15/05/2018

அருண் ஜெட்லியின் உடல்நலக் குறைவின் காரணமாக நிதித்துறை பியுஷ் கோயலிடம் போய் இருக்கிறது....


ஷீர்டி இண்டஸ்ட்ரீஸ் 650 கோடிகள் வாங்கி ஒடியதும், அதன் முன்னாள் இயக்குனராக கோயலின் மனைவி இருந்ததுமான ஒரு சர்ச்சை ஒரு மாதத்திற்கு முன்பு தி வயரில் வந்தது. இப்போது நிதித்துறை கூடுதல் பதவி...

பொதுத்தேர்வுகள் எழுதி, அதன் மதிப்பெண் பட்டியலுக்காக காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்...


உங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை ஒருபோதும் யாருக்கும் வழங்கி விடாதீர்கள்.. இது உங்கள் வாழ்க்கை..

நீங்கள் இப்போது எடுக்கப்போகும் முடிவு அடுத்த 50 ஆண்டுகள் நீங்கள் எப்படி வாழப்போகிறீர்கள் என்பதே தீர்மானிக்கும்..

அது வெற்றியோ (அ) தோல்வியோ அதைப்பற்றி கவலை படாதீர்கள்..

தோல்வி அடைந்தால் பெருமை கொள்ளுங்கள், வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறேன் என்று,

இந்த பதிவைப்போடும் நானும் அந்த பெரிய தோல்வியை சந்தித்தவனே..

வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி கொள்ளுங்கள் அந்த வெற்றிக்காக, ஆனால் ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்.

ஏனெனில் உங்கள் வாழ்க்கை இந்த வெற்றியோடு முடிய போவதில்லை...

கர்நாடக மாநில தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் 20 நாள்களுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது...


பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் அதிகரிப்பு...

பாஜக பொன். ராதா வின் அதிகார திமீர்...


மனமும் குடும்பமும்...


இந்த பிரபஞ்சத்தின் அங்கமான நாம் பஞ்சபூத தத்துவமான உடலை எடுத்துள்ளோம். அதன் பாதுகாவலனாக மனம் என்கிற தன்முனைப்பு இயக்கம் செயல்படுகிறது.

இந்த மனம் பல்வேறு பிறவிகளாக பரிணிமித்து ஒரு குடும்பமாக சேர்ந்து வாழ விரும்பியுள்ளது. எனவே நாம் கடந்த பிறவிகளின் உறவுகளோடே மறுபிறப்பு எடுக்கிறோம்.

ஆனால் அதே உறவு முறையில் பிறப்பதில்லை. கடந்த பிறவியில் எனக்கு அண்ணனாக இருந்தவர் தற்போது தந்தையாகவோ மகனாவோ நண்பனாகவோ இருக்கலாம்.

கடந்த பிறவியில் அவரை நான் எப்படி பாவித்தேன் என்பதில்தான் இன்றைய உறவுமுறையே அமையும். நான் யாரை எப்படி பாவித்தேனோ அப்படி.

சமீத்தில் நடைப்பெற்ற முற்பிறவி பற்றிய ஆய்வில் நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஒரே சமூகமாகவோ பிறப்பெடுக்கிறோம் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த பிறவியில் நாம் சந்திக்கும் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் கடந்த பிறவியில் பரிச்சயமானவர்களே. மனதின் செயல்பாடு அவ்வாறே அமைந்துள்ளது.

உங்கள் தற்போதைய குடும்ப உறுப்பினர்கள் கடந்த பிறவியில் நீங்கள் ஆசைப்பட்டதால் கிடைத்தவர்களே. ஆம் உங்கள் தாயாகட்டும் தந்தையாகட்டும் மகனாகட்டும் சகோதரராகட்டும் அனைவரும் உங்கள் ஆசையால் உண்டானவர்களே.

இப்பேற்பட்ட இந்த அற்புதமான உறவுகளை நாம் எந்தளவு நேசிக்கிறோம் என்று நினைக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தயவுசெய்து உறவுகளை நேசியுங்கள். நீங்கள் உதாசீனப் படுத்தினால் அடுத்த பிறப்பில் இவர்கள் வேறு எங்கோ பிறக்க நேரிடும். இந்த புனிதமான உறவு இயற்கை அருளிய வரம்.

