20/05/2017

தமிழர் என்பது தாய்மொழி சார்ந்த இன அடையாளம்....


கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராட்டிரா, குஜராத், டெல்லி, மேற்கு வங்காளம், மணிப்பூர் என்று இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் வசிக்கிறார்கள்.

அங்கெல்லாம், தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள்,  இன்று வரை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.

அங்கே சில நூற்றாண்டுக்கும் மேலாக வசித்தாலும், அவர்கள்  மலயாளியாக, கன்னடராக, தெலுங்கராக, மராட்டியராக, குஜராத்தியாக, டெல்லிகாராக, வங்காளியாக, மணிப்புரியாக ஆக முடியாத போது..

தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள் என்பதற்காக, இங்கு மட்டும் பிற மொழியாளர்கள் எப்படி தமிழர்களாக ஆக முடியும்?

தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளாக வசிக்கிறோம், 800 ஆண்டுகளாக வசிக்கிறோம் என்ற காரணத்தால், மாற்று மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள் ஆகிவிட முடியாது.....

தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள்..

தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரும் தமிழ்நாட்டின் குடிமக்கள்.  இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது....

இனம் என்பது வேறு.....
இருப்பிடம் என்பது வேறு....

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


சிவாஜி ராவு கெய்க்வாடு எனும் ரஜினி காந்தன் பச்சை தமிழனா...


இதோ.. தன் மகன் போரில் புறமுதுகிட்டான் என தெரிந்தால் அவனுக்கு பால் கொடுத்த முலையை அறுத்தெறிவேன் எனும் புறநானூற்று தமிழ்த்தாயின் பரம்பரையில் வந்த பச்சை தமிழச்சி..

சக்குபாய் ராவ் கெய்க்வாட்...

3 ஆயிரம் தரிசன டிக்கெட் திருப்பதி பாலாஜியை மிஞ்சினார் ரஜினி...


பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


முன்னாள் கர்நாடக பிஜேபி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் 45000 கோடி ரூபாய் சட்ட விரோத சுரங்க ஊழல் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதில் சிறிய சதவிகிதம் கூட ஊழல் வழக்குகள் விசாரணை முறையாக நடைபெறுவதில்லை.

மற்ற கட்சிகளை, மற்ற அரசியல் வாதிகளை பிஜேபியின் வழிக்கு கொண்டு வருவதற்கு மட்டுமே CBI மற்றும் வருமான வரித்துறையினர் இந்த ஆட்சியில் பயன்படுத்தப்படுகின்றனர்.

ரெட்டி சகோதரர்கள் சுஷ்மா, ஜேட்லி மற்றும் வெங்கய்யா நாயுடு ஆகியோரின் உதவியோடு இந்த வழக்கை நிர்மூலம் ஆக்கிவிட்டனர்.

இந்தியாவில் ஊழலை ஒழிக்க கடவுளின் மறு உருவமாக வந்த மோடிக்கும் இந்த திருட்டு வேலையில் பங்கு இருக்கிறதா என்று பக்தர்கள் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.

செய்தி:

http://www.news18.com/news/india/rs-35000-crore-illegal-mining-cases-being-buried-quietly-in-karnataka-1404383.html

கன்னட ரஜினி கலாட்டா...


மாட்டுக் கறியும் பாஜக வாஜ்பாயி பெயரும் வரலாற்றில் ஆதாரம்...


மரியாதைக்குரிய ஒரு பேச்சாளரின் பேச்சு என்னை இப்புத்தகத்தை படிக்க தூண்டியது..

அதில் நான் கவனித்து திடுக்கிட்ட வாக்கியங்களை தருகிறேன் ஆதாரத்துடன்..

முதலில் மாட்டுக்கறி விஷயத்தை தருகிறேன்.. தொடர்ந்து படியுங்கள்...

சங்கராச்சாரியார் இவரை பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை இவர் தெய்வத்தின் குரல் என்ற புத்தகம் எழுதியுள்ளார் இது பல பாகங்ககளாக வந்துள்ளது.

