27/10/2021

காமத்தை வெல்வது எப்படி?

 


இன்றைய கால கட்டத்தில் கடவுளை நெருங்க விடாமல்.. நம்மை உலக இச்சையின் பக்கம் இழுத்துக் கொண்டு போகும் மிகப்பெரிய அஸ்திரம்..

யுத்தத்தில் லக்ஷ்மணனை மூர்ச்சை இழக்க செய்த நாக அஸ்திரம் இதுதான்..

விகாரங்களில் மிகப்பெரிய அஸ்திரம் காமம்..

இதனால்தான் தெய்வங்களில் அவர்களின் தலைக்கு பின்னாலோ, காலுக்கு அருகிலோ காமம் என்ற பாம்பை வென்றதன் அடையாளமாக மிகப் பெரிய விஷப்பாம்பை காண்பித்து உள்ளனர்..

இந்தகாமம் என்பது மனதில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ, விதைத்துள்ள இச்சையின் விதை..

இதை ஆரம்பத்தில் நாம் நீக்காவிட்டால் இது நம்மை மூர்ச்சை இழக்க செய்துவிடும்.. மூர்ச்சை என்றால் நாம் என்ன செய்கின்றோம், என்ன பேசுகின்றோம் என்பதே தெரியாத நிலை..

இதனால்தான் காமம் மகா சத்ரு என்று கீதை சொல்கின்றது..

கடவுளின் அருகில் செல்ல வேண்டுமானால் ஒருவர் முதலில் காமத்தை விடவேண்டும் என்று சொல்லப்படுகின்றது, உண்மையில் காமத்தை வெல்வது எளிது..

ஆனால், எப்பொழுதும் நம்முடைய மனதை பிஸியாக வைத்துக் கொள்பவருக்கே இது சாத்தியம்.. ஏதாவது ஒரு ஆன்மீக பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவேண்டும்.

எங்கே காமம் உற்பத்தி ஆகின்றதோ முதலிலேயே எச்சரிக்கையாகி மனதை அதிலிருந்து விலக்க வேண்டும்..

காமத்தை பஸ்பம் ஆக்கும் பரமாத்மா சிவன் மீது மனதை செலுத்த வேண்டும்.. மன்மதனின் காமபாணம் சிவபெருமானிடம் செல்லுபடி ஆகவில்லை..

எனவே, மனம் இறைவன் மீது ஈடுபட.. நம்முடைய மனம் சுத்தமடைய வேண்டும்..

முதலில் நம்முடைய கண்கள் எதிலாவது மூழ்கும் பொழுது அங்கேதான் காமம் உற்பத்தி ஆகின்றது..

கண்கள் பார்த்து மனதிற்கு கொண்டு செல்லும்பொழுது அங்கே இச்சை உற்பத்தி ஆகின்றது.

அந்த இச்சையின் சிறிய விதை பெரிய காமத்தின் விஷ விருட்ஷமாக வளர்ந்து விடும்.. அதில் உட்காரும் ஆசை என்னும் குரங்கு.. ஒவ்வொரு கிளையாக தாவி விளையாட ஆரம்பிக்கும், கண்டிப்பாக ஒரே கிளையில் அமராது.. ஒன்றை பார்க்க இன்னொரு கிளை அதற்கு அழகாக தோன்றும்..

காமம் ஒருவருக்குள் வந்துவிட்டால்.. அவர் காலப்போக்கில் எல்லோர் மீதும் அதை செலுத்த ஆரம்பித்து விடுவார்.. அதற்காக அவர் பல காரணங்களை சொல்வார்..

எங்கே காரணம் இல்லையோ, அங்கே தான் நிவாரணம்..

ஒருவரின் தேகத்தின் மீது பார்வை செல்லும் ஒருவருக்கு காமம் உற்பத்தி ஆகும்..

உங்கள் கண்கள் எதிலும் மூழ்க கூடாது.எதில் உங்கள் கண்கள் நிலைபெருகின்றதோ அதனுடைய காட்சி உங்களை அறியாமல் உங்களிடம் நாள் முழுவதும் தென்பட்டுக்கொண்டே இருக்கும்..

எனவே, இறைவனின் கட்டளை உன்னை உடல் என்று உணராமல், நெற்றியின் மத்தியில் ஆன்மா என்றே உணர்ந்து கொள்.. பிறரையும் அப்படியே பார்க்க பழகு..

பிறகு தேகத்தின் கவர்ச்சி ஒன்றும் செய்யாது..

ஒருவனின் காமம், கோபம், அகங்காரம், பற்று, பேராசை என்னும் ஆயுதங்களில் முதல் ஆயுதம் காமம்..

இதை வெல்லவேண்டும் என்பதற்காக ரிஷிகள், முனிகள் வீட்டை விட்டு காட்டுக்கு சென்றார்கள்.

