24/09/2018

காணாமல் போனவைகள் - தானிய குதிர்...


பண்டைய பழந்தமிழர் நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு.

குதிரிடல் (ஆங்கிலம்-granary, bunkering) என்பது வேளாண்மையில் பயன்படுத்தப்படும்  முக்கியமான நடைமுறையாகும்.

நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத் தேவைக்காக, விளைந்த தானியங்களைச் சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது.

சிமென்டு, கரி போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.

தமிழகக் கிராமங்களில் உள்ள குதிர்கள் மரம், மண், செங்கல் ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன...

உழவர்களின் உரிமைக்காக போராடினால் கைது செய்வதா.?


விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின்போபுரங்கள் அமைப்பதை எதிர்த்து மிக கடுமையான போராட்டங்களை பல விவசாய சங்கங்கள் இணைந்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான கூட்டியிக்கத்தின் சார்பில் மேற்கொண்டு வருகிறோம்.

அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்று கோரிவரும் சூழலில் இன்று (21/09/18) கூட்டியக்க வழக்கறிஞர் ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள்,  தர்மபுரி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், கரூரான், மாதன்* ஆகியோர் பென்னாகரம் அருகே உள்ள வரகூரான்கொட்டாய் என்ற இடத்தில் மாரிபச்சை என்ற விவசாயி நிலத்தில் அவரது ஆட்சேபணையை மீறி உயர் மின்கோபுரத்தில் கம்பி இழுக்க முயற்சி நடந்தபோது சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு இல்லாமல் வேலை செய்ய வேண்டாம் என்று வலியுறுத்திய போது அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தாக கூறி தர்மபுரி பெரும்பாலை காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்மந்தபட்ட நில உரிமையாளர் ஆட்சேபனை செய்த பின்பு இந்திய தந்தி சட்டம் பிரிவு 16 ன்படி மாவட்ட ஆட்சியரின் முன்நுழைவு அனுமதியின்றி திட்டப்பணிகளை செய்வது சட்டவிரோதம், இந்த சட்டவிரோத செயலை சட்டப்படி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று வேலை செய்ய கூறிய உழவர்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட உழவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் & ஏர்முனை இளைஞர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் உழவர்களுக்காக போராடி கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீதான வழக்கை உடனடியாக வாபஸ் பெற்று நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்...

- ஏர்முனை இளைஞர் அணி..

தமிழன் என்ன கண்டு பிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்....


நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்....

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு.....

கல்லணை : உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் : கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் : உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் : எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் : கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்: கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்...

பாஜக மோடியின் ரஃபேல் ஊழல்...


தமிழகம் சில தகவல்கள்...


1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)...

ஆமை வீட்டிற்குள் புகுந்து விட்டால்..?


ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய் விடும்.. என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு ஆமை யின் மேல் ஒரு துரதிருஷ்டசாலி என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்..

இக்கருத்து சரியாகுமா?.

இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது?

நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?

நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?

சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?

மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு லட்சுமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும்.
திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம்.

திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம்.

எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?

வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது.

தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது.

இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும்.

இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?

முடியவே முடியாது.

ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர்.

ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும்.

இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்..

ஆம்பி பூத்த வீடு உருப்படாது..
(ஆம்பி = காளான்)..

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், ஆமை புகுந்த வீடு உருப்படாது எனும் பழமொழிக்குப் பலப் பொருள்கள் சொல்லப்படுகின்றன.

அதாவது, கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமை என்ற ஈற்றில் முற்றுப்பெறும் சொற்கள் நிறைந்திருக்கும் இல்லங்கள் முன்னேறுவது கடினம். அப்பொருள்களும் ஏற்புடையதே..

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த...

இதுதான் வாழ்க்கை...


அடுத்த நொடியில் யாருக்கு எங்கே, எப்படி, என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்கும் ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே உண்டு..

பாலக்காடு மாவட்டம் சொர்ப்புளசேரி ஜமாஅத் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பேரக்குழந்தை கிணற்றில் தவறி விழுந்ததை கண்டு பதறிப்போய் காப்பாற்ற இறங்கிய உப்பாவும் நீரில் மூழ்கி இரண்டு பேரையும் ஜனாசாவாக மீட்கப்பட்ட துரந்தம் இன்று நிகழ்ந்தது...

நிரந்தரமில்லாத இவ்வுலக வாழ்க்கையில் முடிந்தளவு நன்மையை மட்டும் ஏவுவோம்... தீமையை தடுக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டால் மனதால் வெறுத்து ஒதுங்குவதோடு அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்...

பெண்களின் ஏழு பருவங்கள்...


1.பேதை (5 முதல் 7 வயது வரை).

2. பெதும்பை (8 முதல் 11 வயது வரை).

3. மங்கை (12 முதல் 13 வயது வரை).

4. மடந்தை (14 முதல் 19 வயது வரை).

5. அரிவை (20 முதல் 25 வயது வரை).

6. தெரிவை ( 26 முதல் 31 வயது வரை).

7. பேரிளம் பெண் (32 முதல் 40 வயது வரை)...

இடவொதுக்கீடு கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெற்றுத் தந்ததா?


1871ல் சென்னை மாகாண அரசு கணக்கெடுப்பு நடத்தி பிராமணரல்லாதார் ஒடுக்கப்படுவதாக அறிவித்தது.

ஈ.வே.ரா அப்போது பிறக்கவேயில்லை..

அவர் காங்கிரசிலிருந்து விலகி பிராமணரல்லாதார் கொள்கையை கையிலெடுத்தது இதற்கு 53 ஆண்டு கழித்துதான் (1924ல்).

1893 ல் ஆங்கிலேய ஆட்சி சென்னை மாகாணத்தில் 49 பின்தங்கிய சாதிகளைத் தேர்ந்தெடுத்து கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தியது.

ஈ.வே.ரா.வுக்கு அப்போது 13 வயது.

ஈ.வே.ரா கல்வியிலும் வேலையிலும் பிராமணரல்லாதார் முன்னுரிமைக்காக பேசியது இதற்கு 32 ஆண்டுகள் கழித்துதான்  (1925ல்).

1927லேயே சென்னை மாகாணம் முழுவதும் அரசு வேலைகளில் சாதி வாரியாக முன்னுரிமை வழங்கப்பட்டது.

அப்போது ஈ.வே.ரா காங்கிரசிலிருந்து விலகி தனியாக சுயமரியாதை இயக்கம் தொடங்கி இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை.

அதுவரை ஈ.வே.ரா இடவொதுக்கீட்டிற்காக எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்கவில்லை.

1943 ல் அம்பேத்கரின் முயற்சியால் ஆங்கில அரசு அனைத்து துறைகளிலும் பட்டியல் சாதியினருக்கான 8.33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இதற்கு ஓராண்டு பிறகுதான் ஈ.வே.ரா திராவிடர் கழகம் தொடங்கினார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் போராட்டம் நடத்தியது இதற்கு ஏழாண்டுகள் பிறகுதான் (1950ல்).

அதாவது ஈ.வே.ரா பிறக்கும் முன்னரே பிராமணர் ஆதிக்கம் உணரப்பட்டு அவர் செல்வாக்கு பெறும் முன்பே இடவொதுக்கீடும் கிடைத்துவிட்டது.

ஆங்கிலேயர் வெளியேறிய பின் புதிய சட்டம் 1950 ல் நடைமுறைக்கு வந்தது.

சாதி ரீதியான இடவொதுக்கீடு பிராமணர்கள் வழக்கு தொடுத்ததால் நீக்கப்பட்டது.

அப்போது மக்களைத் திரட்டி போராடிய பலரில் ஈ.வே.ராவும் ஒருவர்.

