09/04/2018

நாசக்கார ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக தூத்துக்குடியில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது...


தற்போது  தமிழ் நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள தமிழர்கள் பல்வேறு மக்களும் ஸ்டெர்லைட் க்கு எதிராக போராட ஆரம்பித்தது விட்டார்கள் இதனால் ஸ்டெர்லைட் சாம்ராஜ்யம் சற்றே ஆட்டம் கண்டு இருக்கிறது..

இதிலிருந்து மக்களை திசை திருப்ப பல்வேறு விளம்பரங்கள், கைது நடவடிக்கைகள் எல்லாம் செய்தும் மக்கள் போராட்டம் குறைந்த பாடில்லை நாலுக்கு நாள் வலுவாகி கொண்டே போகிறது.

இவ்வாறு நீடித்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய உத்தரவு வந்துவிடும் என்ற காரணத்தினால், மக்களை ஒட்டுமொத்தமாக திசை திருப்ப புது முயற்சியே இந்த செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு உருவாக்கிறார்கள்..

3 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் தற்போது எந்த வித காரணமும் இல்லாமல் 8 நாட்களுக்கு மேலாக தண்ணீர் விநியோகம் செய்ய படவில்லை.

கோடை காலத்தின் ஆரம்பத்தில் இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட எவ்வித வாய்ப்பும் இல்லாத நேரத்தில், இப்படி ஒரு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடு செய்து மக்களை திசை திருப்பி ஸ்டெர்லைட் போராட்டத்தை மூழ்கடிக்க துடிக்கிறது.

நம் போராட்டம் சரியான முறையில் செல்கிறது இதனால் கலங்கிய ஸ்டெர்லைடின் பயமே நமது வெற்றி. அதனால் எந்த வித திசைமாற்றமும் இல்லாமல் நமது போராட்டத்தை வெற்றி பெற செய்து நாசக்கார ஸ்டெர்லைடை ஒழிப்போம்..

 நாம் ஒன்றிணைந்தால் எதுவும் சாத்தியமே..

இப்படிக்கு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.