ஆனால் இறைவன் சிவபெருமானின் வாக்கு இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர்போல பற்றற்று அன்புடன் ஆத்ம அபிமானத்துடன் இருந்து மனதை ஜோதியான என்னிடம் செலுத்து என்பதே ஆகும்..

பெரிய..பெரிய.. மன்னர்கள் கூட தன்னுடைய ராஜ்ஜியத்தை காமத்தினால் இழந்தனர்.

ஒரு காமம் வாழ்க்கையில் சத்திய நாசம் செய்துவிடும்.. காமம் உள்ளுக்குள் வந்துவிட்டால் அவன் பலவிதங்களில் பொய் பேச ஆரம்பித்து விடுவான், அவன் காமத்தை நல்லது என்று அதன் பக்கம் பேசுவான்..

இன்று இந்த உலகம் பொய்யாக மாறியதற்கு முக்கிய காரணம் காமம்..இந்த உடலும் பொய்..இந்த உலகமும் பொய்..

ஆபாசத்தை பார்ப்பவர் ஒன்றோடு நிறுத்துவது இல்லை மேலும், மேலும், பார்த்துக்கொண்டே இருப்பார் இதை பார்க்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்குள் ஒழுக்கமான கணவன் மனைவியாக கண்டிப்பாக வாழ முடியாது.. இவ்வளவு விவாகரத்து வழக்குகளுக்கும் காமமே கதாநாயகன்.. காமத்தினால் நிரந்தர சந்தோசப்பட்டவன் ஒருவனுமில்லை..

ரிஷிகள் கூட காக்கையின் மலத்திற்கு சமமான சுகம் என்றே சொல்கின்றனர்..

எனவே, மனதை சுத்த எண்ணங்களில் நிரப்பி வையுங்கள்...

அதானிக்காக செயற்கை நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுத்தும் பாஜக மோடி...

 


விரைவில் மீண்டும் கொரோனா பார்ட்-3 நாடகம் ஆரம்பம்...

 


பொய், பித்தலாட்டம், முட்டாள்கள் மற்றும் தேச துரோகிகள் கூடாரம் பாஜக...

 


கூடுவிட்டு கூடுபாயும் சித்துகளை பெற்றவருக்கு மரணம் இல்லை...

 




முன்னோர்கள் நம் உடலை மூன்று வகையாக பிரித்து விளக்கியுள்ளனர்.

1) பரு உடல் 2) நுண்ணுடல் (astral body ) 3) காந்த உடல் ( causal body ).

1)பரு உடல் என்பது செல்களால் ( cell ) ஆனது. பல விதமான தனிமங்களால் ஆனது . பல செல்கள் இணைந்த கூட்டு அமைப்பு உடல்.

2) நுண்ணுடல் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு பிரிவாக உள்ளது விண் என்னும்
நுண்அனுவாகும். அதுவே உயிர் என்றும்
உயிராற்றல் என்றும் , உயிர் சக்தி என்றும் கூறப்படுகிறது. உயிர் என்பது மிக நுன்னிய பருமனை கொண்டது. சூச்சும நிலையில் நிறைந்து ஓடுவதால் அதனை சூச்சும சரீரம் என்று அழைக்கிறோம். உயிரிலிருந்து வெளிபடும் உயிர்துகள் தான் சூக்கும உடல்.

3). காந்த உடல் என்பது நுண்ணிய
இறைதுகளால் ஆனது. ஒவ்வொரு
இறைதுகளும் தன்னை தானே மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது. எப்போதும் விண்ணிலிருந்து இறைதுகள் வெளியேறி கொண்டே இருக்கிறது . 

அவ்வாறு வெளியேறும் காந்த அலை சீவ காந்தம் ஆகும் . சீவ காந்த களத்தையே காரண உடல் என்றும், பிரணவ உடல் என்றும் , காந்த உடல் என்றும் அழைக்கிறோம். உயிரிலிருந்து. வெளியாகும் ஜீவ காந்த ஆற்றலே இத்தனை வேலைகளையும் நடத்துகிறது.

கூடு விட்டு கூடு பாய்வது எப்படி ?.

சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகத்தில்
மனதை வைத்து தவம் செய்யும்போது
கூடுவிட்டு கூடு பாயலாம்.

இதற்கான சூச்சும முறையை மறைமுகமாக சித்தர்கள் பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இதன்
இரகசியத்தை அறிவது கடினம். உயிரை
உடலை விட்டு பிரிக்கும் கலை மறைந்தே
போய்விட்டது.

யோகத்தில் உயர்ந்த வெற்றி கூடு விட்டு
கூடு பாயும் செயல் தான். கூடுவிட்டு
கூடுபாயும் நுட்பம் தெரிந்து கொண்டால்
உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும்.

பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல். இது அட்டமா சித்திகள் ஒன்றாக கருதபடுகிறது.


விபத்தாலோ அல்லது கொலை செய்தாலும் மீண்டும் இறந்த உடலில் புகுந்து உயிர் பெற்று வந்துவிடலாம். இறப்பு உடலுக்கு நிகழ்ந்தாலும் உயிருக்கு நிகழ்வதில்லை. உடலில் உயிர் இருக்கும் போது தான் உயிரில் வலி உண்டாகிறது.


எல்லாம் நன்மைக்கே...

விவசாயிகளை கொலை செய்த பாஜக அமைச்சர் மகனை காப்பாற்ற பாஜக அரசின் சதி வேலைகள் ஆரம்பம்...

 


பாஜக மோடி அரசின் கொரோனா தடுப்பூசி பித்தலாட்டம்...

 


கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்...

 


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.

இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

வயிற்றில் வித்தியாசம் -  உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை.

குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு -  வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.. ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.

பெண்டுலம் ட்ரிக் - உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.

எடை ஜாஸ்தியா இருக்கா - சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம்.. குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.

புளிப்பா? இனிப்பா - உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம்.. அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.

அதிக வாந்தியா - கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது சாதாரணம்.

ஆனால் இது அளவுக்கு அதிகமாக இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.. குறைவாக இருந்தால் பெண் குழந்தை என அர்த்தம்...

Spare key அவ கல்யாணம் பண்ணிக்கப் போறவன் போட்டிருப்பான்...

 


பாஜக பக்தாள் : என்ன சொல்லி முட்டு கொடுக்கலாம்...

 


பிராண சிகிச்சை...

 


இச்சிகிச்சையளிக்கும் முன், சிகிச்சை பெறுபவருக்கு இச்சிகிச்சை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை முதல்  சிகிச்சையின் போது தெரிவித்தல் வேண்டும்.  இதன் பின்னரே அவரின் முழுச் சம்மதத்துடன் இதனைச் செய்தல் வேண்டும்.

சாதாரண வைத்திய முறையில் சில சிகிச்சைகள் அவர்கள் உறவினர் அல்லது அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் ஆரம்பிக்கபடுகின்றன. இதற்கு, அத்தனிப்பட்ட மனிதரின் தெளிவான மனச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலே நல்ல முடிவை, நல்ல நிவாரணத்தைப் பெற முடியும். அல்லாது போனால் விழலுக்கு இறைத்த நீர் போல பிரயோசனமற்றதாகும்.

முதலில் இறை சக்தி அல்லது இயற்கை சக்தியில் சிகிச்சை அளிப்பவருக்கு நம்பிக்கை வேண்டும்.  இதனைச் செய்பவர், இது தன் செயல் அல்ல, தான் ஒரு ஊடகம் அல்லது கருவி என்பதை தாமே உணர்ந்து அதனை சிகிச்சை செய்பவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும்.

அரியசக்தி ஒன்று பிரபஞ்சத்தில் இருந்து எம்மை இயக்கும்  பிராண சக்தியாக எம்மில் புகுந்து, எம்மூலம் சிகிச்சை பெறுபவரின் உடற்கூறுகளை வெவ்வேறு உடற் கவசங்களினூடாக அடைந்து, ஒரு சீரிய மாற்றத்தை உண்டாக்கி சிகிச்சை பெறுபவரின் உடற் சக்கரங்களில் ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் சீரான ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் ஓர் சீரான பிராண ஓட்டத்தை உண்டாக்கி பிராணா குறைந்த இடத்திற்குத் தேவையான பிராணாவை அளிப்பதன் மூலமும், பிராணா கூடிய பகுதிக்கு தேவையற்ற  பிராணாவை  நீக்குவதன் மூலமும், ஒரு சம நிலையை உருவாக்கி, நோய்களை அந்தப் பகுதிகளில் குணப்படுத்துகின்றது.

இச்சிகிச்சை, அதனைப் பெறுபவரின் முழுச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலும் இதனைப் பெறுபவரின் மனம்  இச்சிகிச்சையின் போது, இந்த அரிய சக்தியிலோ அல்லது இதனைச் செய்பவரின் மேலோ சந்தேகம் கொண்டால் இதனால் பயன் ஏற்படாது.

மேலும் மனதை ஒரு நிலையில் வைத்து அமைதியாக  இச்சிகிச்சையின் தாக்கத்தை உணர்ந்து, அனுபவித்து, அந்த அனுபவத்தை இதனைச் செய்பவரிடம்  தேவையெனில் தெரியப்படுத்துவதோடு நில்லாமல், மனத்தை சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அல்லது முற்றிலும் புறம்பான எண்ணங்களை மனதில் அலைய விட்டு, பிறவிடயங்களில் முக்கிய கண்ணாக இருந்து கொண்டால்  இச்சிகிச்சையினால் பயன் கிட்டாது.