ஆக கல்வியிலும் வேலையிலும் சாதிரீதியான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடியதால் கிடைத்தது.

ஈ.வே.ரா கடைசி நேரத்தில் ஒரே ஒரு போராட்டம் நடத்திவிட்டார் என்பதற்காக இடவொதுக்கீடே அவர்தான் வாங்கித் தந்தார் என்றவாறெல்லாம் திராவிடவாதிகள் எழுதுகின்றனர்.

ஈ.வே.ரா போராடியது 'வகுப்புவாரி இடவொதுக்கீடு' அதாவது பிராமணரல்லாதார் இடவொதுக்கீடு.

அவருக்கு தாழ்த்தப்பட்ட சாதியாரைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

அவரது நோக்கம் 3% பிராமணர்கள் அரசு வேலையிலும் 3% ற்கு மேல் இருக்கக்கூடாது என்பதே.

ஆனால் 'சாதிவாரி இடவொதுக்கீடு' தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிப் பெறப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலையிலும் இடம் பெறுவதற்காகக் கோரப்பட்டது.
அதை 1943ல் சாதித்து காட்டியவர்தான் அம்பேத்கர்.

சாதிரீதியான இடவொதுக்கீட்டை பிராமணர்கள் எதிர்த்து வழக்குப் போடும்வரை ஈ.வே.ரா அதில் ஆர்வம் காட்டவில்லை.

பிராமணர்கள் வெற்றி பெற்றதும் அது பொறுக்க முடியாமல் போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப் பட்டோருக்காக ஈ.வே.ரா என்றும் எங்கேயும் போராடியதோ பேசியதோ கிடையாது.

அவர் தாழ்த்தப்பட்டவர்களையும் இசுலாயமியரையும் பிராமணரல்லாதாரின் எதிரிகளாகவே கடைசி வரைக்கும் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி வரைக்கும் பறையர்களை கேவலமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி போராட்டத்தையும் 'வகுப்புரிமை நாளாக'த்தான் அறிவத்து போராட அழைத்தார்.

திராவிடம் இதேபோல கடைசி நேரத்தில் புகுந்து முழு போராட்ட வரலாறையும் ஆட்டையைப் போடுவது தொடர்ந்து நடந்துவருகிறது.

சிலர் 1927 ல் திராவிட கட்சியான ஜஸ்டிஸ் இடவொதுக்கீடை அமல்படுத்தியதைப் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதற்கு 25 ஆண்டுகள் முன்பே கொல்ஹாப்பூர் அரசர் சத்ரபதி ஸாஹுஜி மகராஜ் 50% பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்.

(பிறகு பதினெட்டாண்டுகள் கழித்து 90% இடவொதுக்கீடு பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்)

இதற்கு ஏழாண்டுகள் கழித்துதான் நீதிக்கட்சி இடவொதுக்கீட்டை கொண்டு வருகிறது.

அதாவது அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் கழித்து.

அதாவது திராவிடம் ஆட்சிக்கு வருமுன்பே கொல்ஹாப்பூரில் 90% பிராமணரில்லாதோர் பதவி பெற்று விட்டனர்.

ஆக இடவொதுக்கீட்டுக்கு முன்னோடி திராவிட கட்சி இல்லை, ஒரு மராத்திய மன்னர்தான்.

நன்றி : Reservation policy in Tamilnadu - Wikipedia..

இது எல்லாமே தொடங்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் மூளையில் தான்.

முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர்.
இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன.

இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று பிராமணர்கள் நிறைகின்றனர். குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.

தமிழர்கள் பதவி பெறுவதைக் கண்டு வயிறெரிந்தனர் வேற்றின ஆதிக்க சாதிகள்.

(எப்படி தமிழர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் ஆங்கிலேயருக்கு அடுத்த பதவிகளில்  நிறைந்திருந்தது சிங்களவர் கண்களை உறுத்தியதோ அதேபோல)

வேற்றினத்தாரின் இந்த 'தமிழின வெறுப்பை'த் தனது பிரித்தாளும் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர்.

திராவிட கட்சியை ஒரு தெலுங்கரையும் மலையாளியையும் வைத்து  உருவாக்கியதும் ஆங்கிலேயரே.

அதனால் தான் முதல் திராவிட கட்சி தோன்றியதும் அதன் முதல் அறிக்கை 'ஆங்கிலேயரிடம் சுதந்திரம் கேட்கக் கூடாது' என்று கூறியது.

திராவிடம் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கடைசிவரை ஆங்கிலேயர்களுக்கு விசுவாசகமாக வாலை ஆட்டியது.

ஆங்கிலேயருக்கு முன் தமிழகத்தை ஆண்ட தெலுங்கு வம்சாவளிகள் பேராதவு திராவிடத்திற்குக் கிடைத்தது.

வேற்றின ஆட்சியில் தமிழர்களின் நிலத்தை பிடுங்கி நிலவுடைமையாளர்களாக தமிழகம் முழுக்க நிறைந்து கிடந்த அத்தனை வந்தேறிகளும் ஆதரித்தனர்.

திராவிடத்துக்கு பணம் வந்து குவிந்தது..

ஆங்கிலேயருக்கு அடுத்து அரியணை ஏறப்போகும் வடவரை சமாளிக்க தமிழரும் ஆதரித்தனர்.

திராவிடம் என்ற பெயரில் வேற்றினம் அரியணை ஏறியது. அது இன்றுவரை தொடர்கிறது.

திராவிடவாதிகளுக்கு இடவொதுக்கீடு பற்றி உண்மையில் அக்கறை இருந்தால் (மற்ற மாநிலங்களைப் போல) தமிழ்-சாதிகளைத் தவிர மற்ற சாதிகளை மாநில சலுகையிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஏன் செய்யவில்லை?

சட்டநாதன் பரிந்துரையை ஏன் நிறைவேற்றவில்லை?

சாதி சாதியாகப் பிரிந்து ஒரு இனத்துக்குள் வேற்றினம் ஊடுருவும் வழியே இது.

திராவிடம் என்பது உருமாற்றி ஏமாற்றும் அரசியல் நாடகம்.

அதன் ஒரு காட்சி தான் இடவொதுக்கீடு சாதனை.

இனியாவது உண்மையை உணருங்கள்...

கட்சிக்காக உழைத்து தன்வாழ்க்கையை தியாகம் செய்த திமுக ஸ்டாலினுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்...


சென்னையில் நிருபர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது...

நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் எல்லா சமூகத்தினரையும் தரம் தாழ்த்தி பேசியுள்ளார். இப்படி தரம் தாழ்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை பெற்றிருப்பது வேதனைக்குரியது. அவருடைய பேச்சுக்கு அவர் என்ன பாடுபடுகிறார் என பொறுத்திருந்து பாருங்கள்.

கருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை. எங்களை குறைகூறும் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ரூ. 40 ஆயிரம் கோடி வரை சொத்து உள்ளது.

ஊழலின் மொத்த உருவமாக இருந்து கொண்டு, நல் அரசை குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் கட்சி நிலக்கரி ஊழல் செய்தது. திமுக வும் காங்கிரசும் வேடம் போடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்...

நெல் கொள்முதல் நிலையங்களை மூட பாஜக - அதிமுக திட்டம்...


சாதத்துடன் பிசைந்து சாப்பிடக்கூடிய பொடி வகைகளைப் பார்க்கலாம்...


முதலில் பருப்புப் பொடி:

இது ஆந்திராவில் தினப்படி உணவில் இருக்கும். இது பலவிதங்களில் செய்யப் படுகிறது.

