04/06/2018

போக்குவரத்து ஊழியரின் கழுத்தை நெரித்த துணை மேலாளர்... வன்மையாக கண்டிக்கின்றோம்...



ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர், தனது ஓய்வுக்கு பிறகு கிடைக்கவேண்டிய பணப்பலன்களை பணிமனை சென்று கேட்டதற்கு அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் உயர்அதிகாரிகள் அவரை தாக்கி கொலை செய்து விடுகிறேன் என்று கழுத்தை நெரித்தனர்......

தொழிலாளியை தாக்கிய அதிகாரியின் பெயர் தியாகராஜன் TMC காஞ்சிபுரம் பணிமனை....

மனிதாபிமானம் இல்லாத இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

விழித்துக்கொள் தமிழா...


சவப்பதப்படுத்தல் (Plastination)...


man with skin ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி கந்தர் வான் ஹேகென்ஸின், பிணங்களின் பதப்படுத்தல் முறையில், பிணங்களை துண்டு துண்டாக வெட்டி பின் ஆய்வுகளுக்கு ஏற்றவாறு பல கோணங்களில் வைத்து, பல  வேதியல் திரவங்களைக் கொண்டு அவற்றை பதப்படுத்தி விடுவார்களாம்..

அப்படிப் பதப்படுத்தப்பட்ட பிணங்களை உலகில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களுக்கு அனுப்புவார்களாம்...

http://www.youtube.com/watch?v=y4Ld5C1jnlI

இயற்கையை காப்போம்...


காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்.. இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை...



காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை...

உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று அளித்த காவிரித் தீர்ப்பை நேற்று (01.06.2018), இந்திய அரசு  அரசிதழில் வெளியிட்டுவிட்டு, காவிரி ஆணையம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது கடந்த காலங்களில், அது ஏமாற்றியதுபோல் இப்போதும் செய்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஆணையின்படி 11.12.1991 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை!

அடுத்து, காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றக் கட்டளையின்படி 19.02.2013 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அத்தீர்ப்பில் கண்டபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. அதனால் அத்தீர்ப்பும் செயலுக்கு வரவே இல்லை!

இப்பொழுது மூன்றாவது முறையாக, செயல்படுத்தக் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல், அரசிதழில் வெளியிட்டுவிட்டு இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. விரைவில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை 16.02.2018 அன்று அளித்தது. அதைச் செயல்படுத்தாமல், சாக்குப்போக்கு சொல்லி இதுவரை இழுத்தடித்து வருவது இந்திய அரசுதான்! இப்பொழுதும் செயல்படுத்தும் மேலாண்மை ஆணையம் அமைக்காமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்கவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக ஒப்புக்கு அரசிதழில் வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.

அத்துடன், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை வாரியத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக அமர்த்துவது என்பது, காவிரி மேலாண்மை ஆணையம் நடுவண் நீர்வளத்துறையின் ஒரு துணைக் குழுதான் (Sub Committee) என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

காவிரித் தீர்ப்பாய முடிவுகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை தனித்துவமான காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்றும், அதன் தலைவர் முழுநேரப் பொறுப்பில் செயல்படுவார் என்றும் கூறியுள்ளன. நடுவண் நீர்வளத்துறைச் செயலாளரின் கூடுதல் பொறுப்பாக காவிரி ஆணையத் தலைவர் பொறுப்பை வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்குலைக்கும் முயற்சியாகும்!

யு.பி. சிங் நடுநிலைத் தவறியவர் என்பதை, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து அவர் செயல்பட்ட விதம் வெளிப்படுத்தியது.

எனவே, அரசிதழில் வெளியிடப்பட்டது என்ற அளவில் “வெற்றி!”க் களிப்பு காட்டிக் கொள்வது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அமையும்! இந்திய அரசு இன்னும் காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகளை செயல்படுத்த முன்வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்ட போராட வேண்டியத் தேவை உள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரித்துக் கொள்கிறேன்...

நாங்கள் அதிகாரத்தின் கீழ் அடிமையாக இருக்க விரும்பவில்லை...


எங்களின் அதிகாரத்தை நாங்களே செயல்படுத்த விரும்புகின்றோம்...

நாட்டின் மீது பற்று கொள்ளுங்கள்... ஆனால் அரசாங்கத்தின் மீது ஒருபோதும் பற்று கொள்ளாதீர்கள்..


அரசாங்கம் என்பது பல வணிகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு நிறுவிய நிறுவனம்..

அந்த நிறுவனம் ஒருபோதும் நீங்கள் எதிர்பார்த்த சனநாயகத்தை வழங்காது...

முக்தியும் மனமும்...


ஆன்மாவாகிய நாம் முதல் பிறப்பில் இருந்து சேர்த்த எண்ணப் பதிவுகளே நம்மை மறுபிறவிக்கு அழைத்து செல்கிறது.