யார் என்ன தவறுகளை செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து மறந்து அன்போடு பழக கற்றுக் கொள்ளுங்கள். வாழ்கை என்பது எல்லையில்லா பேரறிவால் வழங்கப்பட்ட ஓர் மாபெரும் வரம். இது உங்கள் குடும்பம். தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான பதிவுதான்...

தமிழக டூபாக்கூர்கள் கலாட்டா...


காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும்...


ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இருப்பார் ...

உருவாக்கப்படும் நீர்ப் பங்கீட்டு அமைப்பு 10 பேர் கொண்டதாக இருக்கும்

- மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங்...

சாகர்மாலா திட்டத்திற்கு தயாராகும் உலக வல்லரசு நாடுகள்...


வெண்டையை சாப்பிட்டால்...


புத்தி சரியில்லாதவன் வெண்டையை சாப்பிட்டால் விவரமாகி விடுவான். என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை.

வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான எரியம் (phosphorus), தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல... மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாசைகளில் ஒன்றான சுவாகிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `பெண்களின் விரல் (Ladies finger)’ என்று அழைக்கின்றனர்.

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் முதலானவை கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவு (Salad) சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை காகிதம் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி கோப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘விருந்துகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது. காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்... ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை காகிதம் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.

வெண்டையின் விசேச குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

வெண்டைக்காயை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் நெகிழி (Plastic) பையில் போட்டு காய்கறி வைக்கும் தட்டில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் உயிர்ச்சத்து சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். வெப்பமான இருமலைக் குணமாக்கும். வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய சேதம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம்...

இதையெல்லாம் என்னிடம் நானே கேட்டுக்கொண்ட பிறகு கிடைத்த பதில் தான் - நான் அடிமை...


இங்கு நடந்த- நடக்கின்ற- நடக்கப்போகும் என எல்லா அரசியல் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற வலி எனக்கு நிறையவே இருக்கிறது..

இதில் முதல் குற்றவாளி நானே..


அடுத்த தலைமுறை கேட்கும் ஒவ்வொரு அறிவு மற்றும் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை..

அந்த கேள்விக்கான பதிலை தற்போது தேடிக்கொண்டு இருக்கிறேன், தேடலின் பயணத்தில்...

காயகல்பம்...


கற்பம் உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அது, உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.

அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்
மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்
தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு
பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே
- திருமந்திரம்..

கற்ப மருந்து உண்பதிற்கும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும். கற்ப மருந்தையும் குறிப்பிட்ட பொழுதுகளிலேயே உண்ண வேண்டும் என்னும் விதி பல சித்தர் நூல்களில் காணப்படுகிறது.

கற்ப மருந்திற்கும் இயற்கைக்கும் தொடர்பு தெரிகிறது. இவ்வாறு உண்ணப்படுகின்ற 108 வகை கற்ப மருந்தும், இளமைக்காலத்தில் தான் செய்தனவெல்லாம் முதுமைக் காலத்தில் செய்ய முடியவில்லையே என்று, மனம் தளர்ந்து வருந்துகின்றவர்களுக்குக் கொடையாகக் கிடைக்கக் கூடியது. கற்பம் உண்பவர்கள் என்றும் இளமையுடனிருக்கலாம்.

இவ்வகை கற்ப (HEALTH MANAGEMENT SYSTEM) முறைகளை அறியாதிருந்தால் யாருக்கு நட்டம்?

தமிழகம் எத்தனையோ அரிய கலைகளை அறிந்திருந்தும் அவை பயன்படாமல் மறந்திருப்பதைப் போல, இதையும் மற்றவை போல மறந்து ஒதுக்கி விடலாகாது...

பாஜக - காங்கிரஸ் ஒன்னு.. இதை அறியாத மக்கள் வாழ்க்கையே மண்ணு...


சீனத்தூதருடன் ராகுல் ரகசியமாக ஏற்கனவே பேசிவிட்டார் என கூறப்படுகிறது..

முன்பு ஒட்டுமொத்த தமிழர்களை கொன்றாவது தனது கணவனின் சாவிற்கு பழிவாங்க நினைத்த சோனியா அம்மையார், தற்பொழுது மகன் மூலமாக மீதமுள்ள தமிழர்களை முடித்துக் காட்டுவர்...

பாவிகளின் பைபிள்...