இதனைச் செய்பவருக்கும் அதிருப்தியையும் சோர்வையுமே உண்டாக்கும்.

சிலர்  இச்சிகிச்சையின் தூய உயர் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் இதனை ஒரு மனோ வசியம் அல்லது மாந்த்ரீகம் (மந்திரம்) சம்பந்தமானது என்று தாமும் ஐயம் கொண்டு, பலரையும் தடுமாற வைக்கிறார்கள்.

இது அவர்கள் இது பற்றி சரியான அறிவை, அல்லது தகவல்களைப் பெறாததாலும், அல்லது  இச்சிகிச்சையினால் பலன் கிட்டாத சிலரின் கதைப் பரப்பலாலும் (gossip) ஏற்பட்ட விளைவேயன்றி  இச்சிகிச்சையில் எந்தவித கெட்ட தன்மையும் இல்லை.

ஒரு வைத்தியரிடம் (medical doctor) எவ்வாறு முழுமையாக அவரை நம்பி சிகிச்சை பெறுகிறோமோ, அதே போல்  இச்சிகி்ச்சையில், எம்மை ஆளும் ஒரு இயற்கைச் சக்தியிடமோ அல்லது அத்தகைய ஒரு பரம் பொருளிடமோ மனத்தளவிலாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.

அடுத்து  இச்சிகிச்சையைச் செய்பவரிடமும், முழுமையான நம்பிக்கையை, அவர் அச்சக்தியை வழிப்படுத்தி நம்மில் நன்மையை, தன்னலமற்ற முறையில் இந்த அரிய சக்தியை தம்மூடே கடத்தி அதனைத் தகுந்தவாறு சிகிச்சை செய்பவருக்காக உபயோகப்படுத்துகிறார், என்பதையும் புரிந்து கொண்டு, மனப் பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.  

இறைவன் ஒருவன் இருப்பதை நம்பாமல் இறை வழிபாடு அல்லது கோயில் வழிபாடு செய்வது போல், அல்லது வைத்தியரிடம் நம்பிக்கை வைக்காது அவரிடம் சிகிச்சை பெறுவது போல், அல்லது குருவின் அறிவை ஆற்றலை உணராது, மதிக்காது அவரிடம் பாடமோ, பயிற்சியோ பெறுவது போல் இப்பிராண சிகிச்சையின் போது, நம்பிக்கை வைக்காது சிந்தனையை அலைய விட்டால் பயன் கிடைக்குமா..?

பிராடு பாஜக மோடி அரசின் பித்தலாட்டங்கள்...

 


80's & 90's பரிதாபங்கள் 😁

 


பிராடு அப்போலோ மருத்துவமனை கலாட்டா...

 


உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்...

 


முத்திரைகளின் அரசன் என்று கேசரி முத்திரையைச் சொல்வார்கள்.

அதைப்போல ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள்.

நம் மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும் உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.

அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி. குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற கருத்தும் உண்டு.

குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி, வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு உண்டு.

குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர்.

பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு.

அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும்.

நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல் திறந்தது என்று சொல்வது இதைத்தான். கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.

இதையே திருமூலர், மூலாதாரத் துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.

மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள்

கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.

மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்தி தான் சித்தி எனப்படும்.

மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினி குண்டலினி என்பர்.

அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள்.

அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள்.

முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.

மேலும் குண்டலினியானது தோற்றம், நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது.

அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.

யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும்.

அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான். பேரின்பத்தில் திளைக்கிறான்.

இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள் என்று சொல்லப்பட்டுள்ளது.

அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார்.

முதல் ஆறு சக்கரங்களையும் யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம் போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம், ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல.

அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம். இவையெல்லாம் கூடுமானால் மெல்ல மெல்லத் திறக்கும்...

கொரோனா கலாட்டா...

 


இந்தியா வை திவாலாக்கிய பாஜக மோடி...

 


தீபாவளி கலாட்டா...

 


மனைவி; சார் என் புருஷன நாலு நாளா காணோம்  நீங்க தான் கண்டுபிடித்து கொடுக்கணும்...

போலீஸ்காரர்;  உன்  புருஷன் கடைசியாக வீட்டில் இருக்கும் போது என்ன செய்துட்டு இருந்தாரும்மா?

மனைவி; நான் தீபாவளிக்கு பண்ணிட்டு இருந்த ஸ்வீட் எடுத்து சாப்பிட்டுட்டு இருந்தாரு சார். அப்போ போனவர் தான். இதுவரை வரலை, எங்கே போனார்ன்னும் தெரியல...

