02/04/2019

துளசி...


எந்த வீட்டில் காலையிலும் , மாலையிலும் " துளசிதேவி யை" வணங்கி வருகிறார்களோ , அங்கு " யமதேவன் " நுழைய முடியாது, கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.

நாள்தோறும்  " தீபமேற்றி " பூஜிப்பவர்களுக்கு 100 க்கணக்கான யாகம் செய்ததின் பலனை அடைவர்.

துளசியின் காற்று பட்டாலும்,, துளசியை வலம் வந்து வணங்கி னாலும் எல்லா பாபங்களும் நீங்கும்.

தொடுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும்.

பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர்.

பகவானது தாமரைப் பாதங்களில் சந்தனம் கலந்து துளசி இலையை ஒட்டுபவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனை பெறுவர்.

துவாதசி தினத்தில் பகவான் துளசியுடன் வசிக்கிறார்.

துளசி இலைகளை பெளர்ணமி, அமாவாசை , துவாதசி", சூர்ய சங்க்ராந்தி , உச்சி மதியம் , இரவு,vசந்த்யா வேளைகளில் பறிக்கக் கூடாது.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹங்கள் மதிக்கப்படுகின்றன. ஆனால் பிரதிஷ்டை ஆகாமலேயே மதிக்கப்பட வேண்டியவர்கள் ஶ்ரீமத்பாகவதம் , துளசி சாளக்ராம் கங்கை , வைஷ்ணவர்கள் ஆவார்கள் ஆவார்கள்.இவர்கள் நால்வரும் " ப்ரகாஷ்க் மூர்த்தீகள் " என அழைக்கப்படுவர்.

துளசி ஜெயந்தி " கார்த்திகை பெளர்ணமி " ஆகும்.

துளசியின் பிற பெயர்கள் − ப்ருந்தா , ப்ருந்தாவனி , விஸ்வபூஜிதா , விஸ்வ பவானி , புஷ்பஸரா நந்தினி , க்ருஷ்ண ஜீவானி , ஹரிப்ரியா , கேசப்ரியா , ஸுலபா, வைஷ்ணவி , ஸ்யாமா , ராமா, கெளரி , பஹுமஞ்சரி , அம்ருதா, தமிழில் " திருத்துழாய் ".

பாற்கடலில் தன்வந்த்ரி பகவான் அம்ருதம் கொண்டு வருகையில் அதில் துளசி தளமும் இருந்தது என ப்ரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.