10/08/2020

தவளை...


ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு, தண்ணீரை கொதிக்க வையுங்கள்...

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது...?

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது.....

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.

ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.

நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது...

சேக் உசேன் - மருதுபாண்டித் தளபதி...



ஏதோ தமிழ்-இசுலாமியர் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுப்பதை வரலாற்றில் நடக்காத அதிசயம் போல விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்.

தமிழன், அவன் எம்மதத்தான் ஆனாலும் தமிழனாகத்தான் தன்னை நினைக்கிறான்.

மருதுபாண்டியர் ஆங்கிலேயப் படையை எதிர்த்து போரிட்டபோது அவர்களது வலதுகரமாக விளங்கியவர் ஒரு இசுலாமியர்.

அவர்தான் 'இச்சப்பட்டி சேக் உசேன்'.

மருதுபாண்டியரைத் தோற்கடித்த கர்னல் வெல்ஸ் தனது 'இராணுவ நினைவுகள்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருதுபாண்டியரையும் அவரது குடும்பத்தாரையும் தூக்கிலிட்டு கொன்றபிறகு

சேக் உசேனை உடல்முழுவதும் சங்கிலியால் கட்டி இரும்புக்குண்டுகளுடன் பிணைத்து
மருதுபாண்டியர் படையைச் சேர்ந்த 72பேரை கப்பலில் ஏற்றி நாடு கடத்தினார்கள்.

மலேசியாவின் பினாங்கு தீவில் கொண்டு சிறை வைத்தார்கள்.

சேக் உசேன் இறுதிவரை அடங்கிப்போகாமல் முரண்டு பிடித்தார்.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட இரும்பு குண்டுகளுடன் நகரமுடியாமல் கிடந்த போதும் அவர் இறுமாப்புடன் இருந்தார்.

இறுதியில் பட்டினி போட்டு கொல்லப்பட்டார்.

மறக்கக்கூடாது தமிழர்களே
மறக்கக்கூடாது...

ஆரிய பிராமணன் திராவிட கன்னட கமல் பாஜக பினாமி என்று நான் அன்றே சொன்னது தான்...


அரசன்அன்று கொல்வான் இயற்கை நின்று கொல்லும்... விதி வலியது...


பிராடு பாஜக மோடி தன் நண்பன் அம்பானிக்கு கொடுத்துட்டு விவசாயிகளுக்கு கொடுத்ததாக பொய் கணக்கை காண்பிக்கிறான்...


திராவிட அமைப்புகளே...



காவிரியில் காட்டிக்கொடுப்பு..
கச்சத்தீவில் கழுத்தறுப்பு..
பாலாற்றில் காட்டிக்கொடுப்பு..
முல்லைப்பெரியாற்று உரிமை விட்டுக் கொடுப்பு..
ஈழத் தமிழர்களை அழிக்க துணை நிற்பு..

தமிழ்நாடு முழுக்க தெலுங்கருக்கு சிலைகள்..

கருணாநிதி கட்டிய சட்டமன்றத்திற்கு தெலுங்கன் ஓமந்தூரார் பெயர்..

சென்னையின் ஒவ்வொரு தெருவுக்கும் தெலுங்கன் பெயர் தெலுங்கர் சிலைகள்..

பூங்காக்கள் தோறும் தெலுங்கரின் பெயரில்.

தமிழ்நாட்டு இசையோ தெலுங்கில்..

பள்ளிகளிலோ தமிழே இல்லை.. ஆங்கிலம்..

சாதி ஒழிப்பு சாதி ஒழிப்பு என்று மேடை தோறும் பேசினாலும் மாதத்திற்கொரு சாதிச்சண்டை..

ஆளுங்கட்சி கன்னடர்  என்றால் எதிர்க்கட்சி தெலுங்கர்..

அவனை விட்டால் அதற்கடுத்து வருவதற்கு தயாராய் மற்றொரு தெலுங்கர்..

இங்கே தமிழர்கள் கட்சி தொடங்கினால் அது சாதிக்கட்சி..

வந்தேறிகள் தொடங்கினால் அது திராவிடக் கட்சி..

குடிமகன்களாக தமிழர்கள் ஆக்கப்பட்டுள்ள அவலம்..

கூலிகளாக தமிழர்கள்..

வந்தேறிகள் கையில் தொழில் வளம், அதிகாரம், ஊடகம்.

உணவகம் முதல் கக்கூஸ் ஏலம் எடுப்பது வரை வந்தேறிகள் கையில்..

இப்படி இந்த நூறு ஆண்டுகளில் உங்கள் திராவிடத்தால் நீங்கள் சாதித்தது என்ன?

உங்கள் திராவிடத்தின் கொள்கை பிராமண ஒழிப்பா? தமிழின ஒழிப்பா?

பாஜக சங்கிகளுக்கு செருப்படி வாங்குறதே வேலையா போச்சு...


தமிழர்கள் கடவுள்கள்...


திராவிடநாடு மோசடிக்கு வாய்தா கேட்ட அறிஞர் அண்ணா...


தமிழ்நாட்டில் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் பிறந்தது. தமிழ்த்தேசிய இனத்தின் இந்த முழக்கம் 1940ஆம் ஆண்டு நீதிக்கட்சி மாநாட்டில் தெலுங்கர்களால் 'திராவிடநாடு திராவிடருக்கே' என்று மாற்றப்பட்டது.

அப்போது தோன்றிய 'திராவிடநாடு' கோரிக்கை 1962ஆம் ஆண்டு தான் கைவிடப்பட்டது. அன்றைய நேரு அரசாங்கத்தின் பிரிவினைத் தடைச்சட்டம் வந்ததால் தி.மு.க. திராவிநாடு கோரிக்கையை கைவிட்டதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் அது உண்மையல்ல. 'திராவிடநாடு' கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன.

அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு தனது கட்சிக்குள் 'காலம் கனியும் போது கைவிடப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல் "ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்" நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு...

திராவிடநாடு சாத்தியமா? என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி.ராமன் இல்லத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தைச் சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.நடராசன், ஆசைத்தம்பி, மதியழகன், ஆகிய முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிராங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். அதுவரை அண்ணாவிடம் போய் பேசுகிற பழக்கந்தான் இருந்தது. இப்போது அவரை வரச்சொல்லி கூப்பிடுகிற அளவிற்கு நிலைமை மாறியது. அண்ணாவும் அவசரமாகப் புறப்பட்டு வந்தார். சொல்லப்படுகிற விஷயம் சரியாக இருப்பதால் ஆலோசிப்பதில் தவறில்லை என்று கருணாநிதியின் ஆதரவாளர்களும் கருதினர்.

திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, "என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்...! என்று சொன்னார். உடனே, சம்பத் "கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு, அதைச் சொல்லாதது மோசடியல்லவா?" என்று கேட்டார்.

அதற்கு அண்ணா "அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு"ன்னு வெறியேற்றி விட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா, தொண்டன் படுத்து விடுவான். அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்" என்றார்.

"மோசடிக்கு வாய்தா கேட்பது இன்னொரு மோசடியல்லவா? என்றார் சம்பத். அப்போது கருணாநிதி அண்ணாவை நோக்கி. "ஆமா அண்ணா, தம்பி மாறன் கூட 'ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்' என்று புத்தகத்தை எழுதிவிட்டு, 'என்ன மாமா இதெல்லாம் கிடைக்கும்னு எனக்குத் தோணலே' என்றுதான் சொன்னான் அண்ணா!" என்றார்.

சம்பத் சொன்னார். "இல்லை. உடனடியாக அதை அறிவித்து விட்டு மேடையிலே நாம் விளக்கம் சொன்னால் நமது தோழர்கள் ஒப்புக் கொள்வார்கள். இதில் சஞ்சலப்பட ஏதுமில்லை. சாத்தியமானதைச் சொல்லலாம். தமிழ்நாடு கேட்கலாம். அல்லது பிரிந்து போகிற உரிமையோடு கூட்டாட்சித் தத்துவத்தைச் சொல்லலாம். அதை நாம் இப்போதே விவாதித்து முடிவு செய்யலாம்" என்றார் சம்பத்.

அண்ணா அந்த அதிர்ச்சி வைத்தியத்தை ஒப்புக் கொள்ளவில்லை. 'கைவிட முடியாது' என்று சொல்ல வில்லை. அண்ணா சொன்னது. காலம் வரும், காலத்தை எதிர் பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும் போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரையில் இதைப்பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்" என்றார்.

எப்படியோ அண்ணா சம்பத்தை தாஜா செய்து அனுப்பி விட்டு, மற்றவர்களைப் பார்த்து, "அவன் கூப்பிட்டானென்று நீங்கள் வந்து விடுவதா? விவஸ்தை இல்லையா?" என்று அதட்டி அனுப்பினார்.

மேற்கண்ட இந்த நூலின் பதிவை இன்று உயிரோடிருக்கும் கருணாநிதி இதுநாள் வரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உரையாடல் மற்றுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல பிரிவினைச் தடைச்சட்டம் வந்தது. காலம் வரும் என்று காத்திருந்த அண்ணா அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பிரிவினையைக் கைவிட்டார் என்று தான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது. ஒருவேளை பிரிவினை தடைச்சட்டம் வராமல் இருந்திருந்தாலும் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டிருப்பார் என்பதே அன்றைய வரலாறாக இருந்திருக்கும்.

ஈ.வெ.கி. சம்பத் கூறியது போல, அண்ணா கேட்ட திராவிடநாடு மட்டும் மோசடி அல்ல; 'திராவிடம்' என்ற சொல்லே மோசடி தான். இந்த மோசடிக்கு வாய்தா கேட்பதற்கு கூட இன்றைக்கு எந்த திராவிட இயக்கமும் தயாராக இல்லை. எனவே எல்லா திராவிட இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களுக்கு விடிவு பிறக்கும்....

நம்ப முடியாத உண்மைகள் - mosquito...



தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலில் பலர் பலியாகி கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

பாஜக பிராடு பயலுங்க...


பூஜையறை என்ற ஒன்று இவர்களின் இல்லத்தில் இருக்காதா ?

ஏன் அங்கெல்லாம் முருகனுக்கு இடமில்லையா ?

கொரோனா தொற்றிலிருந்து அமித்ஷா குணமடைந்ததாக வந்த தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு...


அப்பாடா நாங்க கூட வெட்டி வச்ச குழி வீணா போயிருமோன்னு பயந்துட்டோம்😜

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரின் முகத்தில் கரிபூசிய ஜின்னா...



1940ஆம் ஆண்டு தந்தை பெரியார் மும்பைக்குச் சென்று ஜின்னா, அம்பேத்கர் ஆகிய இரண்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய நிகழ்வை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக திராவிட இயக்கத்தவர் குறிப்பிடுவர். அந்தச் சந்திப்பில் பெரியார் திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவளிக்க வேண்டுமாறு ஜின்னாவை வற்புறுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லி மழுப்பி விடுவார்கள்.

உண்மையில் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவு தந்தாரா? இல்லையா? எனும் கேள்விக்கு விடை சொல்வார் எவருமில்லை. பெரியாரும், அண்ணாவும் கூட இந்தச் சந்திப்பு குறித்து திறந்த மனதோடு கூறிட முன்வரவில்லை. அதற்குக்காரணம் திராவிடநாடு விடுதலை என்பது மக்களின் விருப்பமானதும் அல்ல. சாத்தியமானதும் அல்ல என்பதை ஜின்னா தெளிவுபடுத்தி விட்ட காரணத்தால் இதனை தமது இயக்கத்தவர்களிடம் கூற வேண்டியிருக்கும். இதன் காரணமாக இயக்கத்தவர் நம்பிக்கை இழந்து விடுவர் என்பது தான். இதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

8.1.1940 மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை ஜின்னா, அம்பேத்கர், பெரியார் சந்திப்பு கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில் அண்ணா பங்கேற்காமல் தாராவி சென்று விடுகிறார். இந்தச் சந்திப்பு குறித்து அண்ணா கூறுவதை பார்ப்போம். "தோழர் ஜின்னாவை நமது தலைவர் சந்திக்க விரும்பிய போது நான் உடன்வர மறுத்தேன் என்றும் நான் அப்போது துரோகம் செய்தேன் என்றும் சமீபத்தில் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நான் உடன்போக மறுத்தது உண்மை தான். தோழர் ஜின்னாவை ஒரு திட்டமான முடிவை வைத்துக் கொண்டு பாருங்கள். வெறும் உபச்சாரத்திற்காகப் பார்ப்பதில் பலனேதும் இல்லை என்று சொன்னேன். தலைவருடைய சந்திப்பு உபச்சார சந்திப்பு என்று நான் அறிந்து கொண்ட காரணத்தினால் தான், நான் உடன் போக மறுத்தேன்.

