06/08/2018

வேம்பு கற்பம் (சன்மார்க்க காயகற்பம்)...


புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
ஆமாப்ப பட்டையைத்தான் வெட்டிவந்து
அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
கொண்டிடவே யனுபான வகையைக்கேளு
மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே"

-நந்தீசர் சகலகலை ஞானம் -1000

நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார்.

தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை  தேடி அதன் பட்டையை வெட்டி வந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும்.

இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு , கொத்தமல்லி இலையை இடித்த சாறு இரண்டும் சமமாகக் கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும் இதை வெயிலில் வைத்து காயவிடவும்.

இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக் கலந்து வெயிலில் காயவிடவும்.

இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று பெயர் இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர்.

இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு ஸ்பூன் அளவு) எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை- மாலை) என நாற்பது நாள் உண்ணவும். 

இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும் தசைகள் இறுகும் தலைமுடி நரை மாறும் பார்வைதிறன் அதிகரிக்கும் உடல் இளவயது தோற்றம் பெரும் மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்துதிடப்படும் உடல் உறவில் அதிக நேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்பவர்கள் சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபட்டு சாகாக்கல்வி பயிற்சி யில்  இருப்பவர்களுக்கு பேரின்பகிட்டும்  ஞானத்தின் ஆறுநிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த வேம்பு கற்பம் மண்டல கணக்காக உண்டவனை கண்டு  காலன் என்ற எமன் அஞ்சுவான் என்று நந்தீஸ்வரர் கூறுகிறார்.

புண்ணியம் செய்தவர்கள் கேட்டு பயன் பெறுவார்கள்  தயார் செய்து சாப்பிடுவார்கள் மற்றவர்களுக்கும் கூறுவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.