15/09/2018

திமுக தெலுங்கர் அண்ணாதுரையின் லீலைகள்...


பானுமதியை ஒரு சிறந்த நடிகை  என்று சொல்ல மாட்டேன். பேரழகி என்றுதான் சொல்வேன். பானுமதி போல ஒரு அழகி  இருந்திருக்காவிட்டால் தமிழ்த் திரையுலகம் விதவைக்கோலம் பூண்டிருக்கும்   பானுமதி தன் அழகால் மக்களை ஈர்த்து விடுகிறார் அவரது நடிப்பை யாரும் கவனிப்பதே இல்லை என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஒப்புக்கொள்ளவே செய்வார்கள் ' என்று பானுமதியின்  அழகை ஒரு விழாவில் வெகுவாக புகழ்ந்தவர் திராவிட டகால்டி அண்ணாதுரை..

விழாவின் சில நாட்களுக்குப் பிறகு  பானுமதியின்  வீட்டில் அவரது படுக்கையறையில் இருக்கிறார் அண்ணாதுரை   இரவு இரண்டு மணி. பானுமதியின் தகப்பனார்  வந்து விடுகிறார். அவரது சத்தத்தைக்கேட்டு படுக்கையறை மாடியில் இருந்து கையில் வேட்டி, சட்டையுடன் பட்டாபட்டியுடன் ஜன்னல் வழியே வெளியே குதிக்கும் அண்ணாதுரை படபடக்கும் நெஞ்சத்துடன் சொல்கிறார் " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு,'

விஷயம் பெரிதாகிறது. பத்தியறிக்கைகள் பத்திபத்தியாய் எழுதுகிறார்கள். இன்னொரு விழாவில் அண்ணாதுரை சொல்கிறார்., ' மாற்றான் தோட்டத்து மல்லிகைககும் மணம் உண்டு, ஆனால் அதை பறிப்பதற்குத்தான் குலை நடுங்க வேண்டி இருக்கிறது ' மேலும் சொல்கிறார், பானுமதி  ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல, நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் அல்ல '

இதுபற்றி கேட்கிற போது பானுமதி சொல்கிறார். ' அண்ணாவின் உருவத்தை (அண்ணாதுரை   'ஒரு குள்ள கம்மனாட்டி  ) நான் பார்க்கவில்லை. அவரது அன்பைத்தான் பார்க்கிறேன். நீங்கள் அவரை அண்ணா  என்கிறீர்கள். நான் அவரை கண்ணா என்று தான் அழைக்கிறேன். அவரது இஷ்டபிரியாளாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அட்டானு நா பாவா, அட்டானு நா தேவுடு '

அதன்பிறகு, பானுமதியின் வீட்டுக்கு பகல் வேளையிலேயே வாசல்வழியே சென்று வாசல்வழியிலேயே வெளியில் வருகிறார் அண்ணாதுரை...

மறைக்கப்பட்ட ஒரு தமிழ் மாவீரனின் கதை இது...


டச்சுபடையை வென்ற முதல் தமிழன்,
முதல் சுதந்திர போராட்ட மாவீரன்,
வீர தளபதி, அனந்த பத்மநாபன் நாடார்...

சேரத்தமிழ் நாட்டில் (வேணாடு) தென் திருவிதாங்கூரில் கல்குளம் வட்டம் வியன்னூர் கிராமம் கண்ணனூர் தேசம் தச்சன்விளை என்னும் ஊரில் வாழ்ந்து வந்தவர் ஆசான் தாணுமாலைய நாடார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளவாயாகவும், போர்ப்பயிற்சி அளிக்கும் கல்விக் கூடமான களரிகள் நூற்றி எட்டுக்கும் ஆயுதக் கிட்டங்கிகளுக்கும், பொறுப்பாளராகவும் திருவட்டார் நரசிம்மர் கோவில் நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்.

