26/01/2019

கிராமசபை தீர்மானம் இயற்றுங்கள் - பேராசிரியர் த. செயராமன்...


Subscribe the channel...

நாகை , தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், வெவ்வேறு பெயர்களில் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்கள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன.

ஹைட்ரோகார்பன் முதல் சுற்று ஏலத்தில் மரக்காணம் முதல் கடலூர் வரை, கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகை மாவட்டம் வைதீஸ்வரன்கோவில் வரை, பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி, புஷ்பவனம் வரை ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது சுற்று ஏலத்தில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் கரியாப்பட்டினம் வரை, திருப்பூண்டி, கருப்பம்புலம், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகள் இரண்டாவது சுற்று  ஏலத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க கொடுக்கப்பட உள்ளன.  கடற்கரைப்பகுதிகளை மக்கள் காலிசெய்ய வேண்டிய நிலை விரைவில் ஏற்படும். 

இவையன்றி,  இவற்றில் விடுபட்ட காவிரிப்படுகை பகுதிகள் 1860 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு மூன்றாவது சுற்று ஏலத்தில் தரப்பட உள்ளன.  உங்கள் ஊரும் ஹைட்ரோகார்பன் மண்டலங்களுக்குள் வரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த கிராமசபைத் தீர்மானங்களை சனவரி - 26 அன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஒவ்வொரு கிராமமும் கீழ்க்கண்ட அல்லது இதை ஒத்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

"நம் ஊர் ____________ஒரு வேளாண் கிராமம் ஆகும். நம் கிராமத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், விளைநிலங்களிலோ அல்லது தரிசு நிலங்களிலோ, இயற்கை எரிவாயு - எண்ணெய் , மீத்தேன், ஹைட்ரோ கார்பன்கள் எடுக்க அரசு நிறுவனம் அல்லது தனியார் நிறுவனம் எதுவாக இருந்தாலும், எவ்வித பணிகளையும் நடத்த அனுமதி இல்லை என்று தீர்மானிக்கப்படுகிறது."

உங்கள் ஊர் பாதுகாப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.  உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமின்றி பிற கிராமசபைகளிலும் இத்தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.  விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.

பேராசிரியர் த. செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - தமிழ்நாடு...

இந்திய குடியரசு தினத்தை புறக்கணிப்போம்... மொழிப்போர் தியாகிகள் நாள்: சனவரி 25...


சமசுகிருதமயமாக்கம் நடைபெறும் இக்காலக்கட்டத்தில் தமிழன் மீண்டும் மீண்டும் போராடிக் கொண்டே இருக்கிறான்.

அன்று இந்தி - மயமாக்கத்திற்கு எதிராக மட்டுமே போராடினான்.

இன்று சமசுகிருதமயமாக்கம் ஆரிய - மயமாக்கம் என்ற எதிரியோடு மட்டுமல்ல..

திரவிட மயமாக்கம் என்ற இந்தியக் கருணா-வீரமணி-ஜெயா கும்பல் துரோகிகளுக்கு எதிராகவும் அவன் போராட வேண்டியிருக்கிறது.

இந்தக்கும்பல் கூட்டணி விசயகாந்த் வரை நீண்டு கொண்டே செல்வது தான் துயரம்.

நம்முடைய விளக்குகளுக்கும், தீப்பந்தங்களுக்கும், வெடித்தெழும் உணர்வுகளுக்கும் தேவையான தீயை அந்த மொழிப்போர் போராளிகளின் அணையாத நெருப்பில் பற்ற வைத்துக் கொள்வோம்..

இந்தி எதிர்ப்பு போரட்டம் 1937 முதல் பல ஆண்டுகளாக நடைபெற்றது என்றாலும் இதன் தீவிரத்தன்மை கொண்டு இரண்டு ஆண்டுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1939 மற்றும் 1965...

1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்கு ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியது), முதலமைச்சராக ராஜாஜி 14 சூலை 1937ஆம் நாள் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்தி பயிலவேண்டியதின் தேவையை விளக்கி வந்தார்.

தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார்துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத்தேவையானது என (சுதேசமித்திரன் பத்திரிகையில் மே 6, 1937) எழுதியிருந்தார்.

எத்தனை ஆண்டுக்காலமாய் ஒரே பொய்யுரையை திரும்பத்திரும்ப திணிக்கின்றனர்.

ஆரிய ராஜாஜியின் விஷக் கொடுக்கு  2015 லும் துடித்துக்கொண்டு தான் அலைகிறது.

அதன்படியே தாம் பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார்.

1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது.

மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள்.

சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது.

இந்த எதிர்ப்புகளுக்கு இடையே ராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார்.

அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது.

3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப் பிடிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.

1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல் நிலையத்திலேயே இறந்தனர்.

