30/09/2018

10-ம் வகுப்பு மாணவனுடன் காதல், உல்லாசம் புரிந்த 40 வயது டீச்சர்...


கேரளாவைச் சேர்ந்த 40 வயது ஆசிரியை தன்னிடம் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் காதல் கொண்டு சென்னைக்கு வந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த அவர்களை கேரளா போலீசார் அழைத்து சென்றனர்...

ஆலப்புழா மாவட்டத்தில்  டெரானா தம்பி என்பவர் அதே பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியயையாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும  15 வயது மாணவனுடன் முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளார்.
பள்ளி ஆசிரியை யாருக்கும் தெரியாமல்
மாணவனுடன் கடந்த 23-ஆம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள சென்னை பார்க் லாட்ஜில் வந்து தங்கி உள்ளார். இதனிடையே  சிறுவனை காணவில்லை என அவர்களது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கேரள போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.


ஆசிரியை மாணவனுடன் சூளைமேட்டில் தங்கியிருப்பதாக செல்போன் சிக்னல் காண்பித்துள்ளது. இதையடுத்து சென்னை வந்த கேரள போலீசார் சூளைமேடு போலீசாரின் உதவியோடு தேடினர். கேரள போலீசார் களைப்பாக இருந்ததால் அந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஒய்வெடுக்க சென்றுள்ளனர். அப்போது கேரள போலீசார் இருவரது படத்தையும் காண்பித்து விடுதியில் விசாரிக்க, இருவரும் தாய் - மகன் எனக் கூறி விடுதியில் கடந்த 4 நாட்களாக தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆசிரியை, மாணவனையும் மீட்டு கேரளாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பள்ளி ஆசிரியைக்கு 40 வயது என்றும் அவர், கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார எனவும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.