13/12/2017

தாய்மொழியாகிய நம் தமிழை அழிக்க ஏன் துடிக்கிறார்கள்..?


நிறம் வெள்யைாவதற்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயந்த காளான் சாப்பிடுகின்றார் பாஜக மோடி - காங்கிரஸ் குஜராத் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு குற்றச்சாட்டு...


காங்கிரஸ் தலைவர் அல்பேஸ் தாக்கூர் பேசியதாவது...

பிதமர் என்னை போன்று கருத்த நிறமுடையவராகத் தான் இருந்தார் அவர் வெள்ளையாவதற்கு தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளானை சாப்பிடுவார். ஒரு காளானின் விலை 80 ஆயிரம் தினமும் 5 காளான் அவர்கள் சாப்பிடுவார்..

தினமும் 4 லட்சத்திற்கு களான் சாப்பிட்டு தற்போது தக்காளி போன்று சிகப்பாக மாறியுள்ளார்.

இவ்வாறு அவர் தனது பேச்சில கூறியுள்ளார்..

பிரதமரின் சாப்பாட்டு செலவு குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கோரப்பட்ட போது அது அவரின் தனிப்பட்ட விவகாரம் எனக் கூறி பிரதமர் அலுவலகம் தகவலை அளிக்க 2 வருடத்திற்கு முன்னர் மறுத்தது குறிப்பிடதக்கது...

காவிரி கலவரத்தில் உயிர் நீத்த தமிழர்கள் நினைவு நாள்... 13.12.1991...


காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டதை எதிர்த்து கன்னட இனவெறியர்கள் கும்பல் கும்பல்களாக இணைந்து கொண்டு கையில் ஆயுதங்களை தூக்கியபடி  கன்னட வாழ் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் .

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். 

ஒரு இலட்சத்திற்கும் மேல் அகதிகளாக தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனர்.

கன்னட  காமுகர்கள் வெறி கொண்டு தமிழ்ப்பெண்கள் பலரை பாலியல் வல்லுறவு கொண்டனர்.

தாலி அணிந்த பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

கோடிக்கணக்கான தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டன.

தமிழர் வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டன.

இலங்கையில் சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய சூலைக் கலவரத்திற்கு இணையாக  கன்னட இனவெறியர்கள் நடத்திய இந்த திசம்பர் கலவரத்தை குறிப்பிடலாம்.

கன்னட இனவெறியன் வட்டாள் நாகராஜ் என்பவன் முழு அடைப்பு என்ற பெயரில் தமிழர் மீது தாக்குல் நடத்த உத்தரவிட்டான்.

காங்கிரசு முதல்வர் பங்காரப்பாவோ ஒருபடி மேலாக காவல்துறை பாதுகாப்போடு தமிழர் மீது தாக்குதல் நடத்த தன் கட்சியினரை தூண்டி விட்டான்.

தமிழர் மீது கோரத்தாண்டவம் நடத்திய கன்னட வெறியர்கள் தண்டிக்கப்படவும் இல்லை.

தமிழர்களுக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்படவும் வில்லை. 

தமிழர்களாகிய நாம் இந்த கறுப்பு நாளை நினைவு கூறுவோம்..

கன்னட இனவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடி தமிழர் உயிரையும், உடைமையும் காக்க உறுதியேற்போம்...

அதிமுக இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு வந்த இயக்குனர் சுந்தர்ராஜனை குக்கர் சின்னத்தை கொண்டு விரட்டியடித்த பொதுமக்கள்...


இடம்:  ஆர்கேநகர் 41 வது வட்டம்...

இந்தியாவில் ஆவணப் படுகொலை வழக்கில் முதல் தீர்ப்பு...


தமிழகத்தையே உலுக்கிய உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

தாயார் உட்பட 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்...

98 மீனவர்கள் சாவு? மீதமுள்ளோரை மீட்க போர்க்கால நடவடிக்கை தேவை என்று பாமக இளைஞரணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்...


இதுகுறித்து அவர் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையிலிருந்து...

