26/11/2017

ஓடும் பஸ்சில் வாலிபரை கொலை செய்த பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்...


டில்லி லஜ்பத் நகரில், 20 வயது வாலிபர், நேற்று பஸ்சில் பயணம் செய்தார். ஒரு பஸ் நிறுத்தத்தில், 13 - 16 வயதுடைய ஆறு சிறுவர்கள், பள்ளி சீருடையில், அந்த பஸ்சில் ஏறினர். சிறிது நேரத்தில், தன் மொபைல் போன் காணாமல் போனதை அறிந்த வாலிபர், பள்ளி சிறுவர்களை சந்தேகித்து, அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது, சிறுவர்களில் ஒருவன், வாலிபரின் கழுத்தில் கத்தியால் கிழித்து விட்டு, பஸ்சிலிருந்து குதித்து தப்பியோடினான். அவனுடன் வந்த மற்ற சிறுவர்களும் தப்பினர். படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 4 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.