08/04/2018

கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை வியாபாரிகள் திடீர் போராட்டம்...


சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு கறிவேப்பிலை வியாபாரிகள் இன்று காலை போராட்டம் நடத்தினர்.

200க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை வியாபாரம் செய்யவதற்கென 52 கடைகள் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும், இதனால் மீதமுள்ளவர்கள் சந்தை அருகே சாலையோரங்களில் வியாபாரம் செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தங்களுக்கு கூடுதல் கடைகள் ஒதுக்கித்தர வேண்டும் அல்லது சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.