12/01/2019

தலைக்கு டை அடித்து கொண்டு மாறுவேடத்தில் சபரி மலைக்கு சென்ற இளம்பெண்.. வீடியோ வெளியிட்டு பரபரப்பு...


கடந்த ஜனவரி 4-ம் தேதி அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். 

இந்தநிலையில் மஞ்சு என்ற இளம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சு கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர். வயது 36 ஆகிறது. இவர் அய்யப்பன் கோயிலில் 18 படி ஏறி தரிசனம் செய்ததாக அம்மாநிலத்தின் ஒரு தனியார் டிவிக்கு பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளார்.

சாமி தரிசனம் செய்தபோது எடுத்த ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
வெள்ளை கலர் டை வெள்ளை கலர் டை அந்த வீடியோவில் மஞ்சு வயதானவர் போல காணப்படுகிறார்.

தலைமுடிக்கு வெள்ளை கலர் டை அடித்து, மாறு வேடம் அணிந்து, வயசான தோற்றத்துடன் சாமி கும்பிட்டு வந்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மஞ்சு பேசும்போது சொன்னதாவது: மஞ்சு செய்த காரியம் மஞ்சு செய்த காரியம் "கடந்த 8-ம் தேதி சபரிலைக்கு சென்றேன். வயதான தோற்றத்துடன், கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கும் மேலாக அங்கு இருந்தேன். கோயிலுக்குள் செல்ல போலீசாரின் அனுமதி எதையும் பெறவில்லை.

போலீசாரின் பாதுகாப்பின்றி, பக்தர்களின் எதிர்ப்பில்லாமல் 18-ம் படி வழியாக சென்று தரிசனம் செய்து திரும்பினேன். எனக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார். மகர விளக்குக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மஞ்சு செய்த காரியம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.