போலீஸ்காரர்; அப்போ கவலைப்பட வேணாமா.. தீபாவளி எல்லாம் முடிஞ்ச அப்புறம் தானா வந்துடுவார் மா...

(போலீஸ்காரர் மைண்ட் வாய்ஸ் : நமக்கு பலகாரத்த கொடுத்துட போகுது)

😂😂😂

சித்தராவது எப்படி - 35...

 


குண்டலினி சக்தி பயணம் - பாகம் பதினொன்று...

குண்டலினி சக்தி என்ன செய்கிறது ?

மூலதாரத்தில் ஒடுங்கி சுருண்டு கிடக்கின்ற அந்த சக்திதான், குண்டலினி சக்தி என ஏற்கனவே பார்த்தோம்.. அந்த குண்டலினி சக்தி விழித்து எழவும், ஓங்கி எழவும், செய்ய என்ன சூழ்நிலை இருந்தால் நடக்கும் என்பதை பல யோக ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளாமையால் அந்த குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப, படாத பாடு பட்டு இருக்கின்ற தேக சக்தியையும் விரையம் ஆகி, முடிவில் சோர்வும் தளர்வும் அடைகிறார்கள்..

ஏதோ மன கற்பனையில் சில நிழல் அனுபவங்களை பெற்று அற்ப சந்தோசம் அடைகிறார்கள்.. அந்த அனுபவங்கள் இம்மி அளவும் பயன் படவில்லை என்பது மிகுந்த காலம் கடந்தே உணர வேண்டி இருக்கிறது.. அதற்குள் தேகம் தளர்ந்து சீர் குழைந்து விடுகிறது..

குண்டலினி சக்தி எழுவதற்கும் ஓங்குவதற்கும் தடையாய் இருப்பது ஆதிக்க எண்ணங்களின் அழுத்தமே..

அந்த அழுத்தத்தில் குண்டலினி சக்தி ஒடுக்கத்திற்கே போகிறது..

சற்று விழிப்பு நிலையில் கோபம் பேராசை போன்ற எண்ண ஆதிக்கங்கள் தலை தூக்கும் போது சுவாசத்தின் மூச்சின் அழுத்தத்தை அடி வயிற்றில் உணரலாம்..

பொதுவாக பெரும் பான்மை நேரங்களில் நாம் அப்படியான அழுத்தத்தில் சதா காலமும் இருப்பதால் நாம் அடையாளம் தெரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும்..

சுவாச ஒழுங்கின் சமயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறும் போது, பழைய அனுபவத்திலேயே இருந்த மனம் அந்த வித்தியாசத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது..

அதனால் சுவாச ஒழுங்கிலே கிடைக்கின்ற ஒரு இலகு தன்மையை கலைக்க மனம் சதா காலமும் விரும்புகிறது..

மனதை அடக்கிய விழிப்பு நிலையால் மேலும் மேலும் சுவாச ஒழுங்கு செய்யும் போது குண்டலினி சக்தி எழ தொடங்கி பிரபஞ்ச சக்தியை பெற தொடங்குகிறது..

இப்படி பெறப் படும் சக்திதான் அன்பு என அழைக்கப் படுகிறது..

இதில் அ என்பது அண்ட சக்தி என்றும், பு என்பது புடம் வைக்கப் பட்ட அதாவது பக்குவமாய் பதுங்கிய, புவி சக்தி என்றும், 'ன்' என்பது முடிவான இணைப்பு என்றும் குறிக்கும்...

அன்பு கொள் என தத்துவம் பேசுவதில் ஒரு பயனும் இல்லை.. அன்பு என்ற சக்தி இல்லாமல் அன்பு கொள்ள முடியாது..

எத்தனை சாஸ்திரங்களும் போதனைகளும் நெறிகளும் போதித்தாலும் அதனை செயல் படுத்த குண்டலினி எழுச்சியும், அந்த எழுச்சியால் கிரகிக்கப் படும் பிரபஞ்ச ஆற்றலும் சேர்ந்த அன்பு என்ற அற்புத சக்தி இல்லையேல் ஒன்றும் பயன் பெறாது...

சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் மனமற்ற நிலையான தோன்றா நிலையில் எண்ண ஆதிக்கங்களால் ஏற்படும் அழுத்தம் அகற்றப் படும் போது, குண்டலினி எழதொடங்குகிறது.. எழுந்த குண்டலினி ஒன்றே பிரபஞ்ச சக்தியை வாங்க தகுதி உடையது..

அண்ட சக்தியும் குண்டலினி சக்தியும் ஆண் சக்தி பெண் சக்தி போலவும், positive negative energy போலவும் செயல் படுகின்றன.. இதனால் அன்பு என்ற செயல் பாடு உருவாகிறது..

சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் வினாடிக்கு வினாடி உருவாகும் தோன்றா நிலையின் காரணமாக, குண்டலினி சக்தியின் எழுச்சியால், பெறப்படும் அண்ட ஆற்றலே நிகழ் நிலை சக்தி எனப்படுகிறது..