வர்மக்கலை ஆசானாக விளங்கிய அவருக்கு மகனாக அனந்தபத்மநாபன்
கி பி 1698 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தச்சன்விளையில் பிறந்தார். இளம் வயதிலேயே வாள் வீச்சு, ஈட்டி எறிதல்,சிலம்பம், வர்மம் போன்ற போர் கலைகளில் சிறந்து விளங்கினார். இளமையிலேயே போர்ப்பயிற்சி ஆசிரியராகவும் வர்மக்கலை ஆசானாகவும் இருந்தான்.

தந்தை தாணுமாலைய நாடார் சதிகாரர்களால் கொல்லப்பட்டார். தந்தையின் அரண்மனைப் பொறுப்புகள் அனைத்தும் அனந்த பத்மநாப நாடாரின் நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டன.
சாளுக்கிய சோழர்களும் பலநூறு ஆண்டுகளாக சேரத்தமிழ் நாட்டின் மீது படையெடுத்து, மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.

1672ஆம் ஆண்டு ஆதித்ய வர்மாவின் ஆட்சிக் காலத்தில் தலைநகர் திருவிதாங்கூரையும் கோவில்களையும் மொகலாயப் படைகள் தாக்கின. ஆதித்யவர்மா கொல்லப்படவே 1721-ல் ராமவர்மா அரியணையில் ஏறினார். 1706ல் பிறந்த மார்த்தாண்ட வர்மா சிறுவயது முதலே திருப்பாப்பூர் அரண்மலையிலிருந்தபடி ஆட்சியைக் கவனித்து வந்தார்.

1728ல் மன்னர் ராமவர்மா காலமானதும் மருமக்கள் தாய்வழியில் இளவரசர் மார்த்தாண்ட வர்மா முடிசூட்டப்படுவதற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. அவரைக் கொல்லவும் சதிகள் திட்டமிடப்பட்டதால், அனந்தபத்மநாபனின் களரிகளில் இளவரசர் ஒளிந்து மறைந்து வாழ்ந்தார். அங்கேயே போர்ப்பயிற்சிகளும் பெற்றுத் தீரனானார். நாயர்களின் சதிச் செயல்கள் மற்றும் பலவித இடர்ப்பாடுகளாலும் அலைக்கழிக்கப்பட்டு அனைத்தையும் அனந்தபத்மநாபநாடார் துணையுடன் வென்றார்.

கி.பி1729ல் மார்த்தாண்டவர்மா திருவாங்கூர் மன்னரானார்.
மன்னரான பின்னரும் பல சதிகளுக்கு ஆட்பட்டு, அளவில்லாத இடையூறுகளுக்கு உள்ளானார். அத்தனைக்கும் தன்னுடனேயே இருந்து ஊண் உறக்கமின்றி, இராப்பகல் கண் துஞ்சாது வீரத்துடன் செயலாற்றி உதவிகரமாக இருந்தார். படைதளபதி அனந்தபத்மநாபநாடார்.

கி.பி.1741ல் நடைபெற்ற குளச்சல் போரில் பீரங்கிகளுடன் போரிடவந்த டச்சுக்காரர்களை தனது 108 நாடார் சிலம்பங்களின் ஆசான்மார்களையும் மீனவ சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து போரிட்டு டச்சுப்படைத் தளபதி டிலனாயைக் கைது செய்தார்.

இதுவே இந்தியாவில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டமாகும்.

டச்சுப் படை தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டிலனாயைக் கைது செய்து மன்னர் மார்த்தாண்டவர்மாவிடம் ஒப்படைத்தார்.

இப்போரை நினைவு கூரும் விதமாக குளச்சல் துறைமுகத்தில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. அது இன்றும் குளச்சலில் உள்ளது.

மேலும் கிழக்கிந்திய கம்பனியின் நேரடி வர்த்தகத்தை வேணாட்டில் அனுமதிக்காததால் சினம் கொண்ட ஆங்கிலேயர்களிடம். நாங்கள் யுத்தத்தை ஐரோப்பாவில் வைத்துக்கொள்ள தயார் என கர்ச்சித்தார். இதனால் ஆங்கிலேயர்களும் அவரது சரித்திரத்தை மறைத்தார்கள்.