அதை நாம் மனதின் கர்மம் என்கிறோம். இந்த கர்ம வினைகளை ஒருகாலும் நாம் அழிக்கவே முடியாது.

பிரபஞ்சத்தின் உருவான தகவல் ஒருபோதும் அழியாது என தற்போது வாழும் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாங்கிங்கே ஒப்புக் கொண்டார்.

ஆம் நாம் தகவலை அழிக்கவே முடியாது. ஆனால் அந்த கர்மத்தில் இருந்து மனதை பிரிக்க முடியும்.

நாம் பற்றற்ற நிலையில் எல்லா ஆசைகளையும் துறந்தால் நம் ஆன்மா எண்ணப் பதிவுகளில் இருந்து படிப்படியாக விலகும்.

பாவம்-இரும்பு விலங்கிட்டும், புண்ணியம்- பொன் விலங்கிட்டும், நம்மை மறுபிறப்பிற்கு அழைத்து செல்லும்.

எனவே சித்த நிலைக்கு முயல்பவன் மனித வாசனைகள் அல்லாத காடுகளுக்கு சென்று குகைகளில் மறைந்து தனித்து வாழ்கிறான்.

இன்னும் சில உண்மைகளை நான் இங்கு சொன்னால் அது கசக்கும் என்பதால் வேண்டாம் என விட்டுவிட்டேன்...

டிரம்ப் - கிம் சந்திப்பு...


நொச்சி இலைகளின் மருத்துவக் குணங்கள்...


சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது
நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு உண்டு. காசநோய் புண்களை குணப்படுத்தும் இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது.

நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.

இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது. மூட்டுவலிக்கு மருந்து முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

குடல்பூச்சிகளுக்கு எதிரானது வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது.

வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது. கல்லீரல் நோய்களுக்கு மருந்து மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது...

ஏற்கனவே எச்சரித்தோம் ஜூன் மாதம் பல அரசியல் நாடகங்கள் அரங்கேறும் பாருங்கள்.. சாகர்மாலா...


வர்மமும் – மர்மமும்...


ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று..

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும்.

வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.

வர்மம் என்றால் என்ன?

உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும்.

உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர் நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.

குண்டலினியும் வர்மக்கலையும்
வர்மக்கலை பயில்பவர் முதலில் குண்டலினி யோக முறைகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங்களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங்களைப் பற்றிக் கூறுகிறது.

இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வர்மக்கலை தமிழ்நாடு, தமிழீழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதியில் பரவி இருந்தது, இக்கலை சித்தமருத்துவத்தை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை). தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்
“அகஸ்தியர் வர்ம திறவுகோல்”
“அகஸ்தியர் வர்ம கண்டி”
“அகஸ்தியர் ஊசி முறை வர்மம்”
“அகஸ்தியர் வசி வர்மம்”
“அகஸ்தியர் வர்ம கண்ணாடி”
“அகஸ்தியர் வர்ம வரிசை”
“அகஸ்தியர் மெய் தீண்டா கலை”
ஆகியவை குறிப்பிடத்தக்கவை

ஜடாவர்மன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் “The fighting techniques to train the body from India ” என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபட மாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என “அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே” என்ற வரிகள் விளக்குகின்றன.

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும்.

தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார். அவை-

தொடு வர்மம்- இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்.

தட்டு வர்மம்- இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்.

நோக்கு வர்மம்- பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்.

படு வர்மம் – நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார்.

எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்
நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்
முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்
கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்…

வர்மத்தின் அதிசயங்கள் !!
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவு முறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.

மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்...

பாஜக பக்தாள்ஸ் பூராவும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவா குரல் குடுக்கும் போதே டவுட் வந்துச்சி இப்ப ஸ்டெர்லைட்டே கன்பார்ம் பன்னிட்டான் எச்ச பசங்க பக்தாள்ஸ்...


யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன் ஆணையம்...


1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை.

அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது.

இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் "சட்டநாத ஆணையம்  1972 - இல் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது.

சட்டநாதன் ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள. தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான "சின்ன மேளம்" (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார்.

தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் ( SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், 'இந்தி'யர்களும் தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்.

ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க. சட்டநாதன் ஆணையத்தை  தமிழகத்தில் நடைமுறைப்படுத்த
தமிழர் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும்.

தமிழ் நாட்டில் தலித் அரசியல் பேசுவோர் தமிழர் நலனில் கவனம் செலுத்த மாட்டார்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளாகவே பார்பார்கள்.

தமிழர் அல்லாதோரின் நலனுக்காக கட்சி கண்ட திராவிட அரசியல் கட்சிகளும் இதை கண்டு கொள்ளாது.

திராவிட இயக்கம் இந்த 'தமிழர் உரிமை மறுப்பை' ஆதரித்து சட்டநாதன் ஆணையத்தையே இனவாதம் என்று கருத்தாக்கம் செய்ய துணியும்.

தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே இந்த தமிழர் உரிமையும் நிலைநாட்டப்படும்.

யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு இனி சட்டநாதன் ஆணையம் சமர்ப்பித்த பட்டியல் தான் பதில்.

இச் செய்தியை தமிழினத்தின் நன்மை கருதி அனைவரும் தவறாமல் பகிரவும்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


நமக்கு தெரிந்த தெரியாத உலகின் எட்டாவது கண்டம்...


உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவார்கள்.

ஆனால் வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார்.

இந்த எட்டாவது கண்டம் யாருக்கும் தெரியாத ஒன்று.

இது தரையில் இருந்து 200 அடி உயரத்தில் இருக்கிறது என்கிறார்.

இது ஒரு வித்தியாசமான உலகம் என்றும் கூறுகிறார்.

இந்த உலகில் 100, 200 அடி உயரம் வளர்ந்து நிற்கும் மரங்கள் லட்சகணக்கான சதுர மைல்களில் பரவி நிற்கின்றன. இந்த மரங்களின் உச்சியில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன.

அதுதான் உலகின் எட்டாவது கண்டம் என்கிறார் அவர்.

1980ம் வருடம் வன ஆராய்ச்சியாளர் டெர்ரி இர்வின் அமேசான் காடுகளில் அலைந்த போது அவர் மீது சில பூச்சிகள் வந்து விழுந்தன.

அந்த பூச்சிகளை பற்றி இதற்கு முன் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை.

பூச்சிகள் சம்பந்தமான புத்தகங்களிலும் அவற்றை பற்றிய குறிப்பு இல்லை. அது இதுவரை உலகம் அறிந்திராத புதுவகையான பூச்சியினம்.

அதிசயித்து போன இர்வின், மரத்தின் மீது ஏறி அதன் உச்சியை ஆராய்ந்தார்.

என்னவொரு ஆச்சர்யம். அங்கு இதுவரை காணாத பல புதிய பறவைகள், பூச்சிகளை கண்டு பிடித்தார்.

அடர்த்தியான மரக்கிளைகள் இருப்பதால் பறவைகளோ, பூச்சுகளோ கீழே வர வாய்ப்பு இல்லை. மரத்தின் உச்சியிலே இனப்பெருக்கம் செய்து அங்கேயே வளர்ந்து அங்கேயே அவை மடிந்து போகின்றன. மனிதன் மேலே ஏறி பார்த்தால்தான் புதிய இன கண்டு பிடிப்புகள் சாத்தியம்.

எட்டாவது கண்டத்தில் மட்டும் 3 கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

இவற்றை ஆராயும் பணிக்கு ‘காட்டுக்கூரை’ என்று ஐக்கிய நாடுகளின் இயற்கை பராமரிப்பு நிறுவனம் பெயரிட்டிருக்கிறது.

இந்த காடுகளின் கூரை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த எட்டாவது கண்டத்தில் மனிதனின் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி நம்புகிறது...

டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறப்பது ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது. சீதை சோதனை குழாய் தொழில்நுட்பத்தின் மூலம் பிறந்த முதல் குழந்தை - உத்தரபிரதேச துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா...


மீண்டும் உயிர்த்தெழும் மாமத யானைகள்...


ஒரு காலத்தில் வாழ்ந்து அழிந்தொழிந்து போன டைனசார் போன்ற விலங்குகளை மீண்டும் பூமியில் உயிர்த்தெழச் செய்து நடமாட வைப்பது சினிமாவில், நாவல்களில் வரும் கற்பனையாக மட்டுமே இருந்து வந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இப்படிப்பட்ட கற்பனைகள் நிஜமாகப் போகின்றன. அதற்கான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் ஆரம்பித்து விட்டார்கள்.

குளோனிங் செய்யும் மாயம்.. 10,000 வருடங்களுக்கு முன்பு சைபீரிய பனிப் பிரதேசங்களில் வாழ்ந்து முற்றிலுமாக அழிந்து போன ரோமங்கள் நிறைந்த மாமத யானைகளை ரஷ்யாவையும் கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் மீண்டும் உருவாக்க முயன்று வருகிறார்கள்.

சர்வதேச விஞ்ஞானிகள் இதற்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். குளோனிங் முறையில் உருவாக்கப்படும் இந்த மாமத யானைகள் மீண்டும் சைபீரியப் பகுதிகளில் நடமாடப் போகின்றன.

இந்தத் திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆதரவளித்திருக்கிறார்.

குளோனிங் தொழில்நுட்பத்தில் சிறந்த தென்கொரியப் பேராசிரியர் ஹவாங் வூ இதற்கான முதற்கட்ட வேலைகளை ரஷ்ய விஞ்ஞானிகளோடு தொடர்ந்து செய்துவருகிறார். இதன் விளைவாக மாமத ரோம யானையை மீண்டும் உருவாக்க அடிப்படை ஆராய்ச்சிகள் முடிந்துவிட்டன.

இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு அழிந்து போன விலங்குகளின் மரபணுப் பொருட்கள் தேவை. இதற்காக, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் சைபீரிய பகுதிகளில் இறந்து பனியால் மூடப்பட்டுப் பாதுகாப்பாக இருந்த மாமத யானையின் தசைப் பகுதிகள் சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்டன.

அந்த யானையின் ரத்தம்கூட உறையாமல் இருந்தது.

தோண்டி எடுக்கப்பட்ட இந்தத் தசைகளிலிருந்து செல்கள் கிடைத்தால் அதிலிருந்து பல மரபணுத் தகவல்களைப் பெறலாம்.

ஒருவேளை நல்ல தகுதியான செல்கள் கிடைப்பின் நன்றாக இருக்கும் அல்லது செயற்கை முறையில் மரபணுக்களைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த மரபணுக்களைப் பிரித்தெடுக்கும் வேலையை பென் மாகாணப் பல்கலைக்கழகம் 70 சதவீதம் முடித்துவிட்டது.

மாமத யானைகளின் மரபணுக்கள் ஆசிய யானைகளின் மரபணுக்களோடு நெருக்கமாக இருக்கின்றன. மாமத யானைகளின் மரபணுக்களை ஆசிய யானைகளின் இனப்பெருக்க செல்களோடு புகுத்தி மாமத யானைகளை உயிர்த்தெழச் செய்ய முடியும். இது சாத்தியம் என்று கோட்பாட்டு ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இப்படி உருவாக்கப்படும் புதிய மரபணுவுக்கு ஆசிய யானைகள் தாயாக இருக்கும். இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமானால் ஆசிய யானை தன்னுடைய மரபணுக்களைவிட மாமத யானைகளின் மரபணுக்களை அதிகம் கொண்ட யானைகளை உற்பத்தி செய்யும்.

இப்படி உருவான மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாமத யானைகள் உருவத்தில் ஆசிய யானைகளைப் போல் இருக்கும்.

ஆனால், இந்தக் கலப்பு யானைகள் இன்னொரு கலப்பு யானையோடு சேர்ந்து பிறக்கும் குட்டிகள் மாமத யானைகளைப் போல் இருக்கும்.

இம்மாதிரி அழிந்தொழிந்து போன விலங்குகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று அறிவியல் ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டாலும் இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்வதற்குப் பலவிதமான கேள்விகள், தடைகள், நெறிமுறைகள் இருக்கின்றன.

இயற்கையின் போக்கில் உயிரினங்கள் அழிந்து போவதும் புதிய உயிரினங்கள் உருவாவதும் வழக்கம்.

ஆனால், ஒரு உயிரினத்தை அழிப்பதோ எப்போதோ அழிந்து போன உயிரினத்தை மறுபடியும் உயிர்கொடுத்து உலவ விடுவதோ இயற்கையின் போக்கில் குறுக்கிடுவதாகும்.

இயற்கையின் போக்கில் குறுக்கிடுவது பெரும் ஆபத்து..

ஆகவே, பனி நிறைந்த சைபீரியப் பகுதிகளில் மீண்டும் மாமத யானைகள் பவனிவரவிருப்பது குறித்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி கொண்டாலும் சூழலியலாளர்கள் கவலையுடனே இருக்கிறார்கள்...

நம்ப முடியாத உண்மைகள்... Robbin hood...


பாரம்பரிய உணவுகள் என்றால் என்ன?


பாரம்பரிய உணவுகள் என்பவை பாரம்பரிய விதைகளிலிருந்து விளைந்தவை. அதாவது புதிய ஒட்டு ரக விதைகளிலிருந்து உருவானவையல்ல. கடந்த சில பத்தாண்டுகளாக நெல்லிலும், சிறுதானியங்களிலும் ஒட்டுரக விதைகள் அறிமுகமாகி பயன்பாட்டில் உள்ளன. இவற்றை தவிர்த்து மரபு வழியிலான விதைகளிலிருந்து விளைந்தவையே பாரம்பரிய உணவுகளாகத் தகுந்தவையாகும்.. இதுமட்டுமின்றி, பயிர்விளைச்சலுக்கு ரசாயண உரங்களையோ, பூச்சிகொல்லி மருந்துகளையோ முற்றிலும் தவிர்த்து உருவாக்கப்பட்டவையே பாரம்பரிய உணவுகளாகும்..

மானாவரிநிலத்திலும், மலைமுகடுகளிலும் விளையும் புன்செய் பயிர்களான சிறுதானியங்களும், தண்ணீர்வரத்துள்ள நன்செய் பயிர்களான பாரம்பரிய அரிசிகளும் ஊட்டசத்துமிக்க பாரம்பரிய உணவுகளாகும்! திணை, வரகு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, பனிவரகு எனப்புடும் பெருஞ்சாமை, சிறுசோளம் போன்றவற்றைத் தான் நாம் சிறுதானியங்கள் என்ற பொதுப் பெயரில் அழைக்கிறோம்.

