22/07/2021

சாமியார் Vs மீ...

 


சென்னை கோயிலுக்கு இன்று ஒரு சாமியார் வந்திருந்தார். 

பல்வேறு விஷயங்களைப் பேசி அவர்களிடமிருந்து நமக்கு ஆபத்து வரும்போது எப்படி தப்பிப்பது என்பதை சொன்னார். 

யானை துரத்தினால் வளைந்து வளைந்து ஓடு. 

நாய் துரத்தினால் ஓடாதே.. திரும்பி முறைத்து பார்..

பாம்பு துரத்தினால் நேராய்  ஓடு.. 

புலி துரத்தினால் மரத்தின் மேல் ஏறு..

சிங்கம் துரத்தினால் பிணம் போல் நடி..

இப்படி எது துரத்தினாலும் தப்பிக்க சொல்லித்தந்தவர்... 

மனைவி துரத்தினால் என்ன  சாமி செய்வது என்று கேட்டேன். 

வெகு நேரம் யோசித்துவிட்டு சொன்னார்.. 

அப்படி துரத்தப்பட்டு  தப்பி வந்தவன்தாம்பா நான்... 😁

மீ : இந்த எழவுக்கு தான்யா நான் கல்யாணமே பண்ணாம தனியா நிம்மதியா இருக்கேன்... 😁😁😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.