தலைவரோடு சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பாலசுப்பிரமணியம், சைவச்சீலராக விளங்கும் தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் உடன் சென்றார்கள். மூவரும் திரும்பி வரும்போது 'மனக்கசப்போடு' தான் வந்தார்கள். சந்தர்ப்பம் அப்போதெல்லாம் தவற விடப்பட்டது. தோழர் அம்பேத்கரைச் சந்தித்த வாய்ப்பும் பயனற்றே போயிற்று. இப்படியாக தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்" (சி.என்.ஏ.பரிமளம்- அறிஞர் அண்ணாவின் தன் வரலாறு)

அண்ணா மூவரும் மனக்கசப்போடு தான் வந்தார்கள் என்று கூறுவதன் மூலம் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வில்லையென்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்து, ஜின்னா சந்திப்பு குறித்து பெரியாரிடம் ஆனந்த விகடன் இதழுக்காக (11.4.1965) சாவி, மணியன் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அதில் பெரியார் வெள்ளைக்காரன் அதிகார ஒப்படைப்பை தன்னிடம் அளிக்க மறுத்து விட்டதை தெரிவித்து விட்டு ஜின்னா சந்திப்பை கூறுகிறார்: "இத்தோட விட்டு விடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக்கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்லறதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, சரி நான் மெட்ராசுக்கு வரப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்னு சொன்னாரு....
கேள்வி: ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?

பெரியார் பதில்: உன் கொச்சனைத் (பிரச்சனை) தனியாகவே எடுத்து சொல்லிக் கோன்னுட்டுப் போயிட்டாரு. அப்பதான் ஜின்னா ராமசாமி மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாருன்னு பத்திரிகையிலே எழுதினாங்க".

பெரியார் பேட்டியில் ஜின்னா சொல்ல வந்ததை மறைத்து விட்டு உன்பிரச்னை என்று கூறியதாக தெரிவிக்கிறார். திராவிடநாடு என்பது பெரியாரின் அகநிலைக் கருத்து என்பதே ஜின்னாவின் திட்டவட்ட முடிவாகும்.

26.1.1941இல் நீதிக்கட்சி பிரமுகர் வி.வி.இராமசாமி நாடார் மற்றும் 'நாடார்குல மித்திரன்' இதழாசிரியர் எம்.ஏ.முத்து நாடார் இருவரும் மும்பை சென்று ஜின்னாவை சந்தித்து திராவிட நாடு குறித்துப் பேசினர்.
வி.வி.இராமசாமி: எங்களுடைய திராவிடநாடு கோரிக்கை கதி என்ன?

ஜின்னா: 'உங்களுடைய திராவிட நாட்டினுடைய ஜனங்களின் விருப்பம் இன்னாதெனத் தெரிய வேண்டும்' என்றார். மிகச்சரியாக ஓராண்டு முடியும் நிலையில் ஜின்னா நினைவாற்றலுடன் தான் இதைக் கேட்டுள்ளார். (செ.அருள் செல்வன்-அண்ணாவின் அரசியல்குரு 'சண்டே அப்சர்வர்' பி.பாலசுப்ரமணியம்)

அன்று பெரியார்- ஜின்னா பேச்சை மொழிபெயர்த்தவர் பி.பாலசுப்பிரமணியம். அப்போது ஜின்னா கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பெரியார் திணறியுள்ளார். இந்த தகவலை தனது தந்தையார் பாலசுப்பிரமணியம் தன்னிடம் தெரிவித்ததாக அவரின் மகள் ஜெயா தெரிவித்ததையும் மேற்படி நூலில் அருள்செல்வன் குறிப்பிடுகிறார்.

9.8.1944இல் பெரியார் ஜின்னாவிற்குப் பாகிஸ்தான் கோரிக்கையையும் ஒன்றாக இணைத்துக் காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்துமாறு ஒரு கடிதம் எழுதினார். அப்போது ஜின்னா அதற்கு கோபம் கொப்பளிக்க பதில் தந்தார். அது வருமாறு:

"எனக்கு எப்போதும் மதராஸ் மக்களிடம் பரிவு உண்டு. அவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் பிராமணர் அல்லாதவர். திராவிட நாட்டை அமைக்க நினைத்தால் அதைப்பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது. உங்களுக்காக நான் பேச முடியாது. உங்களுடையை நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன். உங்களது செயல்பாடுகளில் உறுதியில்லை" . (Dr.E,Sa.Viswanathan- The Political Career of E.V.Ramasami Naicker)

பெரியார் இந்தக்கடிதத்தில் தனக்குச் சாதகமாக உள்ள பகுதிகளை மட்டும் வெளியிட்டதாகவும் அதைக் கேள்விபட்ட ஜின்னா தனக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தை செய்தி ஏடுகளுக்கு கொடுத்ததாகவும் மேற்படி நூலாசிரியர் விசுவநாதன் கூறுகிறார்.

திராவிட நாட்டு விடுதலையை தமிழரல்லாத தெலுங்கர் கன்னடர், மலையாளி ஆகிய மூன்று இனத்தவரின் பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்பதை வடநாட்டில் பிறந்த ஜின்னாவால் கூற முடிகிற போது...

தமிழர்களுக்காக போராடியதாக சொல்லிக் கொள்ளும் ஈ.வே. ராமசாமி நாயக்கரால் இதை ஏன் கூற முடியவில்லை என்பது தான் தமிழர்கள் மனதில் எழும்புகின்ற கேள்வியாகும்...

எனக்கென்னவோ பாஜக காரங்க மேல தான் சந்தேகமா இருக்கு...


ஆரியம் திராவிடம் இரண்டும் ஒன்றே...


போலீஸ் என்கவுன்டருக்கு பயந்து வடசென்னை பிரபல ரவுடி பாஜவில் இணைந்தார்: ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் பிரிவில் இருந்தவர்...



தேர்தல் நேரத்தில் கலவரத்தை தூண்ட சதியா ?

சென்னை: வடசென்னையை கலக்கி வந்தவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்தவருமான பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜவில் இணைந்தார். கட்சியில் தொடர்ந்து ரவுடிகளை இணைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜவில் அண்மைக்காலமாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் சேர்ந்து வருகின்றனர். கட்சியில் இணைந்த அவர்களுக்கு உடனடியாக கட்சியில் பதவி வழங்கப்பட்டு வந்தது. இது காலம் காலமாக பணியாற்றி கட்சியை வளர்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் கட்சியில் இணைகிறார்கள், பதவியை வாங்குகிறார்கள் அதோடு சரி. அவர்கள் கட்சிக்காக நடைபெறும் எந்த போராட்டத்திலோ, ஆர்ப்பாட்டத்திலோ பங்கேற்பது இல்லை.

