி அருகே நடுக்கடலில் தத்தளித்த தமிழக, கேரள மீனவர்கள் 25 பேரை கடலோர காவல் படை, படகுகளுடன் பத்திரமாக மீட்டுள்ளது...


தீர்க்க தரிசனம் : திரித்துவ மக்கள் யார்...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

         
திரித்துவ மக்கள் பற்றி இன்று பலமார்க்கங்களில் உள்ளவர்கள் திரித்து சொல்கிறார்கள்.

எந்த மார்க்கமாக இருந்தாலும் இறுதி காட்சிகளை இறக்கி வைக்காமல் இல்லை.

அத்தனை மார்க்கங்களும் அடையாளம் காட்டி நிற்கும் ஒரே சபை திரித்துவ சபை இந்த சபையே இறைவன் பூமிக்கு வருகின்றபோது ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் உலகாண்டு நிற்கிறது.

உலகை ஆண்டு நிற்கின்ற இறைவனின் மக்கள் தான் இந்த திரித்து வமக்கள். ஆனால் இந்த திரித்துவ மக்கள் தற்போது  இருக்கும் எந்த மார்க்கத்தையும் சாராதவர்கள். எந்த மார்க்கத்திலும் சேராதவர்கள்.

இப்படிபட்ட இறைமக்கள் தங்களுக்கென்று தனிஞானத்தையும் இறைவனுடைய வழிகாட்டுதலையும் இரண்டாம் வருகை இயேசுவின் தலைமையும் ஏற்றுக்கொள்பவர்கள்.

இவர்களுக்கும் இன்றைய கிருஸ்துவ சபைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இறுதி நேர வெளிபாட்டிற்கு பிறகு எல்லா மதங்களும் தங்கள் வேதத்தை விடுத்து பின்பற்றும் வழிமுறைகளை விடுத்து புத்தம் புதிய ஏகாதிபத்திய இறை கொள்கையை கொண்ட மார்க்கத்திற்கு எல்லோரும் மாறுவர். மாறாதவர் யார் ?

இறைவன் இல்லை என்ற கோட்பாட்டை குடிக்கொண்டவர்கள் கூட தங்கள் கோட்பாடுகளை தூக்கி எறிந்து விட்டு, ஆண்டவனின் வருகையை அறிந்து ஆனந்தபட்டு நிற்பர்.

உலகம் அனைத்திற்கும் மார்க்க வழிகாட்டியாக, அரசியல் வழிகாட்டியாக நிற்பவர்கள் இந்த திரித்துவ மக்கள்.

இந்த திரித்துவத்தை ஏற்படுத்தும் மண் தென்னிந்தியா என்பதால் தானே பிரஞ்சு நாட்டு தீர்க்கதரிசி முக்கடல் சூழ்ந்த நாடு மதத்தின் பெயரால் கடலைக் கொண்ட நாடு.

அதிலே தான் இறையரசு ஏற்படுகிறது என சுட்டிக்காட்டி இருப்பதை மறந்து விட முடியமோ. இக்கருத்தை தமிழக சித்தர்கள் அம்மண் தமிழ்மண் என பண்பாடி நிற்கிறார்கள்.

இப்படிபட்ட தமிழ்மண் தன் தமிழ் என்ற வார்த்தையிலும் மூன்று எழுத்தைத்தவழ விட்டு நிற்கிறது.

வடலூர் வள்ளலார் அவர்களின் திருமுறையில் ஆறாம் திருமுறையில் அகப்பட்டு நிற்கும் கருத்துகள் எல்லாம் யுகப்பட்டு நிற்கப்போகும்  இறுதிகால காட்சிகளை அருமையாய் இறக்கி வைக்கிறது.

அவருடைய கூற்றில் இறைவன் அரூபமானவன், ஜோதிமயமானவன், என்றெல்லாம் சொல்லியிருக்கும் அதே நேரத்தில், அவ் ஒளி இறுதியிலே வான்விட்டு இறங்கி மண் தொட்டு நிற்கிறது ஒரு திருச்சபையில்.

எனவே இறைவன் இருக்கும் திருச்சபையாய் இருக்கப் போகும் அந்த சபையில் விமலன் ஒருவர் இருப்பார் என்றும், அண்ட பிண்ட ஞானத்தை சொல்லும்  அந்த அற்புதசபை இறந்தவர்களை எழுப்பும் என்றும், நியாயதீர்ப்பு செய்யும் என்றும், அகில உலக அரசை செங்கோல் கொண்டு செம்மையாய் நடத்தும் என்றும், ஊனம் ஒழித்து ஞானம் கொடுத்து, கானம்பாடி நிற்கும்.

இப்படிபட்ட தமிழ்த் திருச்சபை திரித்துவ திருச்சபை என என்னும்போது ஏனைய மார்க்கக் கருத்துக்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது உள்ளத்திலும் ஒரு வசந்தம் வீசுகிறது அல்லவா.                                         
இப்படி அமையப்போகும் திருச்சபை எதற்கும் சொந்தமல்ல. இருக்கும்  மார்க்கங்களில் எந்த மார்க்கத்திற்கும் சொந்தமானதல்ல என்று என்னும் போது இயேசுவின் புதிய வானம் புதிய பூமி என்ற வார்த்தையும் நினைவுக்கு வருகிறது அல்லவா.

தமிழ்ச் சித்தர்களுடைய வார்த்தைகளை கவனிக்கின்றபோது வானம் புதிது , பூமி புதிது, மனித மனம் புதிது, வாழ்க்கை புதிது, கலாச்சாரம் புதிது, காற்று புதிது, பறவை புதிது ,விலங்கு புதிது என சொல்லுகின்ற அளவிற்கு எல்லாம் புதியதாய் இருக்கும் என பாடும் சித்தர்கள் வார்த்தைகளையும் இத்தோடு மனம் அசைபோட்டுப் பார்க்கிறது அல்லவா.

பத்தோடு ஒன்றாய் பாடி நின்ற சித்தர்களும்   சத்தோடு  கருத்துகளை திரித்துவத்திற்கு ஏற்ப திரட்டிவைத்து உள்ளனர்.

புரட்டு மார்க்க கருத்துகளை எல்லாம் புரட்டிப் போட வந்த புதுமார்க்கம் அல்லது புதுவழி அல்லது புதுநெறி உலகை ஆட்கொண்டு நிற்கும் என்று சொல்லி நிற்கிறார்கள்.

தமிழ் தீர்க்கதரிசி  முத்துகுட்டி அவர்களின் தீர்க்கதரிசன கருத்துகளை வாசனை செய்து பார்த்தால் இக்கருத்துகளே வசபட்டுநிற்கின்றன.

