29/06/2018

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் விஷம் அருந்திய பெண்ணுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை காவலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்...


அந்த பெண்ணுக்கு காவலாளி ட்ரிப்ஸ் ஏற்ற உதவும் வீடியோ காட்சிகள் வெளியாகின. அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய செவிலியர்கள் பணியில் இருந்த போதும், அறையில் அவர்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருந்ததாக கூறப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து,  மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் யாஸ்மின் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், காவலாளி இளங்கோ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 4 செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப் பட்டிருப்பதாகவும் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் யாஸ்மின் கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.