இந்த சிறுதானியங்களில் என்னென்ன உணவுவகைகளைச் செய்யலாம்? என்றால்….. செய்ய முடியாதது என்ன? எல்லாமே செய்யலாம்..

வெரைட்டிரைஸ் மாதிரியான கலவைச்சோறுகளை அருமையாகச் செய்யலாம். திணை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்றவற்றில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சோறு, தேங்காய்சோறு, எலுமிச்சைசோறு, கூட்டாஞ்சோறு, புளியோதரை, எள்ளுசோறு, புதினாசோறு, கீரைச்சோறு, காய்கறி பிரியாணி, தயிர்சோறு….. போன்ற சோறு வகைகளை செய்யலாம்..

அதேபோல் இட்லி, தோசை, உளுந்துசேர்த்தகளி , வெந்தயம் சேர்த்தகளி, கும்மாயம், இடியாப்பம், குழிப்பணியாரம், கொழுக்கட்டை, கட்லெட், அடை, உப்புமா, ஆப்பம், புட்டு, சேவை போன்ற பலகார வகைகளும் செய்யலாம். சற்றே கோதுமையைச் சேர்த்து சப்பாத்தி, பூரியும் செய்யலாம். லட்டு, அதிரசம், மைசூர்பா, கேசரி, தொதல், அல்வா, பாயாசம் போன்ற இனிப்பு வகைகளைச் செய்தும் அசத்தலாம். ரிப்பன் பக்கோடா, முறுக்கு, தட்டடை, சீடை, காரச்சேவு போன்ற திண்பண்டங்களையும் செய்யலாம்.

அதே சமயம் ஒவ்வொரு சிறுதானியமும் தனிப்பட்ட தன்மையும், சுவையும் கொண்டது என்பதால் அது அதற்கேற்ற சமயலைச் செய்வது சிறப்பாக இருக்கும்...

தினை  (Foxtail Millet) - தினையில் இனிப்பு செய்தால் நன்றாக இருக்கும். சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பா, லட்டு போன்றவற்றை தினையில் செய்தால் சுவையாக இருக்கும். பொதுவாகத் தினை உட்கொள்ளும் போது உடல் சூடு அதிகரிக்கும். ஆகவே, இனிப்புக்கு நாட்டுச்சர்க்கரையோடு, பனைவெல்லம் சேர்ப்பது நலம் பயக்கும். அத்துடன் தேங்காய் துறுவலையோ, தேங்காய்பாலையோ சேர்ப்பது  தினையின் சூட்டை சமன்படுத்தும்.

தினையில் கூழ் செய்து பிரசவமான தாய்க்கு பிரசவமான தாய்க்கு கொடுப்பது தமிழர் மரபு. காரணம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். தினையில் கண்ணுக்கு ஒளிதரும் பீட்டா கரோட்டின் அதிகம்! எனவே தினையை தொடர்ந்து உட்கொள்ளும் போது கண்பார்வை பிரகாசமாகும்.  தினைமாவுடன் தேன்கலந்து உண்டால் கபம் நீங்கும்.தினை விரைவில் செரிமானமாகும், ஆகவே பசியைத் தூண்டும். மொத்ததில் தினை உட்கொள்வது உடலுக்கு வலுசேர்க்கும்.

சாமை (Little Millet) - சாமை எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாகும். சாமன்ய மக்களின் விருப்பு உணவாக சாமை திகழ்ந்த காரணத்தால் சாமை எனப் பெயர் பெற்றது.

சாமையில் கூட்டாஞ்சோறு தொடங்கி அனைத்து சோறு வகைகளும் செய்யலாம்.  அதேபோல் இட்லி, தோசை, கிச்சடி போன்ற பலகாரங்களுக்கும் ஏற்றது.  நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்டிருப்பதால் சாமை  உட்கொள்வது மலச்சிக்கலுக்கும், நீரிழிவிற்கும் தீர்வாக அமையும்.

சாமையில் மிகுந்துள்ள இரும்புச்சத்து ரத்த சோகையுள்ளவர்களை குணப்படுத்தும். சாமையில் மினரல்ஸ் அதிகமிருப்பதால் நம் உடலில் உயரணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்திவிடும். மொத்தத்தில் சாமை ஆரோக்கிய உணவின் அடித்தளமாகும்!

குதிரைவாலி  (Barnyard Millet) - வாலரிசி எனப்படும் குதிரைவாலி ஒரு சுவை மிகுந்த சிறுதானியமாகும். இதில் செய்யப்படும் வெண்பொங்கல் மிக ருசியாக இருக்கும். குதிரைவாலி சோற்றில் தயிர் சேரும் போது lactobaclius என்ற வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியாவைத் தருகிறது. குதிரைவாலி  மோர்சோறு அல்சரை குணப்படுத்தும். குதிரைவாலியில் அனைத்து சோறு வகைகளையும், பலகாரவகைகளையும் செய்யலாம். குறிப்பாக இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைக்கும் உணவுகள் மிக மிருதுவாக இருக்கும்.

