27/04/2019

தமிழர்கள் திராவிடர்களால் வஞ்சிக்கப்பட்ட வரலாறு - 2...



ஆந்திரா..

ஆந்திரா பிரிக்கப்படும் போது வடக்கே பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர்,சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையி ல் இருந்தனர் .ஆனால் நிலத்தின் உரிமையாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். ஆனால் நடுவண் அரசு அப்போது அமைத்த படாஸ்கர் குழு, நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல வாழும் மக்களின் மொழி தான் முக்கிய கூறு என்று கூறி , தமிழர் பகுதிகள் அனைத்தையும் ஆந்திராவுடன் இணைக்க உத்திரவிட்டனர். அன்று ஆளுமையிலும் அதிகாரத்திலும் நடுவண் அரசில் வீற்றிருந்த திராவிட தலைவர்கள் இதற்கு உடந்தையாக இருந்து செயல் பட்டனர்.அப்பொழுது கூட நீதிக் கட்சியில் இருந்த தெலுங்கு தலைவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை. இங்குள்ள தமிழர்களின் தலைவர்களாக இருந்த திராவிட தலைவர்களும் அமைதியாக இருந்து விட்டனர்.

ஆந்திரா வின் ராயல் சீமா மாவட்டமே தமிழர்களின் நிலப்பகுதிதான். மொழிவாரி மாநிலம் பிரிவினையின் போது அது ஆந்திராவிற்கு போனது. சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டத்திற்குள் உள்ளடங்கிய , திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வட பெண்ணை ஆறு, பொன்வானி ஆறு, இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆதிராவோடு போயின. நந்தி மலை இருந்திருதால் பாலாற்று சிக்கல் தமிழர் நாட்டிற்கு வந்திருக்காது .

வடபகுதியில் மங்கலக்கிழார் , மா போ சிவஞானம் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாக போராடினர் .ராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார் .அதனால் திருத்தணி வள்ளிமலை திருவாலங்காடு போன்ற சில பகுதிகள் மட்டுமே தமிழர்கள் போராட்டத்தால் திரும்ப கிடைத்தன.நீதிக் கட்சியில் தமிழர்களின் தலைவர்களாக இருந்த தெலுங்கு தலைவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை .

1--4-1960 வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி 32,000 சதுர கிலோ மீட்டர் தமிழர் நிலப்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது .சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 525 கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது . இன்று தமிழர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் தெலுங்கர்கள் அன்று தமிழர்களுக்காக போராடவில்லை. தெலுங்கு தலைவர்கள் தமிழர் என்ற போர்வையில் கூட இருந்தே குழி பறித்தனர் .

கர்நாடகா...

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால் குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந் தமிழில் குடக்கு என்றால் மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. விடுதலை அடையும் முன்பு வரை கூர்க் மக்களும், கன்னடர்களும் பரம எதிரிகளா கவே இருந்தனர் . மொழி வாரி மாநிலம் பிரிக்கப்படும் போது பண்பாடு, கலாசாரம் அடிப்படையில் கலந்து இருக்கும், தமிழர் நாட்டோடு இணைய விரும்புகிறோம் என்று கூறி ஆய்தம் ஏந்தி கூட போராடினர்.

அப்பொழுது இங்குள்ள தமிழக அரசியல வாதிகள் சிறிது தலை அசைதிருந்தாலும் குடகு நம்மோடு இணைத்திருக்கும். அப்படி இணைத்திருந்தால் காவேரி தமிழர் நாட்டிலேயே உருவாகி, தமிழர் நாட்டிலேயே கடலில் கலந்திருக்கும் நமக்கு காவேரி சிக்கலே வந்திருக்காது .

கன்னடர்கள் திட்டமிட்டு போராடியதால் பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்க வயல் பகுதிகள் பறி போயின. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டுமானால் மொழி தொடர்பும் நிலத் தொடர்பும் இருக்கவேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 விழுக்காடும் ,கன்னடம் பேசுவோர் 35 விழுக்காடும் இருந்தனர்.ஓசூர் வறண்ட பூமி என்பதால் ஆந்திரா தங்களுக்கு வேண்டாம் என்று கூறியது ,அதனால் ஓசூர் கர்நாடகா வோடு இணைந்திருக்க வேண்டும் .ஆனால் கர்நாடகா திட்டமிட்டு அதை தனக்கு வேண்டாம் என்று கூறி தமிழர் நாட்டோடு இணைத்து விட்டது.