அகத்தியன் போகன் அருமை கருத்துகளும் திரித்துவ திருச்சபையை திவ்யமாய் எடுத்து சொல்கிறார்கள் கோரக்கரின் தீர்க்கதரிசனமும் இக்கருத்தையே கோடிட்டு காண்பிக்கிறது.

நபி அவர்களின் மறுமை கால கருத்துகள் இடையே புகுந்து மறைந்து நிற்கும் மறையின் ரகசியங்களும் இறுதி கால அரசாட்சி இறைவன் இரண்டாம் வருகை இயேசு , மஹதி என மகத்தான வார்த்தை கொண்டு வர்ணித்து நிற்கின்றது.

இப்படிபட்ட திரித்துவம் விளையும் பூமி தமிழ்நாடு என்பது தான் ஒட்டுமொத்த அனைவரின் கருத்தாய் இருக்கிறது.

இந்த திரித்துவத்தை தரணியிலே பூர்வாங்க புராணமாக சித்தரித்து நிற்கும் இந்து புராணம் மூவரை அடையாளபடுத்தி நின்றாலும் அவர்கள்  இந்த திருச்சபைக்குரியவர்கள் இல்லை என்பதை காட்டுகிறது.

அப்படியானல் இறுதி திருச்சபை அவர்கள் சொல்லும் அடையாளங்களை வைத்து பார்க்கின்ற போது காலம் மிகநெருங்கிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.

புராணத்தில் இறுதி காலத்தில் முருகபெருமானின் ஆன்மாவிடம் ஒருலட்சம் பேருக்கு மேல் வருவதாகவும், அவர்களை அவர் சகோதரராக ஏற்றுக் கொள்கிறார் என்றும் சொல்லப்படும்.

அதே நேரத்தில் பைபிளில் 144000 பேர்கள் அவரை நாடி  வந்து நிற்கின்றனர் என்று சொல்லும்போது இந்த நாடி வருபவர்கள் யார்.?

முதன் முதலில் இந்த இறுதி கால திரித்துவ திருச்சபையை நோக்கி 12குலத்தவர்கள் 12×12000 =144000 இஸ்ரவேலர்கள் என்று கூறியிருப்பதை அலட்சியமாய் விட்டு விட முடியாது.

வெளிநாட்டு தீர்க்கதரசிகள் தங்களுடைய தீர்க்கதரிசன குறிப்புகளில் இறுதி கால இடங்களை குறிப்பிடும்போது  தான் வாழுகின்ற பகுதியில் பெயர் காரணங்களை கொண்ட ஊர்களை போல் பெயர் காரணம்  கொண்டு  நிற்கும் இடங்களை உவமைபோல் அடையாளபடுத்த முயல்கின்றனர்.

உதாரணமாய் யோவானின் திருவெளிப்பாடு தீர்க்கதரிசனத்தில் எகிப்து என்றும் சோதாம் என்றும் உருவகமாய் ஊவமையாய் சொல்லப்படுவதை கவனிக்கும் பொழுது அந்த இடம் தமிழ்நாடு  என தெள்ளத்தெளிவாய் தெரிகின்ற போது மேலும் நம் சிந்தனை கூர்மையாகிறது.

எனவே அவர்களின் தீர்க்க தரிசனங்களில்  எகிப்து என்ற தமிழ்நாட்டையும் சோதாம் புதுவை மாநிலத்தையும் குறித்து நிற்கிறது.

வீழ்ந்தது  வீழ்ந்தது பாபிலோன் என்று சொல்லுகின்ற வார்த்தையை வைத்து கொண்டு உவமையாக சொன்னது என உள்ளர்த்தம் தெரியாது கிருஸ்துவரான ஜார்ஜ் புஷ் யின் அறியாமையால் அழிந்து போனது ஈராக் என்ற பாபிலோன்.

ஆரம்பத்தில் அணு ஆயுதம் உள்ளது என குற்றம் சாட்டி போர்தொடுத்த அமெரிக்க பழைய ஜனாதிபதி புஷ் அந்நகரத்தை அழித்தபிறகு அணு ஆயுதம் துளிக்கூட இல்லாத நிலையில்  ஏன் அழித்தீர்கள் என கேட்டதற்கு கடவுளுக்காக அழித்தேன். இயேசுவின் இரண்டாம் வருகைக்காக அழித்தேன் என்றார் .

இரண்டாம் வருகை இயேசுவும் சரி இறைவனும் சரி அவரை மன்னிக்க மாட்டார்கள்.

உண்மையில் இது நிகழப் போகும் இடம் தமிழ்நாடு என்பதால் பாபிலோன் என்ற வார்த்தைக்கு பொருள் என்ன எனபார்க்க  வேண்டியிருக்கிறது .

மலையில் சிலை வழிபாடு செய்கின்ற நகரத்தை கொண்ட மாநிலம் அப்படியென்றால் அறுபடை வீடுகளைக் கொண்டு நிற்கும் தமிழ்நாட்டை குறிக்கிறது.

இப்போது புரிகிறதா  மலைமீது உள்ள சிலை வழிபாடு உள்ள கோயிலை பெற்ற மாநிலத்தின் தலைநகர் சென்னையே பாபிலோன் என்று கருத வேண்டியிருக்கிறது.

இப்படி இடமே இடம்மாறி நிற்கின்ற பொழுது வாழும் மக்கள் இஸ்ரவேலரின் 12வகுப்பினர் என்ற வார்த்தையின் பொருளையும் சிந்தித்து பார்க்க வேண்டியதாய் இருக்கிறது.

பைபிளின் கூற்றுபடி இவர்கள் இறுதி கால சம்பவத்தில் இடம் பெற்று நிற்கும் அரசு வருவதற்கு தங்கள் கைகளை கறைப்படுத்தி கொள்ளாதவர்கள்.

எந்த கட்சிக்கும் ஒட்டு போடாத இந்த தமிழ்நாட்டு மக்கள் என யோசிக்கவைக்கிறது, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட கிட்டதட்ட.5.7கோடி வாக்காளர்களிலே 5.5லட்சம் வாக்காளர்கள் எதையும் ஆதரித்து ஒட்டுபோடவில்லை என்று எண்ணி பார்க்கின்ற போது அதை கண்டு பிடிக்க காலம் செய்த அற்புதம் நோட்டா.

நோட்டா வாக்கை எல்லோரும் நோட் பண்ண வேண்டியிருக்கிறது அப்படியென்றால் பைபிள் சொல்லும் 144000 பேரும் நோட்டாவிலிருந்து பிறப்பவர்களா ? நோட்டாவிலிருந்து வருபவர்களா ? என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.


இந்த கிருஸ்த்துவ தீர்க்கதரிசி சொன்ன 144000 பேரும் இறை ராஜ்ஜியத்தின் ஊழியர்களாக அமர்த்தபடுபவர்கள் என குறிப்பிடபட்டுள்ளது.