1938 டிசம்பர் 5 அன்று கைது செய்யப்பட்ட நடராசன் காவல் துறை சித்திரவதையால் 1939 சனவரி 15 கொல்லப்பட்டார்.

1939 பிப்ரவரி 11 அன்று கைது செய்யப்பட்ட தாளமுத்து மார்ச் 13 அன்று காவல்துறை சித்திரவதையால் கொல்லப்பட்டார்.

இவர்களே முதல் மொழிப்போர் தியாகிகள்...

இவர்களோடு போராட்டத்தில் மரித்த மொழிப்போர் தியாகிகள்.

பெரியார் உட்பட 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.

ஜவஹர்லால் நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக ஆக்குவதன் தீவிர ஆதரவாளர்கள்.

1965 சனவரி 26 முதல் இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்குவது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, நா. காமராசன் என்பவர்கள் இப்போராட்டத்தை வடிவமைத்தனர்.

1964 சனவரி சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் அன்றைய சென்னை மாகாண முதல்வர் திரு. பக்தவச்சலம் முன்பு ஒரு இளைஞன்...

அய்யா தமிழைக்காப்பாற்றுங்கள், இந்தியை நுழைய விடாதீர்கள், நீங்களும் தமிழர் தானே.

பக்தவச்சலம் உத்தரவு: இந்தப் பைத்தியத்தை கைது செய்யுங்கள்.

சனவரி 25 விடியற்காலை 4.30 மணிக்கு தனக்கு தீயை வைத்துக்கொண்டு "தமிழ் வாழ்க, இந்தி ஒழிக" என்று கத்திக் கொண்டே கருகிப்போனார் அந்த கீழப்பழூர் சின்னசாமி, அன்றைய முத்துக்குமாராய்.

1965 மொழிப் போராட்டத்தின் முதல் மொழிப் போராளி கீழப்பழூர் சின்னசாமி.

சின்னச்சாமியைப் போல ஒரு பத்துத் தமிழனாவது உயிர் நீத்தால் தான் நமது தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கம் ஒழியும்." என்று அடிக்கடி பேசிவந்த  கோடம்பாக்கம் சிவலிங்கம் தான் மொழிப்போரில் இரண்டாவதாகத் தீக்குளித்தவர்.

இந்திய அரசின் வன்முறைக்கு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன், மற்றும் சிவலிங்கம்.

16 சனவரி அன்று அண்ணாதுரை எதிர்வந்த குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.

ஐந்து போராட்டக்காரர்கள், சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.

மேலும் மூவர், தண்டபாணி, முத்து, சண்முகம் விசமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

இரு வார கலவரங்களில் அதிகாரபூர்வ தகவலில்படி காவல்துறையால் 70 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் 500க்கும் கூடுதலானவர் கொல்லப்பட்டதாக போராட்டக்காரர்களின் தகவல்கள் கூறுகின்றன.

1 பிப்ரவரி அன்று மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் ஆங்கிலம் அலுவல்மொழியாக விளங்க சட்டப் பாதுக்காப்பு கோரினார். அவரது தீர்வு ஏற்றுக்கொள்ளப்படாததால் தன்னுடைய உடன் அமைச்சர் அழகேசனுடன் பதவி விலகினார்.

தமது அமைச்சரவையில் வெளிப்பட்ட திறந்த எதிர்க்குரலுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி பின்வாங்கி பிப்ரவரி 11 அன்று அனைத்திந்திய வானொலியில் உரையாற்றினார். கலவரங்களைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்து ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியைப் பேண உறுதி கூறினார். தவிர, மேலும் நான்கு வாக்குறுதிகள் கொடுத்தார்:
ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்த மொழியில், வட்டாரமொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்பாட முழுமையான, கட்டற்ற சுதந்திரம் கொண்டிருக்கும்.

இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பாடல் ஆங்கிலத்தில் இருக்கும் அல்லது நம்பத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்பு உடனிருக்கும்.
இந்தியல்லா மாநிலங்கள் மைய அரசுடன் ஆங்கிலத்தில் தொடர்பாட முழு உரிமை உண்டு; இந்நிலையில் இந்தியல்லா மாநிலங்களின் ஒப்புதலன்றி எந்த மாற்றமும் நிகழாது.

மைய அரசின் அலுவல்கள் தொடர்பாக ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

பின்னர் ஐந்தாவதாக: இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்.

சென்னையில் இரண்டு பேர் தீக்குளித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற நிகழ்ச்சி இதற்குமுன் இந்தியாவில் நடந்ததில்லை. இப்போராட்டத்தைக் கைவிடுங்கள். இந்தி குறித்து உள்ள சிக்கல்களை நாம் ஒருவருடன் ஒருவர் பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

அன்றைய இந்தியப்பிரதமர் லால் பகதூர் சாஸ்த்திரி. சனவரி, 29 1965 தினத்தந்தி.

