07/09/2018

அபிராமியை போலவே 7 மாத குழந்தையை கொன்ற பெண்.. காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்...


சென்னையை சேர்ந்த அபிராமி என்பவர் கள்ளக்காதலுக்காக தனது 2 குழந்தைகளை கொன்றார். அதேபோல டெல்லியை சேர்ந்த அதீபா என்பவர் தனது 7 மாத கைக்குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று உள்ளார்.

பின்னர் குழந்தை மயக்கமடைந்து விட்டதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். அதோடு குழந்தையின் கழுத்தில் காயங்கள் உள்ளதை பார்த்து சந்தேகமடைந்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனது குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், இந்த குழந்தை பிறந்தது முதல் குடும்பத்தில் கஷ்டம் உள்ளது. இக்குழந்தை துரதிருஷ்டத்தை கொண்டு வந்து விட்டது.

பணத்திற்கே கஷ்டமாக இருந்த நிலையில் அதிர்ஷ்டமில்லா குழந்தை என கருதி எனது துப்பட்டாவில் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.