பருப்புப்பொடி 1:

இந்த முறை செலவே இல்லாத ஒன்று. ஆயில் restriction உள்ளவர்களுக்கு ஏற்றது. ஒரு கப் துவரம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சூடாக இருக்கும் இந்தப் பருப்பில் ஒரு ஸ்பூன் பெருங்காயப் பொடி, தேவையான உப்பு, (நான் உப்புக்கு பதில் இந்துப்பு என்று நாட்டு மருந்து கடையில் கிடைப்பதை சேர்ப்பேன்) ரெடிமேட் காரப்பொடி தேவையானது சேர்த்து நைசாக பொடிக்க வேண்டும். அவ்வளவுதான். கட்டை மிளகாய்ப் பொடி வேண்டாம் என்றால் தேவையான வர மிளகாயை சிவக்க வறுத்து சேர்க்கலாம்.

சாப்பிடும் விதம் : சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். நெய்யும் நல்லெண்ணையும் சமமாக சேர்ப்பது இன்னும் சுவையானது.

பருப்புப்பொடி 2:

துவரம்பருப்பு ரெண்டு பங்கு என்றால் கடலைப்பருப்பு ஒரு பங்கு, பாசிப்பருப்பு அரை பங்கு வேண்டும். (நான் பங்கு என்றது அவரவர் தேவைக்கு ஏற்ற அளவில் எடுக்கவே).

மூன்று பருப்புகளையும் வாணலியில் தனித்தனியாக பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும். கட்டிப் பெருங்காயம் எடுத்து அதையும் நன்றாகப் பொரியும்படி வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே தேவையான மிளகும் கல்லுப்பும் சேர்த்து கொஞ்ச நேரம் வறுத்துவிட்டு எல்லாவற்றையும் பொடிக்கவும். இதிலும் எண்ணெய் இல்லை. சாப்பிடும் விதம் மேலே சொன்ன மாதிரிதான்.

பருப்புப்பொடி 3:

கடலைப்பருப்பு மட்டும் அரை கப் எடுத்து மேலே சொன்ன படி எண்ணெய் இல்லாமலோ அல்லது ஒரேயொரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டோ வாசனை வரும் வரை சிவக்க வறுத்து, தேவையான மிளகாய் பெருங்காயம் வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே கால் கப் பொட்டுக்கடலையை பிரட்டி உப்புடன் அரைக்கலாம். இதில் பொட்டுக்கடலை சரி சமமாக சேர்ப்பதும் உண்டு. எவ்வளவு நாள் ஆனாலும் கெடாது, (எங்கள் வீட்டில் இதை ஏதோ அமிர்தம் ரேஞ்சுக்கு பார்க்கிறார்கள்.).

பருப்புப்பொடி 4:

வாணலியில் கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு 2 பங்கு துவரம்பருப்பு, 3 பங்கு கடலைப்பருப்பு, தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து வாணலியில் உள்ள அந்த எண்ணைப் பசையிலேயே தேவையான மிளகாய், கொஞ்சம் மிளகு ( இது ஒரு வாசனைக்குத்தான்), ஒரு கட்டி பெருங்காயம் சேர்த்து வறுத்துவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு 2 பங்கு பொட்டுக்கடலையும் போட்டு வறுக்கவும். தேவையான உப்புடன் அரைத்து உபயோகிக்கலாம்.

இந்த வகையில் அரைக்கும் பொடி இட்லி தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். ரொம்பவே கொஞ்சம் எண்ணைதான் உள்ளது என்பதால் டயட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்றது...

தமிழ் படித்தால் சோறு கூட கிடைக்காது என்ற கன்னட ஈ.வே. ராவின் தமிழ் மீதான வன்மத்தை செயல்படுத்திய திராவிட ஆட்சியாளர்கள் வீழும் வரை தமிழர் நாட்டில் தமிழ் எழாது...


கடல்கள் கடந்து தமிழின் பெருமை அறிந்து அதை விரும்பி படிக்க ஆவலோடு இருக்கும் மாணவர்களின் விருப்பத்திற்காய் தமிழை பாடமாக ஏற்கிறது பெய்ஜிங் பல்கலைக்கழகம் ஆனால் இங்கோ அடிப்படை வசதிகள் செய்து தராமல் அரசு பள்ளி மாணவர்களை அச்சப்படுத்தி வெளியேற்றிவிட்டு பள்ளிக்கூடங்களை ஆயிரக்கணக்கில் மூடி வருகிறது திராவிட அரசு.. 

https://www.indiatimes.com/news/india/a-university-in-beijing-is-teaching-tamil-just-because-the-students-just-love-the-language-353355.html

தமிழனின் சாதனை உலகம் முழுக்க பரவட்டும்...


பாஜக மோடியின் நண்பர் அம்பானியின் வருமானத்திற்கு எதிரான திட்டம் என்பதால்... மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்தவருக்கு நேர்ந்த கதி தான் இவருக்கும் நேரும்...

அரசுகளும் நீதிமன்றமும் சாமானிய மக்களுக்கு எதிரானதே...


எங்கள் மீதான டாஸ்மாக் போராட்ட வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 27.08.18 அன்று  விசாரணைக்கு வந்தது.அப்போது "IPC-328ன் படி போதைப்பொருள் விற்பது குற்றம்.

டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பதை தடுக்காமல் சாராயம் விற்கும் அரசுக்கு நீதிமன்றம் உடந்தையாக உள்ளது"என்று  குற்றம் சாட்டி அப்பா ஆனந்தன் வாதிட்டார்.

இதனால் மதுரை மாவட்ட நீதிமன்றம் (JM-6) அப்பா ஆனந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.மேலும் நீதிபதியின் உத்தரவுப்படி 27.08.18 ஒருநாள் முழுவதும் அப்பாவை நீதிமன்றத்தில் சிறை பிடித்துவைத்தனர்.

வருகிற 27.09.18 அன்று இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

- நந்தினி

தமிழ்நாட்டில் அரசு ஊழியளர்களாக 65 சதவீததிற்கு மேலும், அதிகாரிகளில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேரும் பிறமொழியாளர்களே பணி செய்கின்றனர்...


இது எப்படி சாத்தியம் ஆனது.?

அதற்குக் காரணம் திராவிடர்களின் திருட்டுத் தனமே.

இடஒதுக்கீட்டை தமிழர்களுக்கு நாங்கள் தான் வாங்கிக் கொடுத்தோம் என்று சொல்லும் பெரியாரிஸ்டுகள் , தமிழர்களுக்கு திராவிட முகமூடியை மாட்டி, தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பாத மலையாளிகள், கன்னடர்கள் , தெலுங்கர்கள், மற்றும் பிறமொழியாளர்களும் இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் பயன் பெறச் செய்தது.

ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் ஆந்திரம் தனக்கென தனியாக சட்டமன்றம் அமைத்து, தனது மாநிலத்தில் உள்ள சாதிகளை மட்டுமே அங்கீகரித்து சட்டம் இயற்றி மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சாதிகளுக்கு தங்கள் மாநிலத்தில் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விட்டது.

இதே போல்தான் , கேரளா , கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது.

ஆனால் பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் இருந்த அத்தனை சாதிகளுக்கும் இளிச்சவாய்தமிழ் நாட்டில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நியாப்படி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த சாதிகளை தமிழ்நாட்டின் சாதிப் பட்டியல்களை நீக்கி இருக்க வேண்டும். ஆனால் நீக்கவில்லை.

காரணம் நம்மை திராவிடத்தின் பெயரால் ஆட்சி செய்யும் திராவிடர்களே..

இந்த உண்மைகளையெல்லாமல் உணர்ந்து தமிழர்கள் தங்களுக்குள் ஒன்று பட்டு போராடாமல் விட்டுவிட்டால் இனி வரும் காளங்களில் தமிழ்ர்களுக்கு அரசு வேலை என்பது கிடைக்காமலே போய்விடக் கூடிய ஆபத்து உள்ளது...

