20/05/2017

இது என் எல்லைக்குள் வராது அங்க எடுத்துட்டு போங்க நகையை திருடனிடம் பறி கொடுத்த பெண் வீட்டாரை அலைய விட்ட திருவேற்காடு இன்ஸ்பெக்டரை அதிரடியாக சஸ்பெணட் செய்த சென்னையின் புதிய ஆணையர்...


சென்னை ஆவடியை சேர்ந்த பெண் சாலையில் சென்று கொண்டிருந்த போது வழிப்பறி திருடர்கள் அவரை தாக்கி அவரது 7 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுக்க சென்ற போது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், இது என் காவல் நிலைய எல்லைக்குள் வராது என அவர்களை அலைய விட்டுள்ளார். சம்பவம் நடந்த இடம் அவரது காவல் நிலைய பகுதிக்குள் தான் வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்த அவர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறியது உண்மை எனத் தெரியவந்த உடன் திருவேற்காடு குற்றப் பரிவு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனை அதிரடியாக சஸ்பெணட் செய்து சென்னையின் புதிய கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.