புனித பைபிள் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம்..

பாவிகளின் பைபிள் என்றோ.. அல்லது ஒழுக்கம் கெட்ட பைபிள் என்றோ.. நாம் சிந்தித்தது கூட இல்லை.. அப்படி தானே..

ஆனால் (THE WICKED BIBLE).. என்று ஒரு பைபிள் உலகத்தில் இருந்தது (இருக்கிறது)..

இதற்கு தமிழ் அர்த்தம் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் தான்..

இப்படி ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று பெயர் வைத்தவர்கள் கிருஸ்துவ சபையினர்கள் தான்...

ஏன் இப்படி தங்களுடைய புனித வேதத்திற்கு பெயர் வைத்தார்கள் தெரியுமா?

1631 ல் லண்டனிலுள்ள ராயல் பதிப்பகம் மூலமாக இந்த பைபிள் வெளியிடப்பட்டது..

கிங் ஜேம்ஸ் வர்ஷனின் மறுபதிப்பாக இவற்றை வெளியிட்டு இருந்தார்கள்..

கிருஸ்துவர்கள் மதிக்ககூடிய பர்கரும் லூக்காவும் எழுதியுள்ளார்கள்.

பிரபலமான  பத்து கட்டளையில் அதாவது (TEN COMENTMENTS)ல்.

ஏழாவது கட்டளையான விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தையை மாற்றி விபச்சாரம் செய்..

என்று அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டது.....

பரவலாக பரவியது இந்த பைபிள்..

பிறகு தான் இதை கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே அனைத்து பிரதிகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பி விட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இஸ்டார் சேம்பர் எனுமிடத்தில் அச்சிடப்பட்ட அனைத்து பைபிளையும் தீயிட்டு கொளுத்த பட்டது..

பதிப்பகத்தாருக்கு 300 பவுண்ட் அபராதம் விதிக்க பட்டது.

இருப்பினும் ஒரு சாரார் வேண்டுமென்று தான் இவர்கள் இப்படி பிரிண்ட் செய்தார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள்....

காரணம் சில வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக்கி வேண்டும் என்று தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும்.

ஒரு உலக வேதத்தில் பிழையுடன் எப்படி தெரியாமல் அச்சடித்து இருப்பார்கள் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

மற்றும் இந்த பைபிளில் ஏசுவை பற்றி நிறைய விஷயங்கள் இப்போது உள்ள பைபிளுக்கு மாற்றமாக இருக்கிறதாகவும் கூறப்படுகிறது..

இருப்பினும் இதுவே போதும் இதற்கு மேலுள்ள வாதம் பிறதி வாதத்தை பேசுவது சரியல்ல...

இப்போது விஷயம் எனனவென்றால்..

ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று சொல்லக் கூடிய தவறுதலாக அச்சடிக்கப்பட்ட பைபிளை முற்றுமுழுதாக அழித்து விட்டாலும் சில பிரதிகள் உலகத்தில் உள்ளது...

அதிகார பூர்வ அறிவிப்பாக டெக்சாசில் மற்றும் இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் இது பொது மக்கள் பார்வையில் படாமல் வைத்து இருந்தாலும்..

சில பிரதிகள் உலகத்தில் உள்ளதாக அறியப்படுகிறது..

இதன் சொர்ப அளவு  மற்றும் பழங்கால அச்சிப்பிரதியாதளால்.. இதற்கு மவுசு அதிகம் இந்திய மதிப்பில் கோடிக் கனக்கில் இந்த பைபிளுக்கு விலையுள்ளது இன்றும்...

மழை பெய்ய காரணம் என்ன?


வரலாற்றில் மனிதனை கடவுளாக ஆக்கப்பட்ட தருணம்...


நான் சொல்ல போகும் விஷயத்தை நன்றாக கூர்ந்து கவனித்து படியுங்கள்..

கொஞ்சம் சிந்தனையை மாற்றுனீர்கலாயின் பதிவு திசை திரும்பி விடும் ..

இது மேம்படுத்தி சொல்வதில்லை..

இதுவரை உங்களுக்கு யாரும் சொல்லாத செய்தி..

அதுவும் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள ஒரு விஷயம் அதன் தாக்கம் இன்றும் நம்மிடம் உள்ளது.

என்ற ரீதியின் அடிப்படையில் கூறுகிறேன்..