குதிரைவாலி -  உட்கொள்வது சர்க்கரைநோயை கட்டுபடுத்த உதவும்.  குதிரைவாலியோடு சற்றே உளுந்து சேர்த்து களியோ, கஞ்சியோ செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி, வயிற்று கடுப்பு பிரச்சினைகள் தீரும்.  காய்ச்சலின் போது குதிரைவாலி கஞ்சி உட்கொள்வது காய்சலிருந்து மீள உதவிபுரியும்!  வாயுப் பிரச்சினைகளால் வதைபடுபவர்களுக்கு குதிரைவாலி உணவு ஒரு வரப்பிரசாதம்.

வரகு (Kodo Millet) - நமது சங்க இலக்கியங்கள் பலவற்றில் அதிகமாக குறிப்பிடப்படும் சிறுதானியம் வரகரிசியாகும்.  பழந்தமிழரின் அடிப்படையான உணவாக வரகரிசி திகழ்ந்துள்ளது. வரகரிசி உடலில் சக்தியை பெருக்கி தினவெடுக்க செய்யும்.  வரகரிசியில் எல்லாவகை சோறுகளையும், பலகாரங்களையும், திண்பண்டங்களையும் செய்யலாம். பிரியாணி செய்வதற்கு பொருத்தமாக இருக்கும்.

வரகு சுட்ட சாம்பல் கற்பிணிப் பெண்களின் இரத்தபோக்கை நிறுத்துவதற்கு கிராமங்களில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. வரகின் தோல் ஏழுபடலங்களை  கொண்டதாகும். எனவே இதை கிராம மக்கள் நன்றாக குத்தி புடைத்து தோல்களையும், கடைசியாக உள்ள பூஞ்சானத்தையும் நீக்கியே பயன்படுத்துவார்கள். அவ்வாறு நீக்காவிட்டால் அது நஞ்சாகிவிடும். பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசியை மிகக்குறைவாக உட்கொள்ள வேண்டும். தேள்கடிக்கு மருந்தாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேழ்வரகு (Finger Millet) - இது உழைப்பாளிகளின் உன்னத உணவாகும் இதில் கால்சியம் அபரிமிதமாக இருப்பதால் மூட்டுவலி பிரச்சினைகளுக்கு தீர்வாகும். கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போதான உதிரபோக்கை நிறுத்த வல்லதாகும்!  கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு ரிப்பன் பக்கோடா என பலவும் செய்யலாம்.

ராகி அல்வாவும் செய்யலாம்.  உடலை உறுதிபடுத்தும், பித்தத்தை தணிக்கும், வாதத்தை கட்டுபடுத்தும். உடல் உழைப்பு அதிகம் செய்யதாதவர்கள் கேழ்வரகை உட்கொண்டால் எளிந்தில் ஜீரணமாகாது.

அதே போல் மலச்சிக்கல் உள்ளவர்கள் கேழ்வரகை தவிர்ப்பது அல்லது குறைத்துண்பது நலம் பயக்கும். நன்கு தோல்நீக்கிய கேழ்வரகையே உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பேதியாகிவிடும்.

கம்பு (Pearl Millet) - தெம்பு வேண்டும் என நினைப்பவர்கள் கம்பு உண்டால் பலன் பெறுவர்.  கம்மங்கூழ், கம்பு தோசை, கம்பு குழிபணியாரம் இன்றும் கிராமங்களில் பிரசித்தமாகும். கம்பு உடம்பிற்கு குளிச்சி தரும் சிறுதானியமாகும். அதே சமயம் கேழ்வரகு உடல் சூட்டை அதிகப்படுத்தும் சிறுதானியமாகும். ஆகவே தான் பெரும்பாலும் கம்பு, கேழ்வரகு இரண்டையும் இணைத்து கூழ் தயாரிப்பது வழக்கில் உள்ளது.

புரதமும், கால்சியமும் கம்பில் அதிகம் உள்ளதால் நல்ல உடல் உழைப்பு உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்.  கம்மங்கூழில் சிறிது மோர் சேர்த்து உட்கொண்டால்  வயிற்றுஎரிச்சல், வயிற்று பொருமல், மூலம் போன்றவை நிவர்த்தியாகும். கம்போடு உடைத்தகடலையை நன்கு அரைத்து பனவெல்லம் கலந்து நெய்யோடு உருட்டி லட்டு செய்யலாம். இது குழந்தைகளுக்கு நன்கு ஊட்டசத்து தரும் திண்பண்டமாகும். 

அதேசமயம் சளி, இருமல், ஆஸ்த்துமா மற்றும் தோல் நோய் பிரச்சினையுள்ளவர்கள் கம்பை மிக குறைவாக உட்கொள்ள வேண்டும்...

