24/10/2018

நடிகர் தியாகராஜன் மீது பெண் புகைப்பட கலைஞர் பாலியல் புகார்.. அதிகரிக்கும் MeToo எண்ணிக்கை...


மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான பொன்னர் - சங்கர் திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்தார்.
அவரது தந்தையும், நடிகருமான தியாகராஜன் அந்த திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு இயக்குனர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் தனது சமுக வலைத்தளத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

'பொன்னர் சங்கர்' படத்தில் தான் போட்டோகிராபராக பணிபுரிந்ததாக கூறும் பிரித்திகா மேனன் என்ற அந்த இளம்பெண் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 'மீடூ' ஹேஷ்டேக்கில் பதிவு செய்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் அழகிய பெண்கள் தனக்கு மசாஜ் செய்ததாக கூறி அதன் புகைப்படங்களை தன்னிடம் அவர் காட்டியதாகவும், அந்த பெண்களுடன் தான் உல்லாசமாக இருந்ததாக அவர் தன்னிடம் கூறியதாகவும்பிரித்திகா மேனன் தெரிவித்துள்ளார். அவர் அப்படி சொல்லும்போது  தனக்கு உடம்பெல்லாம் கூசியதாகவும் கூறியிள்ளார்.

மேலும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து நள்ளிரவில் வந்து கதவை தட்டியதாகவும் இதனால் தான் இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் இருந்ததாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.