பாஜக - அதிமுக - வேந்தாவின் நாடகம் ஆரம்பம்...


வியாதிகளுக்கு விடைகொடுக்கும் அருகம்புல்...


அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்கல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்...

அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தாயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்...

தமிழீழம் - க௫ம்புலிகள்...


ஒரு சில கூமுட்டைகள் சொல்கிறது.. எம் தலைவர் எதிர்காத பெரியாரை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று?


ஈழத்தில் திராவிடமும் இல்லை பெரியார் பெயருக்கும் அங்கு வேலையும் இல்லை.. மேலும் தேசிய தலைவர் பெரியாரை ஆதரிக்கவுமில்லை...

பெரியார் சொன்னார் தமிழனுக்கு ஆளும் தகுதியில்லை தமிழ் காட்டு மிராண்டி மொழி என்று கேவலமாக தமிழனை தான் முட்டாளாக்கினார்.

பிறகு நீங்கள் எதற்கு அவர் சிந்தனைக்கு ஆதராக செயல்படுகிறீர்கள்..

தமிழினை முட்டாளாக்கி திராவிடத்தை விதைத்த பெரியாரை வழிகாட்டி என்று சொல்லி தமிழ் தேசியம் பேசுவது ஏமாற்று வேலையே...

அதிமுக எடப்பாடி ஏமாற்று வேலைகளுக்கு பதலடி கொடுக்கும் பாமக...


தான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு...


கிழக்கு ஆஃப்ரிக்காவின் தான்சானியா நாட்டில் உள்ள புகழ்பெற்ற விக்டோரியா ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் பலர் தொடர்ந்து உயிருக்குப் போராடி வருவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இப்படகில் 400க்கும் அதிகமானோர் ஏற்றப்பட்டதே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது...

போராளி ஆக விருப்பமுள்ளவர்கள் கவனத்திற்கு...


முக்கியமாக தமிழன்.. தமிழ் தேசியம் என்பதை எதிர்த்து திசை திருப்ப வேண்டும்...

வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்...


விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரி என்றால் அது எலிகள் தான்.

வீட்டிலும், வயலிலும், தானிய சேமிப்பு கிடங்குகளிலும் எலிகள் புகுந்து நாசத்தை விளைவிக்கின்றன.

உயிரினங்களில் மிகுந்த புத்திக்கூர்மையும், சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வதிலும் எலிகள் தனித்திறன் வாய்ந்தவை.

ஒரு மனிதன் உண்ணும் உணவை ஆறு எலிகள் சேர்ந்து உண்டு அழிப்பதுடன் 20 மடங்கு உணவை வீணடிக்கவும் செய்கின்றன.

இவ்வாறு அதிக சேதாரத்தை உண்டு பண்ணும் எலிகளை கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்தலாம்.

வரப்பு வெட்டி அழித்தல்...

நெல் அறுவடை முடிந்த ஒரு வாரத்திற்குள் வரப்பில் உள்ள ஈரத்தை கொண்டு வரப்புகளை வெட்டி எலிகளை அவற்றின் குட்டிகளுடன் பிடித்து அழிக்கலாம்.

விஷம் வைத்து அழித்தல்...

எலிகள் சந்தேகப் பிராணிகள். தனக்கு வரும் ஆபத்தை எளிதில் கணிக்க வல்லவை. கூச்ச சுபாவம் உடையவை. தனக்கான உணவுப் பொருளில் திடீர் மாறுதல்களை கண்டால் அவற்றை தவிர்க்க கூடியவை. இது போன்ற நிலையில் விஷத்தை பயன்படுத்தும் முன்பாக அவற்றுக்கு அரிசிப்பொறி, கருவாடு, வதக்கிய வெங்காயம் போன்றவற்றை எலி நடமாடும் இடங்களில் அவ்வப்போது வைத்து பழகி வரவேண்டும். பிறகு இந்த உணவில், அதாவது 49 பங்கு உணவுப் பொருளுடன் 1 பங்கு சிங்க் பாஸ்பைடு என்ற அளவில் விஷ உணவு தயாரிக்க வேண்டும். உணவுப் பொருளுடன் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலக்க வேண்டும். ஒரு ஏக்கரில் 30 இடங்களுக்கு குறையாமல் எலி நடமாட்டமுள்ள இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு கொட்டாச்சியில் 10 கிராம் என்ற அளவில் விஷ உணவை வைக்க வேண்டும். இது போல 15 நாட்கள் இடைவெளியில் 5 அல்லது 6 முறை வைத்தால் எலிகள் மடிந்து போகும்.

கிட்டி வைத்து பிடித்தல்...

தஞ்சாவூர் கிட்டிகள் அல்லது மூங்கில் கிட்டிகள் ஏக்கருக்கு 20 எண்களை நிலத்தில் வைக்கவும். நிலத்தில் ஓர் அங்குலம் தண்ணீர் இருக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கிட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆன்டிகோயாகுலண்ட் முறை
இது ஒரு விஷ மருந்து முறையாகும்.

இதனை 1 பங்கு எடுத்துக் கொண்டு, எலி விரும்பி உண்ணும் சோளம், கம்பு மாவுகளை 19 பங்கு என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையில் தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்து 100 கிராம் அளவில் எடுத்து ஒரு தட்டில் வைத்து எலி நடமாடும் இடங்களிலும், மறைவான இடங்களிலும் வைத்து விட வேண்டும். ஒரு வாரம் அளவுக்கு இதனை தொடர்ந்து செய்து வர வேண்டும். பின்னர் 1 பங்கு மருந்தை 19 பங்கு நீருடன் கலந்து குடிநீராக வைத்து எலிகளை குடிக்க வைத்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

இது தவிர ஆங்கில டி வடிவ எழுத்திலான நீள கம்புகளை நட்டு வைத்து ஆந்தைகளை கவருவதன் மூலம் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

தகவல்: ப.ராமநாதன், வேளாண்மை துணை இயக்குநர், நீர்மேலாண்மை பயிற்சி நிலையம், விநாயகபுரம்...

நீ எந்த சாதிக்காரனாக இருந்தாலும்... உன் குல தெய்வம் சிவபெருமான் தான்ய்யா...


பறையர்...

பறை = இசைக்கருவி.
இசை = நாதம். நாதமையமானவன் சிவபெருமான். பறை நாதத்தை விரும்புபவன் தான் சிவபெருமான். பறை நாதத்தை விரும்பும் ஈசனுக்கு அடியவர் தான் பறையர்.

ஐயர்...

ஐயன் = உயர்ந்தவன்.
எல்லாவற்றையும் விட உயர்ந்தவர் ஈசன். எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈசனுக்கு அடியவர் தான் ஐயர்.

வன்னியர்...

வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்டவர் ஈசன். வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்ட ஈசனுக்கு அடியவர் தான் வன்னியர்.

செட்டியார்...

கொழுந்து விட்டு எரியும் சோதியை போன்ற சென்நிற (சிவந்த நிறம்) மேனியை கொண்டவன் சிவபெருமான். சென்நிற மேனி உடைய ஈசனுக்கு அடியவர் தான் சென்நியர். சென்நியர் என்ற பெயரே காலப்போக்கில் செட்டியார் என்றானது.

செம்படவர்.

செழிப்பான வாழ்வை தந்தருள்பவர் தான் ஈசன். செழிப்பான வாழ்வை தந்தருளும் ஈசனுக்கு அடியவர் தான் செம்படவர்.

குயவர்...

அன்பால் அடியவரின் உள்ளத்தை குழைப்பவர் தான் ஈசன். அன்பால் அடியவரின் உள்ளத்தை குழைக்கும் ஈசனுக்கு அடியவர் தான் குயவர்.