எனவே பாபிலோன் பற்றி யோவானின் தீர்க்கதரிசனம் தண்ணீரால் சூழ்ந்து சங்கடத்தை தரும் சூழ்நிலை அந்நகருக்கு தரும் முதல் எச்சரிக்கை என சொன்னதும் அது (சென்னையில்) அது நடந்ததும் பார்த்தால் சற்றே மனம் யோசிக்கிறது.

இப்படி திரித்துவ சபையைக் கொண்ட அமைப்பிலே எத்தனை பேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்ற ஒருகணிப்பை உற்று நோக்கினால் கணிதமேதை பித்தாகரஸ் தீர்க்கதரிசனத்தின் படியும் இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் படியும் வலையில் மாட்டிய மீன்களின் எண்ணிக்கை 153.

இரு பெரும் வட்டங்களை வெட்டச் செய்து வெட்டிக்கொள்ளும் அந்த பகுதி ஒருமீனின் உருவத்தை கொண்டு நிற்பதை பாருங்கள்.

அதன் அதிக அகலமும் அதிக உயரமும் தங்களுக்குள் ஒரு சரியான நிலையான கோட்பாட்டை கொண்ட விகிதாசாரத்தில் இருக்கின்றன.

அதாவது 153:265 எனவே எந்த இரு வட்டங்களை கொண்டும் வெட்டிகொள்ள வைத்து உருவாக்கப்படும் மீனின் நீள அகலம் 153:265 என்ற விகிதாசாரத்தில் இருக்கும் என்பது விந்தையாகும்.

யோனாவின் அடையாளத்தை இறுதி கால அடையாளமாய் அடையாளபடுத்திய இயேசுவும், இறுதிகால திருச்சபை இந்த 153பேரை கொண்டதாயிருக்கும் என்பதை உவமைபோல் உண்மையை கூறியுள்ளார்.

முத்துகுட்டி அவர்களின் தீர்க்க தரிசனத்தை கூர்மையாக கவனித்தால் இறைநகரின் (புதியஎருசலேம்) மண்டபங்களின் எண்ணிக்கை 112என்று குறிப்பிட்டு நிற்பதையும் கவனிக்கும் போது மீனின் உயரம் 265என்ற அளவை 153+112 என்று பிரித்துப் பாருங்கள்.

எனவே அகலம் 153திரித்துவ சபையின் மக்களின்  எண்ணிக்கையை குறிக்கும் "நீளம் என்பது 153+112 =265 அதாவாது திரித்துவ சபை மக்களின் எண்ணிக்கை + அவர்கள் வாழ்வதற்கான மண்டபங்கள் (புதிய எருசலேம்).

இப்படி சொல்லப்பட்டு இருப்பதை நினைக்கின்ற போது வெறும் 153 பேர் தான் இறைமக்கள் என்ற திரித்துவ சபைமக்களாக நிற்கின்றனர் என எண்ணத் தோன்றுகிறது.

இந்த விகிதாச்சார அளவு நீளத்தை அகலத்தால் வகுத்தால் 1.7321அதாவது √3 (ரூட் த்ரீ) என்ற மதிப்பில் வருகிறது, எனவே 3 என்பது திரித்துவம் அதனுடைய வார்க்கமுலம் என்ற அமைப்பில் இவை அமைந்திருக்கின்றன.

எனவே திரித்துவத்தில் அடங்கியுள்ள மக்களில் √3இடம் பெறுவதை பார்க்கின்ற போது எண் மூன்றின் குணாதிசியத்தை பெற்றது அந்தத் திருச்சபை.

மூன்று என்பது குருவின் எண். மூன்று என்பது அரசாட்சி செய்யும் எண். மூன்று என்பது தர்மத்தின் எண். மூன்று என்பது அறத்தின் எண். ஒட்டுமொத்த அனைத்துச் சித்தர்களும் யோகிகளும் இறையாளர்களும் இறக்கி வைத்த தங்களுடைய கருத்துக்களில் ஒத்தக்கருத்து உள்ளவர்களாய் தெரிகின்ற போது, இந்த திரித்துவ மக்கள் இந்த திரித்துவ தமிழ்நாட்டில் மலர போகும் இறைவனின் திருச்சபையே திரித்துவ திருச்சபையாகும்.

153பேர் மட்டுமே இருக்கும் இந்த இறைசபைக்கு கோடானகோடி பேர்களை தன் மதத்திற்கு மாற்றம் செய்யத் துடிக்கும் நபர்களை  பற்றி என்ன சொல்ல வேண்டியிருக்கிறது. சிரிப்பு தான் வருகிறது.

இப்படியிருக்க ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் உலகில் பிரசங்கிக்கப்படும் அப்போது முடிவு வரும் என்ற வார்த்தையை நினைத்து கிருஸ்தவர்கள்  "மத்தேயு"   "லூக்கா ""மாற்கு "யோவான் "சொன்னதையும் அதாவது முதலாம் வருகை இயேசு சொன்னவைகளை அந்த வாக்கியங்களை அப்படியே எடுத்து பிரசுரித்து அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து பரப்பிவருவதாக ஒருவருட காலத்திற்கும் மேலாக பிரச்சாரம் செய்துவரும் மதவாதிகளை நினைத்தால் பரிதாபமாயிருக்கிறது.

ஏனென்றால் ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்பது முதலாம் வருகை இயேசுவோடு சம்பந்தபட்டது அல்ல.

இறைராஜ்ஜியம் என்பது இறுதி காலத்தில் வரும் இரண்டாம் வருகை இயேசுவால் சொல்லப்படும் சுவிஷேசங்களே இதுவே ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்ற அந்தஸ்தை பெறும்.

இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் திரித்துவ திருச்சபை எனும் இறுதியில்  இரண்டாம் வருகை இயேசுவின் திருச்சபை வெளியிடும் சுவிஷேசங்கள் தான் என்பதை கிருஸ்துவர்கள் எள் அளவும்  உணரவில்லை.

புஷ்  பைபிளை படித்து விட்டு  ஈராக்கை அழித்தது போல் இவர்களும் பைபிளை படித்துவிட்டு பழைய சுவிஷேசங்களை அறிவித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வேலையை இன்று இருப்பவர்கள் மட்டும் செய்யவில்லை 2000 ஆண்டுகளாக எல்லா நாட்டிலும் எல்லா மொழியிலும் எல்லா மக்களிடத்திலும் பரப்பும் வேலையில் பவுல் முதல் தொடங்கி இன்றைய போதகர்கள்  வரை 2000 ஆண்டுகளுக்கு மேலாக அறிவிக்கப்பட்டு வருகிறது, இதனால் உலகத்தில் பெரிய மதம் கிருஸ்துவமதம் என்ற பெயரை பெற முடிந்ததே ஒழிய உலகத்தின் முடிவை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

காலத்திற்கேற்ற 2000ஆண்டுகளாக சுவிஷேசம் பரப்பும் விதம் வித்தியாசப்பட்டிருக்கிறதே தவிர பிரச்சாரம் செய்யப்படாமல் இல்லை.

