10/12/2018

16 லட்சம் பணத்தை சாப்பிட்ட ஏப்பம் விட்ட ஆடு.. கோபத்தில் சமைத்து சாப்பிட்டு பழிதீர்த்த குடும்பம்...


செர்பியாவின் அரன்ஜெலோவாக்  அருகே உள்ள ரனிலோ விக்  என்ற கிராமத்தை சேர்ந்த சிவிக் இன குடும்பம் விவசாயம் செய்து வசித்து வருகிறது.

இந்த விவசாய குடும்பத்தினர் புதியதாக 10 ஏக்கர் நிலம் வாங்க ரூ 16 லட்சம் மதிப்பிலான பணத்தை வைத்திருந்தனர். நிலம் வாங்க வைத்திருந்த பணத்தை மேஜை மீது வைத்து விட்டு கதவை மூடாமல் தோட்டத்திற்கு சென்று விட்டனர்.

இந்த சூழலில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு, வீட்டிற்குள் புகுந்த மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பணத்தை சாப்பிட்டு பசியை தீர்த்து கொண்டது.

திரும்பி வந்து  பார்த்த போது பணத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தது சிமிக் குடும்பம். பின்னர் வெளியில் வந்து பார்த்த போது ஆட்டின் வாயில் பணத்தின் துகள்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆடு மொத்த பணத்தையும் தின்று விட்டதே என்ற ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அந்த ஆட்டை கொன்று சமைத்து சாப்பிட்டு கோபத்தை தீர்த்து கொண்டது சிமிக் குடும்பம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.