15/09/2018

மனைவி, 2 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை...


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் மகேந்திரன். 35 வயதான மகேந்திரன் திருப்பூரில் பனியன் கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வந்துள்ளார். அண்மையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், 10 நாட்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்திற்கு மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.

திருப்பூரில் இருந்தபோதே மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை எடுத்து, அதில் சரியாகததால் பாபநாசத்தில் பச்சிலை வைத்தியம் பார்ப்பதற்காக மகேந்திரன் குடும்பத்துடன் வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நோய் முற்றி தான் இறந்து விட்டால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள் என்ற பயத்தில் மகேந்திரன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகேந்திரன் நேற்று இரவு பாலில் விசத்தை கலந்து மனைவி ரேவதிக்கும் குழந்தைகள் கதிர்வேல், அஸ்மிதாவுக்கும் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷத்தை குடித்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலின் பேரில் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிர் பயத்தினால் கணவன் குடும்பத்தை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவந்திபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.