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்களில் 98 மீனவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று மீனவர்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. மீனவச் சொந்தங்களைக் காப்பாற்ற மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து வழிகளிலும் போராடிய நிலையில், ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக 98 பேர் உயிரிழந்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெற்காசிய மீனவர் அமைப்புகளின் பொதுச்செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட பாதிரியாருமான சர்ச்சில், கடலோரக் கிராமங்களில் உள்ள தேவாலயங்களின் மூலம் இந்த விவரங்களைத் திரட்டியுள்ளார். அதிகபட்சமாக நீரோடி கிராமத்தில் 37 பேரும், சின்னத்துறை கிராமத்தில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்., குளச்சலைச் சேர்ந்த 13 பேர், இறைவிபுத்தன் புதூரில் 7 பேர், மற்ற ஊர்களில் 19 பேரும் இறந்துள்ளனர். உலக வல்லரசாக உருவெடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை காப்பாற்ற முடியாததால் சுமார் 100 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது அவலத்திலும், அவலம் ஆகும். இந்திய கடலோரக் காவல்படையும், கடற்படையும் நினைத்திருந்தால் அனைத்து மீனவர்களையும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் உயிருடன் காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் காட்டிய அலட்சியம் தான் இவ்வளவு பெரிய சோகத்திற்கு வித்திட்டிருக்கிறது. ஒக்கி புயல் தாக்கிய அடுத்த நாளே மீனவர்களை தேடும் பணியை கடலோரக் காவல்படையும், கடற்படையும் முறையாக மேற்கொண்டிருந்தால் காணாமல் போன மீனவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் 100 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தான் தங்கி மீன் பிடிப்பர் என்ற அடிப்படையை உணராமல் 30 முதல் 60 கடல் மைல் பகுதியில் மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதனால் தான் புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க முடியவில்லை. ஏற்கனவே நான் குறிப்பிட்டவாறு, மீட்புப் பணியை சரியாக மேற்கொள்ளாமல் மீனவர்களை மத்திய, மாநில அரசுகளே கொன்று விட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் மேலும் 500 பேரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் அவற்றிடம் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்கள், கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். இதுவரை உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்...

பாஜக வும் மத அரசியல் வியாபாரமும்...


காவி காம சாமியார்களும் மீனவ மக்களுக்காக  போராடுவதில்லை...

போராடும் மக்களையும் மத சாயம் பூசும் மனநோய் பிடித்த மனிதவிரோத காவி கபோதிகளை செருப்பு அடித்தால் கூட திருந்த மாட்டானுங்க...

பாஜக டூபாக்கூர் மோடியும்.. கேவலமான அரசியலும்...


தெலுங்கர் வைகோ நாயூடும் அரசியல் வியாபாரமும்...


1994 ல் கட்சி துவங்கியபோது திமுக எதிரி.

1996 ல் திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் எதிரி.

1998 ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி.

1999 ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி.

2001 ல் ரெண்டு பேருமே எதிரி.

2004 ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி.

2006, 2009 ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி.

2011 ல் வாக்காளர் உட்பட எல்லோரும் எதிரி.

2014 ல் ரெண்டு பேருமே எதிரி ; பாஜகவோடு கூட்டணி.

2016 ல் திமுக அதிமுக இரண்டுமே எதிரி..

2017 ல் அதிமுக எதிரி திமுக கூட்டணி..

ஒரே குழப்பமா இருக்கு. நம்ம எதிரி யார் தான் தலைவா? இவன் மதிமுக அப்பாவி தொண்டன்...

தன்மானம் உள்ளவன் இனிமேல் திமுகவோடு கூட்டணி வைக்கமாட்டான்னு சொன்னியே தலைவா.. அப்பவே தெரியும்.. திமுகவுடன்  நீ கூட்டணி வைப்பன்னு...

இலுமினாட்டி - கான்ஸ்பிரஸி தியாரிஸ்ட்...



இதை உலக முதலாளிகள் சாத்தானுக்கு பலி கொடுக்கும் நிகழ்ச்சி என கூறுகிறார்கள்.

பல்வேறு அமெரிக்க அதிபர்களும் இந்த குழுவின் உறுப்பினராக இருந்து இந்த வழிபாட்டில் கலந்துள்ளனர்...

கடற்கரைகாரன் செத்தா உனக்கென்னடா? நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து சிறையிலடைத்த கொல்லங்கோடு போலீஸ்...

                                 
பல நாட்களாக கடலோர கிராமங்களில் தங்கி மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்ட "மக்கள் அதிகாரம்" தோழர்கள் ஏழு பேரை நீரோடியில் வைத்து கைது செய்தனர்.

நீரோடியில் வைத்து கைது செய்து மண்டைகாடு காவல்  நிலையத்தில் வைத்திருந்த தோழர்களிடம் தான்   "கடற்கரைகாரன் செத்தா உனக்கென்னல"?        என்ற கேவலமான கேள்வியை   போலீசார் கேட்டனர்.

ஜல்லிகட்டிற்கும், வர்தா புயலுக்கும் எங்களுக்காக வந்தவர்களுக்காக நாங்க ஏன் வரக்கூடாது? என்று தோழர்கள் எதிர்த்து கேள்வி கேட்டனர்.     

