24/09/2018

கட்சிக்காக உழைத்து தன்வாழ்க்கையை தியாகம் செய்த திமுக ஸ்டாலினுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்...


சென்னையில் நிருபர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது...

நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் எல்லா சமூகத்தினரையும் தரம் தாழ்த்தி பேசியுள்ளார். இப்படி தரம் தாழ்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை பெற்றிருப்பது வேதனைக்குரியது. அவருடைய பேச்சுக்கு அவர் என்ன பாடுபடுகிறார் என பொறுத்திருந்து பாருங்கள்.

கருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை. எங்களை குறைகூறும் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ரூ. 40 ஆயிரம் கோடி வரை சொத்து உள்ளது.

ஊழலின் மொத்த உருவமாக இருந்து கொண்டு, நல் அரசை குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் கட்சி நிலக்கரி ஊழல் செய்தது. திமுக வும் காங்கிரசும் வேடம் போடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.