வெள்ளாளர்...

வெற்றியை தன்வசம் வைத்திருப்பவர் தான் ஈசன். வெற்றியை தன்வசம் வைத்திருக்கும் ஈசனுக்கு பிள்ளையான அடியவர் தான் வெள்ளாளர்.

முதலியார்...

தோற்றத்திற்கு வித்தானவர் சிவபெருமான். எல்லாவற்றிற்கும் முதலான சிவபெருமானுக்கு அடியவர் தான் முதலியார்.

கோனார்...

கோமகனார் என போற்றப்படுபவர்.
கோ - கோவில்,பசு காப்பவர்.

வேதியர்...

வேதத்தை தந்தருளியவர் ஈசன். வேதத்தை தந்தருளிய சிவபெருமானுக்கு அடியவர் தான் வேதியர்.

நாயக்கர்...

எச்செயலுக்கும் நாயகமாக திகழ்பவர் சிவபெருமான். அத்தகைய நாயகனுக்கு அடியவர்தான் நாயக்கர்.

நாடார்...

தென்னாடுடைய சிவனே, எந்நாட்டவர்க்கும் இறைவன். தென்னாட்டை தன்நாடாக கொண்ட ஈசனுக்கு அடியவர் தான் நாடார்.

தேவர்...

தேவையை தீர்த்து வைப்பவர் தான் தேவன். அத்தகைய தேவன் தான்  சிவபெருமான். தேவையை தீர்த்து வைக்கும் ஈசனுக்கு அடியவர் தான் தேவர்.

கள்ளர்...

அடியவர் உள்ளத்தை கவரும் கள்வர் சிவபெருமான். அத்தகைய சிவபெருமானுக்கு அடியவர் தான் கள்ளர்.

பத்தர்...

பத்திநெறி அறிவிப்பவர் சிவபெருமான். பத்திநெறி அறிவிக்கும் ஈசனுக்கு அன்பர் தான் பத்தர்.

அப்படியாக........ நீ எக்குலத்தவனாக இருந்தாலும், குலத்திற்கேற்பதோர் நலமிக கொடுப்பது நமச்சிவாயவே. உன் குல தெய்வம் சிவபெருமான் தான் என்பதை மறந்து வாழ்வது மறு பிறவிக்கு வித்தாகும்.

சிவபெருமான்தான் எம் குலதெய்வம். சிவபெருமான்தான் எம் குலம் காக்கும் தெய்வம்.

சிவபெருமான்தான் முழு முதற் கடவுள் என்று உணர்ந்து, சிவபெருமானை வணங்கி வாழ்வதே வாழ்க்கை. அத்தகைய வாழ்வே வழிபாடு.

நற்செயல் உன் வாழ்தலே இனிய வழிபாடு. நமச்சிவாய.

அடுத்த பிறவில் இதே சாதியில்தான் பிறப்போமா?... உத்திரவாதம் உள்ளதா?.

சண்டை, சச்சரவுகளை விடுத்து இறைவனை போற்றி அன்புடன் வாழ்வோம்.

சாதி இறைவனுக்கு சேவை செய்ய உருவாக்கப் பட்டதே தவிர... தலை விரித்து ஆட அல்ல...

இறையே அறம்...

பரலோகத்தில் இருக்கும் பரம பிதா இயேசு கிறிஸ்த்து இந்தியாவில் சாதியை ஒழித்த அந்த அற்புதமான காட்சி...


வரலாற்றில் சூனியக்காரிகளின் வேட்டை 2...


உண்மையில் சூனியக்காரிகள் என்றால் யார் ?

இவர்களால் எரித்து கொல்லப்பட்ட சூனியக்காரிகள் என்பவர்கள் ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவல்
அவர்கள்உண்மையில்

மருத்துவச்சிகள்...

மருத்துவம் பார்க்கும் பெண்களை எப்படி சூனியக்காரிகள் என்று ஆனது என்பதற்கு காரணம் அவர்களின் நடவடிக்கையும் தேவாலயங்களின் சபையினரை எதிர்த்தாலும் தான்.

எப்படி என்று பார்ப்போம்..

மருத்துவச்சிகள் கர்ப்பிணி பெண்களை பரிசோதிக்க கையில் எலும்பு துண்டுகளை வைத்து இருப்பார்களாம் [டெதஸ் கோப்போன்று]..

வயிற்றில் உள்ள குழந்தையை கவனிக்க கையில் வாத்துடைய எலும்பை வைத்து குழந்தையின் சப்தத்தை கேட்பார்களாம்...

அடுத்தது குழந்தை பெறக்கூடிய நேரத்தில் அந்த தாயை சமாதானம் செய்ய வாய்களை முணுமுணுத்து கொண்டே இருப்பார்களாம்.. அந்த முணுமுணுப்பு பிற்காலத்தில் மந்திரம் என்று சித்தரிக்கப்பட்டது.

அதன் பிறகு பேறுகால வலியின் உச்சக்கட்டத்தில் கதறிக்கொண்டு இருக்கும் அந்த தாயின் கவனத்தை திசை திருப்ப தலை விரி கோலம் கொண்டு ஆட்டம் ஆடுவார்களாம்.. அந்த ஆட்டத்தை கண்ட அப்பெண் பயத்தில் கூட குழந்தையை ஈன்று விடுவாள் என்ற வரலாறும் உண்டு.

அடுத்து ரண மருத்துவம் தெரிந்த அவர்களுக்கு இரத்தத்தை கண்டு பயம் இருக்காது அல்லவா [மருத்துவர் இரத்தத்தை பார்த்து பயந்தால் நோயாளியின் நிலை என்ன?]..

அப்படியாக பிறந்த  குழந்தையை இரத்தத்தோடு தூக்கி மக்கள் மத்தியில் காண்பிப்பார்களாம்..

ஆனால் அன்றைய காலகட்டத்தில் இரத்தம் ஒரு தீமையின் அடையாளமாக கருத்தப்பட்டது, அதன் காரணமாகத்தான் மாதாந்திர தீட்டுள்ள பெண்களை கூட சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

இப்படி தான் எலும்பு துண்டு, இரத்தவாடை, தலை விரி கோலம்
கருப்பு ஆடை..

அனாச்சார விஷயங்களில் கலந்து கொள்ளாமல் ஊருக்கு ஒதுக்குபுறமாக மருத்துவம் மூலிகை என்று வாழ்வதால் தனிமை தேவை.

இப்படி இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இவை..

இதில் கிருஸ்துவ சபை எங்கே எதிர்க்கப்பட்டது என்றால்..

அக்காலகட்டத்தில் ஒரு நம்பிக்கை.. வயிற்றில் கரு கலைந்து விட்டால் அவள் குற்றம் செய்தவள் ஆகவே கடவுள் அவளை தண்டிக்கிறார் என்று ஒரு தவறான நம்பிக்கை இருந்தது..

இதை எதிர்த்து போராடியது இந்த மருத்துவச்சிகள் தான் கரு கலைவதற்கு காரணம் உண்டு. இதற்கும், தண்டனைக்கும் சம்பந்தம் இல்லை என்று வாதிட்டனர்..

இதான் பிரச்சனை..

சபையை எதிர்த்து பேசுவது கடவுளை எதிர்ப்பதற்கு சமம் என்ற ரீதியில் இவர்கள் அனைவரும் சூனியக்காரிகள் என்று பரப்பப்பட்டு இந்த கொடூரம் அரங்கேறியது..

எந்த அளவுக்கென்றால் Malleus Maleficarum என்ற புத்தகத்தை ஜெர்மனி கேத்தலிக் பிரிவை சார்ந்த ஹென்ரிச் கேறாமற் என்பவர் எழுதியுள்ளார்..