தோழர்கள் எதிர் கேள்வி கேட்டதற்காக அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கி குழித்துறை சிறையில் அடைத்துள்ளது காட்டுமிராண்டி போலீசு.   

கைதாகி நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்,  மூவர் தூத்துக்குடி & நெல்லை மாணவர்கள்,  இருவர் தூத்துக்குடி தொழிலாளர்கள்.               

 குமரி மீனவ மக்களின் போராட்டம் தமிழக மக்களின் போராட்டமாக  மாறி விடாமல்  அச்சுறுத்தி தடுக்கும் அரசின் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த கைது, சித்தரவதை.       

பல்வேறு தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும் மீனவ மக்களை நோக்கி வருவதே நமது  போராட்டத்தை வலுப்படுத்தும். 
 
புயல் எச்சரிக்கை கொடுக்காமல் நம்மை கொலை செய்த இந்த கொலைகார அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் கோரிக்கை வெல்லும்வரை போராடுவோம். நமக்காக சிறை சென்றவர்களை ஆதரிப்போம்...

பாஜக மோடியும் கேடுகெட்ட ஏமாற்று அரசியலும்...


பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்...


அமெரிக்காவுல கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கற, எதிர்காலத்துல பெரிய அச்சுறுத்தலா இருக்கக்கூடிய ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்தேன். அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கே வந்துட்டேன் என பொறுப்பு உணர்வுடன் பேசுகிறார் திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிபி செல்வன்.

இந்த நூற்றாண்டில், இயற்கைக்கு கேடு விளைவிப்பதில் பெரும் பங்கை பிளாஸ்டிக் தத்தெடுத்துள்ளது. காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பாதிப்பு பரவி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னையை சரிசெய்வதற்காக களத்தில் குதித்துள்ளார் 26 வயதான சிபி செல்வன்.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, இயற்கைப் பொருள்களைக் கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை தயாரித்து வருகிறார் சிபி. இவரின் ரிஜெனோ நிறுவனம் பற்றி தெரிந்து கொண்ட கோவை மாநகராட்சி நிர்வாகம், கோவையில் தற்போது இந்தப் பைகளை புழக்கத்தில் விட்டுள்ளது.

ரிஜெனோ நிறுவனத்தின் நிறுவனர் சிபி செல்வனைச் சந்தித்துப் பேசினோம். "நமக்கு திருப்பூர்தான் சொந்த ஊர். ஸ்கூலிங் ஊட்டில முடிச்சேன். ஹையர் ஸ்டடீஸ் யூ.எஸ்-ல முடிச்சுட்டு அங்கயே, ரெண்டு வருஷம் வேலை செஞ்சேன். கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் பிரச்னை ஒண்ண தீர்க்க நம்மாலானத செய்யலாம்னு தோணுச்சு. அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கு நல்ல 'பை' கொடுக்கலாம்னு வந்துட்டேன்.

உலகம் முழுவதும் நிமிடத்துக்கு 10 லட்சம் பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுகின்றன. நீர்நிலைகள், நிலம், விலங்குகள் என அனைத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்து பிளாஸ்டிக்தான். இதனால், பிளாஸ்டிக் பிரச்னைய கைல எடுத்தேன். யூரோப்பியன் கம்பெனி ஒண்ணு, இயற்கைக் கழிவுகளை வெச்சு, கேரி பேக்குகளை தயாரிப்பதை கேள்விப்பட்டேன். அவங்கக் கிட்ட டிசைன் வாங்கி, இங்க தயாரிக்க ஆரம்பிச்சேன்.

மூணே மாசத்துல இந்த பை மக்கிடும். இதனால, இயற்கைக்கோ, விலங்குகளுக்கோ எந்தப் பாதிப்பும் கிடையாது. மக்காச்சோளம் மற்றும் காய்கறி கழிவுகளைக் கொண்டுதான் இந்தப் பைகள் தயாரிக்கப்படுகின்றன. கோவை, பெங்களூரில் விற்பனை ஆகிட்டு இருக்கு. இதுக்கு இவ்ளோ பெரிய வரவேற்பு கிடைக்கும்ணு நான் எதிர்பார்க்கலை. கோவை மாநகராட்சி இத அறிமுகப்படுத்துன உடனேயே, மற்ற சில மாநகராட்சி நிர்வாகங்களிடம் இருந்தும் எனக்கு கால் வந்துச்சு.