1750ஆம் ஆண்டு ஆவணி 28அம் நாள் மயக்க மருந்து கலந்த விருந்து அளிக்கப்பட்டதால் மயக்கமானார் அனந்தபத்மநாபன். சதிகாரர்கள் வெட்டிக் கொல்ல முயன்றும் தப்பித்துக் குதிரையில் படுத்தபடியே சொந்த ஊருக்குச் சென்றார். வீட்டுவாசல் வரை சென்ற அவரின் உடல் அப்போது சரிந்த வீழ்ந்தது. பின்னர் நய வஞ்சகற்களின் நயவஞ்சகத்தினால் கி பி 1750 ஆண்டு மாவீரன் வீர மரணம் அடைந்தார். இதற்கு சான்றாக மாவீரனின் புகைப்படம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது. இவரது சமாதி தச்சன் விளையில் உள்ளது. அவர் மறைந்தாலும் அவரது புகழ் மேலோங்கி காணப்பட்டது.

குளச்சல் சண்டையில் வெற்றி பெற்றதற்காக அனந்த பத்மநாப நாடாரை பாராட்டி மன்னன் மார்த்தாண்டவர்மா ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கினார். மேலும் அவர் பெயரில் பல நினைவிடங்களையும், பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபனின் பெயரையும் சூட்டினார். குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் பெயர் இவரை கவுரவிக்கும் விதமாக சூட்டப்பட்டது. தற்போதைய திருவனந்தபுரம் முன்பு அனந்தன்புரம் என்று தான் இருந்தது.

டச்சுபடையை வென்ற முதல் தமிழன்
வீர தளபதி மாவீரன் அனந்த பத்மநாபன் நாடார் அவர்களின் புகழ் காலத்தால் மறைக்கமுடியாதது.

தமிழர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்தி மாவீரனின் புகழை கொண்டாடுகின்றன.

தமிழர்களின் முக்கியமான வேண்டுகோள் டச்சுபடையை வென்ற முதல் தமிழன், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன், வீர தளபதி, அனந்த பத்மநாபன் நாடார் அவர்கள் பிறந்த தச்சன்விளையில் மணிமண்டபம், மற்றும் முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை..

இந்த வருடம்
மாவீரனின் 268 வது
வீரவணக்க நாள்..

நாள் : 13.09.2018

அம்பானிக்கு டிஜிட்டல் இந்தியா வை விற்கும் பாஜக மோடி...


நலமுடன் வாழ இயற்கை மருத்துவம்...


காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.

எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும்...

மனிதம் மனிதனுக்கு வரட்டும்...


உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்...


உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

அடுத்த மாதம் 2ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தனது பதவிக்கு ரஞ்சன் கோகாயை நியமிக்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு முறைப்படி பரிந்துரை செய்தார். இந்த நிலையில், ரஞ்சன் கோகாயை உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

பதவியேற்பு விழா அக்டோபர் மாதம் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோகாய், வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆவார்...

திமுக எனும் சமூக விரோதிகள் கட்சி...


நெல்லையில் வண்டியை குலுக்கியபோது பெட்ரோல் பங்க்கில் தீ.. இளைஞர் பலத்த காயம்...


நெல்லையில் வண்டியை குலுக்கிய போது பெட்ரோல் பங்க்கில் தீவிபத்து ஏற்பட்டதில் இளைஞர் காயமடைந்தார்.

நெல்லையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் ஆல்வின் என்ற இளைஞர் பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது பெட்ரோல் போட்டு விட்டு வண்டியை குலுக்கி டேங்க்கை பார்த்துள்ளார்.

உடனே எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த இரு சக்கர வாகனம் தீப்பிடித்தது. வண்டியின் அருகில் இருந்த ஆல்வினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொதுவாக பெட்ரோல் பங்க்களில் பீடி, சிகரெட் பற்ற வைக்கக் கூடாது. அதுபோல் செல்போன் பேசினால் அந்த கதிர்வீச்சின் மூலமும் தீவிபத்து ஏற்படுவதால் போன் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

பாஜக மோடி கலாட்டா...


குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர்...


பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.

பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார்.

ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். “இங்கு எதைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை” என்றார்.

இதைக் கேட்ட சட்டைமுனி சிரித்தார். “நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே” என்றார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

சட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார். “அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. ‘குண்டலினி’ என்று அதற்கு பெயர். தூங்கிக் கொண்டு இருக்கும் அந்தப் பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதாரப் பாம்பின் உறக்கம் தான்.

இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது ‘குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவே” என்று சொல்லி முடித்தார்.

“குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்!” என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.

பாம்பாட்டியார் செய்த தொடர்யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. இரவு பகலாக பல நாடுகளையும் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார்.

ஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் அரசனொருவன் இறந்து போய் அவனது உடல் கிடத்தப்பட்டிருப்பதை பார்த்ததும் யோசித்தார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் தன் உடலை மறைவிலிட்டு இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார்.

அரசன் எழுந்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை. சித்தன் போல் பிதற்றுகிறார், மாயங்கள் எல்லாம் செய்கிறார் என்ற மக்களின் விமர்சனம் ராணியின் காது படவே விழுந்தது. அவள் மனதில் கவலையோடு சந்தேகமும் எழுந்தது.

அரசனைப் பார்த்து “ஐயா! தாங்கள் யார்? எங்கள் அரசரா? அல்லது சித்து வித்தைகள் புரிபவரா?“ என்று கேட்டாள். அதற்கு சித்தர் “அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களின் துன்பத்தினைப் போக்குவதற்காகவே நான் மன்னனது உடலில் புகுந்தேன். என் பெயர் பாம்பாட்டி சித்தன்” என்றார்.

உண்மை உணர்ந்த அரசி “எங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கடைதேறும் வழியை உபதேசியுங்கள்” என்று கைகூப்பி வேண்டினாள்.

அரசரிடமிருந்து பலப்பல தத்துவப் பாடல்கள் உபதேசமாக வெளிவந்தன. அவைகளை கவனமாக எல்லோரும் கேட்டனர். அரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேரினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது. சித்தர் உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்தொடங்கினாள்.

அரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் உடலில் புகுந்தார்.

இவர் தவம் செய்த குகை மருதமலையில் இருக்கிறது. இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாச்சலத்தில் சிலரும் கூறுகின்றனர். மூன்று இடங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.

இவர் செய்த நூல்கள்...

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்,
சித்தராரூடம்,
பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன...

திருட்டு திராவிடமும் பெண்ணியமும்...


திராவிட தோழர்1: பெண்ணியமா கோவிந்தா?

திராவிட தோழர்2: ஆமா கோவிந்தா...

சரக்கு லாரிகளை மடக்கி படுகொலை செய்து கொள்ளையடித்த தையல் தொழிலாளி கைது...


சரக்கு லாரிகளை கடத்திச் சென்று 33 ஓட்டுனர்களை படுகொலை செய்து கொள்ளையடித்த பிரபல சீரியல் கொலைகாரனை போபாலில் போலீசார் கைது செய்தனர். சிறிய திருட்டு வழக்கு ஒன்றுக்காக அவன் சிக்கினான்.

ஆனால் அவனிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் பல உண்மைகளைக் கக்கியிருக்கிறான். 48 வயதான ஆதேஷ் காம்பரா என்ற அந்த தையல் தொழிலாளி ஒரு பயங்கர கொலைகாரனாகவும் கொள்ளையனாகவும் இருந்த உண்மை வெளியானதும் காவல்துறைக்கே பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

கடந்த எட்டு ஆண்டுகளாக சரக்கு லாரிகளை வழிமறித்து கொள்ளையடித்தையும் 33 லாரி  ஓட்டுனர்களை கொன்றதையும் அவன் ஒப்புக் கொண்டுள்ளான்...

போலி செலவு கணக்கு காட்டும் அதிமுக ஊழல் அரசு...


