24/09/2018

சிந்தித்துப் பாருங்கள்...


ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன.

ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை.

தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன.

ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை.

இயற்கையில் எல்லாமே மிக அழகாக ஒருங்கிணைந்து செல்கின்றன.

ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி போடுவதில்லை.

எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை.

எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன.

சற்றே இதை கவனியுங்கள்.

நீங்கள் நீங்களாக இருங்கள்.

மேலும் நீங்கள் என்ன செய்தாலும் வேறுவிதமாக ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லா முயற்சிகளும் பயனற்றவையே.

நீங்கள் நீங்களாக இருக்க மட்டுமே முடியும்.

அவையே ஆனந்தம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.