09/02/2019

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவிகிதம் வாய்ப்பு : சீமான் அறிவிப்பு...


எதிர் வரும் மக்களவை தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் சீட் ஒதுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்த அவர், பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி.

20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்த உள்ளோம்.

நாங்கள் மட்டும் தான் பெண்களுக்கு ஐம்பது சதவிதம் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்கிறோம் என அவர் தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.