15/09/2018

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்...


உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

அடுத்த மாதம் 2ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தனது பதவிக்கு ரஞ்சன் கோகாயை நியமிக்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு முறைப்படி பரிந்துரை செய்தார். இந்த நிலையில், ரஞ்சன் கோகாயை உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

பதவியேற்பு விழா அக்டோபர் மாதம் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோகாய், வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆவார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.