இறைவன் = இறையன்..

இந்த இரண்டு வார்த்தையும் ஒன்று போன்று இருந்தாலும் அர்த்தங்கள் வேறு  வேறானது.

இறைவன் என்றால் கடவுள்..

இறையன் என்றால் புலவன் அதாவது மனிதன் ...

இந்த இரண்டு வார்த்தைக்கும் நடுவில் உள்ள வார்த்தை

ய மற்றும் வ

என்கிற வார்த்தை தான்...

உதாரனத்திற்க்கு  துறைவன் + துறையன்..

இரண்டு வார்த்தையும் ஒன்றாக இருந்தாலும் இரண்டுமே வேறு வேறு அர்த்தம் உள்ளவை..

கடல் துறையின் தலைவன் துறைவன்...

கடல் துறையில் வாழ்பவன் துறையன்..

இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வார்த்தை ஆனால் பெரிய வித்யாசம் உள்ளது...

அதே போன்று தான் இறைவன் + இறையன்..

அதாவது கடவுள் + மனிதன்..

குழப்பமாக இருந்தால் இதுவரை மட்டும் மீண்டும் ஒரு முறை படித்து விட்டு வாருங்கள்...

இப்பொழுது பாருங்கள்....

சங்க கால புலவர்களில் ஒருவர் நல்லிரையனார் இவர் கிள்ளிவளவன் 
காலத்தில் வாழ்ந்தவர்..

இந்த கிள்ளிவளவன் யார் தெரியுமா ?

சோழன் வம்சத்தில் வந்த ஒருவர்

அதாவது செம்பியன், அடுத்த தலைமுறை எல்லாளன், இளஞ்சேட்சென்னி, கரிகால் சோழன் நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி,  அடுத்த தலைமுறை கிள்ளிவளவன்..

இந்த கிள்ளிவளவனின் ஆட்சியை புகழ்ந்து பாடும் பொழுது..

நல்லருள்  புரியும் இறைவன் கிள்ளிவளவன்.. என்று பாடியுள்ளனர்..

அதாவது நல்லருள் புரியும் இறையன் என்று பாடுவதற்கு பதிலாக இறைவன் என்று பாடியுள்ளனர்..

இங்கு தான் மனிதனை கடவுளாக மாற்றக்கூடிய விஷ[ய]ம் முதன் முதலில் தூவப்படுகிறது...

பிறகு ஆட்சியாளனை கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு   புலவர்களை கடவுளின் சீடர்களாக மாற்றப்பட்டு..

[அதாவது மன்னரின் உதவியாளர்கள்]

இப்படியே பரிணாமம் பெற்று  கடவுள் ஸ்தானத்தை இன்று மலத்தையும் சுமந்து கொண்டு இருக்கும் சக மனிதனுக்கு கொடுக்கபடுகிறது..

சங்க காலத்தில் கடவுளை கடவுளாக இறைவனுக்கு கொடுக்கும் மரியாதையை தமிழர்கள் கொடுத்து கொண்டு தான் இருந்தனர்.

அதன் காரணமாக தான் திருவள்ளுவர் முதல் குறளே ஆதி பகவன் முதற்றே உலகு என்றால்...

அண்டம் பேரண்டம் ஆதி பகவன் ஒன்று பேரண்டத்தின் கடவுள் அவனுக்கே....

ஆதியும் அந்தமும் அவனே என்ற சங்க கால இலக்கணங்கள் எல்லாம் கடவுளை ஒருவனாகவும் மனித தன்மை அற்றவனாகவும் சரியாக மதித்து எழுதப்பட்டது....

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பாவை இவற்றை அழகாக கூறும்..

இன்று கடவுளின் தன்மையை புரிந்து கொள்ளாமல் மனிதனிடமும் கடவுள் தன்மை வரும் என்று தவறாக நினைக்க.

இறையன் + இறைவன்..

நடுவில் உள்ள ய என்கிற வார்த்தையும்
காரணமாக இருக்கலாம்...

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு நிறுத்தவில்லை. அது வேறு ஒருவருக்கு கைமாற்றிக் கொடுத்திருக்கிறது என்பது தான் உண்மை...


ஆச்சர்யப்பட வைக்கும் பண்டைய மக்களின் பழக்க வழக்கம்...


