24/09/2018

அரசுகளும் நீதிமன்றமும் சாமானிய மக்களுக்கு எதிரானதே...


எங்கள் மீதான டாஸ்மாக் போராட்ட வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 27.08.18 அன்று  விசாரணைக்கு வந்தது.அப்போது "IPC-328ன் படி போதைப்பொருள் விற்பது குற்றம்.

டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பதை தடுக்காமல் சாராயம் விற்கும் அரசுக்கு நீதிமன்றம் உடந்தையாக உள்ளது"என்று  குற்றம் சாட்டி அப்பா ஆனந்தன் வாதிட்டார்.

இதனால் மதுரை மாவட்ட நீதிமன்றம் (JM-6) அப்பா ஆனந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.மேலும் நீதிபதியின் உத்தரவுப்படி 27.08.18 ஒருநாள் முழுவதும் அப்பாவை நீதிமன்றத்தில் சிறை பிடித்துவைத்தனர்.

வருகிற 27.09.18 அன்று இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

- நந்தினி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.