07/05/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 65...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 65-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். பல முக்கிய குறிப்புகள் இப்பகுதியில் இடம் பெற உள்ளன.

அதாவது தென்னிந்திய திருச்சபை எனும் பெயர் கொண்ட ஒரு அமைப்பில் வியப்பூட்டும் ஒரு அதிசயம் நடக்க உள்ளதாகவும், அங்கு மக்களின் பிரவேசம் அதிகமாக காணப்படும் என்றும், அங்கு நடக்கும் சபை கூட்டத்தில் இந்த ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்க தரிசனத்தின் மீது விவாதங்கள் நடைபெறும் என்று 65-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கிருஸ்துவ அமைப்பு ஒன்று மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் என்றும், அதனை உலக கிருஸ்துவ அமைப்பு கண்டிக்கும் என்றும், அந்த நேரத்தில் தேவாலயம் ஒன்றில் இயேசுவின் அற்புதம் ஒன்று நிகழக்கூடும் என்றும், இதுவே ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இடம்பெறும் தீர்க்க தரிசனக் குறிப்புகள் ஒவ்வொன்றாக நடைபெறுவதற்கான நல்ல அறிகுறிகள் என்று 64-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகின்றது.


இந்திய தேசத்திற்கு புனிதர் ஒருவரின் வருகை தற்போது நடைபெறும் என்றும், அது நடைபெறும் சமயத்தில் வாடிகன் நகரில் ஒரு மகா அதிசய நிகழ்வு நடைபெறும் என்றும், இது கூட தீர்க்க தரிசனத்தின் உண்மைகள் இப்பூமியின் மீது நிகழும் காலமாக மக்கள் எடுத்துக் கொண்டு, ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனம் கூறும் உண்மைகளை கண்டு மன மாற்றத்தை மக்கள் அடைய வேண்டும் என்று 65-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை எடுத்து தருகின்றது. அதே சமயத்தில் இவ்வுலகில் ஷாவ்லின் என்ற பெயர் புனித பெயராக இவ்வுலகில் வலம் வர உள்ளதாக 65-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை மெய்பட கூறுகிறது. மக்கள் மனதில் பல மாற்றங்கள் ஏற்படும் காலமாக ஒரு ஜுன் மாதம் அமைய உள்ளதாக 65-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மும்பை நினைவில் கொள்ள வேண்டிய இடம் என்றும், அங்கு நடைபெறும் ஒரு சம்பவம் உலகையே திரும்பி பார்க்கச் செய்யும் என்றும், இது நடக்கும் காலம் மிக, மிக அருகில் இருப்பதாக 65-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

பன்னாட்டு வணிகம் இனி இந்தியாவில் சிறப்பாக நடைபெறும் என்றும், அதே சமயத்தில் இந்திய தயாரிப்புகளின் மேல் உலகம் மக்கள் அதிகமாக விரும்புவார்கள் என்றும், இதனால் இந்திய பாரம்பரிய சந்தைப் பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து உலக வர்த்தகத்தில் இந்தியா சிறப்பான ஒரு இடத்தை அடையும் என்றும், அது தற்போது நடைபெறும் இந்திய அரசின் முயற்சியே காரணமாக அமையும் என்று 65-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


தேசத்தந்தை மகாத்மா காந்தி வாழ்ந்த தேசத்தில் ஒரு அரிய அகழ்வராய்ச்சி தற்போது துவங்கும் என்றும், அங்கு பல வரலாற்று சரித்திர சான்றுகள் கிடைக்கப் பெறும் என்றும், அதில் அன்னை ஆதிசக்தியின் வருகையைப் பற்றி குறிப்புகள் காணப்படும் என்று 65-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


ஷாவ்லின் புத்த மடாலயம் ஒன்று தற்போது இயற்கை சீற்றத்தால் தரைமட்டம் ஆகிடப் போகிறது என்றும், அதன் வரலாற்று பாரம்பரிய கலைகளின் உண்மைகளை இவ்வுலகம் இப்பொழுது அரிய முற்படும் என்றும், அதன் அடுத்த பரிணாம வளர்ச்சி இந்திய தேசத்தில் அதுவும் தமிழகத்தில் மட்டுமே உருவாகும் என்றும், அதன்பின்னர் தமிழகத்திலிருந்து உலகம் முழுவதும் ஷாவ்லின் பாரம்பரியம் பரவும் என்று 65-ம் தீர்க்க தரிசனம் ஒரு அரிய குறிப்பை இங்கு எடுத்துக் கூறுகின்றது.


இந்திய முன்னோர்கள் வாழ்ந்த பழமை வாய்ந்த ஒரு குகை இமயமலையில் தற்போது கண்டறியப்படும் என்றும், அங்கு தமிழர்களின் வரலாற்று சிற்பங்கள் கண்டெடுக்கப்படும் என்றும், அதில் காணப்படும் ஒரு சிற்பம் அடுத்த தலைமுறையினரை சுட்டிக் காட்டுவதாக அமையும் என்று 65-ம் தீர்க் கதரிசனம் மெய்பட ஒரு குறிப்பை எடுத்து கூறுகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.