அதேபோல, நிறையபேர் இதைத் தயாரிக்கவும் விருப்பம் தெரிவிக்கராங்க. இப்போதைக்கு 1 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை இது விற்பனை செய்கிறோம். இதன் தயாரிப்பு எண்ணிக்கை குறைவா இருக்கறனால, விலை அதிகமாகத்தான் இருக்கு. பயன்பாடு அதிகரிக்கறப்ப, இதோட விலையும் பிளாஸ்டிக் அளவுக்குக் குறையும். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் கடலோரப் பகுதிகளில்தான், பிளாஸ்டிக் கழிவுகளால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விரைவில், மற்ற நண்பர்கள் மற்றும் அரசின் உதவியோடு இத தமிழகம் முழுவதும் கொண்டு சென்று, குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

பிளாஸ்டிக் கேரி பேக்குளுக்கு மாற்றாக, வெள்ளை துணிப்பைகள் என்றும் சில பைகள் சந்தைக்கு வந்துள்ளன. இவை பிளாஸ்டிக்கை விட அபாயகரமானவை. 70 சதவிகிதம் வரை பிளாஸ்டிக்கை வைத்துத்தான் இத தயாரிக்கறாங்க. எனவே, மக்கள் அந்த விஷயத்துல கொஞ்சம் விழிப்புஉணர்வோட இருக்க வேண்டும்" என்று முடித்தார் சிபி.

- பசுமை விகடன்

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் நவீன ஆயுதம் வாளி மட்டும் தான்...


மின்சாரமும் உலக அரசியலும்...


உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தன் மக்களிடம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துகிறது...

ஆனால் எந்த நாடும் இந்த முறையை ஏற்காது.. ஏனென்றால் அவர்கள் கட்டமைத்த அமைப்பு அவ்வாறு உள்ளது...

பலிபீடம்...


எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும்.

பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.

திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.

சரி.... பலி பீடம் என்றால் என்ன?

பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.

இதை உறுதிபடுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோவில் ஆண்டு திருவிழாக்களின் போது பலி பீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து விடுவதைப் பார்க்கலாம். இது தவறு.

ஆனால் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன.

அந்த ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள்.

அதெப்படி குணத்தை பலியிடுவது என்று நினைக்கிறீர்களா? மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கலாம்.

இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார்.

எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால் தான் கடவுள் பக்கம் செல்ல முடியும்.

எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம்.

இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது உயரியமானது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.

பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.

பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.

பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம், பலி பீடத்தில் தான் ஒதுங்கியிருக்கும்.

எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.

சிலர் எல்லாமே நம் ஒருவரால் தான் நடக்கிறது என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருத்தல் வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.

மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.

அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக எண்ண வேண்டும்.

பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.

பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.

பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.

(திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் இந்த பெயர்களில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன) இந்த எட்டு திக் பாலகர்கள் ஆலய பரிவார தேவதைகள் ஆவார்கள். எனவே இவர்களுக்கு அன்னம், தீர்த்தம் இடுதல் போன்றவைகளுக்கு பலி பீடங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.

சில கோவில்களில் பல பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது.

சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள்.

அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும். பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால்... நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது.

ஆக பலி பீடம் மனிதனை... மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும்.

கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர்.

இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன...

பாஜக நரேந்திரபாய் தமோதர்தாஸ் மோடி அவர்கள் குஜராத்தில் பேசிய தேர்தல் பரப்புரையின் முக்கிய வாசனங்கள்...


நான் குஜராத் மண்ணின் மைந்தன்.

என்னை கொல்ல பாகிஸ்தானுடன் சேர்ந்து காங்கிரஸ் சதி செய்கிறது.

நான் ஒரு ஏழைமகன் என்பதால் காங்கிரஸ் என்னை விரும்பவில்லை.

நான் ஒரு டீ வியாபாரி என்பதால் காங்கிரஸ் என்னை வெறுக்கிறது.

நான் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவில் பிறந்தவன் என்பதால் காங்கிரஸ் என்னை வெறுக்கிறது.

அஹமத் பட்டேலை குஜராத்தின் முதல்வராக்க பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து காங்கிரஸ் சதி செய்கிறது.

உங்களுக்கு மசூதி வேண்டுமா அல்லது கோயில் வேண்டுமா.?

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது.

இது கூட கொஞ்சம் அழுவாச்சி நாடகம்...