பெங்களூரு யாருடன் இணைவது என்ற சிக்கல் வரும் போது, அங்கு தமிழர்களே அதிக அளவில் இருந்தனர் . ஓசூரில் கன்னடர்கள் அதிகம் இருந்தாலும் அதை நாங்களே தமிழர் நாட்டோடு இணைத்து விட்டோம். அதனால் பெங்களூருவில் தமிழ் பேசக்கொடிய மக்கள் அதிகம் இருந்தாலும், பெங்களூருவை கர்நாடகத்தோடு இணைத்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தது .

அன்று இங்கிருந்த அரசியல் தலைவர்கள் திராவிடராக இருந்ததாலும், திராவிட ஆதரவு மக்களிடையே வேரூன்றி இருந்ததாலும், தமிழர் தலைவர்களிடையே மண் சார்ந்த உணர்வு இல்லாத வாய் சவடால் அரசியல் வாதிகளாக இருந்ததாலும் , அவர்களுக்கு இருந்த இந்திய உணர்வும் ,திராவிட உணர்வும் எந்த வித எதிர்ப்பு தெரிவிக்காததற்கு முக்கிய காரணமாக இருந்தன .

இன்றைய தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,609 சதுர கிலோ மீட்டர்கள்.தமிழகம் அண்டை மாநிலங்களுடன் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70 ,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.அவையும் நம்மோடு இருந்திருந்தால், தமிழகம் கர்நாடகாவை விட இன்னும் பெரிய மாநிலமாகவும், ஆந்திராவை விட சற்று சிறிய மாநிலமாகவும் இருந்திருக்கும் .ஆனால் நீர் ஆதாரத்தில் தென் இந்தியாவிலேயே வளமான மாநிலமாக இருந்திருக்கும் . தமிழகம் இழந்த நிலப்பரப்பு இப்போதுள்ள நிலப்பரப்பில் முக்கால் பங்கு ஆகும் .

திராவிடம் திராவிடம் என்று கூறும் தமிழர்களே திராவிட மக்களே...

தமிழகத்தில் வாழும் திராவிட மக்களே, அன்று தமிழர் நாட்டில் வாழ்கிறோம் என்ற நன்றி உணர்வு சிறிதளவு இருந்திருந்தால் கூட எங்களது நிலம், எங்களது மண் சார்ந்த பூர்வீக நிலம் எங்களோடு இணைந்திருக்க நீங்கள் போராடி இருக்க வேண்டும்.

எங்களிடம் திராவிடம் என்று கூறி, திராவிட மாயையில், திராவிட போதையில் தமிழர்களை சிக்க வைத்து, எங்கள் மண்ணை அபகரித்தது போதாது என்று, இன்று ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி, தமிழர் நாட்டு தமிழர்களை பிசைகாரர்களாக்கி, அடிமையாகியக்கியது மட்டுமல்லாமல் எங்கள் தமிழீழ நாட்டையும், மக்களையும் அழித்து சுடுகாடாக்கி விட்டீர்கள் .

நாங்களும் தமிழர்கள் தான் என்று கூறி, நாள்தோறும் இங்கு வந்து கொண்டிருக்கும் திராவிடர்களால், எஞ்சி இருக்கும் தமிழர் நாட்டு நிலமும் ஆக்கிரமிக்கப்படுகிறது . இது போதாதென்று இந்தியர்கள் என்று கூறி கொண்டு வட இந்தியர்களால் தமிழர் நிலம் பறி போகிறது .

தமிழர்களே இனியும் நீ விழித்து கொள்ளது போனால், உன் உரிமைக்காக போராடாது போனால், நாளை இந்தியாவில் உள்ள அணைத்து இனத்தவர்க்கும் தனியே அவர்கள் இனத்திற்கென்று நாடு இருக்கும். ஆனால் தமிழனுக்கு மட்டும் நாடு இருக்காது .

இப்போதுள்ள தமிழர் நாடு ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு, இங்கு வாழும் மலையாளி, கன்னடன், தெலுங்கன் ,வட இந்தியன் என்று ஐந்து துண்டுகளாக துண்டாட பட்டு . அதில் ஒரு துண்டே தமிழ் நாடாக இருக்கும். உலகம் முழுவதும் பரந்து வாழும் தேசிய இனமான உனக்கு உள்ளங்கை அளவு கூட நாடு இல்லாமல் ஏதிலியாக இப் பூமி பந்தில் இருப்பாய் என்பதை மறவாதே .

இன் நிலை வராமல் இருக்க "தமிழர் நாடு தமிழருக்கே " தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்ற முழக்கம் தமிழர்கள் இடத்தில எழுப்புவதோடு மட்டுமல்லாமல் , திராவிட கட்சிகளிடம் உள்ள ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழர் நாட்டை தமிழரே ஆள் வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.