தீக்குளித்தவர்களின் முன்னோடிகளாக 1939 ல் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தாளமுத்து, நடராசன் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடுகாட்டில் பேசும்போது அண்ணாதுரை...

இரண்டு மணிகளை இழந்தோம். தமிழர் ஆட்சி ஏற்படும் போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதப்படும். வருங்காலத்தில் விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச்சிலை எழுப்ப வேண்டும். என்று சொன்னார்.

அவரோ, அவருக்குப்பின் வந்த திராவிடக் கருணாக்கள் எழுப்பினார்களா?

தங்கள் கையில் ஆட்சி கிடைத்த 2 ஆண்டுகளுக்குள் உத்திரப்பிரதேசத்தில், ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிமக்கள் என்று வரலாற்றையே மாற்றி எழுதினார்களே பாஜக கட்சியினர்.

50 ஆண்டு கால 'தமிழர்' ஆட்சியில் இந்த மொழிப்போர் வீரர்களின் வரலாற்றைக் கூட நம் பாடப்புத்தகங்களில் பதிவு செய்ய வில்லையே?. எல்லாம் மணிமண்டபத்தோடு சரி.

மொழி ஒரு சமூகத்தின் மேல் கட்டுமானத்தில் தான் இடம் பெறுகிறது என்று கூறும் ஒரு சிலர் கூறுவதுண்டு. ஆனால் பொறியியல் கல்லூரியில் படித்த பீளமேடு தண்டபாணி முதல் 6 வது வகுப்பைக்கூட எட்டாத விராலிமலை சண்முகம் வரை தெரிந்து வைத்திருந்தார்கள்-

மொழி என்பது தேசிய இனத்தின் முகமும், முகவரியும் என்று.

2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,635 தாய்மொழிகளும், 10,000 பேருக்கும் கூடுதலான பேசுபவர்களைக் கொண்ட 122 மொழிகளும் உள்ளதாக அறியப்பட்டது.

ஆனால் அன்றைய ராஜாஜி, சாஸ்த்ரி களின் இன்றைய பிரதிநிதியான நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி 2014 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தித் திணிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்கிறது. அது தொடர்பான அறிக்கையில்...

1, பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது.

2, ஜூலை 2014 மாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு(2014) சமஸ்கிருத மொழி வாரத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.

3, மேலும் ஆசிரியர் தினமான செப்டெம்பர் 5 ஐ "குரு உத்சவ்" என கொண்டாடும் படி      அனைத்து பள்ளிகளுக்கும் நடுவண் அரசு ஆகஸ்ட்-2014 இல் சுற்றிக்கை அனுப்பியது.

இந்தி பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்ற கூற்றுக்கு அன்று அண்ணாதுரையின் பதில்...

எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்காது; காகமாகத் தான் இருக்கும்...

பாஜக வும் குடும்ப அரசியலும்...


அரசு ஊழியர் சம்பளம் 50 ஆயிரம் கோடி. பென்சன் 25 ஆயிரம் கோடி. இன்னமும் போராட்டமா? சட்ட பஞ்சாயத்து இயக்கம்...


இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. ஆக அதன் இயந்திரமாக உள்ள அரசு ஊழியர்க்கு சம்பளம் கேட்டதை கொடு.

தமிழ்நாடு வருமானத்தில் சம்பளமே 50 சதமா என  கேட்பாயானால், தாதுக்கொள்ளை, தனியார் கொள்ளை என வருசம் லட்சம் கோடிக்கு உள்ளதை அரசே நடத்தி வருமானம் பார்க்க சொல்.

அரசு ஊழியர்க்கு 75 ஆயிரம் கோடியா என்றால், இந்திய அரசு கனிம கொள்ளை, வரி கொள்ளை என ஆண்டுக்கு 3 லட்சம் கோடிக்கு சுரண்டுவதை தடுத்து தமிழ்நாடு அரசு வருமானமாக மாற்ற சொல்.

அரசு ஊழியன் வேலை செய்வதில்லை என்றால் அதிக வேலை தர சொல்.

சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்றோர், தமிழ்நாட்டு அரசு துறை மீது பாமர மக்களிடம் வெறுப்பை விதைத்து, அரசுத்துறையை காலி செய்து தனியார் மயமாக்கும் கட்ட பஞ்சாயத்து இயக்கமாகவே தெரிகிறது. கூடுதலாக இந்திய கொள்ளையை திரும்ப பெற வழி சொல்லாது இருக்கும் அரசுத்துறையை அழிக்கும் மாமா பஞ்சாயத்து இயக்கமாகவும்...

