29/10/2021

பெரியாரும் திருட்டு திராவிடமும்...

 


சுயமரியாதை.. தன்மானம்.. பகுத்தறிவு என்பதன் பெயரால் தமிழகத்தில் இதுகால் வரை சாதித்தது என்ன..?

சாதி ஒழிக்கப்பட்டதா..?

சாதிச் சான்றிதழ்கள் வழங்குதலை அரசு தடுத்ததா..?

சட்டத்தின் முன் சகலரும் சமன் என்பதை அரசு நடைமுறைப்படுத்தியதா..?

மக்களின் பொருளாதார ஏற்றத் தாழ்வுநிலையைப் போக்கி எல்லோருக்கும் எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்ததா..?

எல்லோருக்கும் கல்வி அறிவூட்டல் செய்ததா..?

அறிவியல் கல்வியை வழங்கியதா..?

மொழி சீர்திருந்தகளை செய்து தமிழை அடுத்த நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க தயார் செய்ததா..?

இல்ல ஆங்கிலத்தைப் படித்தால் போதும் என்றிருக்கிறதா..?

ஜப்பானியர்களும் சீனர்களும் ரஷ்சியர்கள் சொந்த மொழியில் தானே அறிவியலை கற்கின்றனர். ஏன் தமிழை அந்த நிலைக்கு முன்னகர்த்த முயற்சிக்கவில்லை..?

ஆங்கிலம் தான் அறிவியல் என்ற மாயை ஏன் வளர்க்கப்பட வேண்டும்.

ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு படிப்பது என்பது வேறு.. ஆங்கில நூல்கள் சொல்லும் அறிவியல் என்பதைப் பெறுவது வேறு..

தாய் மொழியை இகழ்வதும்.. அதன் இருப்பைக் கேலி செய்வதும் மிக மோசமான இனவிரோதச் செயற்பாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.