மனைவி, 2 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை...


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் மகேந்திரன். 35 வயதான மகேந்திரன் திருப்பூரில் பனியன் கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வந்துள்ளார். அண்மையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், 10 நாட்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்திற்கு மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.

திருப்பூரில் இருந்தபோதே மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை எடுத்து, அதில் சரியாகததால் பாபநாசத்தில் பச்சிலை வைத்தியம் பார்ப்பதற்காக மகேந்திரன் குடும்பத்துடன் வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நோய் முற்றி தான் இறந்து விட்டால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள் என்ற பயத்தில் மகேந்திரன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகேந்திரன் நேற்று இரவு பாலில் விசத்தை கலந்து மனைவி ரேவதிக்கும் குழந்தைகள் கதிர்வேல், அஸ்மிதாவுக்கும் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷத்தை குடித்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலின் பேரில் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிர் பயத்தினால் கணவன் குடும்பத்தை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவந்திபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

மறதி சூழ் உலகு...


பெட்ரோல் விலை,
கதிராமங்கலம்,
நெடுவாசல்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட்,
தற்போது விஜய்மல்லையா...

சாரிடான் உள்ளிட்ட 328 மருந்து வகைகளுக்குத் தடை...


சாரிடான் உள்ளிட்ட 328 மருந்து வகைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது...

பான்டர்ம் ( Panderm), குளுக்கோநார்ம்(Gluconorm), லூபிடிக்ளாக்ஸ் (Lupidiclox), டாக்சிம் ஏஇசட் (Toxim AZ), சாரிடான் போன்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலி நிவாரணிகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு 344 மருந்துகளுக்கும், அதன் பின்னர் 5 மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகின. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் கமிட்டியின் ஆய்வுக்கு மருந்து வகைகளை உட்படுத்துமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், 328 மருந்துகள் தயாரிப்பு, விற்பனை, விநியோகத்திற்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது...

பாஜக - அதிமுக இனைந்து அரசு பள்ளிகள் மூடல்...


உல்லாச விடுதியாக காட்சி அளிக்கும் புழல் ஜெயில்- கைதிகள் எடுத்த போட்டோக்கள் வெளியானதால் பரபரப்பு...


தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.....

கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோன்று கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது.

சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளின் பின்னணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், “உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது.

வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டு உள்ளன.

இது உண்மையா இல்லை போலியா விசாரணைக்கு பிறகே தெரியவரும்...

பாஜக அருண் ஜெட்லியின் பொய்கள்...


இந்த விஜய் மல்லய்யா பாஜக வின் நாடாளுமன்ற உறுப்பினர் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?

முடி உதிர்வதை தடுக்க...


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர...

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக...

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக...

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு...

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற...

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க...

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு...

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர...

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய...

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்...

கொசுவும் கார்பரேட் வியாபாரமும்...


இலக்கு அடையும் இயந்திரம்...


தனி மனிதன் – தனி மனித கூட்டு பங்களிப்பு கொண்ட சமுதாயம் என பல தளங்களிலும் இந்த கேள்வி மிக எளிதாகவே எழுந்து பிரதிபலிக்கும்.

நாம் நம் மனதில் உருவாக்கியிருக்கும் நம் சுய மதிப்பு உயரம் ( DETERMINATION OF SELF ESTEEM ) அதே அளவில் நாம் எதிர் நோக்கும் இடங்களில் கிடைத்து விடுவதில்லை. அப்போது நம் மனதில் இந்த கேள்வி எழும்.

பொதுவாகவே மனித மன அமைப்பை இது போன்ற கேள்விகள் ஆக்கிரமித்தால் தொடர்ந்து ஊக்கமுடன்  முன்னேறும் தன்மையை மனம் இழக்கும் என்பதால் இதை உளவியல் அணுகுமுறையோடு ஆராய்ந்து அறிந்து கொள்வோம்.

