26/01/2019

அரசு ஊழியர் சம்பளம் 50 ஆயிரம் கோடி. பென்சன் 25 ஆயிரம் கோடி. இன்னமும் போராட்டமா? சட்ட பஞ்சாயத்து இயக்கம்...


இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. ஆக அதன் இயந்திரமாக உள்ள அரசு ஊழியர்க்கு சம்பளம் கேட்டதை கொடு.

தமிழ்நாடு வருமானத்தில் சம்பளமே 50 சதமா என  கேட்பாயானால், தாதுக்கொள்ளை, தனியார் கொள்ளை என வருசம் லட்சம் கோடிக்கு உள்ளதை அரசே நடத்தி வருமானம் பார்க்க சொல்.

அரசு ஊழியர்க்கு 75 ஆயிரம் கோடியா என்றால், இந்திய அரசு கனிம கொள்ளை, வரி கொள்ளை என ஆண்டுக்கு 3 லட்சம் கோடிக்கு சுரண்டுவதை தடுத்து தமிழ்நாடு அரசு வருமானமாக மாற்ற சொல்.

அரசு ஊழியன் வேலை செய்வதில்லை என்றால் அதிக வேலை தர சொல்.

சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்றோர், தமிழ்நாட்டு அரசு துறை மீது பாமர மக்களிடம் வெறுப்பை விதைத்து, அரசுத்துறையை காலி செய்து தனியார் மயமாக்கும் கட்ட பஞ்சாயத்து இயக்கமாகவே தெரிகிறது. கூடுதலாக இந்திய கொள்ளையை திரும்ப பெற வழி சொல்லாது இருக்கும் அரசுத்துறையை அழிக்கும் மாமா பஞ்சாயத்து இயக்கமாகவும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.