இந்த நிகழ்நிலை சக்திதான் சிவநிலை சக்தி எனப் படும்.. அதில் மட்டுமே அன்பு என்ற செயல் பாட்டிற்கான ஆற்றல் தோன்றும்..

அதனால் அன்பே சிவம் என்ற மிக பெரிய உன்னத பிரம்ம இரகசியம் தோன்றியது.. பிரம்மம் என்றால் படைத்தல்.. படைக்கப் பட்ட அனைத்தும், அதன் செயல்பாடுகளும் அன்பால் விளைவதும் நடை பெறுவதுமாகும்..

இப்படி குண்டலினி மேல் எண்ண ஆதிக்கத்தால் ஏற்படும் அழுத்தத்தை நீக்க கூடிய தோன்றா நிலையை தராத எந்த சுவாச பயிற்சியும் வீணே...

ஆனால் தோன்ற நிலையை பற்றி பேசும் யோகிகளே இல்லை போல் தெரிகிறது..

அதனால் தான் குண்டலினி மேல் அழுத்தம் நீங்காத பயிற்சியை செய்து பலன் இல்லாமல் போய் விடுகிறார்கள்...

இந்த சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் முற்றிலும் தோன்ற நிலை உருவாகும் பயிற்சியை நாம் நேரடி பயிற்சியில் கண்டோம்..

அதில் அளவற்ற பிரபஞ்ச ஆற்றல் கிடைக்கப் பெற்ற நிலையில் நாம் சந்திர கலையை இழக்காமல் மதி நிலையிலே நின்றால் மட்டுமே பெற்ற ஆற்றலை பயன் படுத்த முடியும்..

ஆகவே தான் சூரிய கலை எப்படி முக்கியமோ, அவ்வாறே அதனை பயன் படுத்தும் சந்திர கலையும் மிக மிக முக்கியம்..

தன்னை இழந்த மோன நிலையில் சந்திரகலை காணாமல் போய்விட்டால் தோன்றா நிலையில் பெற்ற ஆற்றலால் ஒரு பயனும் இல்லை.. சந்திர கலையும் சூரிய கலையும் இணைந்து செயல் பட்டு இருந்தால் மட்டுமே அன்பு என்ற மகா சக்தி உருவாகும் என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது...

மத வெறித்தனமும், மதத்தில் மிக இறுக்கமான பிடிப்பும், குண்டலினி சக்தியை எழ விடாமல் பண்ணுவதால், அன்பு குறைந்து படைப்பும் குறைந்து அழிவுக்கும், அராஜகத்திற்கும் வழி வகுக்கிறது..

அப்படி பட்டவர்கள் அன்பு செலுத்துவது போல் இருப்பது, நடிப்பின் நிமித்தமாக இருக்கலாம் அல்லது ஒரு காரியத்தை நிறைவேற்ற வியாபார நோக்கத்தோடு இருக்கலாம்.. உள் அன்போடு நிச்சயமாக இருக்காது..

தோன்றா நிலையில் உருவாகும் குண்டலினி எழுச்சியின் விளைவாய் உண்டான அன்பே உலகில் அமைதியை உருவாக்கும்.. அப்படியான மத அமைப்பே நமக்கு தேவை...

இதன் மூலம் கவர்ச்சியற்ற சுவாச ஒழுங்கின் மேன்மை நமக்கு புரியும் என நம்புகிறேன்...

இதை தெரிந்துக் கொண்டு வாங்கி உபயோகிங்கள்...

 


பிராடு பாஜக அமித்ஷா வின் பித்தலாட்டங்கள்...

 


சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...

 


சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர

உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

அடி பெண்ணே...

 



நான் வீணை என்று நினைத்து
உன் விரல்களால் என்னை
மீட்டி விட நினைக்கிறாய் ..

நான் வீணை அல்ல...
புல்லாங்குழல்....

உன் விரல்களோடு
உன் இதழ்களையும்
சேர்த்தால் தான் 
என்னை மீட்ட முடியும்...

உன் இதழ்களுக்காக ஏங்கும்
ஒரு புல்லாங்குழல்....

இந்த மாதிரி சொல்றதுக்கு நமக்கு ஒரு காதலி இல்லையே 😁

 


டேய் மார்க் போனஸ் கொடு டா 😡

 


தர்மயுத்தம் ஓபிஎஸ் க்கு தேவை... பணமும்... குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி மட்டும் தான்...

 


ஜெய் பிராடு மோடி சர்கார் ....

 


சித்தராவது எப்படி - 34...

 


குண்டலினி சக்தி பயணம் - பாகம் பத்து...

விழிப்பு நிலை இல்லாமையின் விபரீத போக்கு...

