20/11/2017

கொலை செய்து விடுவதாக மிரட்டிய மணல் கொள்ளையன் மீது காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார்...


வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பட்டு  கிராமத்தில் மணல் கொள்ளையர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதனால் கிராமமே அழியும் சூழ்நிலையில் உள்ளதாகவும் அதன் காரணமாக மணல் கொள்ளையர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்களை லாரி ஏற்றி கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாண்டியன் மீது குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் பட்டு கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் புகார்.

மணல் கொள்ளையர்களின் அட்டகாசத்தாலும்,  அதிகாரிகளின் அலட்சியத்தாலும் குடியாத்தம் பாலாற்றங்கறை ஓரம் அமைந்திருக்கும் பட்டு கிராமமே காணாமல் போகும் அளவிற்கு  மணல் கொள்ளை நடந்து வருவதாகவும் இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து வருகின்றனர்.

வருவாய்துறையில் புகார் செய்தால் மணல் கொள்ளையில் ஈடுபடும் சமுக விரோதிகள் புகார் செய்தவர்களின் வீடு தேடி வந்து மணல் அள்ளும் லாரியில் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நடந்துவிட்டது என கூறி அபராதம் கட்டிவிட்டு தப்பிசென்று விடுவேன் என முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் பாண்டியன் பகிரங்கமாக மிரட்டுவதாகவும் இதனால் பாதுகாப்பு நலன் கருதியும் கொலை மிரட்டல் விடுத்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கவும் இன்று அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 20, க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்  புகாரை பெற்ற கிராமிய காவல் ஆய்வாளர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.