முதலில், முன்னேற்ற இலக்கு என எதை குறிப்பிடுகிறோம் ? என்பதை நாம் தெளிவுற நிர்ணயிக்க வேண்டும்.

ஏனென்றால், புற ஆசைகளால் உந்தப் பெற்று தானாகவே நம் மனதில் உருவாகும் கவர்ச்சி இலக்குகள் ( ARTIFICIAL ATTRACTED TARGET ) நோக்கி முயற்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை. நம் திறன்களை சுமந்து சென்று சரியான இலக்கு நோக்கி பயணிக்கும் மனம் நமக்கு வசமானால் நம் இலக்கு எய்வது நமக்கு சுலபமாகும்.

வழக்கமான நம் தன்னம்பிக்கை புத்தகங்கள் இலக்கு நிர்ணயிப்பது  – செயலாக்க விதிகள் – இறுதி இலக்கு அடையும் வழிகள் என நம்மை இலக்கு அடையும் இயந்திரம் போல பாவித்து கருத்து வடிவம் கொண்டு புத்தகங்கள் தயாரிப்பார்கள். அவர்கள் கூறும் விதிகள் படி நாம் பின்பற்ற ஆரம்பமாகும்போது நம் குடும்பத்திலிருந்தும் / சமூகத்திலிருந்தும் அந்நியப்படுவது போல் தோன்றும்.

காரணம், நம் தன்னம்பிக்கை புத்தக எழுத்தாளர்கள் அனைவரும் ஐரோப்பிய வாழ்வியல் அடிப்படை கொண்டு எழுதப்பட்ட சுய முன்னேற்ற நூல்களை நமக்கு வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

நம் சமூக / அரசியல் / தனிநபர் ஒழுக்க கள யதார்த்த அடிப்படைகளில் அந்த நூல்கள் அமைவதில்லை.

ஆனால், நம் இணைய கட்டுரைகள், நம் இலக்கு நோக்கி செல்லும் பாதையில் எங்கெல்லாம் கடும் சவால்கள் எதிர்கொள்ளும் என்பதை அடையாளம் காண உதவும்.

நகரின் சிறு கடையில் வேலை செய்வோருக்கும் – இந்த தேசத்தின் விஞ்ஞானிகளுக்கும் இலட்சியம் வெவ்வேறு திசைநோக்கி இருக்கலாம்.

ஆனால் , அவைகளின் உயிர் மதிப்பீடு ஒன்று தான்...

பாஜக வின் நிதி மோசடிகள்...


சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கான பாதையில் மாற்றம் செய்தது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...


300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் வனப்பகுதி மட்டும் கையகப்படுத்தப்படும். வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும் - நெடுஞ்சாலை ஆணையம்.

வனப்பகுதியில் 13.2 கி.மீ.க்கு பதில் 9 கி.மீ. தூரம் மட்டுமே சாலை அமைக்கப்படும்; கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் - சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

மருத்துவ உலகின் அரசியல் மிக கொடூரமானது...


அதிலும் இந்தியா என்பது சோதனைக்கூடங்கள்..

தனிப்பட்ட ரீதியாக பாதிப்புகள் வர்றாத வரை, இந்தியா மருத்துவம் சிறந்தது தான்..

இதனால் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்புகள் அதிகம்...

தமிழின பகையாளிகள் பாஜக மோடி - சிங்கள ராஜபச்சே சந்திப்பு...


முளைப்பாரி, கும்மியடிதல், law of attractions, எண்ண விதைத்தல்...


பிண்டத்தில் உள்ள ஒவ்வொரு செல்களுக்காக பிணடம் தனது இயங்குதலை தன்னை இயக்கும் அதே போல நமது யாக்கையில் உள்ள செல்களும் பிண்டத்தின் இயங்குதலுக்காக இயங்கும்.

இது நடக்க ஒன்றே ஒன்று தான் தேவை இரண்டும் தேவைகளை அதனிடம் கேட்கும்படி கேட்டால்...