இந்த கிருஸ்துவர்கள் முடிவை கண்டார்களா இயேசுவை கண்டார்களா இறையாட்சியை கண்டார்களா இல்லை.

தற்போது கூட தம்பட்டம் அடித்து கொண்டு சிலர் சுவிஷேசம் அறிவிக்கப்பட்டு வருடகணக்கு ஆகியும் அவர்கள் எண்ணப்படி ஒன்றும் நடக்கவில்லை.

இப்பொழுதாவது அவர்கள் உணர வேண்டும். பைபிளில் சொல்லப்பட்ட சுவிஷேச கருத்து இரண்டாம் வருகைக்கு உரியது அவர் திருச்சபைக்கு உரியது அவர் திரித்துவ மக்களுக்கு உரியது.

எனவே இவைகளை நன்கு விளங்கி கொள்ள தமிழ் சித்தர்களின் தீர்க்கதரிசன பாடல்கள்  தெளிவாய் விளங்கிநிற்கிறது இது திரித்துவ சபைக்கு உரியது என்று இனிமேலாவது  இறையச்சம் கொண்டவர்களாய் இவர்கள் தங்களுடைய  பொய் புரட்டுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு தெளிவான சிந்தனையால் உண்மையான திரித்துவ சபையை நோக்கி அறிய சித்தம் கொண்டு எல்லாம் வல்ல இறைவனை எதிர் கொண்டு பணிய காத்திருப்பபீர்களாக.

அத்தோடு தாங்கள் ஒவ்வொருவரும் இயேசுவோடு பேசுகிறோம் என பிதற்றித் திரியும் பொய்யர்களாகவும் இருக்க வேண்டாம்.

இந்து மதத்தில் சாமியாடி குறிச் சொல்லும் நபர்களுக்கும் இயேசுவோடு பேசி அற்புதம் செய்வதாய் சொல்பவருக்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. இரண்டும் ஒரே தன்மையாகத்தான் இருக்கிறது.

முதல் வருகை இயேசுவும் இதை விரும்புவதில்லை இரண்டாம் வருகை இயேசுவும் அதை விரும்பமாட்டார்.

எனவே இயேசு சொன்னப்படி கள்ளத் தீர்க்கதரசிகளாக இருப்பதை விட்டுவிட்டு நல்ல மனிதர்களாக வாழ்வதே மேல்.

எல்லா புகழும் இறைவனுக்கே எல்லா புகழும் இறைவனின் திரித்துவ திருச்சபைக்கே, ஏக இறைவன் கொண்டுநிற்கும் இந்த ஏகத்திருச்சபையே திரித்துவ திருச்சபை  ஆகும். 

காத்திருப்போம்  காலம் கனிந்து அது எழும் நாளை நோக்கி...

தீர்க்க தரிசனம் : கிருஸ்த்துவம் கண்ட துருப்புச்சீட்டா இந்த தானியேல் தீர்க்கதரிசி...

இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...


ஆதியாகமம் முதல் தொடங்கி பவுல் பின் திருவெளிப்பாடு யோவான் வரை அநேக தீர்க்கதரிசிகளின் இறையாளர்களின் ஒட்டு மொத்த தீர்க்கதரிசனமாக உருவெடுத்து நிற்பது இந்த கிருஸ்த்துவ பைபிள்.

இதில் அநேகர் இறுதி கட்ட இறையரசின் காட்சிகளை இதமாய் பதமாய் இறக்கி வைத்தாலும் எப்போது நடக்கும் என்று எவரும் குறிப்பிடாத நிலையில் ஒரு காலக்கணக்கை கொண்டு கச்சிதமாய் காட்டி நின்றவன் இந்த தானியேல் ஒருவனே.

எனவே நாளை குறிப்பிட்டுக்காட்ட ஆண்டை அடையாளபடுத்தி நிற்க கிருஸ்த்துவ மார்க்கத்திற்கே கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு தீர்க்கதரசி தானியேல் ஒருவனே.

அதனால் கால ஆராய்ச்சியில் களம் கண்டு, நின்றவர்கள் ஆராய்ச்சியாளர்கள் அத்தனை பேர்களையும் ஆட்கொண்டு நின்றது இந்த தானியேல் தீர்க்கதரிசனம்.

இப்படி கால ஆராய்ச்சிக்காக களம் கண்டு நின்றவர்களில்  வொய்ட் அம்மையார் முதற்கொண்டு எல்லோரும் தானியேலை விட்டு வைக்கவில்லை.

ஆனால் இந்த தானியேலை அவன் கண்ட கால அளவை கண்டுணர்ந்து இதுவரை யாராவது வெற்றி பெற்றிருக்கார்களா? என்றால் ஒருவர் கூட இல்லை என்பது தான் உண்மையிலும் உண்மை.

இந்த தடுமாற்றம் ஏன்? இந்த ஏமாற்றம் ஏன்? என எண்ணி பார்ப்பதில்லை எவரும் இப்படி தடுமாற்றம், ஏமாற்றம் கண்டபோது கூட ஆராயும் நோக்கில் மாற்றம் கொண்டு வர எவர் மனதும் வரவில்லை. தீர்க்கதரிசியின் திவ்ய வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாகாது. புரிந்து கொண்ட விதம் அவர்கள் புலப்படுத்தியவிதம் தவறாகயிருப்பின் தீர்க்கதரிசனத்தை குறைக்கூறி என்ன பயன்.

தீர்க்கதரிசனங்களை தீர்க்கதரிசிகள் தன் ஆன்மபலத்தால் இறைவனின் திட்டப்படி ஆன்மாவோடு சம்பந்தபட்ட குருமனிதரால் (ஜுப்ரியல்) அளிக்கபட்டு  இறக்கி வைக்கப்பட்டவை.

இப்படியிருக்க தானியேல் அவர்களின் கருத்துகள் மிகத் தெள்ளத்தெளிவாக இறுதிகட்ட காட்சியை இறக்கி வைக்கும் போது தானியேல்12:9. இப்புத்தகத்தை மூடிவை ஏனென்றால் அதற்கு நீண்ட காலம் (குறிப்பிட்டகாலம் வரை) இருக்கிறது நீ இறந்து மீண்டும் எழுந்து வந்து உனக்குரிய பங்கை வெகுமதியாய் பெற்றுக் கொள்வாய். இறுதி கால திருச்சபை திரித்துவம் கொண்டது என்பதை தெளிவாக்கிய தானியேல் தீர்க்கதரசி கால அளவை சொல்லும் இடங்களில்  எல்லாம் இறையரசு எழுகின்ற காலத்தை பற்றி  சுட்டிகாட்டுகின்ற போது குறிப்பிடபடும் கால அளவுகள் 1260இரவு பகல் 1290 இரவு பகல் 1335இரவு பகல் 2300இரவு பகல் செல்லும். 