இந்த புத்தகத்தில் சூனியக்காரிகளை [மருத்துவச்சிகளை] எப்படியெல்லாம் கொல்வது என்பது தான் இப்புத்தகத்தில் உள்ளவைகள்...

ஆரம்பத்தில் பார்த்த அந்த கிங் ஜேம்ஸ் வேறுயாருமில்லை பைபிளை தொகுத்தவர்..

ஆம் கிங் ஜேம்ஸ் வர்சனை தொகுத்த இந்த மன்னர் தான் சூனியக்காரிகளை கொல்ல வேண்டும் என்று முதன் முதலில் கட்டளை இட்டவர்...

பின்னாளில் இதை உணர்ந்தவர் தனது பாவத்தை கழுவ எண்ணியே பைபிளை தொகுத்தார் என்ற கூற்றும் உண்டு, ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை....

பாஜக - அதிமுக - காவல்துறை சதிகள்...


வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்...



உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு..

முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....

எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது, குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்....

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும் போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

பாஜக மோடியின் இந்தியா விற்பனை....


ரயிலில் டீ, காபி விலை உயர்ந்தது...


ரயிலில் விற்பனை செய்யப்படும் டீ, காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வேத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி 170 மில்லி அளவு கொண்ட காபி 7 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்கும், தேனீர் வழக்கம்போல ஐந்து ரூபாய்க்கே விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது...

தமிழீழம்...


நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்...


நீங்கள் அன்புணர்வின் கதிர்களை வெளிப் படுத்திக் கொண்டிருந்தால் மொத்தப் பிரபஞ்சமுமே உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வது போலவும், அனைத்து மகிழ்க்கியான விஷயங்களையும் உங்களை நோக்கிச் செலுத்துவது போலவும், எல்லா நல்லவர் களையும் உங்களை நோக்கி நகர்த்துவது போலவும் தோன்றலாம். உண்மையும் அதுதான்.

உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீங்கள் விரும்பினால் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள்.

உங்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தும் நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்.

நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக உணரும் போது, அன்பைத் தேடுகிறீர்கள்.

அதோடு உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலேயே வைத்திருக்கும் நபர்களையும் சூழல்களையும் கவர்ந்து இழுக்கிறீர்கள்.

உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருக்கும் மேலும் அதிகமான சிறப்புகளையும் ஈர்ப்பு விதி உங்களுக்குக் காட்டிவிடும்.

உங்களுடைய சக்தியை சரியான முறையில் இடம்பெயரச் செய்து நீங்கள் வேண்டுபவற்றை உங்கள் வாழ்வில் அதிகமாகக் கொண்டு வருவதற்கு சிறந்த செயல்முறை நன்றியுணர்தல் ஆகும்.

நீங்கள் வேண்டும் என்று விரும்பிய வற்றிற்கு, முன்னதாகவே நன்றி தெரிவிக்கும் செயல், உங்களுடைய ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்ஞையை அனுப்பும்.

உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்குவது தான் அக்காட்சியின் படைப்பாகும்.

அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும்போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள்.

நீங்கள் உங்கள் மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ? அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்.

ஒரு நாளின் இறுதியில், தூங்கப் போவதற்கு முன்பு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக் கண்ணால் பாருங்கள்.

ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது தருணமோ, நீங்கள் விரும்பியபடி அமைய வில்லை என்றால் அதை அழித்துவிட்டு நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தீர்களோ அப்படி நடை பெற்றதைப் போல உங்கள் மனத்தில் மாற்றி ஓடவிட்டுப் பாருங்கள்.

அடுத்த நாள் நீங்கள் விரும்பியபடி எல்லாம் மாறிவிடும்...

கமல் எனும் உளவாளியின்... அரசியல் ஏமாற்று வேலை...


மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும்...


மொசாட்.. கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர்..

உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு..

இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல்..

அத்தனை பெரும் உளவாளிகள்..
ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்..

 நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை.. உலகத்தில் இருக்கும் அத்தனை உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிடவும் பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்.

உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் மிக மிக அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பது மொசாத் மட்டுமே.

இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது என்றால் மிகையகாது.

இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம்.
 யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும்.
 மொசாட் இஸ்ரேலின் உளவுப்படை. மொசாட்டுக்கென்று தனியாக அலுவலகம் (அறிவிக்கப்பட்டது) எதுவும் கிடையாது.

 அரசாங்க வேலைக்கு ஆளெடுப்பு என செய்திதாளில் செய்தி மட்டுமே வரும். அதற்கு செல்லும் நபருக்கு, தான் மொசாட் பணிக்குத்தான் செல்கிறோம் என்று கூடத் தெரியாது. இது எல்லா நாடுகளிலும் கிளை விரித்துப் பரவியுள்ளது.

இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்க நினைத்தாலே அந்த நாட்டின் நிம்மதியை கெடுக்கும் மொசாட். அமெரிக்காவின் மேற்பார்வையில் உருவானது மொசாட். பின் நாளில் குருவுக்கே தண்ணி காட்டும்  சிஷ்யனாக வளர்ந்தது.

ஒரு நபரை அவரின் அனுமதியில்லாமல் அவருக்கே தெரியாமல் தன உளவு வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளும் திறைமை மொசாட் உளவாளிகளுக்கு  உண்டு.

 மொசாட்டில் ஒருவர் சேருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல கட்ட சோதனைகள் இருக்கும். பல்வேறு விதமான பயிற்சிகள் என இருக்கும். உலகின் பல மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். எந்த கடினமான சூழ்நிலையையும் மிக சாமர்த்தியமாக சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இந்த சோதனைகளில் பங்கேற்கும் போதே பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டும். இந்த சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால் உளவுக்காக அமர்த்தபடுவார்கள். இல்லையென்றால் அதோடு அவனின் கதை முடிந்தது..

மொசாட் ஒரு வழிப்பாதை...

 பாகம் 1...

மறுபடியும் வேறு விதமாக கேள்விகள்....

மொசாட் அவ்வளவு பயங்கரமானதா...?

இல்லவே இல்லை...

 அதிஅதி பயங்கரமானது....

உலகத்தில் வீசப்படும் ஒவ்வொரு குப்பைப் பேப்பரும், பழைய கம்ப்யூட்டர்களும் ஆராயப்படும்....

எனது இந்தப் பதிவு, முந்தைய பதிவிலிருந்து, அதன் லைக், கமெண்ட் வரை தோண்டிவிடுவானுக....

24 மணி நேரமும் காலை ஆட்டிக் கொண்டே இருக்கும் வேட்டை நாய்...

இன்னும் ஒரு அழகான விடயம்...

மொசாட்டை வடிவமைப்பு செய்தது ஒரு பெண்....

பல்லாண்டுகள் அந்த தேசத்தின் பிரதமர்...

நம்ம அம்மா போல, அன்னை இந்திரா போல... சுப்பீரியர் பர்சனாலிட்டி....

இது இப்படித் தான்.... கேள்வி கேட்கும், சந்தேகப்படும் நபர்கள் வரலாற்றில் தேவை இல்லை.... ஆமென்...

 ஜெகோவா... உங்களுக்கு ஒரு விருந்தாளி...

தனது மொசாட்டுக்கு உலகத்தில் யார் வேண்டுமானாலும் உளவாளியாக வரலாம் என வெப்சைட் வைத்து உள்ள ஒரே ஒரு உளவு அமைப்பு அதுதான்...

டபிள் செக், ட்ரிபிள் செக், க்வாட்ரோ செக், பென்டா செக், க்யுனோ செக், நேனோ செக் என பலகட்டப் பரிசோதனை நிகழும்...