விழிப்பு என்றால் வெறும் கண்ணை திறந்து இருக்கும் நிலையென்று மிகவும் அடி மட்ட அர்த்ததோடு மனித குலம் நினைத்துக் கொண்டு இருக்கிறது.. கடவுள் நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடியதும் அதுவே..

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளை காண முடியாமல் இருப்பதற்கு காரணம் விழிப்பு நிலை இல்லாததே,, அப்படி கண்ட கடவுளிடம் வரங்கள் எதுவும் பெற முடியாததும் விழிப்பு நிலை குறைபாடே.. அப்படி பெற்றதை பயன் படுத்த தெரியாததும் விழிப்பு நிலை குறைபாடே..

விழிப்பு நிலை குறைபாட்டால், இதிகாச நாயகர்கள் பட்ட அவதிகள் கொஞ்சம் அல்ல.. தருமரின் விழிப்பு நிலை குறைப்பாட்டால், சூதாட்டத்தில் தன் இராஜ்ஜியம் மட்டும் அல்ல திரௌபதியையும் இழக்கவேண்டிய நிலைவந்தது..

இராமனே தன் மனைவி சீதையை இராவணிடம் பறி கொடுக்கக் கூடிய நிலை வந்தது.. சிவனார் சூரபத்மனனுக்கு வரம் அளித்து பட்ட அவஸ்தை அனைவரும் அறிந்ததே..

திரு மூலரே கூடு விட்டு கூடு பாயும் போது தன் தேகம் இழந்து முடிவில் மாடு மேய்பவரின் உடம்பில் புக வேண்டியதாயிற்று..

இப்படி ஆயிரம் ஆயிரம் உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.. எல்லா மகான்களும் விழிப்பு நிலை குறைப் பாட்டாலே மறைந்து போனார்கள்..

வாழ்ந்த காலம் சிறப்பாக இருந்தாலும் விழிப்பு நிலை குறைபாட்டால் மறைந்து போக வேண்டிய நிலை வந்தது..

விழிப்பு நிலை குறைப்பாட்டாலே தேகம் சிறுக சிறுக சிதைவடைந்து முடிவில் மரணம் நிகழ்கிறது..

இது இறைவன் அவதாரம் என்று சொல்லிக் கொண்ட அனைத்து மகான்களுக்கும் பொருந்தும்..

தங்கள் மறைவிற்கு பல பல சமாதானங்கள் சொன்னாலும், விழிப்பு நிலை கருத்துக்கு முன்னால் எல்லாமே பொய்யாய் போய் விட்டனர்.. இதை சற்று விழிப்பு நிலையில் உணர்ந்தால் மட்டுமே விளங்கும்..

எந்த மதத்தின் கதாநாயகர்களும் விழிப்பு நிலை என்ற ஒன்றை உணராமல் போய் இருந்து இருக்கலாம்.. அல்லது அதைப் பற்றி தெரியாமல் போய் இருந்து இருக்கலாம்..

அவர்கள் மேல் மிகுந்த பற்று கொண்டவர்கள் விழிப்பு நிலை குறைபாட்டால் அந்த மகான்கள் அடைந்த மறைவுதனை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை..

அதனை ஜீவ சமாதி என்ற கௌரவப் பட்டம் கொடுத்து பூஜிக்கத் தொடங்கி விடுகிறார்கள்..

மதங்களில் சொல்லப் படும் அனைத்திலும் விழிப்புக்கு முக்கியத்துவமும் பயிற்சியும் சொல்லப் படாததால், இன்று மதமே விழிப்பு நிலைக்கு எதிராக செயல் படுகிறது..

எல்லா மதங்களும் மயக்க நிலை நோக்கி வேகமாக நகரத் தொடங்குவதால் எல்லா மதங்களும் உலக சமாதானத்திற்கும் அமைதிக்கும் முதல் சவாலாக உள்ளன..

நெஞ்சை பதற வைக்கும் அராஜக செயல்களுக்கு கடவுளிடமிருந்து இன்று வரை தகுந்த உடனடி தீர்வு வராததால், கடவுளே விழிப்பு நிலையின்றி மயங்கி கிடக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகிறது..

என்ன தான் விடிவு என்று எண்ணிப் பார்க்கையில் அனைத்திற்கும் ஒரே தீர்வு நம் அக குருவினை எழுப்பி விட செய்வதே.. அககுருவின் விழிப்பு நிலையால் அனைத்து செயல் கூடும்..

மயக்கமும் மோன நிலையை தரும் பயிற்சிகளையும், பரவசம் பேரானந்தம், பொய்யான சமாதானம் தரும், விழிப்பு நிலையற்ற பக்தி மார்க்கங்களையும், தகுந்த அடையாளம் காட்டி, நம்மை நேர் வழியில் வழி நடத்தும் தகுதி, அந்த அக குருவிடம் மட்டுமே உள்ளது..