அதில் இரண்டாவது தொகுதியில் புலாண் உண்ணுதல் பற்றிய வேதகால விஷயங்களை அவர் எழுதியுள்ளார்.

எப்படி பட்டும் படாமலும் எழுதியுள்ளார் என்பதை நீங்கள் படிக்கும் பொழுதே தெரிந்து கொள்ளலாம்.

யாகம் என்பது மூன்று அடிப்படையை கொண்டு உருவானது.

ஒன்று மந்திரம்..  இரண்டாவது தேவதை.. மூன்றாவது அவீஸ் ..

இந்த அவீஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் சாதாரணமாக போகலாம். ஆனால் இதன் அர்த்தம் பலியிடுதல்..

இந்த அவீஸ் யாகத்தில்...

ஆடு மாடு குதிரை மிகவும்
பெரும்பாலும் மாடு தான் .. அந்த காலகட்டத்தில் பயன்படுத்த பட்டது
இதற்கு மிகப்பெரிய உதாரணம் வாஜ்பேயி என்ற பட்டம்..

ஆரியர்கள்  நடத்துகின்ற யாகத்தில் மிகப்பெரிய யாகத்தின் பெயர், வாஜ்பேய யாகம்.

அதை வச்சுத்தான் அடல் பிகாரி வாஜ்பேய் என்ற பெயரும் உருவானது..

வாஜ்பேய யாகத்தை நடத்தினால் 23 பசுக்களை வெட்டி நிறுத்தி போட வேண்டும்.

இப்படி அரசனுக்கும் ஆரியனுக்கும் பாமரனுக்கும் எவ்வளவு மாடுகளை வெட்டி யாகம் செய்ய வேண்டும் என்று கணக்கு உள்ளது..

மேலே உள்ள தொடருக்கு வருவோம் சங்கராச்சாரியார் சொல்லுகிறார்..

உலக தீசடைகளுக்காக அவீஸ் நடத்தலாம் என்கிறார்.

அதாவது மாடுகளை வெட்டி நெருப்பில் போட்டு யாகம் நடத்துவது உலகில் உள்ள பீடைகளை பிணிகள் போகும் என்பதாக அர்த்தம்..

நமக்கு ஒரு சந்தேகம் யாகத்தில் [நெருப்பில்] இடப்படும் மாடுகளை என்ன செய்வது ?

பேசுவோம்..

ஆதாரம்:

தெய்வத்தின் குரல்.
வானதி பதிப்பகம் .
தொகுதி இரண்டு
ஜ்யோதிஷம் மீமாம்சை பாடம் .

இதெல்லாம் விட ராமர் சீதைக்கு நெய்யில் வாட்டிய மாட்டு இறைச்சியை ஊட்டி உண்டு மகிழ்ந்தார்கள் என்ற வால்மீகியின் வரலாறும் உண்டு..

[இதற்கு ஆதாரம் இராமாயணத்தில் உண்டு பின்னர் விளாவாரியாக பதிவிட்டு ஆதாரம் தருகிறேன்]...

திராவிட வீரமணி...


தாலியை அறுத்த நாய், தாலி எடுத்து கொடுத்து பகுத்தறிவு பேசுது...

திராவிடம் ஒர் திருட்டு நாடகம் என்பதற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளது...

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்...


பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும்.

ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம்.

பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர்.

வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

மருத்துவப் பயன்கள்:

இரத்தத்தைச் சுத்தப்படுத்த...

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு...

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க...

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு...

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு...

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்...

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்

இஞ்சி 5 கிராம்

பூண்டு பல் 5

நல்ல மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

சோம்பு 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

கறிவேப்பிலை 5 இணுக்கு

எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்..

இலுமினாட்டி சாமியார்கள்...


உலகத்தை பலவருடங்களாக ஆண்டு வரும் 13 குடும்பங்களின் இயக்கமான இலுமினாட்டிகள்.