அவர்கள் தங்களுக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக தான் கட்சியில் இணைந்து வருவதாக கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது பாஜவில் வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ஒருவர் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த கல்வெட்டு ரவி தான் அவர். அவருடன் மற்றொரு ரவுடி சத்யா(எ)சத்தியராஜ் என்பவரும் கட்சியில் சேர்ந்துள்ளார். கல்ெவட்டு ரவி, சத்தியராஜ் ஆகியோர் நேற்று பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜ பொது செயலாளர் கருநாகராஜன் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர். இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சியில் இணைந்த பிரபல ரவுடி ரவி (எ) கல்வெட்டு ரவி(எ)ரவிசங்கர் (42), மீது கேளம்பாக்கம் கன்னியப்பன் கொலை, தண்டையார்பேட்டை வீனஸ் படுகொலை, ராயபுரம் பிரான்சிஸ் படுகொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் படுகொலைகள் என மொத்தம் 6 படுகொலைகள் உள்பட 35 வழக்குகள் உள்ளது. மேலும் 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர். கல்வெட்டு ரவி, தண்டையார்பேட்டை வஉசி நகர் 55 வது பிளாக்கில் வசித்து வந்தார். ரவுடிகளின் குற்றங்களுக்கு ஏற்ப, அவர்களை போலீசார் வகைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களில் கொடூரமான குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்களை ஏ பிளஸ் பிரிவில் சேர்ப்பார்கள். அதில் கல்வெட்டு ரவியும் ஏ பிளஸ் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான். கடந்த சில ஆண்டுகளாக இவன் குற்றங்களை செய்து வந்தாலும், அவன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்த பிறகு ரவுடிகள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதில் கல்வெட்டு ரவியையும் போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கினர். ஏ பிளஸ் பிரிவில் உள்ள ரவுடிகளிடம் எப்போதும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருக்கும். இதனால் அவர்களை பிடிக்கும்போது தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதங்களால் ரவுடிகளை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கலாம். இதனால், ரவுடி கல்வெட்டு ரவியையும் தனிப்படை போலீசார் தேடத் தொடங்கினர். கல்வெட்டு ரவியும், காக்கா தோப்பு பாலாஜி என்ற ரவுடியும் எதிர்க்கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருந்தனர். பின்னர் காக்கா தோப்பு பாலாஜியும், ரவுடி சிடி மணியும் ஒன்று சேர்ந்ததால், எப்படியும் தன்னை தீர்த்துக் கட்டுவார்கள் என்று நினைத்திருந்தான். இதனால் அரசியலில் சேர முடிவு எடுத்ததால் காக்காதோப்பு பாலாஜியுடன் சமரசத்தில் ஈடுபட்டுள்ளான். அவனிடம் வாக்குறுதி வாங்கிய பிறகு தற்போது கட்சியில் சேர முடிவு எடுத்துள்ளான்.

அதேநேரத்தில், எப்படியாவது போலீசார் நம்மை சுட்டுப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு வடசென்னையில் உள்ள பிரபல வக்கீலும், பாஜ பிரமுகருமானவர் மூலம் கட்சியில் இணைந்துள்ளான். அவனுடன் கூட்டாளி ரவுடி சத்தியராஜ்(28) என்பவனும் சேர்ந்துள்ளான். அவன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்துள்ளான். போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடிகள் இருவரும் பாஜவில் இணைந்துள்ளது சென்னை போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் சில நாட்களுக்கு முன்னர் வழிப்பறி, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி முரளீதரன், பாஜவில் இணைந்து இளைஞர் அணியில் பதவி வாங்கினான். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கல்வெட்டு ரவி, சத்தியராஜ் ஆகியோர் கட்சியில் சேர்ந்துள்ளனர். இதற்கிடையில், கூடுவாஞ்சேரி, படப்பை உள்ளிட்ட இடங்களில் நடந்த 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஜோஷ்வா என்ற ரவுடி இரு நாட்களுக்கு முன்பு பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கட்சியில் சேர்ந்துள்ளார்.

50 கொலை ரவுடிக்கு எதிர்ப்பு
தென்சென்னையை கலக்கி வரும் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா. இவன் மீது 6 கொலை வழக்கு உள்ளிட்ட 50 வழக்குகள் உள்ளன. இவனது கூட்டாளிகள் ஓட்டேரி கார்த்திக், ராஜசேகர், மேத்யூ ஆகியோர் ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களது கோஷ்டிக்கும், பிரபல ரவுடி சீசிங் ராஜா, கொக்கி வினோத் ஆகியோ ரவுடி கோஷ்டிகளுக்கிடையே மோதல் எழுந்துள்ளது. இரு தரப்பிலும் பல கொலைகளை செய்துள்ளனர். இதனால் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கு சமயம் பார்த்து வருகின்றனர். சூர்யா, கடந்த ஒன்னறை ஆண்டுகளாக சிறையில் இருந்து விட்டு கடந்த மாதம்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தான். அவனும் பாஜவில் சேர விருப்பம் தெரிவித்தான். ஆனால் அவன் பல வழக்குகளில் தேடப்பட்டு வருவதும், அவனது உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரிந்ததால், அவனை கட்சியில் சேர்க்க சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைசி நேரத்தில் அவன் சேரவில்லை என்று கூறப்படுகிறது...

சமூக நீதியும், சம உரிமையும் பேசும் திமுக ஊழல் மன்னன் ஆ.இராசா சக மனிதரை அடிமைப்படுத்தி அக மகிழ்ந்த தருணம்...


திருட்டு தெலுங்கு திமுக வரலாறு...


முகநூல் இருந்தா உங்க இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பொய் பிரச்சாரம் பண்ணுவீங்களாடா திருட்டு திராவிடன்களா...


இந்திய நாட்டின் மூத்த குடிமக்கள் தமிழர்களே...



கடந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன. இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.
இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

ஆனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உண்மை..

இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர் – ஆய்வாளர் – பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார் – மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.

பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.

பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டு பிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.

ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாக – மாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.

காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது. (மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்).

உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.

அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம் – உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம் – உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.

அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்...

2020 ஆண்டின் இந்திய மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து தன் நண்பன் அம்பானியை உலகின் 4வது பணக்காரனாக்கிய பாஜக மோடி...


மகாபாரதமும் - பாரதமும்...



துரியோதனனும் ஸ்டாலினும்...

ரெண்டு பேரும், சொந்த திறமையினால் விட, பிறப்புரிமையை முன்னிறுத்தி, அரசாள நினைத்தவர்கள்..

பீஷ்மரும் அத்வானியும்..

இருவரும் மகுடம் தரிக்கவில்லை. மரியாதை கிடைத்தது. ஆனாலும், இறுதிக்காலத்தில் கையறு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்.