அதோட தில்லான மோகனாம்பாள் படத்துல சிவாஜி கணேசன் வாயில துணிய வெச்சி பொத்தி நடிச்ச மாதிரி சீன போட்டு மீடியாக்களுக்கு கொஞ்சம் ஸ்டில்ஸ்.

இவ்வளவுதான் ஒரு நாட்டு பிரதமரோட பிரச்சார யுக்தியே! இங்கிட்டு GST வரல, பண மதிப்பு நீக்கம் வரல, பணமில்லா பரிவர்த்தனை பத்தின பேச்சே வரல, கருப்பு பணம் கள்ளப்பணம் வரல..

அப்புறம் புதுப்புது  கொழந்தைங்க பொறக்குறது பத்தின சேதி அதோட தேதி... ம்ஹூம் எதுவுமே வரல. அத பத்தி வாய தெறந்தா மாதிரியும் தெரியல..

ஏற்கனவே பாசக அப்டீங்கிற கட்சிக்கு ஒரு ப'வும் மூனு பா'வுந்தான் முக்கிய முதலீடே..

நம்ம பெரதமருக்கு இந்த அஞ்சாறு பாயிண்டோட கொஞ்ச அழுவாச்சியுந்தான் குஜராத் தேர்தலுக்கு முதலீடு...

அது என்ன ஒரு ப...மூனு பா'ன்னு கேக்குறீங்களா....கீழ சொல்லியிருக்கேன் பாருங்க..

பசுமாடு
பாபரி மஸ்ஜித்
பாகிஸ்தான்
பாரத மாதா

படத்தில்: தில்லான மோகனாம்பாள் குஜராத் மொழி வெர்ஷனில் நடிக்க மோடி ஒத்திகை பார்த்தபோது கிளிக்கியது. தில்லான மோகனாம்பாள் படம் பாக்கதவங்களும், சிவாஜிய நேர்ல பாக்கதவங்களும் இந்த படத்த பாத்துக்கோங்க.

எக்ஸ்ட்ரீம்லி சாரி..பத்மினி மட்டும் மிஸ்ஸிங்...

இந்த காலங்களில் 30 வயது மேல் நோயில்லாமல் ஒருவனை பார்ப்பது கடினம்...


பெண்கள் செய்ய கூடிய உடற் பயிற்சிகள் எவை...


பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம். அவை..

1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.
3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி

இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும்
இருக்க இவற்றை செய்யலாம்.

சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும். காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக் ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.

பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்து மடக்கி குறைந்தது பத்து நிமிடம் செய்து வந்தால் தோள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.

குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெல் மில் பயிற்சியினையும், மெல்லிய நடை பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்...

ஊடகமே மக்களின் முதல் எதிரி...


அவன் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள்...

விளையாட்டில் கிடைக்கும் பரிசு தொகையை ஆதரவற்றோருக்கு வழங்கும் இளைஞர்கள்...


கீழக்கரையில் இளைஞர்கள் விளையாட்டின் மூலம் கிடைக்கும் பரிசு தொகையினைமுறையான பயனாளிகள், ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர். கீழக்கரையில் உள்ள அஞ்சலக வீதியில் இயங்கி வரும் ஹிதாயத்வாலிபால், கால்பந்து விளையாட்டுக்குழுவில் கல்லுாரி மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வருகின்றனர்.

ஒப்பிலான், மாரியூர், நரிப்பையூர், சித்தார்கோட்டை, அத்தியூத்து, பனைக்குளம், தொண்டி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தினுள் நடக்கும் இரவு நேர மின்னொளி விளையாட்டில் பங்கேற்கின்றனர்.

விளையாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் நிஷார் அகமது கூறியதாவது...

கிராம ஆண்டுவிழா, பொதுநிகழ்ச்சிகளில் நள்ளிரவு 10 மணிக்கு ஆரம்பித்து காலை 6:00 மணி வரை நடக்கும்மின்னொளி வாலிபால் போட்டிகள் இங்கு நடக்கும். பரிசுத்தொகையாக ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கிறது.

இதில் கிடைத்த தொகையினை ஆதரவற்றோர், வறுமையில் வாடும் ஏழைக்குடும்பங்கள், அன்பு இல்லங்களுக்கு நன்கொடையாளர்களின் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2014 முதல் இதனை செய்து வருகிறோம்.

ரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பொதுசேவைகளில் ஈடுபடுகிறோம். மாதந்தோறும் சந்தா வசூலித்து, புரவலர்களை ஒருங்கிணைத்து, பிறருக்கு வழங்குவதை உற்சாகமாக செய்து வருகிறோம், என்றார்...

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது...