2001 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்களின் லட்சியமான புதிய உலக கட்டமைப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்...

இதன் காரணமாக உலகில் உள்ள பல்வேறு போராட்ட இயக்கங்கள் தடை செய்யப் பட்டு, இன்று பல அழிக்கவும் பட்டுவிட்டன..

அதில் விடுதலைப் புலிகளும் அடக்கம்..

இவர்கள் மக்களை முன்பு போல வெளிப்படையாக அடிமைப்படுத்தாமல், அடிமையாக இருப்பதையே உணராமல் மக்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் வல்லவர்கள்.

அதற்காக அவர்கள் பல்வேறு வழிகளை கையாளுகின்றனர்.

அவற்றில் சில...

1) பணம் மற்றும் பொருளாதார தேடல்.

2) போதைக்கு அடிமை.

3) செய்திகளின் மூலம் மக்களின் சிந்தையை மடைமாற்றுவது.

4) பொழுதுப்போக்கு ஊடகத்திற்கு மக்களை அடிமையாக்குதல்.

5) போலி ஆன்மீகம்..

இதில் ஒன்றோடு ஒன்றிற்கு தொடர்பிருந்தாலும், இந்தியா குறிப்பாக தமிழக மக்களை கவருவதில் ஆன்மீகம் ஒரு முக்கியமான விடயமாக உள்ளது.

மனிதருக்கு அப்பாற்பற்ற இயற்கை இயக்கங்களை வியந்து ஒரு தனி மனிதன் புரிந்து கொண்டு, அதை மக்களிடம் பரப்பினால் அது ஆன்மீகம்,

நான் தான் அந்த இயற்கையையே இயக்குபவன் என்று மக்களிடத்தில் சொன்னால் அதுதான் போலி ஆன்மீகம்.

இந்த போலி ஆன்மீகவாதிகளில் முக்கியமான ஒருவரான ஜக்கி வாசுதேவ் என்பவர், இலுமினாட்டிகளால் இயக்கப்படுபவர்.

கடவுளின் பெயரில் இவர்கள் மக்களை சுரண்டுவதை இந்த அரசாங்கம் அனுமதிப்பது என்பதே விந்தை தான்.

வாருங்கள் முலிகை பெட்ரோல் தருகிறேன் என்பவர்களை எல்லாம் கைது செய்யும் அரசாங்கம், வாருங்கள் கடவுளை காட்டுகிறேன் என்பவர்களை கைது செய்வதில்லை..

இந்த ஜக்கி வாசுதேவ், தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வண பகுதிகளை , வளைத்து வைத்துள்ளார். மக்கள் கார்ப்ரேட் பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காகவே அனைத்திற்கும் ஆசைப்படு என்ற ஆன்மீக கோட்பாட்டை கொண்டுள்ளார் இவர்..

ஆசைதான் அணைத்து இன்னல்களுக்கும் காரணம் என்று சொன்ன புத்தர் பிறந்த பூமியில், அதற்கு நேரெதிரான கோட்பாடுகளை திட்ட மிட்டே இவரும் இவர்களின் சகாக்களும் பரப்புறை செய்துவருகின்றனர்.

இவர்கள் எல்லாம் யார்?

இவர்களை எதற்காக நாம் நம்ப வேண்டும்?

என்ற அடிப்படை கேள்விகளே மக்களுக்கு இவர்கள் பற்றிய உண்மையை எடுத்துறைக்கும்.

உண்மையில் இந்த ஒற்றைக் கண் ஜக்கி ஒரு இலுமினாட்டி... ஏற்கனவே அந்த ஆதாரப் புகைப்படம் வெளியிட்டுள்ளோம்...

கன்னட ரஜினிக்கு செருப்படி...


பொடுகு தொல்லையால் அவஸ்தை படுகிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு..


பெரும்பாலானோர் பொடுகு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகளவு கூந்தல் உதிர்வதால் நாளடைவில் வழுக்கை விழும்.

பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தலையில் போதிய எண்ணெய் இல்லாததால் தான்.

பொடுகு வந்து விட்டால் கூந்தல் உதிர்வது அதிகமாவதுடன், சருமத்திற்கும் பரவி விடும். எனவே உடனடியாக பொடுகை முற்றிலும் நீக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்..

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு..

தலையில் இருந்து செதில் செதிலாக வருவதை தவிர்க்க வேண்டுமெனில் எலுமிச்சை தான் சிறந்த பொருள்.

அதற்கு எலுமிச்சை சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளித்து பின் ஸ்கால்ப்பில் சிறிது எண்ணெய் தடவினால், ஸ்கால்ப் வறட்சியடைவதை தவிர்க்கலாம்.

தேங்காய் பால்..

தேங்காய் பாலும் பொடுகில் இருந்து நிவாரணம் தரக்கூடியவையே. அதற்கு தேங்காய் பாலை தலையில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

கற்றாழை..

கற்றாழை ஜெல் சருமத்திற்கு மட்டும் நல்ல பலனைத் தருவதில்லை, கூந்தலுக்கும் தான். அதிலும் கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் தடவி, கவர் கொண்டு மூடி, காலையில் எழுந்து குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இதனால் கற்றாழையில் உள்ள ஈரப்பதமானது, தலையில் இறங்கி வறட்சியைத் தடுக்கும்.

நல்லெண்ணெய்..

வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.

ஆலிவ் ஆயில்..

ஆலிவ் ஆயிலுக்கும் ஸ்கால்ப்பில் இருந்து வெளிவரும் செதிலை போக்கும் தன்மை உள்ளது. ஆகவே ஆலிவ் ஆயிலை தலையில் தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

வெங்காயம்..

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தயிர்..

தயிரில் சிறிது மிளகு தூள் சேர்த்து கலந்து, உச்சந்தலையில் படும்படி தேய்த்து, 20-30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்தால் பொடுகு படிப்படியாக நீங்கும்.

பச்சை பயறு மாவு..

பச்சை பயறு மாவில் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படியாக தேய்த்து ஊற வைத்து குளித்தால் பொடுகு மறைந்துவிடும்.

வசம்பு..

வசம்பை நன்கு பொடி செய்து அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

மருதாணி இலை..

மருதாணி இலையை அரைத்து அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலைக்கு தடவி குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, நரைமுடியின் நிறமும் மாறும்.

முட்டை..

முட்டையின் வெள்ளைக்கருவில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்...

வைரஸ் அனுப்பியவன் எங்கிருந்தாலும்.. நலமோடு வாழ்க...


இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் (Karl Marx)..


கார்ல் மார்க்ஸ் இந்தப் பெயர் எனக்கு பதிமூன்று  வயதிலேயே அறிமுகமாகி விட்டது. கம்யூனிச சித்தாந்தம் குறித்தோ மார்க்சின்  பிற எழுத்துக்கள் குறித்தோ அப்பொழுது தெரியாது.

மனிதர்களின் பிரச்சனைக்கு இவர் ஏதோ ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது என்பது அந்த வயதுப் புரிதல்.

பிறகு எனக்கு மார்சை ஒரு  கம்யூனிஸ்ட்டாகத் தான் தெரியும்..

சில வருடங்களுக்கு முன்பு இலுமினாட்டிகள்  குறித்த தேடலைத் தொடங்கினேன்.

வழக்கம் போல நம்முடைய மொழியில் அதற்கான தரவுகள் அவ்வளவாக இல்லை.

வெள்ளைக்காரன் காலைத் தானே பிடிக்க வேண்டும். பிடித்தேன்.

இலுமினாட்டிகள் குறித்து நம்பகமான புத்தகங்களாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகங்களில் முதல் புத்தகம் தொடங்கியே சோசலிச கொள்கைக்கும் இலுமினாட்டிகளின் இரகசிய திட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

அந்த வகையில் மார்க்சுக்கும் இலுமினாட்டிகளுடன் தொடர்பு  உண்டு என்று சொல்லப்பட்டிருந்தது.

