01/10/2020

இசைப்பாடும் தும்பி...

 


கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப் 

பொங்கர் வண்டினம் நல்யாழ் செய்ய 

வரிக்குயில் பாட மாமயில் ஆடும் 

விரைப் பூம்பந்தர்..

இப்பாடலடிகள் ஐம்பெருங்காப்பியமான மணிமேகலை எனும் நூலில் உள்ளன. வண்டினுள் உயர்ந்த சாதியாகிய தும்பி என்னும் வண்டு குழலூத, வண்டினம் யாழ் இசைக்க, குயில் பாடலைப் பாட, மயில் ஆடுகின்ற சோலை என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வடிகள் சோலைக் காட்சியைச் சித்தரிப்பனவாகும். ஆனால், குறிப்பாக இசை தோன்றிய வகையையும், இசைக்கருவி தோன்றிய முறையினையும் உணர்த்துகின்றன. குயிலின் இனிய குரலைக்கேட்டு மனிதன் இசை இசைக்கத் தொடங்கினான் என்ற கருத்தை, “குயில் பாட” என்பது தெளிய வைக்கின்றது. ஆதியில் குயில் பாடியதைக் கேட்டு மனிதன் பாடினான். அதனையே மரபாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஈண்டு இவ்வாறு கூறியுள்ளார் என்பது விளங்கும்.

மலையிடை நின்ற மூங்கிலில் வண்டுகள் துளைத்தத் துளைகளினின்று வெளிப்பட்ட இனிய ஓசையைக் கேட்டே, மனிதன் துளைக்கருவியாகிய குழல் தயாரித்தான் என்ற உண்மையை உணர்த்தும் வகையில் சாத்தனார் இவ்வாறு கூறினார் என்பது தெளிவாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.