அர்ஜுணனும் கெஜ்ரிவாலும்..

அதீத திறமையுடையவர்கள்! தர்மத்தின் பக்கம் நின்றதால், மிக உயர்ந்த நிலைக்கு வளர்ந்தவர்கள்!.. ஆனால், தர்மத்தின்படி வாழ்வதின் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.

கர்ணனும் மன்மோஹன் சிங்கும்...

அதிபுத்திசாலிகள். ஆனால், அதர்மத்தின் பக்கம் நின்றதால்,.. வாழ்வில் எந்தவித உயர்வும் காணாதவர்கள்..

சகுனியும் மோடியும்..

இருவரும் நிஜமான போர்/சண்டை செய்ததில்லை... வெறும் கீழ்த்தரமான தந்திரங்கள் மட்டுமே செய்தனர்.

திருதராஷ்டிரனும் சோனியா வும்..

மகன்(கள்) மேல் வைத்த கண்மூடித்தனமான பாசத்தால், நிதரிசனத்தை காணமுடியாத குருடர்களானவர்கள்...

பகவான் கிருஷ்ணரும் அப்துல் கலாமும்..

இருவரையும் கொண்டாடுவோம்,.. ஆனால் அவர்கள் உபதேசித்தவற்றை எதையும் பின்பற்ற மாட்டோம்,..

இவ்வளவு தான்,...
மஹாபாரதமும், .. பாரதமும்...

எச். ராஜா வை உள்ள வச்சிருங்க 😂


அமானுஷ்யம்...



ஆவிகள் தங்களது இருப்பை சில ஒலிகள் மூலம் வாசனைகள் மூலமும் மனிதர்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டும்.

ஆனால் ஆவிகள் நாய்கள், பூனைகள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகளுக்குச் சர்வ சாதாரணமாகத் தெரியும்.

நமது நடமாட்டத்தை விலங்குகள் எப்படி அவதானிக்கிறதோ அது போன்றே ஆவிகளின் நடமாட்டத்தையும் துல்லியமாக அறிகிறது.  இதற்கு உதாரணமாக யாருமே இல்லாத வெற்று திசையை நோக்கி நாய்கள் தொடர்ச்சியாகக் குரைப்பதையும் இல்லாத ஆளை துரத்திக் கொண்டு செல்வதையும் கூறலாம்.

ஆவிகள் இருக்கும் பகுதியை மனிதர்கள் வேறு எந்தவகையில் அறியலாம் என்றால் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு நாம் சென்ற உடன் தேவை இல்லாமல் உடல் புல்லரிக்கும்.  மன ஒட்டங்கள் தாறுமாறாக ஓடும்.  நமது கவனம் முழுமையாகச் சிதறும்.  அப்போது மனதைப் பிடித்து இழுத்து ஒரு மையப்புள்ளியில் நிறுத்தினால் இது சாத்யமாகும் நபர்க்கு ஆவிகள் வெண்படலமாகவோ கரும்படலமாகவோ தெரியும்.  மற்றபடி ஆவிகள் பார்க்க இயலாது.

பிரத்தியேகப் பயிற்சி எடுத்தவர்கள் வேண்டுமானால் தாங்கள் விரும்புகின்ற படி ஆவிகளை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் அழைத்துப் பார்க்கலாம், பேசலாம்.  அவைகளுக்குச் சில வேலைகள் தரலாம்.  அதன் மூலம் முடியாத பலவற்றை முடித்தும் காட்டலாம்.  ஆனால் அது மாந்தீரிகனாக இருப்பதற்கு உதவுமே அல்லாது நல்ல மனிதனாக இறைவனிடம் சேர்வதற்கு உதவாது.

 ஆவிகளை அனைவராலும் பார்த்து விட முடியாது என்கின்றபோது அவைகளைச் சிலர் புகைப்படம் எடுத்து இருக்கிறார்களே அது எப்படி நிகழந்தது என்ற வினா எழும்புவது இயற்கை முதன் முதலில் ஆவிகளைப் படம் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் வில்லியம் மம்ளர் ஆவார்.  இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்.

1868 ஆம் வருடத்தில் வேறு ஒரு காட்சியைப் புகைப்படம் எடுத்துக் கழுவி பார்த்தபோது சில வருடங்களுக்கு முன்பு இறந்து போன தனது உறவினர் ஒருவன் நிழல் உருவம் புகைப்படத்தில் படிந்து இருப்பதைப் பார்த்து வியந்து போனார்.  பின்னர் பல புகைப்பட நிபுணர்களிடம் அந்தப் படத்தைக் காட்டி இது எப்படி நிகழ்ந்து இருக்கும் என்று ஆராயச் சொன்னார்.

இந்த புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதே காலகட்டத்தில் வேறு சில ஆவிகளின் புகைப்படமும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த புகைப்படமும் எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாத உண்மையான புகைப்படம் என்ற முடிவிற்கு வந்தனர்.  அதன்பின் பல்வேறு நிஜ ஆவி புகைப்படங்கள் உலக ஆவி ஆர்வலர்களுக்கு இடையில் இன்று நடமாடுகிறது.

இந்தப் புகைப்படங்கள் அனைத்துமே திட்டமிட்டு காத்திருந்து எடுத்த புகைப்படங்கள் அல்ல.  யதேச்சையாக கேமரா கண்களுக்குள் சரிவர அகப்படாத ஆவிகள் புகைப்படத்திற்குள் அகப்பட்டுக் கொள்வது ஒரு அதிசயம் ஆகும்.  அதற்கான காரணங்கள் இதுவரை புரிய படவில்லை...

பாஜக எனும் பாலியல் ஜல்சா கட்சி...


பாஜக மோடியின் ஆட்சி பிராடுகளின் ஆட்சி...


வியட்நாம் ஆண்ட தமிழ் மன்னன் பாண்டியன்...



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்.

அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன்.
அவனுடைய பெயர் ஸ்ரீமாறன்.
தமிழில் இதை திருமாறன் என்று
சொல்லலாம்.

வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது .
இந்தக் கல்வெட்டில் ஆட்சி , ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை .

கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

வியட்னாமில் வோ- சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION ) இது செதுக்கப்பட்டுள்ளது .

ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை ) கல்வெட்டு குறிப்பிடுகிறது .

பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன .
ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன.

சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன.கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன.

கல்வெட்டின் சில வரிகள்...

. . . . . .. . ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . . . . . . . . . . .

ஸ்ரீ மாற லோ. . . . . ன. . . .. . . . குலதந்தனேன

க்ராபதிம் ஸ்வகன. . .. .. ச . . . . . . . .. .. ..

இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும் , அசையா சொத்து (ஸ்தாவர , ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான்.

எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான் .
இது வீரனுக்கு தெரியட்டும். .. . . . . .. . . என்று பாதியில் முடிகிறது கல்வெட்டு.

இதில் முக்கியமான சொற்கள்  “ஸ்ரீமாற ராஜகுல ” என்பதாகும் .இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது .

ஆனால் வியட்னாம் , லாவோஸ் , கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது .

திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN ) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY ) சீனாவை ஆண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘ சம்பா ’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர் .

சம்பா (CHAMPA ) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும் .
மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU ) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN ) என்றும் எழுதிவைத்துள்ளனர் .
இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO ) புதல்வன் என்றும் தெரிகிறது .

தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர் .

கி .பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது . ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது .

ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி ’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை .

எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN ) என்று முடிவதால் இதை ‘ வர்மன்” என்று முடிவு செய்துள்ளனர் .

ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘ வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது .

இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் "ஸ்ரீமாறன்", "வர்மன்" என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன .

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் "மூலவர்மன்" என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் 800 க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய ’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு ) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன :-

(1 ) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன் .
அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர் .
இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம் .

(2 ) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது .
அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி ),
ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி )
ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம் .
பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.

(3 ) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க காலமன்னன் "நிலந்தரு திருவில் பாண்டியன்" என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது .
பல நாடுகளை வென்று தந்ததால்  “நிலந்தரு” “ திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் .

(4 ) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்துமுறை ‘ மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் "முடித்திருமாறன்" .
நற்றிணை 105 , 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன் .

(5 ) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன .
அகத்தியர் “ கடலைக் குடித்த ”  கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன .
முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “ கடலைக் குடித்தார் ” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர் .
வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “ குல குரு ” என்றும் கூறுகிறது .

(6 ) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன் ,
பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6–61 )

(7 ) புறநானூற்றுப் பாடல் (புறம் 182 ) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “ கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி .
இவன் வெளிநாடு செல்லும்போதோ , வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.

(8 ) டாலமி , பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி .பி . முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர் .

(9 ) தென் இந்தியாவை கி .மு இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது .

(10 ) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன .

(11 ) ‘ மிலிந்த பன்ன ’ என்ற கி . மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம் , குஜராத் , சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது .

(12 ) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது.
தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.
மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன .

அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன .

ரோம் (இத்தாலி ) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே !

Reference :
(1 ) R. C . MAJUMDAR - CHAMPA : HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI –
REPRINT 1985 .

(2 ) SANGAM LITERATURE –
ETTUTHOKAI & PATHUPPATTU

(3 ) பாண்டியர் செபேடுகள் பத்து – PUBLISHED BY THE TAMIL
VARALATRU KAZHAGAM ,
MADRAS 1967...

உலகத்திலேயே வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு ஊக்கத்தொகை அளிக்கும் ஒரே கட்சி பாஜக . கர்ர்ர்ர்ர் த்தூ...


போங்கடா சங்கிகளா.. போய் பிச்சை எடுங்க...


இன பற்று இழிவானதா?



இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது இனப்பற்று..

ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை... இன உணர்வு என்றுதான் குறிப்பிடுகிறார்கள்..

மேடையில் மார் தட்டுபவர்கள் கூட இன உணர்வு என் இரத்தத்திலேயே ஊறியது என்றுதான் முழங்குகிறார்கள்.

அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று.

இனம், தமிழ், தமிழன் என்று பேசுவதெல்லாம் இன்று அநாகரிகமாகி விட்டது. இப்படிப் பேசுபவர்களையெல்லாம் பிற்போக்குத்தனம் உடையவர்களாக, குறுகிய மனப்பான்மை உடையவர்களாக, இழிவானவர்களாகப் பார்க்கிறது இன்றைய தமிழ்நாட்டுச் சமுதாயம்.

குறிப்பாக இளைஞர்கள், அதிலும் பெருநகர இளைஞர்கள் பலர் இன்று இன உணர்வு பற்றி இப்படித்தான் நினைப்பு கொண்டிருக்கிறார்கள்.

இன உணர்வு என்பதும் ஏதோ சாதி உணர்வு போன்ற ஒரு குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு எனவும் கருதுகிறார்கள்.

ஆனால் தங்களைத் தவிர வேறு யாராவது இந்தியாவில் இப்படிக் கருதுகிறார்களா என்று தமிழர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆந்திரர்களோ, வங்காளர்களோ, கன்னடர்களோ, காஷ்மீரிகளோ யாராவது இப்படி நினைக்கிறார்களா?

முன்னாள் இந்தியப் பிரதமர் கூடத் தாடியும் தலைப்பாகையுமாய் இன்றும் தன் இன அடையாளத்தோடுதானே காட்சியளித்தார்..

சீக்கியர் சீக்கியராகவும், மராத்தியர் மராத்தியராகவும், குஜராத்தியர் குஜராத்தியராகவும் இருந்தாலெல்லாம் கெட்டுவிடாத இந்திய ஒருமைப்பாடு தமிழர் தமிழராக இருந்தால் மட்டும் கெட்டுவிடுமா என்று தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி இந்தியாவில்தான் என்றில்லை. உலகில் எந்த இனத்து மக்களும் தங்கள் இன அடையாளத்தை ஒருபொழுதும்
எதற்காகவும் கைகழுவுவது இல்லை. வெளிநாட்டுத் தமிழர்கள் உட்பட..

இனப்பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்றால் உலகத்திலேயே தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தவிர மற்ற எல்லாருமே குறுகிய மனப்பான்மை படைத்தவர்களா?

மற்ற இனத்தவர்களெல்லாம் அவரவர் இன அடையாளங்களோடு வாழும்பொழுது தமிழர்கள் மட்டும் தங்களுடைய இன அடையாளங்களைக் வெறுப்பது அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாக, அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக ஆகாதா என்பதை ஒவ்வொரு தமிழரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு மொழி, பண்பாடு, வரலாறு போன்றவை இருக்கின்றன.

இனம் என்கிற ஓர் அடையாளத்தை நாம் புறக்கணிப்பதால் பெருமைக்குரிய இத்தனை அடையாளங்களையும் இழக்கிறோம்.