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து படித்த எந்த புத்தகமும் இதைப்பற்றி ஒருவரிக் கூட மூச்சுவிட்டது கிடையாது.

மிஞ்சிப் போனால் அவர் ஒரு யூத இனத்தை சேர்ந்தவர் என்பது மாத்திரம் இருக்கும்.

இலுமினாட்டிக் குறித்த புத்தகங்களே மார்க்ஸ் இரகசிய குழுக்களுடன் தொடர்புக் கொண்டவர் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது.

ஒருவேளை இது வலதுசாரி முதலாளித்துவத்தின் சூழ்ச்சியாக இருக்குமோ என்பது என்னுடைய முதல் கட்ட சந்தேகம்.

கார்ல்மார்க்ஸ் இலுமினாட்டிப் போன்ற சாத்தானிய வழிபாடு செய்யும் இரகசிய குழுக்களுடன் தொடர்பு கொண்டவர் என்று பொய்யைப் பரப்பி அதன் மூலம் கம்யூனிசத்தை பங்கப்படுத்த இதுவும் ஒரு சூழ்ச்சியாக இருக்கும் என்று முதலில் இதை ஒதுக்கித் தள்ளிவிட்டேன்.

ஆனால் பிறகு எழுந்த சந்தேகங்கள்...

அப்படியானால் வெகு சன முதலாளித்துவ சார்புநிலை புத்தகங்கள் ஏன் இந்த சூழ்ச்சியை பெரும் அளவில் பயன்படுத்தவில்லை?

உண்மையில் மார்க்ஸ் சாத்தானிய வழிபாடு செய்யும் குழுக்களுடன் தொடர்பிலிருந்தார். அதுவே அவருடைய படைப்புகளின் பிரதிபலிப்பு என்றால் கம்யூனிச கொள்கையை பலவீனமாக்க இதை விட ஒரு சிறந்த ஆயுதம் இருக்க முடியுமா என்ன?

கம்யூனிசத்தையும் மார்க்சையும் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என்கிற அளவிற்கு புரட்டி எடுக்கும் முதலாளித்துவ பிரச்சார பீரங்கிகள் வதந்தி என்கிற அளவில் கூட இதைக் குறித்து வாய்திறக்காதது ஏன்?

இலுமினாட்டித் தொடர்பான புத்தகங்கள் மட்டுமே திரும்ப திரும்ப மார்க்சுக்கும் இரகசிய குழுவான இலுமினாட்டி களுக்கும் இருந்த தொடர்பை வலியுருத்தி வருவது ஏன் என்றுத் தெரிந்துக் கொள்ள மேலும் தேடியதில் கிடைத்த துப்பு மார்க்சின் இளமைக் கால படைப்புகளை அலச வேண்டும் என்பது.

மிகத் தீவிரமான மார்க்சிய அறிஞர்கள் கூட அவ்வளவாக மார்க்சின் இளமைக் கால படைப்புகளான கவிதைகளைப் பற்றிப் பொது வெளியில் பேச மாட்டார்கள். ஆனால் அதில் தான் இருக்கின்றன மார்க்சுக்கும் இலுமினாட்டிகளுக்கும் இருக்கும் தொடர்பு என்று சொன்னது அந்த துப்பு..

மார்க்சின் மீது இலுமினாட்டி குற்றச்சாட்டை வைக்கும் அனைத்து புத்தகங்களும் எடுத்துக்காட்டும் மார்க்சின் இளமைக் கால கவிதைப் படைப்பு ‘Invocation of One in Despair’ அதில் மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்…

So a god has snatched from me my all
In the curse and rack of destiny.
All his worlds are gone beyond recall!
Nothing but revenge is left to me.
I shall build my throne high overhead, Cold, tremendous shall its summit be.
For its bulwark - superstitious dread.
For its Marshal - blackest agony.
Who looks on it with a healthy eye,
Shall turn back, deathly pale and dumb,
Clutched by blind and chill mortality,
May his happiness prepare its tomb.