ஒரு சாதரண மானுடனக்கே 2300 இரவு பகல் செல்லும் என்றால் வெரும் 2300 நாட்களை குறித்தவை என தெளிவாய் எண்ணும் போது இரண்டாம் வருகை இயேசுவாகிய மிக்கேல் எழும் காலம் 2300என்ற கால அளவை வருடமாக்கி நின்ற ஆராய்ச்சியாளர்களின் அறியாமையை எங்கு கொண்டு சொல்வது.

இதே தானியேல் முதல் வருகையையும் இரண்டாம்  வருகையையும் இணைத்து 70 வது வாரம் என்று எழுதியபோது இதற்கும் மார்க்க அறிஞர்கள் ஆண்டுகளாக்கி கணக்கிட்டு நின்று தோல்வி கண்டதையும்  எண்ணிபார்க்க வேண்டியிருக்கிறது.

இவர்கள் தீர்க்கதரசி தானியேலுக்கு 1நாள் 1வாரம் 1வருடம் என்பதற்கான கால அளவு தெரியாதது போல நாட்களில் சொல்லும் இரகசியத்தை வருடங்களுக்கு கொண்டு சென்று பார்த்ததின் பேதமை நன்கு தெரிகிறது.

தானியேலுக்கு வருடம் என்ற வார்த்தை தெரியாததுமல்ல புரியாததுமல்ல இவர்கள் கற்றுக்கொடுக்க. இந்த தீர்க்கதரசி தானியேல் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற ஒவ்வொரு இடத்திலும் நெபுகத்நேசர் மன்னனின் இரண்டாம் ஆண்டு, தரியு அரசு ஏற்றுக்கொண்ட ஆண்டு, பெல்சாட்சரின் முதலாண்டு ஆகிய இடங்களில் குறிப்பிடும் போது ஆண்டு என்று குறிப்பிட்டு நிற்கும் தானியேலுக்கா தெரியாது?

இப்படி ஆண்டு என்ற வார்த்தையை நன்றாக ஆண்டு நின்ற தானியேலின் தீர்க்கதரிசனத்திற்கு விளக்கம் கொடுப்பவர்கள் ஆண்டு என்ற வார்த்தை தானியேல் காலத்தில் மாண்டு போனதாய் மனதில் கொண்டு அதி புத்திசாலிகளாய் தங்களை காட்டியுள்ளார்கள்.

மிக்கேல் எழுகின்ற நேரம் இறை மக்களின் தலைவனாய் அண்ட சராசரத்தை ஆட்டிபடைக்கும் அற்புதனாய் இறந்தோரை உயிர்பிக்கும் ஆற்றல் உள்ளவனாய் சித்தரிக்கும் வல்லமையில் தானியேல் அவர்தான் இயேசு என்று கூறவில்லை.

இந்த தானியேல்   எழுபது வாரம் என்ற விஷயத்தில் 62வாரம் முதல் வருகைக்கும் 7வாரம் இரண்டாம் வாருகைக்கும் ஒதுக்குகிறார் இந்த இரண்டாம் வருகைக்குரிய 7வது வாரமாகிய கடைசி வாரத்தின் மத்தியில் அதாவது மூன்றரை நாட்களுக்கு பிறகு என சொல்லியிருக்கிறார்.

இக்கருத்தையே யோவானும் தன் தீர்க்கதரிசனத்தில் (திவெ11) அதிகாரத்தில் ஆலையம் கட்டி 42மாதங்களுக்கு பிறகு சாட்சிகள் கொல்லப்படுவதும்    அதன்பின் ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து மூன்றரை நாட்களுக்கு பிறகு  எழுப்பப்படுவதும் என சொல்லப்பட்ட கருத்தில் ஒற்றுமை இருப்பதை பாருங்கள்.

இக்கருத்தையே தமிழ் தீர்க்க தரிசி முத்துக்குட்டியும் முன்மொழிந்து நிற்பதை பாருங்கள்.

இப்படி இறுதி நாட்களில் இடம் பெறும் மூன்றரை நாள் என்பது முக்கியத்துவம் கொண்ட நாளாகயிருக்கிறது.

இந்நாளை பிரான்சு நாட்டு தீர்க்கதரிசி  நாஸ்ட்ராடாமஸ் தன்னுடைய நூலில் இரண்டாம் அத்தியாயத்தில் 13வது பாடல் எழுப்பப்படும் நாளை பற்றியும் இறைவனின் அருளை பெற்றவருடைய 1000 வருட அரசாட்சி என்று சொல்லும் முடிவற்ற பேற்றினை பெற்ற அரசாட்சி செல்லும் என்று குறிப்பிட்டதை காண்க.

இதே தீர்க்கதரிசி (அத்தியாயம் -10ல்  72-76 ) பாடல்களில் இறையரசு தோன்றும் விதத்தையும்  அது ஆட்சி செய்யும் செனட்டையும் பற்றி கூறிச்செல்வதையும் பாருங்கள்.

இந்தப்பாடல்களில் எல்லோரையும் நடுங்கவைக்கும் வான்மனிதர் வந்திறங்கி பூமியிலிருக்கும் மாபெரும் குருமனிதருடன் இணைந்து ஆட்சி செய்யபோகும் அற்புதத்தையும் அப்போது இறந்தோர் உயிர் பெற்று எழுவதையும், மடிந்து மண்புழுதியில் உறங்குவோர் மீண்டும் எழும் காட்சிகளையும் அவர் சுட்டி காட்ட தவறவில்லை. தானியேல் கூற்றை தரமானதாக ஆக்கி காட்டுகிறார் மீண்டும்.

பழைய ஒய்வுநாள் (இன்று வழக்கத்தில் உள்ள ஒய்வுநாள்) மாறி புதிய ஒய்வுநாள் வியாழக்கிழமை என குறிப்பிடுவதை நோக்கும் போதே புரிகிறது முதல் வருகையின் சுவடுகள் அழிக்கப்படுகின்ற. மேலும் அவர்  அவர் காலத்தில் ஆண்டு நின்ற ஹென்றி என்ற அரசருக்கு எழுதிய மடல்களை எடுத்துப் பார்த்தால் 21-ம் நூற்றாண்டு ஆரம்ப காலகட்டம்  அவருக்கு பிடித்தது என்றும் அப்போது மார்க்கங்கள் அத்தனையும் மடிந்து போவதையும் உண்மையான தெய்வீக மனிதர்கள் சிலர், கடவுளின் சட்டங்களை காப்பவர்கள் என சொல்லிக் கொள்ளும் போதகர்களை பிடித்து,  அந்த உண்மையான தெய்வீக மனிதர்கள் நசுக்குகிற காட்சிகளையும் விவரித்து சொல்வது விந்தையிலும் விந்தையாய் இருக்கிறது.