உளவியல் - பிடிக்காத துக்க செய்தியை மனிதர்கள் எதிர் கொள்ளும் ஏழு நிலைகள்...



சுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரான எலிஸ்பத் கூபர்-ராஸ் (எலிசபத்து கூபரு ராசு) துக்க நிகழ்வை ஒருவர் எதிர்கொள்ளும் முறையை விளக்கியுள்ளார்.

முதலில் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இந்த நிலைகள் மருத்துவர் எலிசபத் ராசினால் கூறப்பட்டாலும், எந்த வித துக்க நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும் என்று சில காலங்களிலேயே கண்டறியப்பட்டது.

எலிசபத் ராஸ் முதலில் கூறியது ஐந்து நிலைகள் தான். (மறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, ஏற்றுக்கொள்ளுதல்). சோதித்தல் என்பது பின்னர் சேர்க்கப்பட்டது.

அதே போல் அதிர்ச்சி என்ற நிலையும் பின்னர் சேர்க்கப்பட்டது தான்..

ஆக, ஒரு துக்க நிகழ்வை எதிர்க்கொள்ளும் மனித மனம் கீழ்க்கண்ட எழு நிலைகளை கடந்து வருகிறது..

அதிர்ச்சி
மறுப்பு
கோபம்
பேரம்
மனச்சோர்வு
சோதித்து பார்த்தல்
ஏற்றுக்கொள்ளுதல்
இதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்..

உதாரணம் 1 : தேர்வில் தேர்ச்சியடையாத மாணவனின் மனநிலை

(பின்குறிப்பு : ஒரு 3 மணி நேரத்தில் 15 கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடையை வைத்து “தோல்வி” என்ற அடைமொழியை பயன்படுத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது)

தேர்வு முடிவு வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், தொலைகாட்சி, என்ற அவனது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்..

இப்பொழுது தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..

அதிர்ச்சி : முடிவை பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் அவன் அதிர்ச்சி அடைகிறான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.

மறுப்பு : “இல்லை. நான் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருப்பேன்”. “இதில் ஏதோ தவறு”. “இந்த நாளிதழ் தவறாக அச்சிட்டுள்ளது. அடுத்த நாளிதழை வாங்கி பார்ப்போம்”

கோபம் : அனைவர் மேலும் கோபம். விடைத்தாளை திருத்தியவர் மேல் கோபம். அதிகம் 10 நிமிடம் தராத தேர்வரங்க ஆசிரியர் மேல் கோபம். கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
பேரம் : எத்தனை தாள்களில் தேர்வாக வில்லை. ஒரே ஒரு தாள் தானா, பல தாள்களா..

மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”

சோதித்தல் : மதிப்பெண் பட்டியலை சென்று பார்த்தல்

ஏற்றுக்கொள்ளுதல் : அடுத்த தேர்விற்கு தயாராகுதல்

உதாரணம் 2 : தொழிற்சாலையில் விபத்து என்று கேள்விப்படும் தொழிலதிபர் விபத்து என்று செய்தி வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். அலுவலகம் செல்வது, தொழிற்சாலை செல்வது, கூட்டங்கள், கேளிக்கை, கிளப்புக்கு சென்று சீட்டு விளையாடுவது என்ற அவரது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்.

இப்பொழுது தொழிற்சாலையில் விபத்து என்றவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

அதிர்ச்சி : செய்தியை கேட்டவுடன் முதலில் நடப்பது அதிர்ச்சி தான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு. நெஞ்சு வலி வரலாம். முச்சடைக்கலாம். ஏற்கனவே இதய நோயாளி என்றால் மாரடைப்பு கூட வரலாம்.

மறுப்பு : “இல்லை, என் தொழிற்சாலையில் இருக்காது. அங்கு விபத்து நடப்பதற்கு வழியே இல்லையே. வேறு ஏதாவது இடத்தில் இருக்கலாம்”

கோபம் : கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”

பேரம் : “எவ்வளவு சேதம்”, “அதில் எவ்வளவு விபத்து காப்பீடு உள்ளது”, “கொஞ்சமாவது தேறுமா”

மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”

சோதித்தல் : ”விபத்து எப்படி நடந்தது” “யார் தவறு” “இனி இப்படி நடக்காமல் தடுப்பது எப்படி ஏற்றுக்கொள்ளுதல் : “எப்படியும் அந்த டிவிசனை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று நினைத்தேன்” “இனி செய்துவிட வேண்டியது தான்”

மூன்றாவது உதாரணம் எழுதவில்லை. நீங்களே பொருத்தி பாருங்கள்.