அவருடைய அடுத்த கவிதைப் படைப்பான Human Pride-ல் இப்படி எழுதுகிறார்….

With disdain I will throw my gauntlet
Full in the face of the world,
And see the collapse of this pygmy giant
Whose fall will not stifle my ardor.
Then I will be able to walk triumphantly
Like a god, through the ruins of their kingdom.
Every word of mine is fire and action.
My breast is equal to that of the Creator.

உங்களுக்கு John Milton எழுதிய The Paradise Lost காவியம் பரிட்சையம் என்றால் மார்க்சின் இந்த கவிதை வரிகளை இனம் கண்டுக் கொள்வதில் பிரச்சனையிருக்காது.

The Paradise Lost-ல் லூசிபர் (Lucifer) இறைவனுக்கு எதிராகப் பேசுவதுப் போல மில்டன் எழுதியிருப்பார். அந்த புத்தகத்தில் கதாநாயகன் அளவிற்கு லூசிபருக்கு வசனங்கள் இருக்கும். அந்த வசனங்களின் தன்மையை மேலே இருக்கும் மார்க்சின் கவிதைகளிலும் பார்க்கலாம்.

ஒரு விசயத்தைக் குறித்த கவிதையோ அல்லது கதையோ அந்த படைப்பிற்கு உரிய படைப்பாளனை அந்த விசயத்தோடு கண்டிப்பாக நூறு சதவிகிதம் தொடர்புடையவனாக கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் கிடையாது என்பதால் இந்த கவிதை துப்பை ஒதுக்கினால் அடுத்த துப்பை எடுத்துப் போடுகின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்.

அது Moritz Moses Hess. ஜெர்மன் Social Democratic கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.

இவருக்கு கம்யூனிச ரப்பி (rabbi) மற்றும் நவீன சோசலிசத்தின் தந்தை என்கிற சிறப்பும் உண்டு. மார்க்சின் சிந்தினையில் பெரும் தாக்கத்தை செலுத்தியவர் இவர்.

மார்க்சின் சிந்தனைப் போக்கை மாற்றியவர் என்றுக் கூட சொல்லலாம்.

இவர் 1841-ல் Rheinische Zeitung என்கிறப் பத்திரிக்கையைத் தொடங்குகிறார்.

அதில் அப்பொழுது 24 வயதேயான மார்க்சை ஆசிரியர் ஆக்குகிறார். இவரே மார்க்சை இலுமினாட்டிக் குழுவிற்குள் கொண்டு வந்தவர் என்று சொல்லப்படுகிறது.

ஏங்கல்சை (Friedrich Engels) மார்க்சுக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே. ஏங்கல்சும் முன்பே இவரால் இலுமினாட்டி குழுவிற்குள் கொண்டு வரப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

அன்றைய குழும்பிய ஜெர்மனிய இளைஞர்களின் குட்டையில் தனக்கான மீன்களைப் பிடித்தவர் Moritz Moses Hess. ஏங்கல்சை தான் எப்படி கம்யூனிஸ்டாக மாற்றினேன் என்பது குறித்து இப்படி எழுதுகிறார்….

என்னிடமிருந்து விடைப்பெற்று செல்லும் போது அவர் (ஏங்கல்ஸ்) முழுமையான துடிப்புமிக்க கம்யூனிஸ்டாக மாறியிருந்தார்.

இப்படித் தான் நான் அழிவிற்கான… (தொடரும்)...

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கலாட்டா...


இது என் எல்லைக்குள் வராது அங்க எடுத்துட்டு போங்க நகையை திருடனிடம் பறி கொடுத்த பெண் வீட்டாரை அலைய விட்ட திருவேற்காடு இன்ஸ்பெக்டரை அதிரடியாக சஸ்பெணட் செய்த சென்னையின் புதிய ஆணையர்...