நிழல் தவறாக அசைந்தாலும், உங்கள் பரம்பரை அத்திப் பட்டியில் புதைக்கப்பட்ட அஜீத் குடும்பம் தான்...

அப்ப, மத்த தேச உளவு அமைப்புகள்...???

சிம்பிள்.... அமெரிக்கா... 9|11..

பிரான்ஸ், பெல்ஜியம், இந்தியா...

உலகம் முழுவதும் குண்டு வெடிப்பு....

ISIS... உலகம் முழுவதும் வெறியாட்டம்....

இதுவரை,

இஸ்ரேலில்,

குண்டு எல்லாம் இல்லை..... பட்டாசு வெடித்தது என்று செய்தி பார்த்து இருக்கிறீர்களா....?

அதுதான் மொசாட்...

அதனால் தான் அது மொசாட்....

பாகம் 2...

சரி.. இதுவரை நீங்கள் சொன்ன மொசாட்டை எவனுமே ஜெயித்ததில்லையா...?

ஓ... ஒரே ஒருவன் உண்டே...?

அவன் இன்று உயிரோடு இல்லை என்கின்றனர்... ஆனால் பிணத்தைக் காட்டவில்லை.

தப்பித்தவறி மீண்டும் உயிரோடு வந்தால்

அவர்களிடமும், மற்றும் அவர்களது பரம எதிரிகளிடமும், அதாவது பாலஸ்தீன போராளிகளிடமும் ஒரே நேரத்தில் தன் வீரர்களைப் போர் பயிற்சி பெற வைத்தவன்...

கொரில்லா என்ற திடீர்த் தாக்குதல் என்ற உத்தியில்,

தற்கொலைப்படை என்ற ஒன்றை உருவாக்கி, உலகத்தை அதிரச் செய்தவன்....

மனித வெடிகுண்டு என்ற  ஒரு போர் உத்தியைக் கையாண்ட முதல் போராளி இயக்கம்...

செக்கோஸ்லோவேக்கியா இரண்டாகப் பிரிக்கப்பட்டு,

செக் ரிபப்ளிக் மற்றும் ஸ்லோவேக்கியா எனப் பிரிந்த போது,

அதில் ஒரு நாட்டிலிருந்து ஒரு இஸ்ரேலியத் தயாரிப்பு விமானத்தைக் கொண்டு வந்து, அதை வைத்து ஒரு விமானப் படை உருவாக்கியவன்...

அதை வைத்தே அந்த நாட்டுத் தயாரிப்பு  விமானங்களைச் சுக்கு நூறாக்கியவன்...

 பெயர் கரிகாலன்....

அவனுக்கு மற்றொரு பெயர் உண்டு....

வேலுப்பிள்ளை பிரபாகரன்...

இஸ்ரேலிய ஆயுதங்களும், இந்திய ரேடார்களும் பயனின்றிப் போன இடம்..
கட்டுநாயக விமான தளம்..

மொசாட்கள் மோப்பம் பிடிக்காமல் கோட்டை விட்ட இடம்..

உலகத்தில் மொசாட் தோற்ற இடம் அது.... அதன் பெயர் ஈழம்....

அதிமுக - திமுக வின் ஏமாற்று அரசியல்...


1953 சித்தூர் மீட்புக்கு தமிழகம் தந்த ஆதரவு...


17.05.1953 தேதியிட்ட இந்த 'செங்கோல்' இதழில் 'சித்தூர் கிளர்ச்சிக்கு ஆதரவு' என்ற தலைப்பு உள்ளது.

கீழே திருவண்ணாமலையில் நடந்த ஊர்வலத்தின் படம் உள்ளது.

சித்தூர் தமிழகத்துடன் இணைய 1953 மே மாதத்தில் தமிழகம் முழுவதும்  ஆதரவான கூட்டங்கள் நடந்ததைக் குறித்து செய்திகள் மாவட்ட வாரியாக உள்ளன.

சென்னையில்,வண்ணையம்பதி (வாணியம்பாடி)யில் பொதுகூட்டம் நடந்தது.

திருச்சி நகரிலும் உறையூரிலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

தஞ்சையில்,  திருத்துறைப்பூண்டியிலும் கும்பகோணத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

சேலத்தில்,கொண்டாலம்பட்டி பொதுக்கூட்டத்தில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

சித்தூரின் 6 தமிழ் தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைய தீர்மானம் இயற்றப்பட்டது.

கிச்சிப்பாளையத்திலும் சித்தூர் தினம் கொண்டாட்டமும், கிருஷ்ணகிரியில் 3மைல் நீள ஊர்வலமும் நடத்தப்பட்டன.

வட ஆற்காட்டில்,ஆம்பூரில் சர்வகட்சிக் கூட்டமும் கலவையில் கூட்டமும் திருப்பத்தூரில் ஊர்வலமும் நடந்தன.

மதுரையில்,பழனியில் ஊர்வலமும் மேலூரில் சித்தூர் தினக் கொண்டாட்டமும் நடந்தன.

சித்தூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

வள்ளிமலையிலும், அத்திமாஞ்சேரியிலும் பொதுக் கூட்டங்கள் நடந்தன.

திருத்தணியில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலியில்,சங்கரநயினார் கோயிலில் (சங்கரன்கோயில்) கூட்டம் நடத்தப்பட்டது.

பம்பாயில்,தாராவியில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

ம.பொ.சி நடத்திய மண்மீட்பு அறப்போருக்கு தொடர்ச்சியாக ஆதரவு தந்த செங்கோல் எனும் இவ்விதழின் ஆசிரியர் ஆ.கோ. வெங்கட ராமானுஜன் என்று உள்ளது.

பெயரை வைத்தும் முகவரி திருவல்லிக்கேணி என்று இருப்பதை வைத்தும் இவர் பார்ப்பனத் தமிழர் என்று ஊகிக்க முடிகிறது...

நம்மால் இந்த கணித வலையிலிருந்து தப்ப முடியும்...


உங்கள் வாழ்நாளை சுரண்டும் இந்த கணிதவலை 9..

நீங்கள் சாப்பிடும் இந்த ஒவ்வொரு பருக்கைக்கும் இந்த ஒன்பதுக்கும் சம்மந்தம் உள்ளது.

உழைத்தால் தான் சோறு இதை உருவாக்கியது யார் இயற்கையா?

இந்த இயற்கை நீங்கள் உண்ணும் உணவுக்கு பணம் கேட்டதா?

எங்கு இருந்து வந்தது இந்த பணம்? நாகரிகமா?

சரி பணம் கேட்காமல் கொடுக்கும் இயற்கை எங்கே போனது?

நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அடிமை ஓட்டத்திற்கு காரணமான பணத்தின் சூத்திரம் ஒன்பது, இதன் இயக்கவியல் ஒன்பது.

அதாவது பணத்தை அளவீடு செய்வது வணிக வருடம் (commercial year, finacial market).

360 நாள்கள் (360 days) 3+6+0=9.

எல்லா வங்கிகளும் இதன் அடிப்படையில் தான் இயங்குகிறது.

எதற்காக ஓடுகிறோம் என சிந்தித்து பாருங்கள்.

சரி இதற்கு என்ன நிரந்தர தீர்வு என கேட்கிறீர்களா?

பதில் அதே 360 நாட்கள் தான்...

உலகில் உள்ள ஓவ்வொரு மனிதனும் இந்த அடிமை ஓட்டத்தை 360 நாட்கள் நிறுத்தினால் என்னவாகும் என யோசித்து பாருங்கள்.

இந்த 360 நாட்களும் நாம் எதும் செய்ய வேண்டாம் ஒரு புல்லையும் புடுங்க வேண்டாம்.