நாங்கள் கூறும் உலக வணிகர்கள் தான் இந்தியாவை ஆள்கிறார்கள் என்பதை நீங்கள் எப்போது புரிந்துக்கொள்ள போகிறீர்கள்..? அரசாங்கம் பொம்மை தான்...


பாஜக படு தோல்வியடையும் பிரபல டெக்கான் ஹெரால்டு கருத்துக்கணிப்பு அதிரடி சர்வே...


நாடாளுமன்றத் தேர்தலில் 175 இடங்களுக்கு மேல் கிடைக்காது: பாஜக கூட்டணி படுதோல்வி உறுதி...

புதுடில்லி, ஜன.22 2019 நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு பலத்த அடிகாத்திருப்பதாக, டெக்கான் ஹெரால்டு கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், எந்தக்கட்சிக்கும் அறுதிப் பெரும் பான்மை கிடைக்காது என்று கூறியிருக்கும் டெக்கான் ஹெரால்டு, காங்கிரஸ் தலை மையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி 200 இடங்கள்வரை பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 336 இடங்களை கைப்பற்றியது. பாஜக மட்டும் 283 இடங்கள் வரை பெற்றது. தனிப் பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி ஆட்சியமைத்தார். ஆனால், 2019 மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 160 முதல் 175 இடங்களுக்கு உள்ளேயே கிடைக்கும் என்று டெக்கான் ஹெரால்டு கூறியுள்ளது.

அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு 180 முதல் 200 தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதிகபட்ச இடங்களை காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றும் என்றும் தெரி வித்துள்ளது. மாநிலங்கள் அளவில் தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி ஜனதா போன்றவை 160 முதல் 180 இடங்களைக் கைப்பற்றும் என்றும் குறிப்பிட்டுள்ள அந்த ஏடு, தனியாக எந்தவொரு கட்சிக்கும் 272 இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்றும் கணித்துள்ளது...

சிந்தித்துப் பார் தமிழா...


பிரபஞ்ச இரகசியம்...


இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம். ஒரு இரகசியத்தை இங்கே கூறபோகிறேன்.

இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம்.

ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே.

இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடிகொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்...

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும் போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதுதான் உண்மையிலும் உண்மை.

நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

ஆம் அதும் உணர்வு பூர்வமானதே. அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது. அது உங்களை நிச்சயம் காப்பாற்றும். அதற்கு அறிவு உண்டு.

ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு..

இதை நீங்கள் தயவுசெய்து கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும்.

ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது. மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்...

அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல் பின்லேடன் மற்றும் அல்கொய்தாவால் நடத்தப்பட்டது என இன்றும் நீங்கள் நம்புகிறீர்களா.?


யாளி - சிறு குறிப்பு...


யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்று நம்பப்படுகிறது.

யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது.

பொதுவாக இவை இந்துக் கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.

இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.

பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.

யாளியின் பூர்விகம்...

யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன. இதனைக் 'கற்றாளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.

யாளி வகைகள்...

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன. அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்...

(௧) சிம்ம யாளி (௨) மகர யாளி (௩) யானை யாளி...

ஒரே படம் தான்... மொத்த திமுகவும் காலி - திருட்டு திமுக...


பறையர், புலையர் பற்றி கன்னட ஈவேரா (முரசொலி படம்)...


ஈ.வே.ரா பற்றி பொய் பரப்புரை...

அவர் பறைச்சி ரவிக்கை போட்டதை கிண்டல் செய்யவில்லை.

புலையர் சமூக பெண்கள் ரவிக்கை போட்டதைத் தான் கிண்டல் செய்தார்.

பள்ளர்களும் பறையர்களும் படித்ததைத் தான் அவர் கிண்டல் செய்தார்.

ஆகவே பறையர்களை அவர் கிண்டல் செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

ஈ.வே.ரா வை பிரிந்து தனிக்குடித்தனம் போட்ட கருணாநிதி முரசொலியில் போட்ட தெளிவான படம்...

நிதர்சணம் புரியா ஆட்டுமந்தைகள் மேய்ப்பான் செயலுக்கேற்ப குழியிலேயே விழும்...


அவற்றுக்கு தெரியாது நாம் ஏன் குதிக்கிறோம் என்று...

அந்த மாதிரிதான் நம் நாட்டு அரசியல் தலைவர்களும்...

அவன் சொல்லுக்கேற்ப கண்மூடித்தனமாக ஆகாத காரியங்களால் நாடு பிளவுபட்டு சின்னாபின்னாமானது...

பாயில் உறங்குவதால் அடையும் நன்மைகள்...


நோக்குவர்மம்...


நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியமே...