ஹெரோடோட்டஸ் [Herodotus]... என்பவர் உலக வரலாற்றின் தந்தை
என்றழைக்கப்படுபவர்..

இவரது உலக வரலாற்று புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அவர்களது பழக்கவழக்கங்களை தொகுத்தவர்.

இவரது காலம் இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பு ஏறக்குறைய 480 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர்.

இவரது பூர்வீகம்  கிரேக்கம் ....

இவரை பற்றிய சில விமர்சனமும் உண்டு இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

இவரது நூல்களில் இருந்து தான் தமிழர்களின் பழக்க வழக்கங்களும் எகிப்தியர்களின் சில பழக்க வழக்கங்களும் ஒன்றாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..

இது மிகப்பெரிய பகுதி இதை பற்றி விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் தருகிறேன் படியுங்கள்.

தமிழர்களை பாண்ட் நாடு என்று இவர்  குறிப்பிட்டுள்ளார்.

பாண்ட் நாட்டிற்கும் எகிப்தியர்களும் உள்ள ஒற்றுமையை குறிப்பிடுகிறார்.

பைபிள் சொல்ல கூடிய நோவா.
குரான் சொல்லக்கூடிய நூஹ் நபி.

இந்த தீர்க்க தரிசியின் காலத்திலையே வாணிக தொடர்பு இருந்ததாக கூறுகிறார்.

கிட்டத்தட்ட 70 க்கும் மேல் உள்ள
ஒற்றுமைகளை அதாவது தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை கூறுகிறார்...

இங்கு நான் சொல்ல வரும் விஷயம் தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அல்ல..

எகித்தியர்களின் வரலாற்றை குறிப்பிடுகையில் இந்த
விஷயத்தையும் கூறுகிறார்..

அதாவது பண்டைய எகிப்திய மக்கள் மூன்று மாதத்திற்கொருமுறை பேதி மருந்து உண்டு தங்களது சரீரத்தை சுத்தம் செய்கிறவர்களாக இருந்துள்ளனர் என்கிறார்..

அவர்களின் நம்பிக்கையின் படி அணைத்து நோயுக்கும் மூல காரணம் உணவு அதை பார்த்து பார்த்து உண்டாலும்.. உடலில் தங்கி நோயை உண்டாக்கும்..

ஆகவே மூன்று மாதத்திற்கொருமுறை உடலை சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக பண்டைய எகித்தியர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுகிறார்...

இன்றைய காலகட்டத்திற்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்...

அரசாங்கம் கட்டிட கான்ட்ராக்ட் எப்படி இருக்கனும் மக்களுக்கு நல்லாவே தெரியும்.. உயிருக்கு என்ன பாதுகாப்பு ?


புதிய தமிழகம் கிருஷ்ணாம்சாமி தேவேந்திர குல வெள்ளாளர் என ஏமாற்றி அரசியல் பிழைப்பை நடத்துவது அம்பலம்....


கிருஷ்ணசாமியின் தந்தை என சொல்லப்படும் கருப்பசாமி குடும்பன், கிருஷ்ணசாமியின் வளர்ப்புத்தந்தை ஆவார்.

உண்மையில் கிருஷ்ணசாமியின் தந்தை ரங்கராஜன். தாய் தாமரை. இருவரும் மாதாரி எனும் அருந்ததியர் சாதியினர்.

கிருஷ்ணசாமி உண்மை பெற்றோர்களான அருந்ததியர் சாதியை மறைத்து வளர்ப்பு தந்தை சாதி தேவேந்திர குல வேளாளர் சான்றை பெற்று ஏமாற்றி உள்ளார்.

இது நிலுவையில் உள்ள வழக்கின் மனு. இது உண்மையெனில் பள்ளர்களுக்கு பெரிய ஆப்பே கிருஷ்ணசாமிதான்...

ஹைட்ரோ கார்பன் பற்றிய உண்மைகள்...


அர்த்த சாஸ்திரம் மதுவும்... டாஸ்மாக் மதுவும்...


இன்றைய டாஸ்மாக்குக்கான வரைபடத்தை உருவாக்கித் தந்தவர் சாணக்கியர் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை..

சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசும், பேரரசும் எப்போது உருவானதோ, அப்போது அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை மூன்று  சாஸ்திரங்கள் ஏற்றன.