இதே தான் இந்த அண்டதின் இயங்குதலுக்குள்ளும். பிரபஞ்சம் சக்திக்கு நாம் அடிமை நமக்கு அது அடிமை. கேட்டா தரும்.. கேட்டத குடுக்கவும் செய்யனும். சும்மா ஒரு intro காக பழைய விசயத்தையும் சேர்த்து சொல்கிறேன்.. law of attraction...

முளைப்பாரி பயிர்களை விதைப்பதற்கு முன் இதை செய்து பார்த்து அந்த வருடத்திற்கு விவசாயத்திற்கு மழை கிடைக்குமா என்று பார்க்கும் சோதனை என்றும் சிலர் சொல்றாங்க. இன்னும் சிலர் மழை வேண்டி ஒரு வழிபாடுனும் சொல்றாங்க. சரி எப்படியோ இருக்கட்டும் இது எப்படி இயங்குதுனு பாப்போம்.

திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்  எந்த கோவில் தெய்வதற்கு முளைப்பாரி பயிர் போடபோறாங்களோ அந்த தெய்வத்தை வணங்கி முளைப்பாரியில் நவதானியங்கள் கொண்டு விதைப்பார்.

ஒருவர் அப்போது தெய்வத்திடம் வேண்டி தனது மக்களுக்கு மழைவேண்டுமென்று வேண்டிக்கொண்டே விதைக்கும் விதைத்தால் அந்த விதையில் அந்த எண்ண அதிர்வுகள் தொற்றும் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு வெளியில் எடுப்பார்கள்.

அந்த முளைப்பாரியை திருவிழாவிற்கு எடுப்பதற்கு ஒருவாரம் விரதம் இருந்து தூய்மையான எண்ணங்களை ஒரு வாரம் சுமந்தவர்கள் அந்த பயிரை சுற்றி கும்மியடிப்பார்கள் திருவிழாவின் போது..

அப்போது கும்மியடிக்கும் ஆட்கள் எல்லோரும் வானத்தை பார்த்து மழையை வேண்டியும் அந்த பயிர்களை எப்படி விதைத்தோம் தெய்வதை வணங்க  தாங்கள் எடுத்த விரதம் பற்றியும் அந்த மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென்றும் மக்களின் தேவைகளையும் பாடிக்கொண்டே கைகளை தட்டி அந்த எண்ணங்களை அதிர்வுகளாக உருவாக்குவார்கள் , பிறகு பயிர்களை நோக்கியும் தட்டுவார்கள்.

இதில் கவனிக்க கூடிய விசயம் என்னவென்றால் எல்லோரோட எண்ணக்களும் சரியாக இருக்காது ஒரே நேரத்தில் என முதலில் அந்த பாடலை ஒருவர் பாட பின்னாலே மற்ற எல்லோரும் ஒன்று போல பாடிக்கொண்டே அந்த எண்ணங்களை அதிர்வுகளாக அதிக ஆட்களின் உதவியோடு அடர்த்தியாக பிரபஞ்சத்தில் விதைக்கிறார்கள்.

அதிர்வுகளை அதே போல பயிர்களிலும் அதாவது ஒரு வாரமேயான பயிர் இதை பசுமரத்துல ஆணி அடிப்பதுபோல.

பெரிய மரங்களில் எண்ணக்களை விதைத்து நமது இயங்குதலுக்கு இயக்குவது கடினம் ஆனால் இதுவோ குழந்தை போல இருந்தால் சுலபம் காரி குழந்தைக்கள் அதிகமாக சிந்திக்காது அதற்கு தேவையும் இல்லை.

(அதோட core dna வோட இதை இணைப்பது போல ! அதாவுது குழந்தை பெரிய பையனா வந்து எப்படி ஆகனும்னு சொல்லி சொல்லி வளர்ப்பது போல )

எனவே எண்ண அதிர்வலைகளை சுலபமாக உள்வாங்கி அதோட இயங்குதலும் இயக்கும் மக்களின் வேண்டுதலுகளை உள்வாங்கி பிரபஞ்சத்தோட இணைக்கும் இதுவும் மழையை பூமியில் கொண்டுவர உதவுகிறது கூடவே இவர்கள் வானத்தை நோக்கி அடித்து உருவாக்கிய ஒலி அதிர்வுகளும்..