இந்த பதிவை படிக்கும் முன் செய்ய வேண்டியவை.. முதலில் நீங்கள் தளர்வு நிலையில் இருக்க வேண்டும் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கருத்துகளை சிந்தித்து கொண்டு படிக்க வேண்டாம். திறந்த மன நிலையில் படியுங்கள்.

நோக்கு(நோக்கம்) + வர்மம்(கலை) நம் கண்ணால் பார்க்கும் அணைத்து உயிரையும் தன் வசபடுத்துதல் என்பது பொருள்.

இந்த பிரபஞ்சத்திலேயே மனித ஆற்றலுக்கு மேலே எந்த சக்தியும் இருந்தது இல்லை. இந்த பூமியின் உயிரினங்களினுடைய பரிணாம வளர்ச்சியில் உச்சநிலையே மனித உடம்பு தான்.

மனிதன் மிருகமாகவும் வாழலாம் தெய்வமாகவும் வாழலாம். அந்த தெய்வீக நிலையில் இருப்பவருக்கு நோக்குவர்மம் கை வந்த கலை.

நான் தலைப்பில் எழுதியதை போல நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியம். நோக்குவர்மம் கற்று வருவது கிடையாது. அது ஒரு நிலை அவ்வளவு தான்.

அந்த நிலையை அடைய முதலில் உங்களுக்கு தேவை தெளிவு.

தெளிவு என்று நான் குறிப்பிடுவது உங்கள் சுமையை இறக்கி வைக்க வேண்டும்.

சுமை என்றால் உங்கள் சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள். அதுதான் உங்கள் தெளிவை மறைத்து உங்களை ஏமாற்றிவிடும்.

இதுக்கு ஒரு குட்டி உதாரணம்...

உங்கள் அருகில் இப்போது இருக்கும் பொருளை கையில் எடுத்து ஒரு 15 நிமிடம் வைத்து பாருங்கள். உடனே உங்கள் கை மரத்து போய்விடும் பின் வலி தான் மிச்சம்.

இதே தான் உங்கள் எண்ணத்தில் ஓடும் நபரையோ இல்லை உங்கள் குடும்பத்தையோ எப்போதும் சுமந்து கொண்டு உங்கள் மூளையை மரத்து விட செய்கிறீர்கள்.

உங்களுக்கு நோக்கம் (இலக்கு) மட்டும் தான் இருக்க வேண்டும். இப்படி நோக்கம் மட்டுமே இருக்கும் போது வாழ்க்கை இனிப்பாக மாறும். அந்த தெளிவு உங்களை உண்மையின் அருகில் எடுத்து செல்லும்.

நீங்கள் தெளிவுடன் நடந்து செல்லும் போது உங்கள் முன் வரும் அனைத்தையும் நீங்கள் தெளிவுடன் பார்க்கும் போது வெற்றியின் வாசல் படியில் நீங்கள் கால் எடுத்து வைப்பீர்கள்.

அந்த நொடியில் தான் நோக்குவர்மம் விதை உங்களுக்குள் வந்து விழும்.

அந்த விதை விழுந்த உடன் நீங்கள் உடல் மனம் என்ற குறுகிய எல்லையை கடந்து உயிர் தான் நிரந்திரமானது என்ற உண்மையை உங்களுக்குள் நிலை நிறுத்துவீர்கள் (அனுபவபூர்வமாக).

பின் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் கட்டு பாட்டுக்குள் வர தொடங்கும். உங்கள் சிந்தனைகள் எண்ணங்கள் சாயிந்து விடும். இப்போது இங்கே நோக்கம் மட்டும் தான்.

புத்தர் குள்ளும் இது தான் நிகழ்தது. அவர் நோக்கு வர்மத்தில் வல்லவர்.

உங்களுக்குள் விழுந்த அந்த விதை வளர தொடுங்கும் போது. நீங்கள் எந்த உயிர் முன் சென்றாலும் உங்கள் நோக்கம் அவருக்கு தெரிந்து விடும். அவர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த செயலை செய்வார்.

நீங்கள் யாரை பார்த்தாலும் அனைவரும் உங்கள் கட்டுபாட்டுக்குள் வருவார்கள். அந்த தெளிவு உங்களை கூட்டிசெல்லும் இடமும் அப்படித்தான் இருக்கும். உங்கள் பேச்சு முற்றிலும் குறையும். புரியாத விஷயம் என்று எதுவுமே இருக்காது.

தியானம் தானாகவே உங்கள் அங்கமாகி விடும். நீங்கள் இந்த நிலையில் வாழும் போது உங்கள் முன் வரும் அணைத்து உயிரின் என்ன ஓட்டத்தை எளிதாக வாசிக்க முடியும்.

இப்போது நீங்கள் தெளிந்த நீரோடை போல மாறி விடுவீர்கள். உங்கள் கண்களில் அன்பும் அமைதியும் வேரூன்றி நிற்கும். எண்ணங்கள் காணமல் போய்விடும் நோக்கம் (இலக்கு) மட்டும் தான்...

