03/07/2017

இலுமினாட்டி சம்பந்தமாக நாம் சொல்லவரும் அனைத்து விடயங்களும் ஒரே இடத்தில் உங்களால் பார்க்க முடியாது...


ஏன் என்றால் இவர்கள் ஒரு மறைவான கூட்டம்..

இவர்களைப் பற்றி தகவல் தருபவர்கள் இலுமினாடிகளாக இருக்கின்றனர்.

இவர்களின் சரியான செயல்பாடுகளை நாம் கண்டு பிடிக்காது எம்மைத் திசை திருப்பவே இவர்களே இவர்களைப் பற்றி தகவல் தரக் காரணம்..

இன்னொரு சாரார் காழ்ப்புணர்வின் அடிப்படையில் விமர்சிப்பவர்கள்.

90% உண்மையோடு வேண்டுமென்றே 10% பொய்யைக் கலந்து தருபவர்கள். இவர்களில் இலுமினாட்டிகளின் ஆதரவாளர்களும், எதிரிகளும் அடங்குவர்.

அடுத்த தரப்பினர் நடுநிலையோடு தகவலைத் தருபவர்கள். இவர்களின் தகவல்களும் 100% உண்மை அல்ல. ஆனால் தவறுதலாக ஆய்வின் அடிப்படையில் பிழை விடுபவர்கள்.

இந்த மூன்றையும் வைத்து ஓரளவு உண்மையைக் கண்டு பிடிப்பதே நாம் செய்த வேலை ஆகும். இதனால்தான் நான் சொல்லும் சில விடயங்கள் தேடியும் கிடைக்கப் பெறாது.

அதாவது 3 தரப்பாரும் ஒரே விடயத்தைச் சொன்னால் ஓரளவு அது உண்மையாக இருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.

இத்தகவல்கள் அனைத்தையும் குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களோடு உரசி உரசி பெறப்படும் முடிவுகள் தான் எம்மால் இங்கு சொல்லப்பட இருக்கிறது.

நீங்களும் தேடித் பார்ப்பதன் மூலம் நாம் பிழையான முடிவுகளை சொல்லும்போது அதை திருத்த உதவியாக இருக்கும். இப்போது விடயத்துக்கு வருவோம்.

இவர்களின் கொள்கை - (Luciferianism) கடவுள் மனிதனின் எதிரி. சைத்தான் (லூசிபர்) தான் மனிதனின் நண்பன்.

அதாவது மனிதனைப் படைத்து விட்டுக் கடவுள் அந்த மரத்தை நெருங்காதீர்கள் என்று சொன்னது மனிதனோடு உள்ள பொறாமையினால் ஆகும்.

சாகா வரம் அல்லது கடவுள் தன்மை அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்று அக்கனியைச் சாப்பிட்டால் மனிதனுக்குக் கிடைத்துவிடும் என்ற பொறாமைதான் கடவுளுக்கு இருந்துள்ளது.

ஆனால் சைத்தான் எப்படியாவது மனிதனுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எண்ணியதால்தான் அவ் உண்மையை ஆதாமுக்குச் சொன்னான்.

எனவே மனிதனுக்கு நலம் நாடுபவன் சைத்தானே.

நோக்கம், இலக்கு - உலகத்தின் ஆட்சியை தஜ்ஜாலின் கையில் கொடுத்தல்.

அதாவது ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட லுசிபெரியனிசத்தை மீண்டும் வெற்றி கொள்ளச் செய்தல்.

செயல் திட்டம்- மறைக்கப்பட்டுள்ள இதைத்தான் விரிவாகப் பேச உள்ளோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.