அந்த அக குருவினை எழ செய்யும் சிவ கலப்பு யோகம் இப்போது புது பொலிவோடு வர தொடங்கி விட்டதால் அறிவு என்ற ஆகாய வானில் நம்பிக்கை நட்சத்திரம் உதிக்கத்தொடங்கி விட்டது..

அது சூரியனை போல் பிரகாசிக்க தொடங்கி, விழிப்பு என்ற பெரும் பிரகாசத்தை வாரி வழங்க, அந்த சூரிய கனலில் நிறை நிலை மனிதன் அல்லது சித்தர் உருவாகும் காலம் வெகு தூரம் இல்லை என நம்புவோமாக..

இறைவனே தான் படைத்த ஜீவர்கள் அந்த நிலைக்கு உயரட்டும் என்று காத்துக் கொண்டும் இருப்பார் போலும்..

சுவாச ஒழுங்கிலே தொடங்கி பல படிகளில் அளவற்ற விழிப்பு நிலை பெருக்கத்தால் எல்லாம் செயல் கூடும் என்பது திண்ணம்... சத்தியமும் கூட...

அதை, மறவாது நம்பிக்கையோடு பயின்று, செம்மை, சிவநிலை பெறுவோமாக...

Dear Ladies...

 


காரம், sweet ஒழுங்கா செய்ய தெரிஞ்சா அடுப்பு சட்டியில் கைவைங்க. அடுத்த வீட்டில் செய்றாங்க அதனால் நானே தான் செய்வேன்னு அடம் பிடிக்காதீங்க.

ஒரு எட்டு போனா Adayar Ananda Bhavan கடை வச்சு இருக்கான். இல்ல இரண்டு எட்டு போனா Nellai Lala Sweet காரன் sweet கடை வச்சு இருக்கான்.

தீபாவளிக்கு லீவு ரெண்டு நாள் தான். புருஷன்கிட்ட போய் அந்த கடையில் கல்ல மாவு வாங்கிட்டுவா, அப்பதான் முறுக்கு மஞ்சளா வரும், இந்த கடையில் அரசி வாங்கிட்டுவா அப்ப தான் கலர் வெள்ளையா, ௫சியா இருக்கும்னு டார்சர் செய்யாதீங்க.

முக்கியமா, ஏங்க... இங்க வாங்க இந்த முறுக்கு புழிய கஷ்டமா இருக்கு, அந்த மைசூர்பா கிண்ட குஷ்டமா இருக்குனு husband-ஐ டார்ச்சர் செய்யாதீங்க... please.

முக்கியமா எதை செஞ்சாலும் இது எப்படி இருக்குனு சொல்லுங்கனு... புருஷனை லேப் எலியா மாத்தாதீங்க. 

என்ன இருந்தாலும் வீட்டில் செய்யும் பலகாரம் போல வருமானு வீக் எண்ட் முழுதும் வீட்டை அதகளம் செய்யாம சமத்தா புருஷன் சொல்லும் ஐடியாவை கேட்டு நிம்மதியா தீபாவளியை enjoy செய்யுங்க. 

முக்கியமா ஊர்பட்ட முறுக்கை சுட்டு வச்சிட்டு வாரம் பூரா சாம்பாருக்கு தொட்டு சாப்பிட சொல்றது ஏல்லாம் டூமச்...

தீபாவளியை enjoy செய்ய ஆயிரம் வழி இருக்கு. பலகாரம் செஞ்சு அந்த அடுப்பு சட்டியிலே டைம் waste செய்னு நரகாசூரன் கூட சொல்லல. Okyaa?

குறிப்பு : முக்கியமா நீங்க சுட்ட பலகாரத்தை எல்லாம் உங்க நண்பனுக்கு தான் இன்னும் கல்யாணம் ஆகலையே அவருக்கு கொஞ்சம் கொடுங்கனு கொடுத்து அனுப்பாதீங்க பீளிஸ்... 

அவங்களையாவது நிம்மதியா இருக்க விடுங்க... ஏனா உங்க பலகாரத்தை எல்லாம் சாப்பிட்டா நிரந்தரமா கல்யாணமே வேண்ணாம்னு நினைச்சுடுவாங்க...

இப்படிக்கு...

பலகாரத்தால் பாதிக்கப்பட்ட & பாவம்பட்ட கல்யாணமான ஆண்கள் சங்கம் & சிங்கிள்ஸ் சங்கம்...

😔😔😔😔

H.ராஜா : சார் இவருடைய உண்மையான பெயர் மோஷஸ் மோடி ங்க 😅

 


போதை பொருள் கடத்தல் மன்னன் அதானியும் - பிராடு பாஜக மோடியும் இணைந்து செய்யும் பெட்ரோல் கொள்ளை...