பாஜக - அதிமுக - நீதிமன்றம் - ஸ்டெர்லைட் கூட்டு சதிகள்...


சோறு தான் முக்கியம் வைரல் வீடியோ...


Subscribe The Channel More Funny Videos...

ஒரு உதவி காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று எழுதி வைத்து விட்டு அதன் படியே பணிபுரிவதற்கு முதற்கண் வாழ்த்துகள்...


இவர் தினம் தினம் பல சாதனைகள் புரியட்டும்.

நாம் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் திரு. எட்வர்ட் பிரைட்  அவர்களை பாராட்டுவோம்...

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் - பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து...


எம்.எல்.ஏ., - எம்.பி., வேலையை கொடுங்க... வாட்ஸ் ஆப் பில் பரவும் ஆசிரியை பேச்சால் சர்ச்சை...


சென்னை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ நடத்தும் போராட்டத்தில், ஆசிரியை ஒருவரது பேச்சு, பெற்றோர் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஜாக்டோ - ஜியோ நடத்தும் போராட்டத்தில், பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில், சில ஆசிரியர்கள், 'மைக்' பிடித்து, ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசுகின்றனர்.

போராட்டத்தின் போது, ஆசிரியை ஒருவர் பேசியது, 'வாட்ஸ் ஆப்'பில் வைரலாகியுள்ளது.அவரது பேச்சு விபரம்:

இந்த சிங்கங்களை எதிர்க்க நினைப்போருக்கு என்னவாகும் என்பது, நாளை தெரியும். அப்பாவும், அம்மாவும், எல்லா நகைகளையும் விற்று, எங்களை படிக்க வைத்து, ஆசிரியராக்கி உள்ளனர்.

ரேஷன் கணக்கு ஆசிரியராக தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுகிறோம். மறுபடியும் வேலைக்கு ஒரு தேர்வு எழுத சொல்றீங்க...

அதையும் எழுதி, தேர்ச்சி பெற்று ஆசிரியராக வருகிறோம்.ஆசிரியரான பின், ரேஷன் கடை கணக்கெடுக்க போகச் சொல்றீங்க; வாக்காளர் கணக்கெடுக்க சொல்றீங்க; பொருளாதார கணக்கெடுக்க சொல்றீங்க; எல்லாத்துக்கும் போறோம்.

நீங்க சொல்ற வேலையை எல்லாம், 'ஊங்' கொட்டி... ஊங் கொட்டி... செய்கிறோம்; எங்களை, தலையில கொட்டி கொட்டி, நடு தெருவுல உக்கார வச்சுட்டீங்க.

ஓய்வூதியம்...

நீங்க சொன்ன, எல்லா வேலையையும் செய்த பிறகும் விட்டீங்களா... எல்லாரையும், காலியிடம் இருக்கு... காலியிடம் இருக்குனு, கடைசியா, அங்கன்வாடிக்கு போகச் சொல்றீங்க.

எத்தனை இடங்களில், எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகள் காலியாக இருக்கு; அங்க அனுப்புங்க... பள்ளியை நிர்வகிக்க தெரியுற எங்களுக்கு, ஒரு தொகுதியை நிர்வகிக்க தெரியாதா என்ன... அனுப்புங்க; செஞ்சு காட்டுறோம்.

ஓய்வூதியம் எங்களின் உரிமை. நீங்கள் கொடுத்து தான் ஆகணும். கொடுக்க மாட்டேன்னு, சொன்ன காலம் எல்லாம் மலையேறி விட்டது. இனிமே நாங்க கேக்குறது எல்லாவற்றையும், கொடுத்தே ஆகணும். அதுவரை, போராட்டம் தொடரும்; வெற்றி கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.

இந்த வீடியோ, வாட்ஸ் ஆப்பில் வைரலாக வலம் வருகிறது...

தொண்டைப் புண் ஆற...


அரசியலில் இறங்கிய தாடி பாலாஜியின் மனைவி.. அதுவும் இந்தியாவிலேயே முதல் முறை...


பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.

இவர் சமூகசேவை பணிகளில் பணியாற்றுவதாக கூறியிருந்தார். ஏற்கனவே பாலாஜியுடன் பிரச்சனை இருந்தபோதிலிருந்தே பெண்களுக்கெதிராக நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க பாடுபடுவதாக கூறியிருந்தார்.

தற்போது இவரும் இன்னும் சில பெண்களும் இணைந்து ஒரு தேசிய பெண்கள் கட்சியை தொடங்கியுள்ளார்கள்.

இது இந்தியாவில் பெண்களுக்கான முதல் அரசியல் கட்சியாம்...