இப்படி தானியேல் கண்டகாட்சிகளை ஆமோதித்து பலரும் தீர்க்க தரிசனங்களிலே தமிழ் சித்தர்கள் வரை எழுதியிருக்கிறார்கள்.

முத்துகுட்டி தன் தீர்க்கதரிசனத்திலே பூமியில் இறைவனின் நியாயதீர்ப்பு நடைபெறும் காலம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் இறுதி ராஜாவின் 100ஆண்டு கால முடிவிற்கு பிறகு தான் நியாயதீர்ப்பு பூமீயில் வரும் என்று சுட்டிகாட்டியிலிருந்தே 21-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த சிறப்பு காட்சிகள் அரங்கேற்றம் ஆகின்றன என அறிந்த கொள்ள முடிகிறது.

அப்போது இந்தியாவை ஒருவர் தன் தனித்தன்மையில் கட்சி பலமின்றி ஆட்சியை பிடிப்பார் என்று குறிப்பிட்டு இருப்பதையும், கோரக்கன் கிள்நாமக்காரர் ஆட்சி என BJPஆட்சியை குறிப்பிட்டிருப்பதையும் பார்த்தால் மாநில வாரியாக நான்கு பெண் அரசுகள் தோன்றும் காலம் என்றும் ஊகிக்க முடிகிறது.

இன்னொரு வகையில் பார்சீய குரு வட இந்தியாவில் வந்தவர் இந்தியா சுதந்திரம் அடைவதற்க்கு முன்பாக வாழ்ந்து மறைந்தவர் இந்தியா சுதந்திரம் அடையும் ஆண்டையும் அப்போது இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக பிரிவினையாகும் என்றும் நேரு குடும்பம் ஆட்சிக்கு வருவதையும் அதில் பெண் அரசாட்சி ஏற்பதையும் அதற்கு பிறகு கலப்பட ஆட்சி ஓடி மறையும் என்றும் இறுதி காட்சியாக குஜராத்திலிருந்து ஒருவர் வந்து இந்திய அரசாட்சியை தலைமையேற்பார் என்றும் அப்பொழுது பெண்ணரசுள் தோன்றும் என்றும் அந்த தோன்றும் பெண்ணரசில் ஒரு மாநிலத்தில் இறையரசு துவங்கும் என்றும் அவர் "காஸ்மிக்பவர் "கொண்டவர் என்றும் அண்டசராசரத்தை ஆட்டிபடைக்கும் அற்புதம் கொண்டவர் என்றும் அதற்கான காலம் குரு கடக ராசியில் வரும் போது காலம் கடமையை செய்யும்   என்றும் சொல்லியிருப்பதை இத்தோடு சேர்த்து கவனித்தால் சிம்மத்திற்கு வந்திருக்கும் குரு பெண்ணின் அரசுகள் பெருமையுடன் வந்து நிற்க காலம் தன் கடமையை செய்து முடிக்க கனிந்த நேரம் வந்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறதோ?

 இப்படி காலத்தை கச்சிதமாய் அடையாளம் காட்டி நிற்கும் நேரத்தில் பெண் அரசு நான் வரும் பெருமைக்கு அடையாளம் என தமிழ் சித்தர் முத்துகுட்டி சொன்ன வார்த்தைகளையும், யோவான் திருவெளிப்பாடில் தாய் என்ற நாமத்தை தமக்கு அடையாளமாய் சூட்டிக் கொள்பவரும் மதுவை மாநிலத்தில் மலிவுபட செய்பவரும் என சுட்டி காட்டுகின்ற போது அந்தநாள் நெருங்கிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

இப்படி வருவதற்கு முன் அவ்வரசு ஆட்சியிலிருக்கும் காலத்தில் தண்ணீரால் இடர்படும் காட்சிகள் இடம்பெறும் என்ற வார்த்தையும் சேர்த்து கவனித்தால் யோவானின் திருவெளிப்பாடு காட்சிகள் மெய்ப்பட்டு நிற்பதாய்  (திவெ18:21) தோன்றுகிறது.

இயேசுவால் அடையாளம் காட்டப்பட்ட தானியேலின் தீர்க்கதரிசனம் நடுங்க வைக்கும் தீட்டு திருவிடத்தில் காணுகின்ற போது என்பதை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே இறுதிகால திருச்சபை ஏற்பட்டு 1290 நாளில் அந்த திருச்சபையில் நடுங்க வைக்கும் தீட்டு நடக்குமே ஒழிய இவர்கள் செய்வது போல் நாட்களை வருடமாக்கி வாரத்தை வருடமாக்கி செய்யும் எந்த கணக்கும் புள்ளிக்கு உதவாது.

எனவே தானியேல் கண்ட கனவு இறுதியை பற்றிய காட்சிகள் அனைத்தையும் மூடிவை வீணாக அநேகர் முயற்சி செய்து  (தானி12:4) வியாக்கியானம்  செய்வார்கள் என சொல்லியிருப்பதை உற்று நோக்கினால் இன்றைய இவர்கள் கணக்கீட்டு முறைகள் இவர்களை பற்றி தானியேலின் கணிப்பு சரியாகத்தானே இருக்கிறது.

பல விஷயங்களில் இந்த விஷயம் உட்பட இறுதிகால திருச்சபைக்கு மட்டுமே புலப்படும். அப்படியிருக்க இவர்கள் எதை ஆதாரமாய் வைத்து கணக்கைத் தொடங்குகிறார்கள்?

நல்ல ஆராய்ச்சியாளராக தன்னை காட்டிக் கொண்ட வொய்ட் அம்மையார் கூட 2300நாட்களை வருடங்களாக்கி சாலமோன் ராஜா கட்டிய ஆலயத்திலிருந்து கணக்கிட்டு தன்னுடைய பயணக்கணக்கில் நட்றாற்றில் நின்றது போல கரையேராமல் போனதையும் கண்டோம்.

அதற்கு பிறகும் சரி இன்னும் எல்லோரும் தானியேலின் வாரத்தையும் நாட்களையும்  வருடங்களாக்கி வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான குட்டையில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் உண்மையை அறிய வேண்டுமானால் இறைவனின் இறுதிகால திருச்சபையை நோக்கிதான் தேட வேண்டும்  அவர்கள் தான் இதற்கு விளக்கம் அளிக்க முடியும்.

