08/12/2018

ரூ. 25 ஆயிரம் லஞ்சம் நாங்குநேரி தாசில்தார் கைது...


திருநெல்வேலி:சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, நாங்குநேரி தாசில்தார் கைது செய்யப்பட்டான்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அடுத்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பால்துரை. மினி பஸ் இயக்கி வருகிறார். இவரது பெயரில் உள்ள மினி பஸ் உரிமத்தை, மனைவி பெயருக்கு மாற்றம் செய்வதற்காக, இரண்டு மாதங்களுக்கு முன், சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு, நாங்குநேரி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.தாசில்தார் வர்கீஸ், 54, சான்றிதழ் தர, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளான்.

திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீசில், பால்துரை புகார் செய்தார். நேற்று மாலை, தாசில்தார் அலுவலகத்தில், வர்கீசிடம், 25 ஆயிரம் ரூபாயை பால்துரை வழங்கினார்.மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி., ஹெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார், வர்கீசை கைது செய்தனர். நாகர்கோவிலில் உள்ள வர்கீஸ் வீட்டிலும், போலீசார் சோதனை மேற்கொண்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.