ஒன்று, சமூக வாழ்வியலை நிர்ணயிக்கும் மனு தர்ம சாஸ்திரம்.

இரண்டு, அரச நீதியை வலியுறுத்தும் அர்த்த சாஸ்திரம்.

மூன்று,  குடும்ப அமைப்பை நெறிப்படுத்தும் காம சாஸ்திரம் என்கிற காம சூத்திரம்.

இந்த மூன்று நூல்களுமே ஆள்வோருக்கு சாதகமாக எழுதப்பட்டிருப்பதால்தான்  காலம்தோறும் பெரும்பான்மையான மக்கள் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தான் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடி வருவதும்.

குடி என்கிற மது, மக்களை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது  என்பதை சாணக்கியர் எனும் கவுடில்யர் அறிந்திருந்தார்.

எனவே அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருக்க இதையே ஓர் ஆயுதமாக  பயன்படுத்த முடிவு செய்தார்.

அதன் விளைவுதான் அவரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்.

இந்த நூலின் ஒரு பகுதி குடியை பற்றி விளக்கமாக பேசுகிறது.  அதன் தீமைகளை விரிவாக பட்டியலிடுகிறது. என்றாலும் அரசே குடியை விற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறது.

அதாவது மது நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என அறிவித்துவிட்டு விற்பனை செய்யும்படி அறிவுறுத்துகிறது.

இதன் வழியாக அரசு கஜானாவுக்கும் பணம்  கொட்டும்; மக்களும் போதையில் ஆழ்ந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என ஆள்வோருக்கு புரிய வைத்தது.

சுருக்கமாக சொல்வதென்றால் குடியை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றியும் நுட்பமாக சிந்தித்து வணிக நடவடிக்கையாக அதை மாற்றியது.

அர்த்த சாஸ்திரம் நூலில் சாணக்கியர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?

மிகைக் குடியை தடை செய்ய வேண்டும். அது தண்டனைக்குரிய குற்றம். இதை கண்காணிக்க சுராதயக் ஷா என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்கு  கீழ் அதயாக் ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும்  மது விற்கக் கூடாது.

அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ - அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர்  அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம்.

மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு  உரியவர்கள்.

அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை  செய்ய வேண்டும்.

திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி  பெறாமல் காய்ச்சக் கூடாது...

அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின. விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து  பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன.

அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும்,  குடிக்கு உரியதுதான்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அப்காரி (Abhari Excise System) சட்டம், 1790ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, மது  வகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அதிக தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள்  வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தொகை, 1902 - 03ம் ஆண்டுகளில், அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ. 9 லட்சத்து 28  ஆயிரமாக அதிகரித்தது.

1857ம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த  அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளிலும் இறங்கியது.

அப்போது அவர்களுக்கு கைகொடுத்ததும் குடி நிர்வாகம்தான்.

இதற்கு 1799ம் ஆண்டு அயர்லாந்தில் மேற்கொண்ட முயற்சிகளை முன்னுதாரணமாக  ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர்.

மையப்படுத்தப்பட்ட மது உற்பத்தி சாலைகளை ஏல முறையில் மரியாதையும் மூலதனமும் உள்ள  பெருவியாபாரிகளிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். கூடவே சாராய கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது,  அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது போன்றவற்றை அமல்படுத்தினர்.

இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லாப்  பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ல் சுற்றறிக்கை அனுப்பினர்.

இதனை அடுத்து  பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்து பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்து வந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் பம்பாய் மாகாண சாராய உற்பத்தியின்  ஏகபோகத்தை அளித்தார்கள்.

தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலையையே 1951ல் விட்டல் மல்லையா  - விஜய் மல்லையாவின் தந்தை - வாங்கினார்.

இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் சாராய முதலாளிகள் மாகாண அளவில்  உருவாக்கப்பட்டனர்.

1947, ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்த படியாக குடி மூலமான  வருவாயே இந்தியாவில் இருந்தது.

இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல. இன்றைய நிஜமும் கூட.

குடி மூலமாக வருவாயை பெருக்குவதும்,  மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணி திரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வதும்தான்,  டாஸ்மாக்கின் நோக்கம்.

இதுவே தான் சாணக்கியர் வகுத்த அர்த்த சாஸ்திரத்தின் சாராம்சமும்....

