02/04/2019

மன்னா ( Manna) வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


'மன்னா'(Manna) என அழைக்கப்படுவது. விண்ணிலிருந்து பொழிந்த ஒரு மர்மமான உணவுப்பொருளாகும், இது கடவுளால் அனுப்பப்பட்டு, யாத்திராகமத்தின் கடைசி நாற்பது வருட காலப்பகுதியில் பாலைவனப் பயணத்தின் போது இஸ்ரவேலருக்கு உணவாக கொடுக்கப்பட்டது.

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, ​​அவர்கள் அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் சினாய் பாலைவனத்தை கடக்க வேண்டியிருந்தது. நிறைய இஸ்ரவேலர்கள் வேறு இருந்தனர், இந்த கட்டத்தில், மக்கள் பட்டினியால் மடிவதை தடுப்பதற்காக,அவர்களின் கடவுள் மன்னாவை பரலோகத்திலிருந்து பூமியில் அனுப்பினார். சனிக்கிழமை தவிர, ஒவ்வொரு நாளும் உணவை வழங்கினார் என்று கூறப்படுகிறது.

யாத்திராகமத்தின் விவிலியத்தில் கூறப்படுகிறது: ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் பனி தோன்றி மறைந்து, சூரியன் உஷ்ணத்தில் உறிஞ்சுவதற்கு முன்பு அதை சேகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.  மேலும் அது தேனோடு தயாரிக்கப்பட்ட பாசியை போல் இருக்குமாம். இது கடவுள் அனுப்பிய ஒரு உணவு இருந்தாலும்  அது என்னவென்று சரியாக தெரியவில்லை.

ஆனால் சதி கோட்பாட்டாளர்கள்: இந்த மர்மமான உணவு ஆதாரத்தைப் பற்றியும் அந்த கடவுளை பற்றியும் யுதர்களின் புனித நூல்களான #சோஹார் #தோரா மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட #மாய_கஸ்பலா ஆகியவற்றில் விளக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த நூல்களில் அந்த உணவை வழங்கிய கடவுளை வர்ணிக்கும் போது பல்வேறு அளவிலான மூளை, வெவ்வேறு அளவிலான முகங்கள் மற்றும் ஒளி ஆதாரங்களுடன் இணைந்த வெவ்வேறு அளவிலான உடல் உறுப்புகள் என்றே விவரிக்கிறது.

இது கடவுள் பற்றிய ஒரு விளக்கமாக இருக்கிறது என்று போதித்த போதிலும்கூட, பண்டைய தத்துவவாதிகள், நவீன கண்ணோட்டத்தில், இது ஒரு கடவுள் உருவம் அல்ல, மாறாக இது ஒரு வகை இயந்திரம் என்று வாதிடுகின்றனர்: இவற்றில் மன்னா உணவு ஒரு கடவுளிடமிருந்து வந்த உணவு என்பதை விட, அது ஒரு இயந்திரம் உருவாக்கம் என்றே கூறுகின்றனர்.

மேலும் இந்த இயந்திரம் இஸ்ரேலியர்கள் எங்கிருந்து வந்ததது என்பதற்கான  விளக்கங்களை சதி ஆலோசனை குழு அளிக்கின்றன. எகிப்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அதை அவர்களிடமிருந்து யூதர்கள் திருடிவிட்டதாக கூறப்படுகிறது. சரி இந்த இயந்திரம் எகிப்தியர்களுக்கு எப்படி கிடைத்தது.