கூடவே நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள், அவர்களின் சாதனைகள் எனப் பல அறிவுசார்ச் சொத்துகளையும் இழக்கிறோம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி முதலான பதினெட்டு விளைபொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை வாங்கியபொழுது அவற்றையெல்லாம் வழக்காடி மீட்க முடிந்ததே இங்குள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த முன்னோர்களால் கண்டு பிடிக்கப்பட்டவைதாம் அவை என்பதை நிரூபிக்க முடிந்ததால் தான்.

அப்படி நிரூபிக்க முடிந்ததே, இன்றும் தம் இனப் பழக்கவழக்கங்களையும் அடையாளங்களையும் துறக்காத மக்கள் இங்கு இருப்பதால்தான்.

எனவே இனம் என்பது வெறும் குழு அடையாளத்தைத் தருவது மட்டும் இல்லை. கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் நம் முன்னோர்கள் என்னவெல்லாம் கண்டு பிடித்திருக்கிறார்களோ, எவ்வளவெல்லாம் சாதித்திருக்கிறார்களோ அந்த அறிவுசார்ச் சொத்துகளுக்கெல்லாமான வாரிசு உரிமையை நமக்குத் தருவதும் கூட!

அது மட்டும் இல்லை. இனம் என்பது இந்நாளில் ஒரு பன்னாட்டு அடையாளம் (International Identity). எல்லா இனத்து மக்களும் அவரவர் எல்லைகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்த வரை மொழி என்பது வெறும் ஊடகமாகவும், இனம் என்பது வெறும் குழு அடையாளமாகவும்தான் இருந்தன.

ஆனால் எல்லா நாட்டு மக்களும், எல்லா இனத்து மக்களும் உலகின் எல்லா நாடுகளிலும் கலந்து வாழத் தொடங்கிவிட்ட இந்த உலகமயமாக்கல் காலத்தில் (Globalisation Era) நாட்டின் பெயரை விட இனத்தின் பெயரும் மொழியின் பெயரும்தான் ஒருவருடைய உண்மையான பன்னாட்டு அடையாளமாக விளங்குகின்றன!

அதுவும் இந்தியாவைப் பொறுத்தவரை இங்குள்ளவர்களுக்கு இன அடையாளம் என்பது எந்தக் காலத்திலும் இன்றியமையாதது.

ஏனென்றால் உலகில் மற்ற நாடுகளுக்கெல்லாம் அந்தந்த நாட்டுக்கென்று மொழி, பண்பாடு, உணவுமுறை, ஆடைமுறை, வரலாறு முதலானவை இருக்கின்றன.

ஆனால் இந்தியாவுக்கு அப்படி இல்லை. இங்குள்ள பதினான்குக்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் மொழியும், பண்பாடும், வரலாறும் தான் இந்தியாவின் மொழி, பண்பாடு, வரலாறு எல்லாம்.

மற்றபடி இந்தியாவுக்கென்று தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது.

எனவே மற்ற நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் சொந்த இன அடையாளங்களை இழந்தாலும் அவர்கள் வாழும் நாட்டுக்கென்று இருக்கும் பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணி அவர்களின் அடையாளமாக நிலைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியர் ஒருவர் அவ்வாறு தன் தாய்மொழியையோ இன அடையாளத்தையோ மறந்தால் அவர் பன்னாட்டு அளவில், சொந்த அடையாளம் (International Self Identity) எதுவுமே இல்லாத ஒருவராகத்தான் ஆகி விடுவார்.

தனித்தன்மை பேணுதல் (Character Maintenance) என்னும் பெயரில் நடை, உடை, பாவனை, தோற்றம், பேசும் முறை, சிந்திக்கும் முறை போன்ற சிறு சிறு அடையாளங்களைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருக்கும் இந்தக் காலத்தில் இப்படிப் பன்னாட்டு அடையாளமாகத் திகழும் இனத்தையும் மொழியையும் விட்டுக் கொடுக்கலாமா?

தமிழினமே  சிந்தித்து விழித்தெழு...

திருட்டு திமுக வும் வெடி மருந்து தொழிற்சாலையும்...



நிலத்தை அபகரிப்பதற்காக நடந்த மோதலில், கள்ளத்துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார்.

அதுகுறித்த வழக்கு விசாரணையில், திமுக எம்எல்ஏ, வெடிமருந்து தொழிற்சாலை நடத்திவருவதாகவும், அவரது தொழிற்சாலையில் வெடிமருந்துகளைக் கைப்பற்றி, ஆலைக்கு சீல் வைத்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது...

என்னாது திமுக ஸ்டாலின் நினைவிடமா?



இது எப்ப... ஒரு இலவு காத்த கிளி என்றும் பாராமல் 😁

திருட்டு திராவிடர்ஸ்...



நான் : தமிழர் கழகம் என்று வைக்காமல் ஏன் திராவிடர் கழகம் என்று வைத்தார்?

திராவிடர் : தமிழர் கழகம் என்று வைத்தால் பார்ப்பான் உள்ளே வந்து விடுவான், அதனால் திராவிடர் கழகம் என்று வைத்தார்,

நான் : அப்ப கன்னடன், தெலுங்கன், மலையாளி உள்ளே வந்தால் பரவாயில்லையா என்றேன்,

திராவிடர் : நீ இனவெறிப் பிடித்து அலைகிறாய் என்றுவிட்டு கிளம்பிட்டார்,

இது போன மாதம்...

நான் : மேலே கேட்ட அதேக்கேள்வியை அப்படியே கேட்டேன்,

திராவிடர் : அன்றைய சென்னை மாகாணத்தில் கன்னடர், தெலுங்கர், மலையாளி, தமிழர்கள் என அனைவரும் ஒன்றாக இருந்தனர், அதனால் திராவிடர் கழகம் என்று வைத்தார்,

நான் : சரி அன்றைய சென்னை மாகாணத்தில் வசித்த மற்ற மொழியினருக்கு தமிழ் தெரியுமா என்று வினவினேன்,

திராவிடர் : மொழி பிரச்சனையில்லை, மொழி ஒரு கருத்து பரிமாற்றக் கருவியே தவிர வேறொன்றுக்கும் பயனில்லை என்றார்,

நான் : சரி மொழி கருத்து பரிமாற்றத்திர்க்கு மட்டுமே பயன்படுவதாக வைத்துக் கொள்வோம், மற்ற மொழியினருக்கு எவ்வாறு கருத்தை பரிமாற்றம் செய்தார் உங்க ஆசான்,

அவர்கள் மொழியில் கருத்தை பரிமாற்றம் செய்ய ஏதாவது ஏடுகள் வெளியிட்டாரா?

(உ.தா: விடுதலை, குடியரசு போன்று) என்றுக் கேட்டேன்..

திராவிடர் : நீ மொழிவெறிப் பிடித்து அலைகிறாய் என்றுவிட்டு கிளம்பிட்டார்,

இது இந்த மாதம்...