பாஜக - அதிமுக விற்கு அடுத்த சமூக விரோதிகள் தயாராகி விட்டார்கள்...


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.. மலையாளிகள் கொண்டாடும் அரிசி..

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு... என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் லோவாசு(ஸ்)டேடின் (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...

தமி(ழ)ழின் சினிமா...


*செவ்விந்தியர்-தமிழர் தொடர்பு..
*இந்தோனேசிய நரமாமிச பழங்குடி..
*பாண்டிய சோழ பகை..

இன்னும் பலவற்ற திரையில் காட்டிய படம்...

பாஜக - அதிமுக - காவல்துறையால் மறைக்கப்படும் இரகசியம்...


1.570 கோடி எங்கே?
2.கரூர் அன்புநாதன் எங்கே?
3.ராஜசேகர் ரெட்டி எங்கே ?
4.ராம் மோகன்ராவ் எங்கே ?
5. சைதை துரைசாமி வழக்கு எங்கே ?
6. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடந்த. ரெய்டில் சிக்கியது எங்கே ?
7. அமைச்சர்விஜயபாஸ்கர் வழக்கு எங்கே ?
8. ராதிகாவின் ஐந்தாவது புருஷன் சரத்குமார் வழக்கு எங்கே ?
9. இரட்டை இலைக்கு தினகரனிடம் லஞ்சம்
பெற முயன்ற தேர்தல் ஆணையர் எங்கே ?
10. ஜெயலலிதாவின் கால் எங்கே ?
11. ரயில் ஓட்டைய போட்டு ஆட்டைய போட்டது என்னாச்சு?
12. சசிகலா புஷ்பா விவகாரம் என்னாச்சு?
13 தீனதயாளன்னு... ஒருத்தன் தமிழக கோவில் சிலைகளை சிலைகளை ஆட்டைய போட்டது என்னாச்சு?
14. ஆவின் பால் ஊழல் என்னாச்சு?
15.சினிமா பைனான்சியர் அன்பு வழக்கு என்ன ஆனது.

இன்னும் பல....

இதில் ஏதேனும் ஒன்றுக்கு உங்களிடம் பதில் உள்ளதா?

பிறகு எதற்கு இந்த சட்டம், நீதி, அரசியல்.... இந்த துறைகள் மீதுள்ள நம்பகத்தன்மை முற்றிலும் இழந்துவிட்டேன்....

தூத்துக்குடியை நாசமாக்குவது ஸ்டெர்லைட் மட்டுமல்ல... v.v.titanium pigments நிறுவனமும் தான்...


அதிர்ச்சிகரமான உண்மை...

காணொளி லிங்க்--> https://youtu.be/ZqG90jzu2QE

தமிழ்த் தாய் வாழ்த்தை நோண்டிக் கிளறிய திராவிட வந்தேறிகள்...


எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே...

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்...

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்...

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே..

ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்..

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே...

மேற்காணும் வரிகள் ஆரியம் திராவிடம் இரண்டையும் விட தமிழின் பழைமையை கூறுவதால் அதையே வெட்டி ஒட்டிவிட்ட கொடியவர்கள் இவ்வந்தேறிகள்.

நம் தாய்மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடும் நமது நாட்டுப் பண் (தேசிய கீதம்).

அதையே தமது வசதிக்காகத் திருத்தி அதை நம் வாயாலேயே பாட வைத்து விட்டனர்.. இந்த திராவிட வந்தேறி..

நாமும் வெட்கமின்றிப் பாடி நாம் எவ்வளவு இழிந்த இனம் என்று நிறுவி வருகிறோம்.

தமிழ் அன்னைக்கு நாம் செய்கிற வன்கொடுமை இது...

இந்தியாவின் அணு உலை உண்மைகள்...


திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே சர்வீஸ் சாலை போட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை.. அதற்குள் குழியாகிவிட்டது...


என்ன தரத்தில் இந்த சாலையை சீரமைத்தார்கள் என்று தெரியவில்லை...

யார் இதை கேட்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில் இருக்கிறார்கள் அதிகாரிகளும் சாலை ஒப்பந்ததாரரும்...

வாங்கும் காசுக்கு கொஞ்சமாவது நியாயமா இருங்க அதிகாரிகளே...

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?


பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம்...

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.

இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.

மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே.

தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா?

மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விசயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.

கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுர கலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன.

பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா?

முறையான பராமரிப்பு அற்ற காரனங்களுக்ககவே அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாக்கும் அபாயம் இல்லை.

சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று?

இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்...

இந்தியா - சாகர்மாலா... சீனா - முத்துமாலா... திட்டம்...


பாஜக பினாமி அதிமுக எடப்பாடி & காவல்துறையே...