அடேய் மேக் இன் இந்தியா எங்கடா...


நோய்களும் உணர்வுகளும்...


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால்தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும் (சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும் (அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள். இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள்...

சீனா தயாரிக்கும் டைப் 002 விமானம் தாங்கும் கப்பல்...


இலுமினாட்டி யும் ஐ படமும்...


ஒன்றரை லட்சம் ஈழ தமிழர்களை பறி கொடுத்த பின்பும், அவர்களுக்கான நியாயத்தை பெற போராடாமல் அடுத்து என்ன படம் வரும் என்று எதிர் பார்த்து கிடக்கும் தகுதி அற்ற மனிதர்களே...

உங்களை மகிழ்வித்த சனவரி 9, 2015 அன்று வெளியான ஐ என்ற படம் தமிழின விரோதிகளால் திரையிடப் பட்டது தான்..

அப்படி இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா..?

இந்த படத்தில் உலக அரசியலே அடங்கி உள்ளது..

உண்மையான உலக அரசியலை பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியை தரும் விடயமாகவே இருக்க போகிறது..

நாம் சொல்ல போகிற விடயம் உங்களை உண்மையில் பயமுறுத்தும், அடுத்து உங்களை நெறிபடுத்தும்..

ஆனால் உங்கள் அடிமை வாழ்வின் மீது உள்ள பற்றை நிச்சயம் உடைத்து விடும்.

ஆகவே சற்று தைரியம் உடையவர்கள் மட்டும் படிங்கள்..

நாம் அன்றாடம் காணொளி பெட்டியில் பார்ப்பது உலக நடப்பல்ல.. அது உலகம் இவ்வாரு இருக்கிறது என்று உங்களை ஆளும் அரசர்கள் உங்களிடம் சொல்லும் கதைகளே..

உங்களை ஆளும் அரசர்களா..?

அவர்கள் யார் என்று தானே யோசிகிறீர்கள்..

அவர்கள் தான் இலுமினாட்டி என்ற ரகசிய குழுமம்.

கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா சொத்துக்களின் உரிமையாளர்கள் இவர்கள்.

நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை, நீங்களே தேடுங்கள்.

நீங்கள் அன்றாடம் பார்க்கும் ஊடகங்களில் தொடங்கி உடுத்தும் ஆடைகள் வரை இந்த இலுமினாட்டிகளின் பொருட்களை மட்டுமே நீங்கள் பயன் படுத்துகிரீர்கள்.

எடுதுகாட்டுக்காக சில நிறுவனங்களை இங்கே குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் பாருங்கள்.

(http://12160.info/profiles/blogs/illuminati-sun-symbolism-world-s-100-best-brand-logos)

சரி, யார் இந்த இல்லுமினடிகள் ..?

இவர்கள் யூதர்களின் சில குறிப்பிட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள். மொத்தம் 13 குடும்பங்கள் அதில் முக்கியமானவை.

1. The Astor Bloodline
2. The Bundy Bloodline
3. The Collins Bloodline
4. The DuPont Bloodline
5. The Freeman Bloodline
6. The Kennedy Bloodline
7. The Li Bloodline
8. The Onassis Bloodline
9. The Reynolds Bloodline
10. The Rockefeller Bloodline
11. The Rothschild Bloodline
12. The Russell Bloodline
13. The Van Duyn Bloodline

இந்த பதிமூன்று குடும்பங்களுக்கு தான் உலகமே சொந்தம் காரணம் உலக வங்கிக்கே இவர்கள் தான் பணம் தருகிறார்கள், அதுவும் கடனாக..

ரொம்ப நாளாக சுவிஸ் வங்கி எப்படி இயங்குகிறது என்று குழம்பி இருப்பீர்களே. விடை இதோ..

அதுவும் இவர்களுக்கு சொந்தமானதே .

சரி, இதலாம் சாத்தியமா ? ஏன் இதெல்லாம் செய்கிறார்கள்? என்று பல கேள்விகள் எழலாம் ...

அதற்கு பலவிதமான பதில்கள், இணையத்தில் உள்ளது.

ஆனால் இது வரை இவர்கள் செய்ததில் ஒரு சிலவற்றை பார்ப்போமே..

9/11 நியூயார்க் இரட்டை கோபுரத்தை இவர்கள் தான் தகர்த்தார்கள்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இவர்களே காரணம்.

