23/11/2018

சௌமியாவின் அண்ணன் முனீஸ்வரன் அவர்கள் தொலை பேசியில் பேசியதாவது காவல்துறையின் தொடர் அட்டூழியம் பழங்குடி மாணவி சௌமியாவின் வீட்டில்...


தாய், தந்தை, அண்ணன், அண்ணி போன்றவர்களுக்கு தற்பொழுது  கடுமையான நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறது.. அத்துமீறி அவர்கள் வைத்திருக்க்கும் ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டிருக்கிறது..

சற்று முன்பு சௌமியா வின் அண்ணன் தொலை பேசியில் பேசியதாவது...

தங்கை இறப்பிற்க்காக போடப்பட்ட தொகை எவ்வளவு, யார் கணக்கில் போடப்பட்டுள்ளது, என்று மிரட்டி எங்களிடம் இருந்த பாஸ் புக்கை  பறிமுதல் செய்ததோடு மட்டும் அல்லாமல்...

நான் இங்கு நடக்கும் தொடர்ச்சியான ஆதாரங்கள் சேகரித்து உங்களை போன்றவர்களுக்கு அனுப்புவதால் என்னுடைய ஸ்மார்ட் போன்னை பறிமுதல் செய்து கொண்டு விட்டனர்....

காவல் துறை அத்து மீறி வீடு புகுந்து  தொடர்ச்சியான மன உளைச்சலை கொடுத்து வருவதாக  சௌமியாவின் அண்ணன் தனது வருத்தத்தை பதிவு சேர்த்துள்ளார்....

பழங்குடிகள் மீது தொடர்ந்து ஏவப்படும் அரசின் அடக்குமுறையை பெண்கள் கூட்டமைப்பு -தமிழ்நாடு சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.