01/10/2020

இசையும் தமிழில் இசைந்தது...

 


சங்கீதம், கர்நாடக சங்கீதம் இப்படி எதை நாம் பயில முற்பட்டாலும் அதன் பயணம் தியாகராயர், முத்துசாமி தீக்ஷிதர், ஷாமா சாஸ்திரிகள் போன்றோரின் தெலுங்கு கீர்த்தனைகளில் தான் இருக்கும்...

ஆனால் 19ஆம் நூற்றாண்டில் கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி கெ சி, ராஜாஜி ராஜா சார் முத்தையா செட்டியார் போன்றோர் கொண்ட முயற்சிகள் இன்றளவும் வெற்றி பெறவில்லை என்பதை காட்டும் வகையில் மரபு இசை மேடைகள் அங்கிகாரம் கொடுக்கப்படவில்லை..

ஆனால் இன்றைய தலைமுறைகள் இந்த நிலையை மாற்றி அமைக்கிறது..

தமிழ் பாடல்கள் ராகங்களின் அடிப்படையில் மரபு மேடை ஏறுகிறது.

மிகவும் குறைவான முந்தைய தலைமுறையினர் மட்டுமே இந்த கோட்பாடு கொண்டு இன்றும் உள்ளனர்.

இசை என்பது மொழி மரபு போன்றவற்றை கடந்தது. நாம் உணர்ந்து ரசிக்கவல்ல தாய்மொழியில் பாடல்கள் தோன்றினால் தத்தம் மொழியினருக்கு ஒரு இன்பம் தோன்றும்.

இசையில் பாகுபாடு ராகங்களால் இருக்கலாம் மொழியால் கூடாது என்பதை தற்போதைய தலைமுறை விதைத்து வருகிறது..

இசையில் இசைவோம் உணர்ந்து இசைவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.