முதல் உலகபோர் , இரண்டாம் உலகபோர் ஆகிய இரண்டும் இவர்கள் தொடங்கிவைத்ததே.

இவர்கள் மனித இனத்திற்கே எதிரானவர்கள் . மனிதர்களை அடிமைகளாக மாற்றுவதே இவர்களின் நோக்கம்.

அதற்கு இவர்கள் முதலில் ஒழுக்க வியல் வாழ்வை தகர்பார்கள். பெண்களை போதை பொருளாக மாற்றுவதே இவர்கள் தான். குழந்தைகளை சிறுவயதில் இருந்தே காம சிந்தனைகளுக்கு உட்படுத்துவதற்கு தான் இவர்கள் ஆபாசதை ஊடகங்களில் பரப்புகிறார்கள்.

இப்படி இவர்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம். இது அனைத்தும் இணையதில் உள்ளது நீங்களே தேடுங்கள்.சரி இப்போ ஐ படத்திற்கு வருவோமே.

இலுமினாட்டிகளின் அடையாளமான ஒற்றை கண் அடையாளம் பிரபலமானது, அவர்களின் படங்களில் இது போன்ற அடையாளத்தை வைப்பார்கள். அதன் மூலம் அவர்களின் இருப்பை அவர்கள் உறுதி செய்வார்கள்.

தமிழ் திரைப்படங்களில் சுமார் 1993குப் பின் வந்த முக்கிய படங்களில் இவர்களின் அடையாளங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.

ஆனால் சமீப காலமாக வந்த கத்தி, எந்திரன், ஐ, பிச்சைக்காரன், போகன் போன்ற படங்களில் மிகவும் வெளிப்படையாகவே அவற்றை செய்ய தொடங்கி உள்ளார்கள்.

ஐ படத்தில் அந்த படத்தின் பெயரே (eye) ஒற்றை கண் அடையாளத்தை குறிக்கும்,

மற்றும் படத்தில் லூசோப்பர் (Lucifer) என்ற கிருத்துவர்களுக்கு எதிரான சாத்தான் இந்த படத்தில் வருகிறது.

மற்றும் படத்தின் பெயர் வடிவமைப்பு 33 என்ற வடிவம் நன்றாக தெரிகிறது.

இந்த 33 என்ற எண் மிகவும் முக்கியமானது ( ஹிரோசிமா, நாகசாகி அணு குண்டு வெடிப்புகள் 33 டிகிரி அட்சரேகை, தீர்க்க ரேகையில் தான் போடப் பட்டது ).

இலுமினாட்டிகளின் திட்டங்களை செயல் படுத்துவதற்காக உலகம் முழுவதும் பிரீ மேசன் என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. அதில் உச்ச கட்ட படிநிலை இந்த 33 டிகிரி ஆகும். (search in internet for more results about freemasons ).

மற்றும் இந்த படத்தின் விளம்பர சுவரொட்டிகளில் மறைமுகமாக டிஸ்னீப் நிறுவனத்தின் இலட்சனை வைக்கப்பட்டுள்ளது.

மற்றும் இந்த படத்தின் வெளியீட்டு நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருப்பது இன்னும் நமது சந்தேகத்தை வளர்கிறது.

1349 AD JAN 9 கருப்பு சாவு (BLACK DEATH) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

யூத மந்திரவாதிகளால் இந்த நோய் பரப்பப்பட்டு பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.

அந்த நோய்த் தாக்க பட்ட கோலத்தில் கதாநாயகன் இருப்பதும், ஒரு பாடலில் கதாநாயகியின் மார்பகங்களை தொலைக்காட்சி திரைபோன்று உருவகப் படுத்துவதும் (பெண்களை காம பொருளாக தொலைகாட்சியில் இலுமினாட்டிகள் காட்டும் செயல்) நமக்கு சந்தேகங்களை துண்டுகிறது.

எபோலா என்ற நோய் இந்த இலுமினாட்டிகளாலே உருவாக்கி பரப்பபடுகிறது. அதுவே பழைய கருப்புச்சாவு நோய் என்ற சந்தேகமும் உள்ளது.

ஆகவே தமிழர்களே விழிப்புணர்வு அடையுங்கள், நம்மை சுற்றி நடக்கும் அரசியலை கவனிக்க தவறாதீர்கள்...