திருவிழா முடிந்ததும் இதை ஆற்றில் கரைத்தாலும் கரை ஒதுங்கி வளர்ந்தால் அந்த பயிற்களின் வழியாக விதைத்த  எண்ணக்கள் பிரபஞ்சத்தோட இணைந்தே ஒலிக்கும்.

பசிக்குதுனு சாப்பாடு கேட்டால் பிரபஞ்சம் தரும் ஆனால் அது எப்படி பட்ட சாப்பாடா இருக்கனும்னு நீதான் கேட்கனும் அவ்வளவு detail uh கேட்கனும் அந்த detail கும்மி பாட்டில் இருக்கும்...

இலுமினாட்டி வணிகம்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பூமியில் உள்ள ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் தமது கடவுள்கள் வானில் இருந்து வந்தவர்களாக நம்புகின்றனர். அவ்வாறு வந்தவர்கள் வேற்றுக்கிரகவாசிகளே என்பது சதி ஆலோசனை ஆய்வாளர்கள் கருத்து.

ஆதியில் வந்த வேற்றுகிரக வாசிகளின் பல இனங்கள் நம் கிரகத்தில் ஆராய்ச்சி போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காக பல காலம் தங்கியிருந்து மனித இனத்தின் மரபணுக்களை மாற்றினார்கள்.

இதனால் தான் ஒரே கிரகத்தில் மனித முகம் உடல் தோல், தலைமயிர் அமைப்பு, கண்களின் நிறம், மண்டையோட்டு அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றில் பாகுபாடு காணப்படுகிறது.

தற்போது வேற்றுகிரக மரபணு மாற்றப்பட்ட மனித இனங்களில் சில..

மங்கோலிய, நெக்ராய்டு, காக்கேசியர், தூய நீக்ரோ (True Negro),
நார்டிக் (Nordic),ஆல்பைன் (Alpine), கிழக்கு பால்டிக்  (East baltic),
ஆர்மீனியர் (Armenoid),

வேற்றுகிரகவாசிகளை கடவுளாக வணங்க காரணம். அந்தந்த வேற்றுகிரக இனகுழுக்கள் ஒவ்வொரு வகையான தொழில்நுட்ப எச்சங்களை விட்டு சென்றவற்றை நம்முடைய மனித தனக்கு எட்டிய அறிவைக்கொண்டு அவர்கள் விட்டுச்சென்ற கண்டுபிடிப்புகளையும், அவர்கள் முழு தொழில்நுட்பங்களையும் விளங்கிக்கொள்ளாததால் மாயா ஜாலங்களுடன் கூடிய புராண கதைகளாக வடித்தனர்.  இந்த மாற்றங்களினால் வேற்றுகிரக வாசிகளை மனித இனம் கடவுள்களாக வணங்க ஆரம்பித்தனர்..

1. கிறித்துவம் ஓரியன் நட்சத்திர தொகுதியிலிருந்து வந்த வேற்றுகிரகவாசிகளின் தாக்கம். சிலுவை சின்னம் குறிக்கும் ஓரியன் நட்சத்திர தொகுதி..

2. இந்துமதம் டாரஸ் நட்சத்திர தொகுதியிலிருந்து வந்த வேற்றுகிரக இனத்தவர்களின் குறியீட்டை வெளிப்படுத்தும் ஓம்.. காளை தலை மற்றும் கொம்புகளை தேர்ந்தெடுத்ததிலிருந்து இன்றுவரை மிகவும் புனிதமான மந்திரமாக அறியப்படுகிறது..

3. இஸ்லாமியம் சுமேரியன் மூதாதையர்கள் கிரேசண்ட் கிரகமும் சூரியனும்..

4. யூதாஸம் ஏழு பரலோக விளக்குகளை கொண்ட பிளீயட்ஸ் நட்சத்திர தொகுதியில் உள்ள ஏழு உலகங்கள்...