இயற்கையின் அருமையை உணர்ந்து கொள்ளுங்கள்...


இங்கே பெண்ணே படைத்தலுக்கு காரணமாக இருக்கிறார் என்று கூறுகிறார்கள்...


முற்றிலும் உண்மை வேறுபாடனது
ஆணும் பெண்ணும் இரண்டுமே ஓர் ஆற்றலாக உருவாகும் போது அங்கு படைத்தல் நிலவுகிறது
அந்த ஆற்றலே எல்லாம்...

உட்புறத்தில் ஓவ்வொரு பெண்ணும் ஓர் ஆண்... ஓவ்வொரு ஆணும் ஓர் பெண்..

வெளிபுறத்தில் இது அதனின் எதிர்பக்கம்...

தமிழினமே சிந்தித்துப் பார்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


கிரேட் பிரமிடுக்கு விஜயம் செய்த நெப்போலியன் பற்றி ஒரு சுவாரசியமான கதை உள்ளது. அவர் கிங்'ஸ் அறைக்குள் தனியாக இருக்க வேண்டும் என்று கேட்டார். பின்னர் அறையை விட்டு அவர் வெளிப்படும்போது, ​​அவர் வெளிப்படையாக எதையோ தெரிந்துகொண்டார் என்று அவரது படைகளால் அறியமுடிந்தது. பின்னர் அவர் மர்மமான எதையும் சாட்சியாக பார்த்திருந்தால் கூறுங்கள் என ஒரு உதவியாளர் கேட்டபோது, ​​அதற்கு அவர் எந்த பதிலும் இல்லை என்று பதிலளித்தார்,

பின்னர் அவர் அந்த சம்பவம் பற்றி மறுபடியும் குறிப்பிடப்படவே இல்லை. பல வருடங்கள் கழித்து, அவர் இறக்கும் தருவாயில், ​​ஒரு நெருங்கிய நண்பர் கிங் அறையில் உண்மையில் என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டார். அவர் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் தலையை குலுக்கி, 'இல்லை, என்ன பயன்? நீ என்னை நம்பமாட்டாய் என்றார்.

'நமக்கு தெரிந்தவரை, அவன் யாரிடமும் எதையும் ஒருபோதும் சொல்லவில்லை, அவனுடைய கல்லறைக்கே அந்த இரகசியத்தை எடுத்துக் கொண்டான் என்றார். அலெக்ஸாண்டர் (கிங் சேம்பரில் தங்கியிருந்தபோது அவருடைய விதியை பற்றி நெப்போலியனுக்குக் குறிப்பிட்டிருந்ததாக நம்பகமான ஒரு கதை உள்ளதாக கூறுகின்றனர்)...

அடுத்த குட்டி சொர்ணாக்கா...


Subscribe the channel for more videos...

தாளம் - லயம்...


தாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள்.

இசை சம்பந்தமாகப் பேசும் போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கின்றது.

ஒரே அளவாகத் தாளத்தை தட்டி வரும் போது அதில் ஓர் இசையுணர்ச்சி உண்டாகின்றது.

இது ‘லய’ உணர்ச்சி எனப்பெறும்.

எப்படி ஏழிசை சுரங்களெல்லாம் ஆதார சுருதியிலே சேர்ந்தொலிக்கும் போது ஓர் உணர்ச்சி உண்டாகின்றதே, அதேபோல தாளத்தையும் ஓர் அளவாய்த் தட்டிப் போட்டு வரும் போது அதுமாதிரியான உணர்ச்சி உண்டாகின்றது.

லயம் என்ற சொல்லிற்கு ஒன்றுதல் என்பது பொருள்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா இது தான்...


சருமம் மினுமினுன்னு ஜொலிக்கணுமா?


கடுகு வெச்சு ஃபேஷியல் பண்ணுங்க...

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருந்து, முக அழகை கெடுக்கிறதா?

அதற்கு கவலைபட வேண்டாம். வீட்டில் சமையலில் பயன்படும் கடுகு, சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

இந்த கடுகை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

இந்த பொருள் மிகவும் ஈஸியாக அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கக்கூடியது. இத்தகைய பொருளை சருமத்தை வைத்து பல முறைகளில் பராமரிக்கலாம்.

இப்போது அந்த கடுகை எவ்வாயெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா...

ஒரு டேபிள் ஸ்பூன் கடுகை எடுத்துக் கொண்டு, 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் அல்லது லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி, நன்கு மென்மையாக 3-4 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

கடுகை வைத்து ஃபேஷியல் செய்வதில், மிகவும் சிறந்தது என்றால், அது இந்த முறை தான். இந்த முறையால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கிவிடும். இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சற்று நேரம் மசாஜ் போல் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.