முதலாவதாக நாம் அறிய வேண்டியது, #அக்னேடென் Akhenaten (ஆக்கியநாதன்) எகிப்திய பாரவோன்களிலே வித்தியாசமானவராக இருந்தார். நீண்ட மெல்லிய கழுத்து, நெற்றிக்கண், மற்றும் நீளமான மண்டை ஓடுகள் என்று. அவரது உடலின் ஒட்டுமொத்த விசித்திரமான வடிவம், அவர் நம்மிலிருந்து அன்னிய தோற்றத்தை இருப்பதையும். அவர் ஒரு வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

மேலும் "அக்னனேடன்" என்ற பெயர், "ஆவி உலக வாழ்க்கை" அதாவது  "வேற்றுலக வாழ்க்கை" என்று எகிப்திய மொழியில் பொருள்படுகிறது. மேலும் சூரியனை போன்ற வட்டவடிவ ஒளி பிழம்பு ஒன்றை வணங்குவார். அது விண்ணில் தென்படும் மறைந்து விடும் என்றும், ஒருவேளை இந்த "வட்ட வடிவம்" ஒரு யுஎஃப்ஒ என்றும்,
அதனுள் உள்ள ஒரு பொருளின் ஆற்றலே அந்த ஒளிப் பிழம்பு என்றும் கூறப்படுகிறது. அது சூரியன் என்று எதிர் வாதம் செய்தாலும் அகேனெட்டன் அதைக் பூமிக்கு கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.!

அதாவது அவர் ஒரு விண்கலம் வைத்திருந்ததாகவும், மக்களின் கண்ணிலிருந்து மறையக்கூடிய அந்த விண்கலத்தினுள் உள்ள ஒஒரு பேழை இருந்ததாகவும், அதன் மூலம் பாலைவனத்தில் மழை பொழியச் செய்ததாகவும், செங்கடலையும் பிரித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த விண்கலம், ஒரு நகரும் மேகம் என்றே பைபிளில் விவரிக்கப்படுகிறது. பின்னர் இந்த மன்னா உணவும் அந்த பேழையின் ஆற்றலின் மூலம் வெளியிடப்பட்டது என்றும். அந்த இயந்திரத்தையே இஸ்ரேலியர்கள் அபகரித்து சென்றதாக Deadsea scroll இல் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் மன்னா உணப்பொருள்: உடன்படிக்கை பேழையில் உண்டாகும் ஒருவித அணுக்கரு ஆற்றலை மையமாகக் கொண்டு காற்றிலுள்ள ஈரப்பதத்தை, ஒருவித உண்ணத்தகுந்த பாசிகளாக மாற்றியதாக கூறப்படுகிறது. யூதர்கள் இஸ்ரவேலை அடைந்தபோது, ​​மன்னா இயந்திரம் உணவை வழங்குவதற்கு இனி தேவைப்படாது என்று உணர்ந்து, சாலமன் ஆலயத்தில் உள்ள பேழையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது..

பின்னர் ஆலயமானது பாபிலோனிய படையெடுப்பில் அழிக்கப்பட்டு பிறகு
பேழையானது எகிப்து கிசா பிரமிடில் தஞ்சமடைந்நிருக்கலாம்.! இதை கூற காரணம் முன்னர் ஒரு பதிவில் கிசா பிரமிடில் வெப்பம் அலை சிக்னல்கள் விண்ணிற்க்கு செல்வதை பார்த்தோம். பேழையின் ஆற்றல் மூலமே இது சாத்தியம். எனவே இது ஒருவேளை தங்கள் எஜமானர்களுக்கு இந்த கிரகத்தினை பற்றிய தகவல்களை அனுப்பும் இயந்திரமாகவே தோன்றுகிறது.

காரணம் இந்த பேழையின் பிரதிபலிப்பினாது. மனித இனத்தின் வளர்ச்சியடைந்து நாகரீகங்கள் முதல், பழங்குடியினர் வரை அனைவரிடமும் காணப்படுகிறது.

வேற்றுக்கிரகதின் ஒரு இனம். பேழையின் மூலம் நம்மை வழிநடத்துகிறார்களா? அல்லது நமது கிரகத்தை எடுத்துக் கொள்வதற்க்கா காத்துக் கொண்டிருக்கிறார்களா!? காலம்தான் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.