இந்த பிழைப்புக்கு மரத்தில் நாண்டுக்கிட்டு சாகுங்கடா...

இந்த கொடுமையெல்லாம் இந்த திருட்டு திமுக கூட்டத்துல தான் நடக்கும்...


கற்பழிப்பு, கொலை, கொள்ளை, விபச்சாரம் செய்கிறவன் எல்லாரும் இருக்கும் ஒரே இடம் பாஜக தான்...



கேளம்பாக்கம் கன்னியப்பன் கொலை, தண்டையார் பேட்டை வீனஸ் படுகொலை, ராயபுரம் பிரான்சிஸ் படுகொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் படுகொலை என மொத்தம் 6 படுகொலைகள் உள்பட 35 வழக்குகளோடு, 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட வடசென்னை பிரபல ரவுடி கல்வெட்டுரவி பாஜகவில் இணைந்தார்...

இந்த கஞ்சா குடிக்கி திருட்டு பய பாபா ராம்தேவ் பிடிச்சு உள்ளே போடுங்கயா...


கருப்பட்டியின் பயன்கள்...



பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

அதன் ஆரம்பமே 5G & டிஜிட்டல் முறை...


அதிமுக எடப்பாடிக்கு.. அரசியல் தான் எல்லாமே...


இந்த கொரோனா ஊரடங்கு யை வைத்து the great reset என்று அறிவித்து உள்ள திட்டத்தின் கீழ் அதனை செய்து முடிக்க திட்டம் இட்டு உள்ளார்கள்...



அவர்களின் நோக்கங்களில் ஒன்று "global citizen" என்னும் உலக குடிமகனை இக்கல்வி திட்டத்தின் மூலம் உருவாக்குவது என்றும் அறிவித்து உள்ளார்கள்..இக்கல்வி "உலக ஒழுங்கமைப்பு/சீர்திருத்தத்தை" நிறைய நாடுகளில் pilot test bed projects யை அவர்கள் நிதியளிக்கும் NGO கள் மூலம் ஏற்கனவே trial பார்த்தும் வருகிறார்கள்...

இங்கு நடக்கும் wholesale சிலபஸ் மாறுதல்களை இக்கண்ணோட்டதுடன் நோக்குங்கள்..அமெரிக்காவின் common core திட்டம் கேட்ஸ் ஆதரித்து உள்ளார்..

இங்கு pratham foundation என்னும் NGO இந்த உலக குடிமகனை உருவாகும் கல்வியினை பெருமுதலாளியின் நிதி கொண்டு பெரும் அளவில் நிறைவேற்றியும் வருகிறார்கள்..

கல்வி முன்பை போன்று சர்வ நிச்சயமாக இருக்காது..இந்த  பெருமுதலாளிகளின் education 4.0 திட்டத்தில் தேசம்,தேசபக்தி பொது கலாச்சாரம்,தேச சரித்திரம் பற்றினவைகள் எல்லாம் cultural bias யை நீக்குகிறோம் என்ற சாக்கில் தேச பாட திட்டத்தில் அழிக்க பட்டு விடும்..உலக குடிமகன் உருவாகி ஒற்றை உலக அரசாங்கத்தை வரவேற்க தயாராக இருப்பான்...

கம்யூனிசம் - திராவிடம் எல்லாமே தெலுங்கர்களின் கூடாரம் தான்...



பொதுவுடமை பொங்கச்சோறும் மாட்லாடு மனவாடுகளின் கூடாரம்தான்...

என்னடா இது திராவிடமும், பொதுவுடமையும் கூடிக் குழாவும் காரணமும் இதுவே...

ஏழு கொண்டல வாடா கோவிந்தா கோவிந்தா...

பாஜக எச்ச சோறு கலாட்டாக்கள் 😁


பிராடு பாஜக கொரோனா அப்பளம் விற்ற பன்றிக்கும் கொரோனா வந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...


திராவிடத்தால் வீழ்ந்தோம்.... முன்னுரையில் இருந்து...



இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஈ.வே இராமசாமிப் பெரியார் கட்டியமைத்த திராவிடர் கழகத்தின் தொடக்கக் கால உறுப்பினர் யாருமே இருக்க மாட்டார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய தலை மக்கள் யாருமே இருக்கப் போவதில்லை அவற்றின் வழி வந்த பிற கழகங்களோ பெயருக்குதாம் அவற்றின் கொள்கை வழி நிற்பன.

செத்த உடம்பை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு சாகக் கிடக்கின்ற அதன் திராவிடக் கொள்கையை இந்நிலையில் ஆழமாக அலச வேண்டி உள்ளது.

வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய ஓர்மைக்கு நல்ல ஊட்டமும் தெளிவும் கிடைக்கும் என்பதைக்  கருதியே இந்த ஆய்வை நடத்த வேண்டி உள்ளது.

அதை திராவிடக் கொள்கை தமிழக அரசியல் வாழ்வியலின் மீது முக்கால் நூற்றாண்டுகளாக அழுந்தக் குந்திக் கிடந்ததனால் தமிழுக்கும் தமிழரினத்திற்கும் நன்மைகளை விடத் தீமைகளே மிகுந்தன வென்பதைத் தமிழரில் இளந்தலைமுறையினருக்கு  மிகத் தெளிவாக உணர்த்தியே ஆக வேண்டும்.

இதனால் எட்டிக் கசப்பான சில உண்மைகளையும் உள்ளடக்க நேர்ந்தது.

குறுநூலாக வடிவெடுத்துள்ள இந்தக் கட்டுரை நல்ல தூசியைக் கிளப்பும்  என்பதை நூலாசிரியன் என்னும் வகையில் நன்கறிவேன்.

தமிழரினத்தின் நலன் கருதி ஒரு வரலாற்றுப் பணியைச் செய்யாமலிருக்க இயலவில்லை. உண்மை விளங்கியும் அதைப் புலப்படுத்தாமை கயமையாகுமன்றோ ?

அதை மனத்தில் கொண்டே சில கருத்துக்களைக் கட்டுரையாக்கித் தமிழ் மக்களின் முன்னால்  படைத்திடத் துணிந்தேன் போற்றல்களாயினும்  தூற்றல்களாயினும்  அவற்றையெல்லாம் கட்டிச்  சுமக்கத் தானே வேண்டும் ?

அவையாவும் காலம் என்மேல் ஏற்றிட்ட பொதியே எனக் கருதி விளைவைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஏடெடுத்தென் எழுதுவதற்கு.

அறிவர் குணா.. நன்றியும் நெகிழ்வும்...