01/06/2018

புத்திர தோசமும் பரிகாரமும்...


5ஆம் அதிபதி 6ஆம்  அதிபதியுடன் கூடி இருந்து சுபர் பார்வை இல்லையெனில் சாதகன் பிள்ளையின்றி தவிப்பான்.

5ஆம் அதிபதி 5இலே இருந்து சுபர் பார்வை இல்லையெனில் தெய்வ சாபத்தால் ஆண்பிள்ளை இருக்காது.

4ல் பாவிகளும், 12ல் 5ஆம் அதிபதியும் சனியும் இருந்து பாவிகளின் தொடர்புபட தாயின் சாபத்தால் குழந்தை பிறக்காது.

2 மற்றும் 12ஆம் வீடுகளில் சுபர்கள் இருக்க, அவை பாவிகளின் வீடாகி, 9க்கு உரியது 12இலும், பாவிகள் 5இலும் இருந்து லக்னாதிபதி அஸ்மனம் அடைந்து இருந்தால் புத்திர தோசத்தால் குலம் அழியும்.

1-8-12களில் சனியும் செவ்வாயும் இருந்தால் பிள்ளை பிறக்காது.

புதனும் சுக்ரனும் 8-10களிலும், 8க்குடையது 5இலும், இலக்னாதிபதி பாவருடன் கூடி 10இலும் இருக்க புதல்வர் இல்லை.

5ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் நீதிவாய்ந்த ஒருபிள்ளை மட்டுமே பேர் சொல்ல இருப்பான். மற்றபடி குழந்தைகள் பிறந்தாலும் இறந்துவிடும்.

5-7ஆம் அதிபதிகள் கேந்திரந்தில் இருந்து வலுப்பெற, 6ஆம் அதிபதி வலுப்பெற்று சேர்ந்தாலும் பார்த்தாலும் அச்சாதகனுக்கு பிள்ளை இல்லை.

குலதெய்வ வழிபாடு அவசியம்.

அந்தியில் குளித்தபின் உறவின்போது முழங்கால் மடித்து முழுவதும் உள்வாங்கி சிந்தை ஒன்றி செய்தால் கருத்தரிப்பாள்.

உங்கள் ஆழ்மன பதிவை சுயக்கருத்தேற்றால்  மாற்றினால் குழந்தை பிறக்கும். தகவலை மாற்றினால் அனைத்தையும் மாற்றலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.