கடுகு மற்றும் கற்றாழையை கலந்து செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பசை கிடைப்பதோடு, முகத்தில் உள்ள பிம்பிள், சரும துளைகளில் உள்ள தூசிகள் போன்றவை போய்விடும். இந்த ஸ்கரப் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இது ஒரு மிகவும் சிறப்பான இயற்கை ஸ்கரப். இந்த முறையால், கடுகு நிச்சயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும்.

ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் கிரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து, முகத்திற்கு தடவி, 3-4 நிமிடம் தொடர்ந்து தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் பொலிவோடு காணப்படுவதோடு, ஸ்கரப்பிற்குப் பின் சருமத்தின் நிறம் சற்று கூடும்.

முகம் நன்கு மினுமினுப்போடு காணப்பட, ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 2-3 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்...

தமிழகம் கலப்படத்தில் களவாடப்படுகிறது...


ஆசிரியர்களையும் ஆசான்களையும் விமர்சனங்கள் செய்யும் உத்தமன்களுக்காக...


ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டத்தை விமர்சிப்பவர்களே...

இதை கேளுங்கள்...

நாங்கள் கட்டிய 50ஆயிரம் கோடி ரூபாய்  CPS என்ற பெயரில் அரசு பிடித்ததே..

அதை எங்கே என்று கேட்கிறோம் அரசிடம்..

பதிலில்லை..

நிதிநிறுவனங்கள் மோசடி செய்தால் அந்த கம்பெனி முன்நின்று பணமிழந்தவன் கல்லெறிவானே..

அதுபோன்று நாங்கள் செய்தோமா?

அறவழியில்தானே போராடுகிறோம்..

ஆளுக்கோரு ஊதியம் என்ற பெயரில் உள்ள ஊதியமுரண்பாடுகளை களையுங்கள் என்கிறோம்..

இது தவறா?

ஒரு எம்எல்ஏ பதவியேற்று பத்து நிமிடத்தில் செத்து போனால் அவருக்கு பென்சன் உண்டு..

ஆனால் 32வருடங்கள் வேலை பார்த்த ஒரு ஆசிரியனுக்கு பென்சன் கிடையாது..

கடைசிக்காலத்தில் சாக்பீஸ் துகளோடு அவன் வாழ்வு அஸ்தமிக்க வேண்டும்..

ஆசிரியருக்கு சம்பளம் அதிகம் என கூச்சலிடுபவர்களே..

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்று சிலர் எழுத்தால் எழுதலாம் அதை மனத்தால் கொண்டவர்கள் நாங்கள்..

எங்கள் ஊதியம் உடனே உயர்ந்து விடவில்லை..

20வருடம் வேலை பார்த்த என் சம்பளம் இப்போது 70000.

ஆரம்பகாலத்தில் 5789 தான்..

இதில் வருமானவரிக்காக ஒருமாத சம்பளம் பிடித்தம் செய்யப்படும்..

சட்டப்பிரிவு 51 100 101ஆகிய பிரிவுகளை நீக்க சொல்கிறோம்.

இவை என்ன தெரியுமா?

கூச்சலிடுபவர்களே...

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சட்டப்பிரிவுகள். இதை நீக்கு என முழக்கமிடுகிறோம்..

ஆனால் நீங்களோ 5000ரூபாய்க்கு பாடம் நடத்த ஆள் தேடுகிறீர்கள்..

ஜெயலலிதா கூறிய அதே வார்த்தைகளை 90சதவீதம் அரசுப்பணம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு செல்கிறது என்பதை நம்புகிறவர்களே..

அப்படியானால் அரசியல்வாதிகள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணங்கள் அரசு பணமில்லையா?

அது விளையாட்டுக்காக சின்னபிள்ளைகள் வைத்திருக்கும் பணமா?

இன்று நீ முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் எழுத்துக்களை தட்டச்சு செய்கிறாயே...

அவதூறாய் பேசுகிறாயே...

அந்த எழுத்துக்களை கற்றுக் கொடுத்தவன் ஒரு ஆசிரியன் என்பதை மறவாதே..

பின்லாந்து கல்விமுறையை சிலாகிப்பவனே...

அங்கே ஆசிரியர்கள் கொண்டாடப் படுகிறார்கள்..

இங்கே ?

ஊதிய உயர்வு கேட்டு போராடுகிறோம் என்பது பொய்..

மேலே சொன்னவை தான் மெய்..

புரியவில்லையெனில் போராட்ட களம் வா..

அங்கே உனக்கு நாங்கள் கற்று தருகிறோம்..

ஏனென்றால் நாங்கள் ஆசிரியர்கள்...


A father and mother give a child to this world but a teacher gives the world to child

There are two holy places in the world one is womb of mother another is classroom of teacher

The destiny of the nation build within the four walls of the class room..... One who criticize blame the teachers  never succed in his life...