24/09/2018

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


புராணங்களை பற்றி நமக்கு மிக தவறான அபிப்ராயங்கள் இருக்கிறது. புராணங்கள் என்றாலே அதில் மிகைபடுத்தி கூறப்பட்ட விஷயங்கள் இருக்கும். பொய்களும், அதீதமான கற்பனைகளும் மலிந்து கிடக்கும் எதை நம்பினாலும் நம்பலாம். புராணங்களை நம்ப கூடாது என்று நினைக்கிறோம். இது நமது இயற்கையான சுபாவம் அல்ல.

வெள்ளைக்காரன் நமது மண்டையை உடைத்து, அதற்குள் திணித்து வைத்த சுபாவமாகும். முதலில் நமது அறிவு வளர வேண்டுமென்றால் இது இப்படிதான் இருக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக முடிவு கட்டிவிடும் மனோ பாவத்தை மாற்ற வேண்டும். புராணங்களிலும் உண்மைகள் இருக்கலாமோ, அவைகளிலும் நம்ப தகுந்த காரியங்கள் எதாவது மறைந்து கிடக்குமோ? என்ற ஆய்வு மனப்பான்மையை வளர்த்து கொண்டாவது அவைகளை படிக்க வேண்டும்.

பல புராணங்களில் அசுரர்களும், தேவர்களும் அசாத்தியமான வீரம் படைத்த அரச குமாரர்களும் பல உலகங்களுக்கு சென்று வந்ததாகவும், அவைகளை வென்று வந்ததாகவும் கருத்துக்கள் நிறையவே இருக்கிறது. பொய்யான ஒரு விஷயத்தை கண்ணை மூடிக் கொண்டு திரும்ப திரும்ப சொல்வது நமது முன்னோர்களின் இயல்பு அல்ல. ஒரு சதவிகிதம் கூட உண்மை இல்லாத விஷயத்தை அவர்கள் பேச மாட்டார்கள். உதாரணத்திற்கு சந்திரனை எடுத்து கொள்வோம். சந்திரன் என்றாலே குளிர்ச்சி, சிலேத்துமம், தண்ணீர் என்று தான் நமது பெரியவர்கள் கூறினார்கள்.

ஆனால், விஞ்ஞானம் என்ன சொன்னது ஒட்டுமொத்த நிலாவையே பிடித்து வந்து ஆலையில் போட்டு அரைத்து பிழிந்து எடுத்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்று தான் ஆரம்பத்தில் வாதிட்டார்கள். கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்தார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. சந்திரனில் இருக்கும் ஒரு சிறு நீர் பிடிப்பு பகுதியை பூமிக்கு கொண்டுவந்தால் பூமியில் முக்கால்வாசிபேர் சில வருடங்கள் தாகம் இல்லாமல் இருப்பார்கள் என்ற அளவிற்கு பேச வந்துவிட்டார்கள். எனவே விஞ்ஞானம் கூறுவது இறுதியான உறுதியான முடிவுகள் அல்ல. காலந்தோறும் அவைகள் மாறிக்கொண்டே வருவதை காணலாம். அதே போலதான் வேறு உலகங்களை பற்றிய நிகழ்வுகளும்.

நமது ரிஷிகளில் பலர் “ஆகாச காமினி” என்ற மந்திர சித்தி பெற்றவர்கள். இந்த மந்திர சித்தி என்ன பலனை தருமென்றால் நமது உடம்பு ஒரு இடத்தில் பத்திரமாக இருக்கும் போதே,  நமது உயிர் உடம்போடு சிறிய தொடர்பை மட்டும் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமென்றால் சென்று வரலாம் என்பதாகும். இதன் சக்தியால் பூமியை மட்டுமல்ல. பூமிக்கு அப்பாலும் சென்று பல அரிய காட்சிகளை, இரகசியங்களை தெரிந்து வரலாம். அந்த வகையில் எந்தெந்த கிரகங்களில் உயிர்கள் இருக்கிறது. எதில் இல்லை என்பதை தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்து கொள்ளலாம். இதுவரையில் நமது ஞானிகள் பூமியை தவிர, பதினாலு உலகங்கள் உயிர்கள் வாழக்கூடிய தகுதியில் இருக்கிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள். அதல, விதல, சுதல, பாதாள, என்பது தொடங்கி பூ, புவ, சுவ என்று அதன் பட்டியல்கள் செல்கிறது இதை மிக சுலபமாக மேலோகம், ஏழு கீழ் லோகம், ஏழு என்று நாம் பிரிக்கலாம்.

நாம் முன்பே பார்த்த இஸ்லாமிய இறை வேதமான குரானில் கூட, ஏழு வானங்கள் இருப்பதாக சொல்லபட்டிருப்பதும் இந்த  ஏழு உலகங்களை தான் குறிக்குமென்று நான் நம்புகிறேன். கிறிஸ்துவ விவிலியத்திலும், வானவர்கள் மேலே இருந்து இறங்கி வந்தார்கள் என்று கூறுவதையும் இந்த வகைகளிலே கருதுகிறேன். எனவே பூமியை தவிர வேறு பல கிரகங்களில் உயிர்வாழ்க்கை இருக்கிறது. நமது பூமியை போலவே செவ்வாயில் உயிர் வாழ்க்கை இருந்திருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.