பொருந்தி வருவது தெளிவாக தெரிந்தால் நீங்கள் மூன்றாவது நிலையை தாண்டி நான்காவது, ஐந்தாவது, ஆறாவது அல்லது ஏழாவது நிலையில் உள்ளீர்கள்
கோபப்பட்டால் மூன்றாவது நிலை
அந்த உதாரணம் பொருந்தாது என்று கூறினால் இரண்டாவது நிலை.

முதல் நிலையில் இருப்பவர் இந்த இடுகையை வாசிக்கும் வாய்ப்பு குறைவு...

நம் அடிமைத்தனம் எவ்வாறு வளர்க்கப்படுகினது..?


சித்தர்கள் என்பவர்கள் யார்?


கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள். கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்கிறது தேவார பதிகம்.

மனிதன் யார் ? அவன் எப்படி பட்டவன்?உலகில் அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொன்னவர்கள் இந்த சித்தர்கள்.

சித்தர் என்ற சொல் 'சித்' என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்ததாகும். இவர்கள் பல நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். பழங்காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் "நிறைமொழி மாந்தர்கள்", "அறிவர்" போன்றவைகளாகும். சமண மதத்திலும், பௌத்த மதத்திலும் இவர்களை "சாரணர்" என்று அழைத்ததாக  தஞ்சை தமிழ் பல்கலை கழக வாழ்வியற் களஞ்சியம் என்கிற நூல் கூறுகிறது.

இவர்கள் எல்லா சமயத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். மனிதர்கள் பார்க்க முடியாததை பார்க்கின்ற, செய்ய முடியாததை செய்கின்ற, தெரியாததை உணர்த்துகின்ற அதீத சக்தி உடையவர்களாக இருப்பார்கள். அண்ட வெளிகளில் ஏற்படும் சலனங்கள், சப்தங்கள் ஆகியவற்றை மந்திரங்களாக பிடித்து தரக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

இறைவனை இடைவிடாது தியானித்து தம் சித்தத்தை அடக்கி அக கண்ணால் இறைவனை கண்டு உணர்ந்து, தம் ஆத்ம சக்திகளால் செயற்கரிய செயல்களை செய்பவர்கள்.

உயிரும் இறைவனும் ஒன்றிய நிலையில் இருக்கும் யோக சமாதியை விரும்பி உணர்ந்தவர்கள். மௌனத்தை பிரதானமாக கொண்டு சித்தி அடைந்தவர்கள்.

இவர்கள் ரசவாத கலையை அறிந்தவர்கள். மண்ணை பொன்னாக்குவார்கள். கல்லை கற்கண்டாக மாற்றுவார்கள். தகரத்தை தங்கமாக்குவார்கள்.இவர்கள் எட்டு வகை பேராற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள்.

எட்டுவகை ஆற்றல் (அஷ்டமா ஷித்தி)...

1.அணிமா : யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஓர் அணுவாக சஞ்சரிப்பது.

2.மகிமா : ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது.

3.லகிமா : காற்றை விட உடல் எடையை குறைத்து மிதப்பது.

4.கரிமா : உடல் எடையையும்,வலிமையையும் மலைக்கு சமமாக உயர்த்துக் கொள்வது.

5.பிராப்தி : நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்றுவது.

6.ப்ரகாம்யம் : விரும்பிய அணைத்தையும் எளிதாக பெறுவது.

7.ஈசித்துவம் : எந்த வித சக்தி படைத்தவரையும் அடக்கி ஆழ்வது.

8.வசித்தும் : உலகை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.

இவைகள் அஷ்டமா சித்தியாகும்.
இவைகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள். இவர்கள் என்றும் அழியாத (காயகல்ப முறை) உடலை பெற்றவர்கள்.

கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்றவர்கள். மூச்சடக்கி உடலை இலகுவாக்கி பல நாடுகளையும் கண்டு மீண்டும் தன் பழைய உடலை அடைந்த அதிசய மகான்கள். முக்கால நிகழ்வுகளை அறியும் தன்மை பெற்றவர்கள். நினைத்த வடிவத்தை எடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.

நீரிலும், நெருப்பிலும், வானிலும் நடக்கும் ஆற்றலை பெற்றவர்கள். உலகம் முழுவதையும் தன் வயப்படுத்தும் வசியத்துவம் பெற்றவர்கள். இயற்கைக்கு மாறாக அற்புதங்களை செய்ய கூடியவர்கள். என்பவைகள் அணைத்தும் சித்தர்கள் பற்றிய செய்திகள்.