வேதங்களில் சென்று விளக்கம் தேடி நின்றாலும் இறுதி காலகட்டம் மேற்கூறிய அனைத்து வசனங்களோடும் ஒத்திருக்கிறது.

எசாயா தீர்க்கதரசி இறுதியில்  தென்னகத்தே வரும் அந்த அரசி வான்வெளி கோள்களையும், வான்வெளி நட்சத்திரங்களையும் ஆராய்ந்து பார்த்து பலன்களை சொல்லி நிற்கும் ஜோதிடக் கூட்டத்தை வைத்திருப்பார் (எசா47:13) என்ற தகவலையும் தருகிறார்.

இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது தானியேல் கண்டகனவு நனவாகும் நேரம் வந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

இப்படி எண்ணத் தோன்றும் காட்சிகளின் எண்ணத்தில் என்னத் தோன்றுகிறது என்றால் அந்த காட்சிகள் மிக மிக அருகாமையில் இருப்பதாய் தோன்றுகிறது இக்கால கட்டம் தானியேலின் கனவு நனவாக போகிறது.

யோவானின் தீர்க்கதரிசன திருவெளிப்பாட்டில் வானத்திலிருந்து நகர் ( புதிய எருசலேம்) இறங்குவது குறிப்பிடப்படுகிறது.

மெய்யான காட்சிகள் என மெய்சிலிர்த்து நிற்கும் நமக்கு தழிழ் தீர்க்கதரிசி முத்துகுட்டி பாடல் வரிகள் மனதை தழுவிச் செல்கிறது. "மன்முறை தெளிந்தன்றும் மான்கன்று ஈன்றன்றும் யுகபரம் உனக்குள் ஆகி நகர் ஒரு பகற்க்குள் ஆக்கி " என்று நினைக்கின்ற பொழுது எசாயாவின் கூற்றில் ஒரே நாளில் எவரேனும் இறுதியில் நடப்பதை போல்  "ஒரு நகரை "உருவாக்க முடியுமோ ? என்று கேட்கும் கேள்வி நம் சிந்தனையை தட்டி நிற்கிறது.

ஆந்திராவிலே அவதாரம் செய்த பிரம்மங்காரு தான் கண்ட தீர்க்க தரிசனங்களை திவ்யமாய் காலஞானம் என்ற நூலில் உரைத்து வைத்த போது காலத்தின் கணக்கை கவனமாய் கொடுத்து நிற்க அவர் முற்பட்டபோது ஆண்டை கண்டு பிடிக்க அவர் கொண்டு நின்ற கணக்கு முறை மிக எளிதானது என தற்போது கூறமுடியும் நாட்டை ஆண்டு வரும் அனைத்தையும் சொன்ன அவருக்கு இறுதி கால தீர்க்கதரிசனமாய் இறக்கி வைக்க வரும்போது தானே இறுதி கால புருஷனாய் சித்தரித்து காட்டுகிறார்.

தானே வந்து இவ்வுலகில் திருச்சபையை ஏற்படுத்த தகுந்த இடத்தை தான் தேர்வுசெய்து நிற்க 9.9.2009 -ல் முடிவு செய்து அதற்கான முகாந்தரத்தை அந்த மாதத்திலே அச்சாரம் கொண்டு துவங்குவதாய் அந்த இடம் தமிழ்நாடு என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்படிபட்ட காலத்தில் வீரபிர்மேந்திர பிரம்மம் ஆகிய பிரம்மங்காரு தன்னுடைய அரசாட்சியை அகில உலக அரசாக மாற்றும் காலம் தமிழ் மண்ணிலிருந்து ஒருவர் இந்தியாவின் முதல்  குடிமகனாக இந்திய அரசின் பெரும்பதவியில் அமர்ந்து ஆட்சி செய்து பதவியிறங்கி பின் பத்தாம் ஆண்டில் நான் வருவேன் என பிரம்மாங்காரு சொல்லியதிலிருந்து கவனிக்கின்ற பொழுது தமிழ் மண்ணில் மலர்ந்த திரு. அப்துல் கலாம் என்ற பூ மலர்ந்து ஜனாதிபதி பீடாத்தை அலங்கரித்த ஆண்டு 2002 பதவியிறங்கியது 2007.

அப்படிபார்த்தால் 2007 -ல் இருந்து பார்த்ததில் பத்தாம் ஆண்டு என்பது 2016-2017  பிரம்மங்காரு சொல்லியிருப்பதை எண்ணும்போது இயேசுவின் பிறவிகளில் பிரம்மங்காரும் ஒன்று என்ற எண்ணம் தோன்றுகிறது.

இயேசு இல்லையேல் எலியா தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் எப்படியயோ திரித்துவத்தில் ஒருவராக பிரம்மங்காரு இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

அவர் சொல்லும் மற்ற அடையாளங்களும் இன்றைய காலத்தோடு ஒத்திருப்பதை பார்க்கின்ற போது ஆச்சரியப்பட வைக்கிறது.

இவரும் பேசும் மிருகம் என ஒரு மாட்டை உருவகமாய் சொல்வதுபோல் பைபிளிலும்  புதிய மிருகம் என்றும் குரானிலும் புதிய அதிசிய பிராணி என்றும் சொல்லப்பட்டிருப்பதை உற்று நோக்குங்கள்  தமிழ் தீர்க்கதரிசிகளும்  "காளை நிகராங்குடையோர் கனத்த பெருமைக்கும் "வாயை பொத்தா மானுடர்க்கு அது வல்விலங்காய் தான் மாறும் என்று சொன்ன தமிழ்  தீர்க்கதரிசிகளின் கருத்துக்களும் ஒத்து போயிருக்கின்ற.

இதேக் கருத்தை யோபு பழைய ஏற்பாட்டில் இறுதியில் அரசாட்சி செய்ய வரும் காளையைப் பற்றி உருவகப்படுத்தி பேசிய விதமும் ஏனைய தமிழ் சித்தர்கள் கூறிய தீர்க்க தரிசனங்கள் தெளிவாய் உரைக்கும் காட்சிகளும் ஒன்றாய் இருப்பதை பார்த்தால் வியப்பாய் இருக்கிறது.

ஐரோப்பா கண்டத்திலே தேடிப்பிடித்து நோக்கினால் காலத்தை அறிய ஒரே ஒரு துருப்புச் சீட்டு நாஸ்ட்ராடாமஸ். அதை அடுத்து தேடினால் போப்பாண்டவர்களின் கணக்கை கொண்டு காலத்தை கணக்கிட முயன்றவர் ( மலாக்கி) அரபு நாடுகளை பொருத்தவரை இஸ்லாம் மார்க்கத்தில் எழுந்து நிற்பது குரான், இஸ்ரேலை பற்றி எழுந்து நிற்பது கிருஸ்த்துவ பைபிள் ஆனால் இந்தியாவை பொருத்த வரை தெள்ளத்தெளிவாய் சொல்லி நின்ற சித்தர்கள் என்னிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது.