எச்.ராஜா சர்மா மற்றும் தேடப்படும் குற்றவாளி எஸ்.வி. சேகரை கைது பண்ண துப்பில்லை...

ஆனால் கேள்வி கேட்கும் அப்பாவி மக்களை கைது செய்து கொடுமைப்படுத்தி மிரட்டுகிறது...

இலுமினாட்டி யும் சக்திவாய்ந்த ஆறு துறைகளும்...


இலுமினாட்டிகள் கைப்பற்றியுள்ள முக்கிய ஆறு துறைகளையும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளையும் பற்றி பார்ப்போம்...

வங்கி துறை...

International money center banks
central banks
International money funds
International bank of settlement
Multinational corporation & Foundation
Regional Federation
International Labour Union
etc.

இரகசிய குழுக்கள் (SECRET SOCIETIES GROUPS)...

Free masonry
Skull and bones
Grant Oriental lodge
Knight Templars
Royal Order of Berarpal
Ferrari De Zion
Isorius
etc.

அரசியல் குழுக்கள் (POLITICAL GROUPS)...

International Gourmet Leaders
United Nation
Trilateral Commission
CFR - Council of foreign Relationship
Club Of Rome
Aspens Institute
Phokiman Group
etc.

உளவுத்துறை (INTELLIGENCE GROUP)...

CIA
KGB
FBI
British Intelligence
Mafia Organized Crimes
Interpol
community party
Etc.

சமயம் (RELIGION)...

World Council Of Church
National Council Of Churches
World Parliament Of Religions
Vatican
Smom
New Age Groups
Liberal Protestant Unity Church
Unilateral Universal Church
Temple Of Understanding
etc.

கல்வி துறை (EDUCATION)...

UNESCO
World Peace Group
Plannitary Congress
World Federalists Association
World Constitution and Parliament Association
Environmental Groups
Lucy Trust
World Good Will
World Union
SNL Institute
Media Establishment
etc.

மற்றவை (OTHERS)...

ACI
Council Of Nine
Johnson Groups
Mothers Of Darkness
Federal Reserve Bank, USA
Johnson Security
Cosmo Club
CFR
OTO
Processed Church
Temple Of Power
All Security Forces
Central Education Board
Illuminocorp
IMF
Bank Of London
Newark  Stock Exchange
Federal Emergency Management Agency
World Cort
WHO
African Union
United Nation
etc.

இந்தியாவில் இவர்களது நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் பற்றி பார்ப்போம்.  அடுத்த பதிவுகளில்...

இந்தியப் பெருங்கடல்... வங்காள விரிகுடா...


பொதுவாக கல்யாண வீடுகளில் திருமணம் முடிந்து மணமக்களை வாழ்த்திய பிறகு வெளியேறும் நபர்களுக்கு தேங்காயை தாம்பூலமாக தரும் காரணம் அறிவீர்களா?


இரண்டு காரணம்...

1. தேங்காய் - இங்கு தேங்காதே.. வந்த வேலை முடிந்தது. கிளம்பிச்செல். சொல்லாமல் சொல்லும் வழி...

2. நெடும் பயணம் நடந்து போகும் போது உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து + நீர் இரண்டும் உள்ள உணவுப்பொருள்!

பொதுவாக கேட்ட காரியங்களுக்கு தாம்பூலம் கொடுக்கப் படுவதில்லை .

தாம்ப்பூலத்தை கையில் சுமந்து வரும் பொது இவர்கள் நல்ல காரியத்திற்கு சென்று வருகிறார்கள் அறியும் வண்ணம் தாம்பூலம் வழங்கப்படுகிறது.

ஏன் தேங்காய் தரப்படுகிறது எனில் தேங்குதல் என்றால் தங்குதல் என்று பொருள்.தேங்காய் என்றால் இவ்விடத்தில் தங்கியிருக்காதே என்று பொருள்.

திருமண வீட்டில் நம் கையில் தேங்காயைக் கொடுத்து விட்டால் போய்வாருங்கள் என்று கூறுவதாகப் பொருள்" என சொல்லப்படுகிறது.

ஆனால் போக்குவரத்திற்கு வாகனங்கள் இல்லாத காலகட்டத்தில் நடை பயண தூரம் அதிகமாக இருக்கும்.

தேங்காய் கொடுத்து அணிப்பினால் தேங்காயும் அதில் உள்ள நீரும் உணவாக அமையும்.

உபாதைகள் இல்லாத சுத்தமான நீர் மற்றும் தேங்காயை மென்று தின்னும் பொது அதில் உள்ள நார்சத்து செரிமானத்தை தரும். என்னும் நல் நோக்கத்திற்காகவே முன்னைய காலத்தில் தாம்பூலப்பை கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்றோ ஞாபகார்த்த பரிசுப்பை என்ற பெயரில் மக்களின் அன்றாடத் தேவைகளிற்கு பிரயோசனமற்ற பொருட்களைக் கொடுப்பதால் வீடுகளில் அவை குப்பையாக தெங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது...