20/11/2017

அரசு பள்ளி வளாகத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்...


குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி பகுதியில் அரசு மேல்நிலைபள்ளியின் வளாகத்தை ஆக்கிரமித்து பல கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என 30, க்கும் மேற்ப்பட்ட ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு அதனை அகற்ற முன் வராமல் இருந்தனர் இது குறித்து பள்ளி நிர்வாகம் பல முறை மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பியதன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற வாரம் வந்திருந்த ஆட்சியர் அப்பகுதியை ஆய்வு செய்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மை செய்ய உத்திரவிட்டதன் அடிப்படையில் இன்று வேலூர் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் ஜே.சி.பி.இயந்திரத்தின் மூலம் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சம்பவ இடத்திள் அசம்பாவிதம் ஏற்படாதவாறு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.