தென்னிந்திய சித்தர்கர்களை கொண்டு தோன்றும் இடத்தை தமிழ்நாடு என்று கண்டு பிடிக்க முடிகிறது. இது மற்றைய தீர்க்கதரிசனங்களை காட்டிலும் தமிழ் சித்தர் தீர்க்கதரிசிகளின் தீர்க்க தரிசனங்கள் பெரிதும் உதவுகின்றன அப்படி பார்த்தால் இந்த பத்து வருட கணக்கை பவிசாய் சொன்ன பிரம்மங்காரு போல் தமிழ் தீர்க்கதரிசிகள் காகபுசண்டரும், தலையாட்டி சித்தரும், போகரும், முத்துகுட்டியும் சொன்னத் தீர்க்கதரிசனம் ஒத்து போகின்றன.

முத்துகுட்டியும் தன் தீர்க்க தரிசனங்களில் இரண்டு இடங்களில் இதை குறிப்பிட்டுநிற்கிறார்."கொற்றவர் தானும் ஆண்டு குறும்புகள் மிகவே பெருத்து உற்றதோர்துளுக்கன் வந்து உடனவன் விழுந்தோடி மற்றதோர் பத்தாமாண்டில் நாம் வருவோம் "என முன் ஆகம விதிப்படி என்று சொல்லியிருப்பதை காணுக்கின்ற பொழுது பிரம்மங்காரோடு ஒத்து பார்க்கின்ற போது அவரை விட ஒருபடி மேலாய்போய் தமிழ்நாட்டு துளுக்கன் ஒருவர் ஜனாதிபதியாகும் காட்சியை விவரிக்கிறார்.

இது அப்துல்கலாம்  என நாம் கண்டு பிடிக்க பேருதவியாய் இருக்கிறது அல்லவா, விழுந்து ஒடி என்று சொல்லுகின்ற போது அந்த வருடத்திலிருந்து பத்தாமாண்டு எனக்கொள்வது எளிதாகிறது.

இதே பாட்டை " கொற்றவர் தானும் ஆண்டு குறும்புகள் மிகவே பெருத்து உற்ற நசுறாணி உடன் வந்து மற்றதோர் ஆண்டுதன்னில் நாம்வருவோம் என சொல்லியிருப்பதிலிருந்து.. மத்தியில் ஏற்படும் இரண்டாண்டு ஆட்சியை குறிப்பிடும் காலமாய் இருக்கிறது என்று எண்ணும்போது காங்கிரஸ் ஆட்சிமுடித்து இரண்டாண்டு கால BJP மோடி அரசை முகாந்திரம் காட்டி நிற்பதாய் தோன்றுகிறது.

இப்படி அந்தரமாய் நிகழும் காலம் சூரியன் அந்தகாரப்படும் காலமாய் இறுதிகாலம் இங்கு பூமியில் எழும்பும் காலமாய் இருக்கப்போகிறது  என்று குறிப்பிட்டு காட்டுகின்றபோது  மிகத் துள்ளிய கணக்கை தூபம்போட்டு காட்டியவர்கள் தென்னிந்திய சித்தர்களாய் அதுவும் தமிழ் சித்தர்களாய் இருப்பதை நினைத்து  தலைநிமிருவோம் தமிழனாய் பிறந்ததற்கு.

எனவே இவைகளெல்லாம் ஒன்று போல் இருந்தாலும் இந்திய தமிழ் தீர்க்கத்தரிசிகள் கால அளவை எட்டிபிடிக்க கச்சிதமாய் வழிமுறைகளை சொல்லிநின்றாலும் கிருஸ்த்துவ மதத்திற்கு மட்டும் கால அளவைப்பபற்றி பேசியவன் தானியேல் தீர்க்கதரிசி அடுத்து காலத்தை குறித்து நிற்பவன் யோவான் மட்டுமே.

தானியேல் இறுதி அத்தியாயத்தில் இறக்கி வைத்த கருத்துக்கள் இறுதியில் வரும் இறைசபைக்கு மட்டுமே தெரியும் என்பதால்  முடியும் என்பதால் மற்றைய எந்த மார்க்கத்தை சார்ந்தவரும் குறிப்பாக கிருஸ்த்துவ மதத்தை சார்ந்தவர்கள் பைபிளை தன் கையிலேக் கொண்டவர்கள் இவ்விடத்தை எட்டிப்பிடிக்க இயலாது .

ஒரே துருப்பு சீட்டு பைபிளை சார்ந்தாவர்களுக்கு தானியேல் ஒருவனே என்றால் அந்த துருப்பு சீட்டும்  இறுதி சபையாளருக்கு மட்டுமே புரியும்.

எனவே இவர்களை பொருத்த வரை கணக்கு பார்க்க பயனில்லாத துருப்புச்சீட்டு தானியேல். இறுதி சபைக்ககோ நல்ல துருப்புச்சீட்டு இந்த தானியேல்.

ஆராய்ச்சியின் அடிப்படையில் நுட்பமாக ஆராய்ந்து  பார்த்தால் அவனால் எழுதப்பட்ட இறுதி வரிகளை  முடிவின் வரிகளை முகர்ந்து பார்த்தால் ஒருவாசனை தெரிகிறது.

இறுதியில் எழுப்பப்படும் சாட்சிகளில் ஒன்று எலியா (மலாக்கி& இயேசு கூற்று) ஈனோக் என்றும், சாலமோன் என்றும், திருமுழுக்குயோவான் என்றும், யாக்கோபு என்றும் எப்படி அழைத்தாலும் அவர் எடுக்கும் பிறவிகளை வரிசைப்படுத்த முயன்றால் தானியேலையும் அதில் சேர்க்க வேண்டியிருக்கிறது .

எனவே தானியேல் இறுதியில் அங்கம் பெறும் இறைச்சபையில் மீண்டும் பிறந்து மரணித்து எழுப்பப்படும் சாட்சிகளில் ஒருவராகத் தான் காணமுடிகிறது.

இப்பொழுது இதுவரை தானியேல் என்பவரும் அவருடைய நாள் கணக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு துருப்புச் சீட்டாய் இல்லாமல் கருப்புச் சீட்டாய் தான் இருந்தது ஆனால் இப்போது காலம் விடியலை தருவதால் கருப்புச்சீட்டாய் நின்ற இந்த துருப்புச்சீட்டு எல்லோருடைய விருப்பு சீட்டாக மாறும் நிலை வந்துவிட்டது.

பித்தலாட்ட காரர்களுக்கு வெறுப்பு சீட்டாய் அமையும்...