சென்னை ஆவடியை சேர்ந்த பெண் சாலையில் சென்று கொண்டிருந்த போது வழிப்பறி திருடர்கள் அவரை தாக்கி அவரது 7 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுக்க சென்ற போது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், இது என் காவல் நிலைய எல்லைக்குள் வராது என அவர்களை அலைய விட்டுள்ளார். சம்பவம் நடந்த இடம் அவரது காவல் நிலைய பகுதிக்குள் தான் வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்த அவர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறியது உண்மை எனத் தெரியவந்த உடன் திருவேற்காடு குற்றப் பரிவு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனை அதிரடியாக சஸ்பெணட் செய்து சென்னையின் புதிய கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்...

காவேரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சாவூரில் விவசாயிகள் கோரிக்கைக்காக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது...


போராட்டத்தில் கலந்து கொண்ட பச்சைத் தமிழகம் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், பெ. மணியரசன், இயக்குநர் களஞ்சியம், அருள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள், விவசாயிகள் கைது...

தேன் நிலவு உருவான வரலாறு...


தேன் நிலவும் தவறான நம்பிக்கையும்...

நாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பார்ப்பது திருமணமான தம்பதிகள் கொண்டாட தேன் நிலவு ஏற்பாடு செய்வது.

தேன் நிலவு என்றால் இளம் தம்பதிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறொரு இடத்திற்கு அதாவது ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது.

இதை தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

உண்மையில் இது பிழையானது.

தேன் நிலவு என்பது கிரேக்கர்களுடைய பழக்கம் இது தான் ஆங்கிலத்தில் ஹனி மூன் என்று வந்து.. நமக்கு தேன் நிலவாக மாறியுள்ளது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே அர்த்தமாக இருக்கும்..

தேன் நிலவு - ஹனி மூன்..

இது எப்படி உருவானது தெரியுமா?

ஆரம்பத்தில் கிரேக்கர்கள் மாதத்தை கணக்கிட நிலவை வைத்தே கணிக்கிறார்கள்.. அரேபிய நாகரீகத்தை போல..

ஒரு முழு நிலவை கணக்கிட்டு அதிலிருந்து அடுத்த நிலவை ஒரு மாதமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.

இந்த ஒரு மாதத்திற்கு அதாவது திருமணம் முடிக்க இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மஞ்சள் தேன் கலந்த ஒரு விதமான பானத்தை பருக செய்கிறார்கள்..

முக்கியமாக தேன்..

ஒரு மாதம் தேன் கலந்த பானத்தை தினமும் குடிக்க வேண்டும் பின்னர் தான் திருமணம்.

இது இவர்களது பழங்கால கலாச்சார வழிமுறை...

ஒரு நிலவில் இருந்து அடுத்த நிலவு வந்த பிறகு திருமணம்.

இது தான் தேன் நிலவு என்று ஆகிற்று ..

இன்றைய தேன் நிலவுக்கும் இவர்களுடைய பழக்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?

நீங்களே யூகித்து கொள்ளுங்கள்...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


மறந்து விட்ட வார்த்தை.. வணக்கத்தை விட அழகான வார்த்தை...


தமிழ் முதல் மொழி என்று நான் சொல்ல மாட்டேன் மூத்த மொழி என்று வேண்டுமானால் சொல்லலாம்..

அப்படி பட்ட மூத்த மொழியில் முதல் வார்த்தை எதுவாக இருக்கும்..

அதாவது தமிழில் உருவான முதல் வார்த்தை எது இப்படி சிந்தனை சிலருக்கு ஏற்படலாம் உண்மையில் இதற்கு விடை உண்டு.

ஆம் முதல் வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

நாம் ஒருவரை சந்திக்கும் பொழுது வணக்கம் என்கிறோம் உண்மையில் வணக்கத்தை விட அழகான அதுவும் சிறந்த வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

இந்த அம்ம என்பது இடைச்சொல் இதற்கு அர்த்தம் பலவிதமான கூறுகிறது தமிழ் பண்டைய இலக்கியங்கள்.