சித்தர்கள் என்றால் சித்துக்கள் செய்பவர்கள் என்று அர்த்தம். சித்து என்பதன் பொருள் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளுதல் என்பதாகும். இவர்கள் சிவானுபூதி பெற்றவர்கள்.

சிவத்துடன் கலந்ததால் பிறப்பு, இறப்பு அற்று என்றும் எப்போதும் ஒன்று போல் இருப்பவர்கள். கடவுளை காண முடியும் என்று கருதி கண்டு, அவரை அறிந்து, தெளிந்து சித்தி அடைந்தவர்கள். இறைவனே சித்தராக வந்து சித்துக்கள் நடத்தியதை கலம்பக இலக்கியங்கள் கூறுகின்றன.

மண்ணில் அடங்கியும், இறைவனுடன். இரண்டர கலந்தும் அழியாத வரம் பெற்ற இந்த சித்தர்கள் ஞானிகளால் கால ஓட்டத்தில் நம்முடன் வாழ்ந்து வருகின்றனர்.
யுகங்களை தாண்டி வாழும் இவர்களின் உடல் பாதுகாப்பு இரகசியங்கள் ஏராளம்.. ஏராளம்.. பல கற்பகாலம் இவர்கள் வாழ்ந்ததர்க்கு ஆதாரங்கள்.. அதுவும் ஏராளம்....

ஒரு சித்தர் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொன்னால் நம்ப முடியுமா நம்மால்?

ஆம் அதுதான் உண்மை.. உடலை விட்டு உயிர் பிரிந்து கூடுவிட்டு கூடு பாய்ந்த மகா யோகிகள் இவர்களில் பலர்.

இப்படி உருவமாக அருவமாக திரிபவர்கள் சித்தர்கள். இவர்களில் பெயர் தெரிந்தவர்கள் சிலர். பெயர் தெரியாதவர்கள் பலர்.

துறவு பூண்டு, காடு மேடுகளையெல்லாம் சுற்றி திரிந்து. உலகியல் விதிகளை புறந்தள்ளி நிற்பவர்கள் சிலர்.

பித்தராகவும், சித்தராகவும் மற்றவர்கள் தன்னை இழிவு படுத்தி பேசவும் ஏசவும் மறைந்தும் தோன்றியும் வாழ்பவர்கள் சிலர். தாம் கண்ட அனுபவங்களை விளக்க நூல்கள் எழுதி மனிதர்கள் அறியும் படி செய்தவர்கள் சிலர். வாய் மூடி மௌனமாக காணப்படுபவர்கள் சிலர். பிறர் தம்மை இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும், அறிந்தாலும், அறியாவிட்டாலும் நாம் நிறைவுடனும், அமைதியுடனும், ஆத்ம திருப்தியுடனும், வாழ்க்கையை நடத்துபவர்கள் இந்த சித்தர்கள்...

ஆணுறை விளம்பரங்களை பகலில் ஒளிபரப்ப வேண்டாம் , இரவு 10 மணிக்க மேல் ஒளிபரப்பலாம் - மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்...


ஸ்மிருதி இரானி தற்போது ஒளிபரப்பு துறை அமைச்சராக உள்ளார்...

அதிமுக ஒபிஎஸ் - இபிஎஸ் சின் கேடுகெட்ட செயல்...


இலுமினாட்டி களும் கடல் வணிக அரசியலும்...


தமிழா விழித்துக்கொள்...


மராட்டிய கன்னடன் ரஜினி கலாட்டா...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவும்.. தமிழினமும்...


2002ல் பயன்படுத்திய விடுதலைப் புலிகள் பயன்படுத்திய கடல்வழி விமானத்தை..

இந்தியா 2017 இன்றுதான் முதன்முதலாக பயன்படுத்த தொடக்கி (மோடி தொடங்கியுள்ளார்) உள்ளது...

இந்தியா அந்த அளவுக்கு வளர்ச்சியில் உள்ளது...

தமிழனுக்கு மட்டும் தனிநாடு இருந்து இருந்தால் உலக வல்லரசாக மாத்தி இருப்பான்...

பள்ளி மாணவர்களுக்கு அரேபிய பெல்லி டான்ஸ் காண்பித்த கேடுகெட்ட அதிமுக இபிஎஸ் - ஒபிஎஸ்...


இந்த மாதிரி ஒரு கேவலம் கெட்ட அரசாங்கம் இந்த உலகத்திலேயே இல்லை...

நம் மாணவ சமூகத்தை சீரழிக்க திட்டம்..

இடம் நாமக்கல்

அடுத்த தலைமுறையை இப்போதே பழுக்க வைக்கும் முயற்ச்சி...