நமக்காக இந்த இயற்க்கையே செய்யும் காகம், குருவி, புழு, பூச்சி என எல்லா இயற்கை படைப்புகளும் செய்யும்.

மரங்கள், செடி, கொடிகள் தானாக வளரும் காடுகள் கிடைக்கும்.

இயற்கையை மீட்டெடுக்கலாம்.

இந்த அடிமை ஓட்டத்தை எப்படி ஓடலாம் என 15% மட்டுமே சிந்திக்கும் இந்த மூளை, இயற்கை சூழ்நிலையில்  இயற்கையோடு இயற்கையாய் இருக்கும் போது அதற்கு மேலும் செயல்படும் உங்களின் ஓவ்வொரு அசைவும் இயற்கையை உணரும்...

சர்வதேச சிலை கடத்தல் உண்மைகள்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


புராணங்களை பற்றி நமக்கு மிக தவறான அபிப்ராயங்கள் இருக்கிறது. புராணங்கள் என்றாலே அதில் மிகைபடுத்தி கூறப்பட்ட விஷயங்கள் இருக்கும். பொய்களும், அதீதமான கற்பனைகளும் மலிந்து கிடக்கும் எதை நம்பினாலும் நம்பலாம். புராணங்களை நம்ப கூடாது என்று நினைக்கிறோம். இது நமது இயற்கையான சுபாவம் அல்ல.

வெள்ளைக்காரன் நமது மண்டையை உடைத்து, அதற்குள் திணித்து வைத்த சுபாவமாகும். முதலில் நமது அறிவு வளர வேண்டுமென்றால் இது இப்படிதான் இருக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக முடிவு கட்டிவிடும் மனோ பாவத்தை மாற்ற வேண்டும். புராணங்களிலும் உண்மைகள் இருக்கலாமோ, அவைகளிலும் நம்ப தகுந்த காரியங்கள் எதாவது மறைந்து கிடக்குமோ? என்ற ஆய்வு மனப்பான்மையை வளர்த்து கொண்டாவது அவைகளை படிக்க வேண்டும்.

பல புராணங்களில் அசுரர்களும், தேவர்களும் அசாத்தியமான வீரம் படைத்த அரச குமாரர்களும் பல உலகங்களுக்கு சென்று வந்ததாகவும், அவைகளை வென்று வந்ததாகவும் கருத்துக்கள் நிறையவே இருக்கிறது. பொய்யான ஒரு விஷயத்தை கண்ணை மூடிக் கொண்டு திரும்ப திரும்ப சொல்வது நமது முன்னோர்களின் இயல்பு அல்ல. ஒரு சதவிகிதம் கூட உண்மை இல்லாத விஷயத்தை அவர்கள் பேச மாட்டார்கள். உதாரணத்திற்கு சந்திரனை எடுத்து கொள்வோம். சந்திரன் என்றாலே குளிர்ச்சி, சிலேத்துமம், தண்ணீர் என்று தான் நமது பெரியவர்கள் கூறினார்கள்.

ஆனால், விஞ்ஞானம் என்ன சொன்னது ஒட்டுமொத்த நிலாவையே பிடித்து வந்து ஆலையில் போட்டு அரைத்து பிழிந்து எடுத்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்று தான் ஆரம்பத்தில் வாதிட்டார்கள். கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்தார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. சந்திரனில் இருக்கும் ஒரு சிறு நீர் பிடிப்பு பகுதியை பூமிக்கு கொண்டுவந்தால் பூமியில் முக்கால்வாசிபேர் சில வருடங்கள் தாகம் இல்லாமல் இருப்பார்கள் என்ற அளவிற்கு பேச வந்துவிட்டார்கள். எனவே விஞ்ஞானம் கூறுவது இறுதியான உறுதியான முடிவுகள் அல்ல. காலந்தோறும் அவைகள் மாறிக்கொண்டே வருவதை காணலாம். அதே போலதான் வேறு உலகங்களை பற்றிய நிகழ்வுகளும்.

நமது ரிஷிகளில் பலர் “ஆகாச காமினி” என்ற மந்திர சித்தி பெற்றவர்கள். இந்த மந்திர சித்தி என்ன பலனை தருமென்றால் நமது உடம்பு ஒரு இடத்தில் பத்திரமாக இருக்கும் போதே,  நமது உயிர் உடம்போடு சிறிய தொடர்பை மட்டும் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமென்றால் சென்று வரலாம் என்பதாகும். இதன் சக்தியால் பூமியை மட்டுமல்ல. பூமிக்கு அப்பாலும் சென்று பல அரிய காட்சிகளை, இரகசியங்களை தெரிந்து வரலாம். அந்த வகையில் எந்தெந்த கிரகங்களில் உயிர்கள் இருக்கிறது. எதில் இல்லை என்பதை தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்து கொள்ளலாம். இதுவரையில் நமது ஞானிகள் பூமியை தவிர, பதினாலு உலகங்கள் உயிர்கள் வாழக்கூடிய தகுதியில் இருக்கிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள். அதல, விதல, சுதல, பாதாள, என்பது தொடங்கி பூ, புவ, சுவ என்று அதன் பட்டியல்கள் செல்கிறது இதை மிக சுலபமாக மேலோகம், ஏழு கீழ் லோகம், ஏழு என்று நாம் பிரிக்கலாம்.

நாம் முன்பே பார்த்த இஸ்லாமிய இறை வேதமான குரானில் கூட, ஏழு வானங்கள் இருப்பதாக சொல்லபட்டிருப்பதும் இந்த  ஏழு உலகங்களை தான் குறிக்குமென்று நான் நம்புகிறேன். கிறிஸ்துவ விவிலியத்திலும், வானவர்கள் மேலே இருந்து இறங்கி வந்தார்கள் என்று கூறுவதையும் இந்த வகைகளிலே கருதுகிறேன். எனவே பூமியை தவிர வேறு பல கிரகங்களில் உயிர்வாழ்க்கை இருக்கிறது. நமது பூமியை போலவே செவ்வாயில் உயிர் வாழ்க்கை இருந்திருக்கிறது...

காதல் தோல்வி என்று எதுவும் இல்லை...


நீ உண்மையாக காதலித்தால் அதை நீ விதைத்தால் இந்த ஜென்மம் இல்லை என்றால் அடுத்த ஜென்மம் கண்டிப்பாக நடக்கும்.

மனதினால் சேர்ந்தவர்களுக்கு உடலினால் சேரவேண்டிய அவசியம் அல்ல.

உடல் ஆசை  காதல் அல்ல காமம்.

எல்லாமே கிடைத்து விட்டால் மனிதன் கிடைக்காமல் போகும் வலியை உணரமாட்டான்.

இதுவும் இயற்கை பாடம் தான் கிடைக்க வில்லை என்று அதை அழிக்கவோ நீ அழியவோ நினைக்காதே.

மகிழ்ச்சியோடு தூங்குங்கள்
இன்று எண்ண செய்தோம் என்பது ஒரு முறை நினைவு படுத்தி.

நமது தவறுகள் கண்டு பிடித்து நாளை நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்...

சிந்தித்துப் பாருங்கள்...


ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன.

ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை.

தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன.

ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை.

இயற்கையில் எல்லாமே மிக அழகாக ஒருங்கிணைந்து செல்கின்றன.

ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி போடுவதில்லை.

எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை.

எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன.

சற்றே இதை கவனியுங்கள்.

நீங்கள் நீங்களாக இருங்கள்.

மேலும் நீங்கள் என்ன செய்தாலும் வேறுவிதமாக ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லா முயற்சிகளும் பயனற்றவையே.

நீங்கள் நீங்களாக இருக்க மட்டுமே முடியும்.

அவையே ஆனந்தம்...