அதில் ஒன்று அம்ம என்பதற்கு இதை கேள் என்றும்.. நல்ல பொழுது (குட் மார்னிங்) என்றும்.. இருவர் உரையாடலுக்கிடையே அவர்கள் கவனத்தை நம் பக்கம் திருப்ப அதான் (எஸ்கியூஸ்மி).

முதலில் பேச்சை ஆரம்பிக்கப்பட இந்த அம்ம என்ற வார்த்தையை நம்முடைய மூதாதையர்கள் பேசியுள்ளார்கள்.

இதற்கு ஆதாரமாக அம்ம, கேட்பிக்கும்
என தொல்காப்பியம் கூறுகிறது.

இந்த அம்ம, பக்கத்தில் வாழி என்ற சொல்லை வைத்து நற்றிணை கூறுகிறது.

அம்ம வாழி என்ற சொல் மரியாதைக்குறிய சொல்லாக பயன்படுத்தப்பட்டது.

இதை பல இடங்களில் இலக்கியத்தில் காணலாம்.

அம்ம வாழி பாண
ஐங்குறு காப்பியம் 139

அம்ம வாழி கொண்க
ஐங்குறு காப்பியம் 132

அம்ம வாழி தும்பி
குறுந்தொகை 392

இன்னாது அம்ம தோன்றல்
புறநானூறு 44

அதேபோல அரசனிடம் பேசும் பொழுது வணக்கம் அரசனே என்றெல்லாம் பேசவில்லை.. மாறாக அம்ம வாழிய பாணனே என்று அழைத்த்தாக தான் குறிப்பிடுகிறது.

அதே போன்று அம்மம் என்ற சொல் தாயின் மார்பகத்தை குறிக்கும் சொல் என்று பாவாணர் குறிப்பிடுகிறார்.

அரவணையாய் ஆயரேறே அம்மம் உண்ண துயிலெழாயே என்றும் தமிழ் இலக்கியம் கூறிகிறது.

இப்போது புரிகின்றதா ?

அம்மா என்ற வார்த்தை அம்ம என்ற வார்த்தையின் பரிணாமம் தான்.

அம்ம மதிக்ககூடிய சொல்.. அம்மம் தாயின் பாலூட்டக்கூடிய  மார்பகம்
அம்மா தாய்..

காலப் போக்கில் இந்த வார்த்தைகளை சுத்தமாக நாம் மறந்து விட்டோம் அல்லது கவனிப்பார் அற்று விட்டுவிட்டோம். மூத்த மொழியான தமிழில்..

அம்மா என்ற அழகான வார்த்தைக்கு அசல் வார்த்தையான அம்ம + வாழி என்பதை மீண்டும் உச்சரித்தால் என்ன?

வணக்கத்தை விட சிறந்த சொல்
அம்ம வாழி..

அனைவருக்கும் அம்ம வாழி...

பாஜக & அதிமுக வை பற்றி வாயே திறக்கவில்லை இந்த ரஜின்...


நான் பச்சைத் தமிழன். என்னை இங்கிருந்து வீசினாலும் இமயமலையில் தான் வீழ்வேன். எந்த மாநிலத்திலும் விழமாட்டேன் - ரஜினி...


தமிழர்களே தமிழர்களே... நீங்கள் என்னைக் கடலில் தூக்கி வீசினாலும் அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள சவாரி செய்யலாம் - கருணாநிதி.

அதே வழிமுறை...

கன்னட ரஜினி கலாட்டா...


பாஜக மோடியின் சாதனை...


இது மட்டுமா...

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் - குஜராத்தி.

சிபிஐ இயக்குனர் - குஜராத்தி.

இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் - குஜராத்தி.

என பல குஜராத்திகள் மோடி பிரதமர் ஆனா பின் இந்திய அதிகாரத்திற்குள் வந்துள்ளார்கள்...